logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
ஜெய் கண்ணடித்ததில் அவனை முறைப்படி நின்றிருந்த மீனு அவன் அழைத்ததும் அதே முறைப்போடு முறுக்கிக்கொண்டு ஏறி காரில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள் .

அதை பார்த்து ஜெய் சிரித்து விட்டு காரை எடுக்கப் போக உடனே மைதிலி குறுக்கே வந்து சார் ஒரு நிமிஷம் இருங்க என்றவள் பின் சீட்டில் அமர்ந்திருந்த மீனுவிடம் வந்தவள் கார் கதவை திறந்து அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்தாள் .

"ஏய் மைதிலி என்ன ஆச்சு? ஏன் என்னை இழுக்குற.." என கேட்டபடி மீனு வெளியே வர

"ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இப்பதான் உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் கல்யாணம் ஆகி இருக்கு. அவர் கார் ஓட்டிட்டு போகும்போது நீ அவர் பக்கத்துல ஸ்டைலா அழகா உட்கார்ந்து வரத விட்டுட்டு பின்னாடி போய் யாரோ மாதிரி உக்கார இதெல்லாம் நல்லாவா இருக்கு ஒழுங்கா முன்னாடி போய் உட்காரு" என்றாள் .

தன் முன்னால் சென்று அமர்ந்தாள் ஜெய் தன்னை எதுவும் செய்து விடுவான் என்று யோசித்த மீனு .

"நான் எங்க உக்காந்தா உனக்கு என்னடி நீ பேசாம வா கிளம்பு" என்று அவளை அதட்டினாள் மீனு.

"ம்ஹும் ...முடியாது நீ முன்னாடி சீட்ல போய் உட்காரு அப்பதான் நான் இங்கிருந்து கிளம்புவேன் இல்லனா நான் போக மாட்டேன்" என்று மைதிலி அடம் பிடிக்க .

"ஐயோ காருக்குள்ள சூர்யாவும் நிறுத்தினாலும் இருக்கும்போதே என்ன அவங்க முன்னாடி வச்சு கிஸ் பண்ணினாரு இப்ப மட்டும் நான் தனியா இவர் கூட பக்கத்துல உக்காந்து போனேன்னா என்னை என்னவெல்லாம் செய்வாரோ எனக்கு பயமா இருக்கு இவளுக்கு வேற எப்படி சொல்லி புரிய வைப்பேன். சும்மா சும்மா முன்னாடி என் உயிர் வாழ எடுக்குறாளே இவ என புலம்பிக்கொண்டே வேறு வழியே இல்லாமல் காரின் முன் சீட் கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள்.

மைதிலி பார்த்து "இப்ப போதுமா திருப்தியா உனக்கு" என்றாள் .

"சால சந்தோசம்" என்ற மைதிலி கார் கதவை சாற்றிவிட்டு திரும்பி ஜெய்யை பார்த்தாள் ஜெய் அவளுக்கு தேங்க்யூ என்று தன் கட்டை விரலை உயர்த்தி மீனு பார்க்காத வண்ணம் நன்றி சொல்ல .. மைதிலி சிரித்துக் கொண்டே விக்ரமிடம் சென்றவள் அவனோடு காரில் கிளம்பினாள்.

அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதும் ஜெய் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் மீனுவை பார்த்து "என்ன மீனு என் கூட தனியா வந்து உட்கார்ந்தாள் . நான் உன்னை எதுவும் செஞ்சுட்டு போன பயந்து தானே பின்னாடி போய் உட்கார்ந்த இப்ப எப்படி உன் பிரண்டு அதை புரிஞ்சுகிட்டு முன்னாடி உட்கார வச்சுட்டா பாத்தியா உன் பிரண்டு கூட எனக்கு தான் சப்போட்டா இருக்காங்க" என்று சொல்லி சிரித்தான்.

அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் திரும்பி கார் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருக்க அவளை ரசித்தபடியே காரை ஸ்டார்ட் செய்து ரெஸ்டாரன்ட் கிளம்பினான் .

