- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
ஜனனியுடன் விளையாடிக் கொண்டே அவர் கைகளில் சிக்காமல் ஓடி வந்த மீனு அவள் எதிரே நின்றவர் மீது மோதி விட மோதிய வேகத்தில் தரையில் பொத்தென விழுந்தாள் .
கீழே விழுந்தவளை பார்த்து கைநீட்டி என்ன "மீனு பார்த்து வரமாட்டியா?" என கேட்டுக்கொண்டே அவளைப் பார்த்து சிரித்தபடி நின்று இருந்த நபரை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தால் மீனு .
அவள் மட்டுமல்ல அங்கே இருப்பவர்களும் அதே ஆச்சரியத்தோடு தான் ஜெயை பார்த்தனர் .
"என்ன அப்படி பார்க்கிற மீனு இதுக்கு முன்ன என்ன நீ பார்த்ததே இல்லையா? என்ன?" என்றான் சிரித்தபடி அவளை தூக்கி விட்டு .
எப்போதும் வீழ்ச்சாரில் வளம் வரும் ஜெய் இன்று நடந்து வந்து அவள் முன் நிற்பதை பார்த்து அவள் மட்டும் இல்ல அவனைச் சேர்ந்த அனைவருமே அதிர்ச்சியாகினர் . ஆனால் ஜெய்யின் அப்பா கஜேந்திரன் மட்டும் தன் மகனை பார்த்து சிரித்தபடி நின்று இருந்தார் .
அவள் இன்னமும் ஆச்சரியம் மாறாமல் ஜெய்யை வாயை பிளந்து பார்த்துக் கொண்டு நின்றிருக்க .. அவள் தாடையில் கை வைத்து அவள் வாயை மூடிய ஜெய் சிரித்தபடி "என்ன எல்லாரும் என்ன அவ்வளவு அதிர்ச்சியா பாக்குறீங்க. என்னடா வீழ்ச்சார்ல சுத்திட்டு இருந்தவன் இப்போ நடந்து வரான்னு தானே பாக்குறீங்க" என்றான்.
மீனுவின் அருகில் இருந்த ஜனனி முதற்கொண்டு மற்றவர்கள் "ஆமாம்" என்பது போல மெல்ல தலையை ஆட்ட.
"டேய் ஜெய் என்ன டா!! இது நீ நடந்து வர.. என்னால இதை நம்ப முடியலையே நிஜமாவே இது நீதானா ? " என்று சூர்யா ஜெய் அருகில் வந்து கட்டிக்க கொண்டான் சந்தோசமாக .
"அண்ணா எப்போ இருந்து நீ நடக்க ஆரம்பிச்சீங்க.. உங்க கூடவே நான் இருந்தேனே எனக்கு கூட இது தெரியலையே" என்று சந்தோஷ் செல்லமாக கோபித்துக் கொண்டான்.
அவர்களை பார்த்து சிரித்தவன் . எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. உங்க எல்லார்கிட்டயும் இவ்வளவு நாளா நான் ஊனமானவனா நடிச்சதுக்கு என்றான்.
அவன் அருகில் வந்த கஜேந்திரன் அனைவரையும் பார்த்து என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்னரே அவனுடைய உடைந்த காலிற்கு டிரீட்மென்ட் பார்க்க ஆரம்பித்து இருந்தான் அதற்கு முக்கிய காரணம் ரியா தான் . அவ தொடர்ந்து ஜெய்யை கால் உடைந்ததை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்துக்கொண்டே இருக்கவும் ஜெய் விரக்த்தியின் உச்சத்திற்கே சென்று விட்டான்.
"திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்த ஜெய்யை வலுக்கட்டாயமாக அவன் பின்னால் சுற்றித்திரிந்து காதலித்த ரியா அவன் நன்றாக ஆரோக்கியமாக இருந்த வேலையில் அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள் அவனுக்கு கால் உடைந்தது என்று தெரிந்ததும் அவனை வேண்டாம் என உதறித் தள்ளினாள் அது அவன் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது "என்ற கஜேந்திரன் தன் மகன் ஜெய்யை பார்த்தார் .
அவர் சொன்னதை கேட்ட ஜெய் "என்னப்பா சொல்றீங்க!! நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேனா? அப்புறம் எப்படி ரியாவை கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிச்சேன்" என்றான் புரியாமல் .
"அத நான் பிறகு சொல்றேன் பா இப்போ அது ரொம்ப முக்கியமே கிடையாது " என்றவர் .
