- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
காலேஜில் மீனுவை டிராப் செய்துவிட்டு ஜெய் நேராக தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றான் .
நீண்ட நாள் கழித்து ஜெய் திடீரென ஆபீசுக்கு வரவும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். எத்தனை நாள் நடக்க முடியாமல் இருந்த தங்களுடைய முதலாளி இன்று கம்பீரமாக ஆபீஸிற்குள் வருவதை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்தனர் .
ஜெய் வந்ததும் நேராக தன் கேபினுக்கு சென்று விட அவன் சென்றதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த சிலர் "சார் கல்யாணத்துக்கு போயிருந்தப்ப கூட சார் வீல்சேரில் தானே உட்கார்ந்திருந்தார். அப்ப கூட அவருக்கு உடம்பு குணமான மாதிரியே தெரியலையே அதுக்குள்ள எப்படி அவர் உடம்பு இவ்வளவு சீக்கிரம் சரியா இருக்கும்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்
தன் காபினுக்குள் வந்த ஜெய் தன்னுடைய பிஏ வனஜாவை அழைத்தான் .
இத்தனை நாள் அவன் ஆபிஸிற்கு வராமல் போயிருக்க வனஜா மிகவும் அலட்சியப்போக்கோடு வேலை செய்து கொண்டு இருந்தாள் . என்னதான் கஜேந்திரன் அடிக்கடி வந்து ஆபீசை பார்த்துக் கொண்டாலும் அவரை எளிதில் இவர்கள் எல்லாம் ஏமாற்றி விடுவார்
அவரும் அடிக்கடி தன் மகனிடம் சொல்லி அங்க அழைத்துக் கொள்வார் ஆபீஸ் முன்பு போல இல்லாமல் அவரவர் அவரவர் சொந்த வேலைகளை பார்க்கவே செல்வதாகவும் ஆபிசில் இருந்தாலும் ஆபீஸ் வேலையை கவனிக்காமல் ஜாலியாக பேசிக்கொண்டு சுற்றித்திரிந்து இருப்பதையும் நிறைய முறை கூறியிருந்தார் .
வந்ததும் முதல் வேலையாக இந்த விஷயங்களை தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துதான் தன்னுடைய பிஏ வனஜாவை அழைத்தான் .
தன் மொபைலில் படம் பார்த்துக் கொண்டு இருந்த வனஜா ஜெய்யிடம் இருந்து இன்று காமில் அழைப்பு வந்ததும் அதில் வந்த என்னை பார்த்து அதிர்ந்தாள் "சார் ஆபீசுக்கு வந்துட்டாரா! இது யாரும் என்கிட்ட சொல்லவே இல்லையே" என அவசரமாக போனை எடுத்து ஹலோ சார் குட் மார்னிங் என்றால் .
"குட் மார்னிங் , நம்ம ஆபீஸ்ல அடுத்து போயிட்டு இருக்குற காண்ட்ராக்ட் டீலிங் பத்தி இருக்கிற எல்லா விஷயத்தையும் எடுத்துட்டு என்னோட கேபினுக்கு வாங்க" என்றான் .
"ஓகே சார்" என்று விட்டு போனை வைத்தால் .
"ஐயோ இப்படி திடுதிப்புன்னு சொல்லாம கொள்ளாம இவரு ஆபீஸ்ல உட்கார்ந்து இருக்காரு.. அவர் கேட்ட பைலை இல்லாம ரெடி பண்ணவே எனக்கு எவ்வளவு நேரம் ஆகும். இப்ப நான் என்ன சொல்லி சமாளிப்பேன் அந்த கிழவன் வந்தால் கூட கம்ப்யூட்டர் சரியில்ல நெட்வொர்க் இல்ல அது இதுன்னு ஏதாவது பொய் சொல்லி சமாளித்து எல்லாம் ஆனால் ஜெயிக்கிட்ட ஒரு துரும்பு கூட நகர்த்த முடியாது அவர்கிட்ட எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது" என பரபரப்பாக தன் வேலையில் மூழ்க ஆரம்பித்திருந்தால் வனஜா .
வனஜா வருவதற்குள் தன் அப்பா வந்திருந்த போது அவர் சொல்லியிருந்த வேலைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்து இருந்தான்.
ஜெய் வனஜாவை அழைத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து அவன் கேபினுக்குள் நுழைந்தாள் வனஜா.
அவள் அறைகதவை தட்டிவிட்டு உள்ளே வர... பைலில் கையெழுத்து போட்டுக். கொண்டு இருந்த ஜெய் நிமிர்ந்து பார்க்காமலேயே.
"உங்க கேபின்ல இருந்து என் கேபினுக்கு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு" என்றான்.
"சார் அது... அது வந்து நீங்க ஆபீஸ்க்கு வருவீங்கன்னு எனக்கு தெரியாது" என்றாள்.
"அப்போ இனிமேல் தினமும் நான் ஆபீஸ் கிளம்பும்போது உங்களுக்கு கால் செய்து சொல்லிட்டு கிளம்புறேன். நீங்க நான் வரதுக்குள்ள பைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருங்க"என்றான் நக்கலாக.
"சார் அது.. அப்டி இல்லை சார். நீங்க ஆபீஸ்க்கு வரமாட்டிங்கன்னு..." என்று வனஜா முடிக்கும் முன்.
"நான் ஆபீஸ் வரமாட்டேன்னு முடிவு பண்ண நீங்க யாரு "என்றான் கோபமாக நிமிர்ந்து பார்த்து.