செல்லும் வழி எல்லாம் மீனு அவனிடம் எதுவுமே பேசவில்லை அவனும் ஏதேதோ அவளிடம் பேசி அவளை சகஜமாக நினைக்க .. சற்று கோபம் வந்தவளாக "இங்க பாருங்க உங்களுக்கு தான் என்னை யாரு என்னன்னு தெரியல . நமக்குள்ள என்ன நடந்ததுனு கொஞ்சமும் ஞாபகம் இல்லைனு சொல்லிட்டீங்களே. அப்புறம் எப்படி உங்களால என்கிட்டே இப்படி சகஜமா பேசி சிரிக்க முடியுது. என்ன கிண்டல் செய்ய ..என்ன கிஸ் பண்ண மட்டும் எப்படி முடியுது" என்றாள் .

"இதில் என்ன இருக்கு மீனு நீ சொல்றத நான் நம்பலைன்னு சொல்லலையே எனக்கு ஞாபகம் இல்லைனு தானே சொல்றேன். அதுக்காக நீ என் பொண்டாட்டி இல்லைன்னு ஆயிடுமா யாராவது இவ்வளவு அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சுக்கிட்டு சும்மா வருவாங்கன்னு நினைச்சுக்கிட்டியா?" என்றான் .

அவனை முறைத்தவள் "நீங்க வேணா அப்படி நினைக்கலாம் ஆனா எனக்கு என்ன பத்தி முழுசா எதுவும் தெரியாம வெறும் தாலியை கட்டிட்டேன்னு உரிமையோடு நீங்க என்கிட்டே இப்படி நீங்க நடத்துகிறது எனக்கு பிடிக்கலை" என்றாள் .

"ஏன் மீனு நான் உன்கிட்டே உரிமை எடுத்துக்க கூடாதா , நீ என்னை பிடிச்சு தானே கல்யாணம் செய்த்க்கிட்டே.. அப்பறோம் ஏன் இப்படி பேசுற" என்றான்.

"உங்களை பிடிச்சு போய் தான் கல்யாணம் செய்தேன் . ஆனா நமக்குள்ள நடந்த விஷயம் உங்களுக்கு தெரியாதுன்னு எப்போ சொன்னிங்களோ அப்போவே எனக்கு எல்லாம் புரிஞ்சு போயிருச்சு . என்னை தாலி கட்டியதுக்காக தொட்டு பேசுறது சீண்டி பேரசுறது எதுவும் வேணாம்" என்றாள் கறாராக.

காரை சாலை ஓரம் பார்க் செய்தவன் தன் சீட் பெல்ட்டை கழட்டி விட்டு திரும்பி மீனுவை பார்த்தான். அவள் என்ன என்று புரியாமல் ஜெய்யை பார்க்க... தன் இடக்கையால் அவள் அணிந்து இருந்த சீட் பெல்ட்டை கழட்டிவிட்டவன் அவள் இடையில் கை கொடுத்து தன் மடி மீது அவளை லாவகமாக தூக்கி தன் மடியில் அமர வைத்தான் .

இதை சற்றும் எதிர்பாராத மீனு் ஜெய் "என்ன பண்றீங்க.. என்னை விடுங்க" என்று அவன் மேல் இருந்து மீனு எழுந்திருக்க போக..

அப்போது ஜெய் "இங்கே பாரு மீனு நீ என்னை என்ன நினைச்சி கல்யாணம் செய்துகிட்டேனுனு எனக்கு தெரியலை . ஆனா நான் என்னிக்கு உன் கழுத்தில் தாலி கட்டினேனோ அப்போவே இனி நீ தான் என் உலகம்னு நான் முடிவு பண்ணிட்டேன்" என்றான்.

"இனி நமக்கு சம்மந்தம் இல்ல.. நீ யாரோ..நான் யாரோன்னு எல்லாம் பேசுது இருக்காதா" என்றான்.