திரும்பி மீனுவை பார்த்த கஜேந்திரன் "அம்மா மீனு உனக்கு என் பையன் அவன் உன்ன ஏமாத்திட்டான் என்கிற நினைப்பு கண்டிப்பா இருக்கும். ஏன்னா ஜெய் இத்தனை நாள் உன்கிட்ட ஊனமா தானே நடிச்சிட்டு இருந்தான். கல்யாணமான பிறகு கணவன் மனைவிக்குள்ள எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு கண்டிப்பா எதிர்பார்ப்பு உன்கிட்ட இருந்திருக்கும் . அதை என் மகன் பூர்த்தி செய்யவில்லை என்கிறது எனக்கும் நல்லாவே தெரியுது . ஆனா அந்த சூழ்நிலையில அவனால உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்க முடியாது . ஏன்னா அவன் ட்ரீட்மென்ட் எடுத்து உடம்பு குணமான உடனேயே இந்த விஷயத்தை ரியாகிட்ட சொல்லலாம்னு ரியாவை பார்க்க அவள் வீட்டிற்கு புறப்பட்டேன் . ஆனால் ஜெய் என்னை தடுத்துட்டான். ஏன் ப்பா இந்த நல்ல விஷயத்தை நாம் ரியாகிட்டே சொன்னா ரொம்ப சந்தோசப்படுவான்னு நான் கேட்டேன் "
அதற்கு ஜெய் "நான் நல்லா இருந்த காரணத்தினால் தானே அவ என்ன துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான்னு சொன்னீங்க . இந்த நிலைமையில் இருக்கிற என்னை அவ முழு மனசோட ஏத்துக்கணும் அப்படி ஏற்றுக்கொள்வது தான் என்னை காதலிச்சாங்குறதுக்கு அர்த்தம்னு சொல்லி அவனோட தம்பிகிட்டயும் ரொம்ப வருஷமா கூட நட்ப பழகுற சூர்யாகிட்ட இருந்தும் கூட இந்த விஷயத்தை மறச்சிட்டான்"என்றவர் தன் மகனை பார்த்தார் .
அவர் சொன்னதில் இருந்த நியாயம் அனைவர்க்கும் சரி என்று தோன்றவே அனைவரும் ஜெய்யின் உடல் குணம் ஆகி விட்டதை நினைத்து சந்தோசத்தாய் அவனிடம் பகிர்ந்து கொண்டு இருக்க...
இங்கே அவனையே இன்னமும் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டு இருந்த மீனுவோ எதுவும் பேசாமல் நின்று இருந்தால்.
மற்றவர்களுடன் பேசி ஜெய் சந்தோஷப்பட்டாலும் மீனு மட்டும் தன்னிடம் எதுவம் பேசாமல் இருப்பது அவனுக்கு முழுமையான சந்தோசத்தை தரவில்லை .அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெய் .
ஜெய்யிடம் வந்த ஜனனி அவன் கைகளை பிடித்துக் கொண்டு "மாப்பிள்ளை எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு . என் மகள் வாழ்க்கையை நினைச்சு இல்ல ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து நீங்க இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் மனாவருத்தம் எல்லாம் மாறி நீங்க நல்லபடியா குணம் ஆனதை நினைச்சு எனக்கு இன்னிக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு" என்றவர் .
மீனுவிடம் திரும்பி " ஏய் மீனு என்ன டி பாத்துட்டு நின்னுட்டு இருக்க...மாப்பிள்ளைக்கு குணம் ஆனது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம் . நீ மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு அன்னைக்கு பால்கோவா செய்து கொடுத்தே இல்ல அதே போல இணைக்கும் செஞ்சு மாப்பிள்ளைக்கு எங்க எல்லாருக்கும் கொடு" என்றார் .
"அம்மா எனக்கு காலேஜ் போக நேரம் ஆச்சு . இப்போ அதெல்லாம் செய்துட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை " என்றால் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் .
"என்ன டி பொல்லாத காலேஜ் இன்னைக்கு ஒரு நாள் நீ லீவு போடு நாம் இந்த சந்தோசத்தை நல்லா விருந்து சாப்பாடு செய்து மாப்பிள்ளைக்கு கொடுக்கலாம் . நாம எல்லாரும் இன்னிக்கு சந்தோசமா எங்கயும் வெளியே போயிடு வரலாம் " என்றார் ஜனனி .
அதற்கு மீனு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க...ஜெய் அவள் மனதில் எழும் உணர்வுகளை ஓர் அளவுக்கு புரிந்தவனாக . " அத்தை இப்போ என்ன உங்களுக்கு இந்த சந்தோசத்தை கொண்டாடணும் அது தானே " என்றான் ஜெய் ஜனனியிடம் .
