logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
Episode 2-29

மறுநாளில் இருந்து மீனு காலேஜ் செல்வதாக ஏற்கனவே ஜெய் வீட்டில் இருப்பவர்களிடம் கூறி இருக்க… காலை ஜனனி எழுந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தார்

அப்போது அங்கு வந்த மீனுவின் அப்பா குரு ஜனனியை கிட்சனில் இருந்து வெளியே என்று அழைத்தார்.


" என்னங்க!!!" என்று கேட்டபடி அவரை பார்க்காமல் வேலை செய்வதில் மும்முரமாக இருந்தார் ஜனனி .


" என்ன ம்மா… தனியா வேலை பாத்துட்டு இருக்க...துணைக்கு யாரும் இல்லையா?" என்றார் குரு.

"ம்ம்...உங்க பொண்ணுங்க என்னிக்கு எனக்கு நேரமே எழுந்து வந்து கிச்சேன்ல ஹெல்ப் பண்ணி இருக்காங்க. நானே தான் ஒருத்தியா எல்லா வேலையும் பார்த்துக்க வேண்டி இருக்கு" என்று புலம்பியவர்.

"நம்மகிட்டே இவ்ளோ வசதி வாய்ப்பு இருந்தும் நம்ம வீட்ல ஒத்தாசைக்கு கூட எனக்கு வேலை செய்ய ஆளுங்கன்னு யாருமே இல்லய்யே.. நானே தான ஒத்தையா எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு " என்று புலம்பினார்.


" சரி சரி புலம்பாத இப்படி வா" ஜனனி அருகில் வந்தவர் அவர் கை பிடித்து கிச்சனில் இருந்து வெளியே அழைத்து வந்தார் குரு.


" ஏங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...அடுப்புல பால் வெச்சிருக்கேன் பொங்கிற போகுத்து கையை விடுங்க " என்று அவரிடம் பேசிக்கொண்டே வெளியே வந்த ஜனனி ஹாலில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் நின்று இருந்தனர்.

அவர்கள் நால்வரையும் பார்த்த்துவிட்டு திரும்பி குருவை பார்த்தது "யாருங்க இவங்க எல்லாம் . நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்து இருகாங்க ? அவங்களுக்கு எதுவும் உதவி வேணுமா ?" என்றார்.


" அவங்களுக்கு எந்த உதவியும் தேவை இல்லை உனக்கு உதவி செய்ய தான் இவங்க நாலு போரையும் நான் நம்ம வீட்டுக்கு வேலைக்கு எடுத்திருக்கேன் " என்றவர்

" இது யமுனா உனக்கு சமையலில் கூட மாட வேலை செய்ய சேர்த்து இருக்கேன். உனக்கு சமயலே செய்ய விருப்பம் இல்லையின்னாலும் இந்த பொண்ணு எல்லா வேலையையும் செய்துடுவாங்க . இது ராணி நம்ம வீட்டை கூட்டுறது பெருக்குறது இந்த மாதிரி எல்லா வேலையும் செய்திருவங்க. இது முத்து கடைக்கு வெளியே போறது நம்ம வீட்டுல இருக்குறவங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வரதுன்னு இவர் பாத்துப்பார். இவர் வீரையன் வீட்டுக்கு வெளியே இருக்க கார்டனை பார்த்துப்பாரு. அப்டியே நம்ம வீட்டு வாட்ச்மன் வேலையும் பார்த்துப்பாரு " என்று ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து அவர்கள் செய்ய போகும் வேலைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரை ஆச்சர்யமாக பார்த்த படி ஜனனி நின்று இருக்க... அப்போது அங்கே வந்த மீனு, பூஜா, மிருதுளா மூவருமே..." வாவ் அம்மா...ஒரு வழியா அப்பாவுக்கு உங்க கஷ்டமா எல்லாம் புரிஞ்சிருச்சு போல " என்றனர்.

" ஆமா மிருதுளா எனக்கு னமும் இது எல்லாம் கனவா!!! இல்லை நிஜமான்னு புரியவேயில்லை" என்றார்.