அவன் பேசியத்தற்கு கேட்டுவிட்டு "இங்கே பாரு பேசாம என்னை விற்று அப்பறோம் நடக்குறதே வேற" என்று மீனு அவனை விரல் நீட்டி எச்சரித்ததாள் மீனு.

தன் முகத்திற்கு நேராக ஒற்றை விரலை நீட்டி பேசியவளை சிரித்துக்கொண்டே பார்த்தவன். சட்டென்று மீனுவின் விரலை தன் வாய்க்குள் வைத்துக் கொண்டு அவளை பார்த்தான் .

அதை சற்றும் எதிர் பாராத மீனு அவனை அதிர்ச்சியாக பார்த்தவள். அவன் வாயில் இருந்து தன் விரலை வெளியே உருவ... ஆனால் அவனோ அவள் விரலை விடாமல் வாய்க்குள் வைத்து தன் பற்களுக்கு இடையில் வைத்தது பிடித்து இருந்தவன் தன் கைகளை அவள் அணிந்து இருந்த சேலைக்குள் விட்டு அவள் சேலையை விலகினான் .

அதை சற்றும் எதிர்பாராத மீனு என்ன சேருங்க என்றவள் அவசரமாக அவன் வாயில் இருந்த தன் விரலை எடுத்துவிட்டு அவன் கையை தன் இடையில் இருந்து பிரிக்க போக.. அதற்கு இடம் கொடுக்காமல் அவள் இடையில் அழுத்தம் கூடியவன் சேலை லேசாக விலகி இருந்த பொது அவன் கண்களுக்கு மீனுவின் முகடுகள் அவன் கண்களில் பட்டு அவனை தூண்டி விட.. அவள் இடையை மேலும் அழுந்த பற்றி தன்னோடு இழுத்து அணைத்தவன் குனிந்து அவள் அணிந்து இருந்த பிளவுசை தாண்டி வெளியே தெரிந்த முகடுகளுக்கு இடையில் முத்தம் வைத்தான் .

ஒரு புறம் அதிற்சியாக இருந்தாலும் , மறுபுறம் மீனுவிற்கு கூச்சம் பிடுங்கி தின்ன.. அவளை அறியாமல் ஜெய்யை இழுத்து அணைத்துக்கொண்டாள் .

அவள் அணைப்பை எதிர்ப்பார்க்காதவன் அவள் முகடுகளில் தன் முகத்தை மேலும் அழுத்தி அதில் மீசையால் கோலம் போட்டவன் நிமிர்ந்து அவளை பார்த்து இது எல்லாம் நான் ஏற்கனவே சுவைத்து பார்த்துட்டேன் இல்ல என்றான்.

இப்படி தன்னிடம் ஜெய் கேட்கப்பான் என்று மீனு எதிர் பார்க்கவில்லை. அவன் அப்படி கேட்டதும் பழைய நினைவுகள் மீனுவின் மனதில் ஓட அவள் முகம் செவ்வானம் என சிவந்துவிட்டது .

மெல்ல அவள் முகடுகளில் இருந்து தன் முகத்திற் பிரித்தவன் அவள் இதழை தன் விரல்களால் வருடி இது வேணும் என்றான் சிறுபிள்ளை போல.. தன்னை தெரியவில்லை என்று சொல்பவனை வெறுப்பதா . இல்லை தன்னை மனைவி என்ற நிலையில் வைத்து உரிமை கொண்டாடுபனை அணைப்பதா என்று அவளுக்கு குழப்பமாக இருக்க..

"நீ தர மாட்ட நானே எடுத்துகிறேன்" என்று சற்றும் தாமதிக்காமல் மீனுவை இறுக்கி அணைத்து அவள் இதழை சிறை செய்து இருந்தான். அவளும் ஜெய்க்கு எதிர்ப்பு காட்டாமல் தன் இதழை முழுவதுமாக அவனிடம் ஒப்படைடித்துவிட்டு அவனிடம், சரணடைந்தாள் .
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 31.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top