"ஆமா மாப்பிள்ளை " என்றார் ஜனனி .
"அப்போ ஒன்னு பண்ணலாம் .இப்போ மீனு , பூஜா ரெண்டு பெரும் காலேஜ் போயிடு வரட்டும் . அவங்க ரொம்ப நாள் கழிச்சு திரும்ப காலேஜி போறதை நம்ம தடுக்க வேண்டாம். அவங்க காலேஜ் முடிஞ்சதும் நாம எல்லாரும் சேர்ந்து இன்னிக்கு ஈவினிங் வெளியே போலாம்" என்றான் .
அவன் சொல்வதும் சரியாக தான் என்று ஜனனி தலையை ஆடியவள் சரி அப்போ வாங்க எல்லாரும் சாப்பிடலாம் ஆறிட போகுது சாயங்காலம் எல்லாரும் வெளியே போகலாம் என்றவர் அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறினார்.
சாப்பிட்டு முடிக்கும் வரை மீனு திரும்பி ஜெய்யை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. ஆனால் அவனோ நொடிக்கு ஒரு முறை மீனுவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தான் . இதை மிருதுளா கவனித்துக் கொண்டு இருந்தால் அவளை போலவே சூர்யாவும் மீனு முகம் ஏதோ போல இருப்பதும் ஜெய் அவளை திரும்பி திரும்பி பார்ப்பதும் இருப்பதுமாக இருப்பதை கவனிக்க தவறவில்லை .
இப்பொது இதை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள வேண்டாம் . பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
அவசரமாக சாப்பிட்டு முடித்த மீனு " ஏய் பூஜா இன்னும் என்ன டி சாப்பிட்டு இருக்க ..காலேஜ் போகணுமில்ல சீக்கிரமா சாப்பிட்டு வாடி" என்று தன் பையை எடுத்துக்கொண்டு பூஜாவை அவசர படுத்த ..
"அண்ணி நானும் பூஜாவும் ஒரே காலேஜ் தானே நான் அவளை கூட்டிட்டு போறேனே" என்றான் .
உடனே திரும்பி பூஜா சந்தோஷ முறைத்தவள் " அக்கா நீ வெய்ட் பானு நான் வந்துடறேன் நம்ம ரெண்டு பேருமே போய்க்கலாம் " என்று சாப்பிட்டுக்கொண்டு iruntha தட்டிலேயே கையை கழுவி விட்டு எழுந்தாள்.
கீழே விழுந்தவளை பார்த்து கைநீட்டி என்ன "மீனு பார்த்து வரமாட்டியா?" என கேட்டுக்கொண்டே அவளைப் பார்த்து சிரித்தபடி நின்று இருந்த நபரை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தால் மீனு .
அவள் மட்டுமல்ல அங்கே இருப்பவர்களும் அதே ஆச்சரியத்தோடு தான் ஜெயை பார்த்தனர் .
"என்ன அப்படி பார்க்கிற மீனு இதுக்கு முன்ன என்ன நீ பார்த்ததே இல்லையா? என்ன?" என்றான் சிரித்தபடி அவளை தூக்கி விட்டு .
எப்போதும் வீழ்ச்சாரில் வளம் வரும் ஜெய் இன்று நடந்து வந்து அவள் முன் நிற்பதை பார்த்து அவள் மட்டும் இல்ல அவனைச் சேர்ந்த அனைவருமே அதிர்ச்சியாகினர் . ஆனால் ஜெய்யின் அப்பா கஜேந்திரன் மட்டும் தன் மகனை பார்த்து சிரித்தபடி நின்று இருந்தார் .
அவள் இன்னமும் ஆச்சரியம் மாறாமல் ஜெய்யை வாயை பிளந்து பார்த்துக் கொண்டு நின்றிருக்க .. அவள் தாடையில் கை வைத்து அவள் வாயை மூடிய ஜெய் சிரித்தபடி "என்ன எல்லாரும் என்ன அவ்வளவு அதிர்ச்சியா பாக்குறீங்க. என்னடா வீழ்ச்சார்ல சுத்திட்டு இருந்தவன் இப்போ நடந்து வரான்னு தானே பாக்குறீங்க" என்றான்.
மீனுவின் அருகில் இருந்த ஜனனி முதற்கொண்டு மற்றவர்கள் "ஆமாம்" என்பது போல மெல்ல தலையை ஆட்ட.
"டேய் ஜெய் என்ன டா!! இது நீ நடந்து வர.. என்னால இதை நம்ப முடியலையே நிஜமாவே இது நீதானா ? " என்று சூர்யா ஜெய் அருகில் வந்து கட்டிக்க கொண்டான் சந்தோசமாக .