" இது கனவு இல்லை ஜனனி நிஜம் தான் இனிமேல் இவங்க எல்லாரும் நம்ம வீட்ல வேலை பார்க்க போறாங்க . நீ யார் யார்கிட்டே என்ன வேலை வாங்கணுமோ பார்த்து செய்துக்க.. இனிமேல் நானும் வெளியே கடைக்கு போக வேண்டியது இல்லை " என்ற குரு மீனுவை பார்த்து

"அம்மா மீனு மாப்பிள்ளை எழுந்துட்டாரா ? அவர் காலையில் இருந்து வெளியவே வரலையே" என்றார் .

இரவு ஜெய்யிடம் கோபித்துக் கோண்டு மிருதுளாவின் அறைக்கு சென்றதோடு சரி அதன் பிறகு அவன் என்ன ஆனான் என்ன செய்கிறான் என்று மீனு ஒரு முறை கூட அவன் இருந்த அறைக்கு எட்டி பார்க்கவே இல்லை . அவள் எதுவும் பேசாமல் அப்படியே நின்று இருந்தாள் .

" என்னமா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ ஏதும் பேசாம அப்படியே நின்னுட்டு இருக்க..." என்றார் குரு.


அவள் அருகில் நின்று இருந்த மிருதுளா மீனுவின் தோளை குலுக்கி " ஏய் மீனு அப்பா கேட்டுட்டே இருக்காரு என்ன டி பதில் பேசாம என்ன யோசனையில் நின்னுட்டு இருக்க… ஜெய் எங்கேன்னு கேக்குறாருல்ல..சொல்ல வேண்டியது தானே ராத்திரி தூங்க நேரம் ஆகிருச்சு… அதான் அவர் இன்னும் வரலையின்னு. உனக்கு காலேஜ் போகணும்னு நீ நேரமே எழுந்து குளிச்சு கிளம்பி வந்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே " என்றாள் .

மிருதுளா சொன்னதை கேட்டதும் அங்கே வந்த கஜேந்திரன்,சூர்யா, சந்தோஷ் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் தங்கள் சிரிப்பை வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாகிவிட… அதை பார்த்த மீனு .


" ஏய் இப்போ எதுக்கு டி நாங்க தூங்க லேட்டாகிருச்சுன்னு பொய் சொன்ன..அங்க பாரு அவங்க எல்லாரும் எங்களுக்குள்ள என்னவோ நடந்த மாதிரி எப்படி என்னை பாக்குறாங்கன்னு " என்று மிருதுளாவை திட்டினாள்.


" என் செல்ல குட்டி நான் எங்கே பொய் சொன்னேன் . நேத்து நீ உன் ரூமில் இருந்து அழுதுட்டே வந்தியா வந்து என்ன செய்த ...ஜெய் சொன்னதை எல்லாம் என்கிட்டே சொல்லி புலம்பிட்டு நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம செய்துட்ட… அதே போல நீ சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் அங்கே உன் ரூம்ல ஜெய்யும் என்ன ஆச்சு எப்படி ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சு நைட் பூரா தூங்காம இருந்திருப்பாரு . நான் இதை தானே சொன்னேன் . ஆனா அவங்க எல்லாம் தப்ப எடுத்துகிடத்துக்கு நான் பொறுப்பாக முடியாது " என்று மீனுவின் காதை கடித்தவள் .


"என் வாயையே பார்த்துட்டு இருக்காம முதல்ல உன் அப்பா கேட்ட கேள்விக்கு அதையாவது சொல்லி சமாளி" என்றவள்.

" ஏய் பூஜா இது எல்லாம் பெரியவங்க சமாச்சாரம் நம்ம எல்லாம் சின்ன பிள்ளைங்க நாம் இங்கே நிக்க வேண்டாம் வா போய் சாப்பிடலாம் " என்று பூஜாவை இழுத்துக்கொண்டு போனாள் மிருதுளா
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 29
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top