"அண்ணா எப்போ இருந்து நீ நடக்க ஆரம்பிச்சீங்க.. உங்க கூடவே நான் இருந்தேனே எனக்கு கூட இது தெரியலையே" என்று சந்தோஷ் செல்லமாக கோபித்துக் கொண்டான்.
அவர்களை பார்த்து சிரித்தவன் . எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. உங்க எல்லார்கிட்டயும் இவ்வளவு நாளா நான் ஊனமானவனா நடிச்சதுக்கு என்றான்.
அவன் அருகில் வந்த கஜேந்திரன் அனைவரையும் பார்த்து என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்னரே அவனுடைய உடைந்த காலிற்கு டிரீட்மென்ட் பார்க்க ஆரம்பித்து இருந்தான் அதற்கு முக்கிய காரணம் ரியா தான் . அவ தொடர்ந்து ஜெய்யை கால் உடைந்ததை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்துக்கொண்டே இருக்கவும் ஜெய் விரக்த்தியின் உச்சத்திற்கே சென்று விட்டான்.
"திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்த ஜெய்யை வலுக்கட்டாயமாக அவன் பின்னால் சுற்றித்திரிந்து காதலித்த ரியா அவன் நன்றாக ஆரோக்கியமாக இருந்த வேலையில் அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள் அவனுக்கு கால் உடைந்தது என்று தெரிந்ததும் அவனை வேண்டாம் என உதறித் தள்ளினாள் அது அவன் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது "என்ற கஜேந்திரன் தன் மகன் ஜெய்யை பார்த்தார் .
அவர் சொன்னதை கேட்ட ஜெய் "என்னப்பா சொல்றீங்க!! நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேனா? அப்புறம் எப்படி ரியாவை கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிச்சேன்" என்றான் புரியாமல் .
"அத நான் பிறகு சொல்றேன் பா இப்போ அது ரொம்ப முக்கியமே கிடையாது " என்றவர் .
திரும்பி மீனுவை பார்த்த கஜேந்திரன் "அம்மா மீனு உனக்கு என் பையன் அவன் உன்ன ஏமாத்திட்டான் என்கிற நினைப்பு கண்டிப்பா இருக்கும். ஏன்னா ஜெய் இத்தனை நாள் உன்கிட்ட ஊனமா தானே நடிச்சிட்டு இருந்தான். கல்யாணமான பிறகு கணவன் மனைவிக்குள்ள எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு கண்டிப்பா எதிர்பார்ப்பு உன்கிட்ட இருந்திருக்கும் . அதை என் மகன் பூர்த்தி செய்யவில்லை என்கிறது எனக்கும் நல்லாவே தெரியுது . ஆனா அந்த சூழ்நிலையில அவனால உன்கிட்ட உண்மையை சொல்லி இருக்க முடியாது . ஏன்னா அவன் ட்ரீட்மென்ட் எடுத்து உடம்பு குணமான உடனேயே இந்த விஷயத்தை ரியாகிட்ட சொல்லலாம்னு ரியாவை பார்க்க அவள் வீட்டிற்கு புறப்பட்டேன் . ஆனால் ஜெய் என்னை தடுத்துட்டான். ஏன் ப்பா இந்த நல்ல விஷயத்தை நாம் ரியாகிட்டே சொன்னா ரொம்ப சந்தோசப்படுவான்னு நான் கேட்டேன் "
அதற்கு ஜெய் "நான் நல்லா இருந்த காரணத்தினால் தானே அவ என்ன துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான்னு சொன்னீங்க . இந்த நிலைமையில் இருக்கிற என்னை அவ முழு மனசோட ஏத்துக்கணும் அப்படி ஏற்றுக்கொள்வது தான் என்னை காதலிச்சாங்குறதுக்கு அர்த்தம்னு சொல்லி அவனோட தம்பிகிட்டயும் ரொம்ப வருஷமா கூட நட்ப பழகுற சூர்யாகிட்ட இருந்தும் கூட இந்த விஷயத்தை மறச்சிட்டான்"என்றவர் தன் மகனை பார்த்தார் .
அவர் சொன்னதில் இருந்த நியாயம் அனைவர்க்கும் சரி என்று தோன்றவே அனைவரும் ஜெய்யின் உடல் குணம் ஆகி விட்டதை நினைத்து சந்தோசத்தாய் அவனிடம் பகிர்ந்து கொண்டு இருக்க...
இங்கே அவனையே இன்னமும் அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டு இருந்த மீனுவோ எதுவும் பேசாமல் நின்று இருந்தால்.
மற்றவர்களுடன் பேசி ஜெய் சந்தோஷப்பட்டாலும் மீனு மட்டும் தன்னிடம் எதுவம் பேசாமல் இருப்பது அவனுக்கு முழுமையான சந்தோசத்தை தரவில்லை .அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெய் .
ஜெய்யிடம் வந்த ஜனனி அவன் கைகளை பிடித்துக் கொண்டு "மாப்பிள்ளை எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு . என் மகள் வாழ்க்கையை நினைச்சு இல்ல ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து நீங்க இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் மனாவருத்தம் எல்லாம் மாறி நீங்க நல்லபடியா குணம் ஆனதை நினைச்சு எனக்கு இன்னிக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு" என்றவர் .
மீனுவிடம் திரும்பி " ஏய் மீனு என்ன டி பாத்துட்டு நின்னுட்டு இருக்க...மாப்பிள்ளைக்கு குணம் ஆனது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம் . நீ மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு அன்னைக்கு பால்கோவா செய்து கொடுத்தே இல்ல அதே போல இணைக்கும் செஞ்சு மாப்பிள்ளைக்கு எங்க எல்லாருக்கும் கொடு" என்றார் .
"அம்மா எனக்கு காலேஜ் போக நேரம் ஆச்சு . இப்போ அதெல்லாம் செய்துட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை " என்றால் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் .
"என்ன டி பொல்லாத காலேஜ் இன்னைக்கு ஒரு நாள் நீ லீவு போடு நாம் இந்த சந்தோசத்தை நல்லா விருந்து சாப்பாடு செய்து மாப்பிள்ளைக்கு கொடுக்கலாம் . நாம எல்லாரும் இன்னிக்கு சந்தோசமா எங்கயும் வெளியே போயிடு வரலாம் " என்றார் ஜனனி .
அதற்கு மீனு எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க...ஜெய் அவள் மனதில் எழும் உணர்வுகளை ஓர் அளவுக்கு புரிந்தவனாக . " அத்தை இப்போ என்ன உங்களுக்கு இந்த சந்தோசத்தை கொண்டாடணும் அது தானே " என்றான் ஜெய் ஜனனியிடம் .
"ஆமா மாப்பிள்ளை " என்றார் ஜனனி .
"அப்போ ஒன்னு பண்ணலாம் .இப்போ மீனு , பூஜா ரெண்டு பெரும் காலேஜ் போயிடு வரட்டும் . அவங்க ரொம்ப நாள் கழிச்சு திரும்ப காலேஜி போறதை நம்ம தடுக்க வேண்டாம். அவங்க காலேஜ் முடிஞ்சதும் நாம எல்லாரும் சேர்ந்து இன்னிக்கு ஈவினிங் வெளியே போலாம்" என்றான் .
அவன் சொல்வதும் சரியாக தான் என்று ஜனனி தலையை ஆடியவள் சரி அப்போ வாங்க எல்லாரும் சாப்பிடலாம் ஆறிட போகுது சாயங்காலம் எல்லாரும் வெளியே போகலாம் என்றவர் அனைவரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறினார்.
சாப்பிட்டு முடிக்கும் வரை மீனு திரும்பி ஜெய்யை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. ஆனால் அவனோ நொடிக்கு ஒரு முறை மீனுவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தான் . இதை மிருதுளா கவனித்துக் கொண்டு இருந்தால் அவளை போலவே சூர்யாவும் மீனு முகம் ஏதோ போல இருப்பதும் ஜெய் அவளை திரும்பி திரும்பி பார்ப்பதும் இருப்பதுமாக இருப்பதை கவனிக்க தவறவில்லை .
இப்பொது இதை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள வேண்டாம் . பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
அவசரமாக சாப்பிட்டு முடித்த மீனு " ஏய் பூஜா இன்னும் என்ன டி சாப்பிட்டு இருக்க ..காலேஜ் போகணுமில்ல சீக்கிரமா சாப்பிட்டு வாடி" என்று தன் பையை எடுத்துக்கொண்டு பூஜாவை அவசர படுத்த ..
"அண்ணி நானும் பூஜாவும் ஒரே காலேஜ் தானே நான் அவளை கூட்டிட்டு போறேனே" என்றான் .
உடனே திரும்பி பூஜா சந்தோஷ முறைத்தவள் " அக்கா நீ வெய்ட் பானு நான் வந்துடறேன் நம்ம ரெண்டு பேருமே போய்க்கலாம் " என்று சாப்பிட்டுக்கொண்டு iruntha தட்டிலேயே கையை கழுவி விட்டு எழுந்தாள்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 30
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 30
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.