ஜெய்யின் இந்த கோப முகத்தை பார்த்து அரண்டுவிட்டாள் வனஜா.
"சாரி சார் இனிமேல் இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துகிறேன்" என்று தான் ரெடி செய்து வந்த பைல்களை எல்லாம் அவன் முன் வைத்துவிட்டு அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.
தன் கேபினுக்கு வியர்க்க விருவிருக்க வந்தவள் வந்ததும் முதல் வேலையாக தன் மொபைலை எடுத்து கால் செய்தாள்.
கால் செய்த சிறிது நேரத்தில் மறுமுனையில் அட்டென்ட் செய்த மறு நொடி. "ஏய் ரியா நீ என்ன டி என்கிட்டே சொன்ன... இனிமேல் அந்த ஜெய் ஆபீஸ் பக்கமே தலை வெச்சும் படுக்க மாட்டான்னு சொன்ன.. ஆனா அவன் இப்போ பாரு குத்துக்கல்லாட்டம் வந்து உக்காந்து என்னை அதிகாரம் பண்ணிட்டு இருக்கான்" என்றாள் வனஜா கடுப்பாக.
"என்ன வனஜா சொல்றே.. ஜெய் அங்கே ஆபீஸ் வந்து இருக்கானா!!" என்றாள் அதிர்ச்சியாக.
"ஆமா ரியா நீ என்ன சொன்ன அவன் கால் உடைந்து நொடிஞ்சு போய் வீட்டுக்குள்ளேயே இருக்கா இனிமே ஆபீஸ் பக்கமே வரமாட்டா.. அதனால நீ நெனச்ச மாதிரி ஆபீஸ்க்கு போலாம் வரலாம்னு என்கிட்ட சொன்னியா? இல்லையா? ஆனா அவன் என்னடான்னா இன்னைக்கு கம்பீரமா நட போட்டு ஆபீஸ்க்குள்ள வந்ததை பத்தி இங்க எல்லாரும் பேசி ஆச்சரியப்பட்டு இருக்காங்க இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அவனுக்கு உடம்பு குணமாச்சுன்னு அங்க எல்லாரும் பேசிக்கிறாங்க" என்றாள் வனஜா.
"என்ன சொல்ற வனஜா ஜெய் நடந்து போறானா! அவன் கால் குணமாகிடுச்சா! அது எப்படி அவனுக்கு கல்யாணம் ஆகும் பொழுது இரண்டு காலும் உடைந்து வீல் சேரில் தானே இருந்தான். கல்யாணம் ஆகி சில நாளில் அவனோட கால் குணமாயிடுச்சா இது என்னால நம்பவே முடியலை என்றால் ரியா.
"அப்ப நான் சொன்னத நீ நம்பலையா? உனக்கு நான் என் மேல நம்பிக்கை இல்லைன்னா பேசாம நீயே நேரில் வந்து பாரு அவன் பழைய ஜெய்யா திரும்ப வந்திருக்கான். இனி எங்களையெல்லாம் என்னென்ன பாடுபடுத்த போறானோ தெரியல" என்ற வனஜா போனை வைத்தாள்.
ரியாவிற்கு இன்னமும் வனஜா சொன்னதை நம்பவே முடியவில்லை. நாவல் சொன்னது போல உண்மையாகவே ஜெய்கணமாகி விட்டானா என்று ஆச்சரியப்பட்டவள். "அது எப்படி அவனுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் உடம்பு குணமாகும் இரண்டு நாள் முன்ன தானே பார்த்தேன்" என யோசனையோடு அமர்ந்திருந்தாள்.
மாலை கிளாஸ் முடிந்ததும் மைதிலியும் , விக்ரமும் மீனுவுடன் கிளம்பி வெளியே வந்தனர் .
"மீனு உன்னை கூட்டிட்டு போக யாரும் வருவார்களா இல்லை நான் வேணும்னா உன்னை ட்ரோப் பண்ணட்டுமா?" என்றான் விக்ரம்.
"இல்ல விக்ரம் என்னை கூட்டிட்டு போக மிருதுளா வரேன்னு சொல்லி இருக்கா அவ வர நேரம்தான் நீங்க வேணும்னா கிளம்புங்க நான் போய்க்குறேன்" என்றாள் மீனு.
"ஏய் ஏண்டி எங்களை கிளப்பி விடுறதுலயே குறியா இருக்க... நாங்க ரெண்டு பெரும் வீட்டுக்கு போய் என்ன செய்ய போறோம் உன்னை அனுப்பி வெச்சுட்டே நாங்க கிளம்புறோம்" என்று மைதிலி மீனுவிடம் உரிமையாக பேசினாள் .
மீனுவும் சிரித்துக்கொண்டே "சரி டி வாயாடி நான் சொன்னா நீ என்ன கேட்கவா போற... " என்றவள் அவர்களுடன் பேசிக்கொண்டு காலேஜ் வாசலில் நின்று இருக்க.. அப்போது ஒரு சிவப்பு நிற ஆடி சார் ஒன்று மீனுவின் முன்னாள் வந்து சடன் பிரேக் போட்டு நின்றது. அது நின்ற வேகத்தில் மூவரும் பயந்து சற்று பின்னால் தள்ளி நிற்க... கரை திறந்து கொண்டு அவள் முன் ஸ்டைலாக வந்து நின்றான் ஜெய் .
அவனை பார்த்ததும் "சார் நீங்களா ? நீங்க எப்படி கார் .." என்று அவனை மேலும் கீழும் விக்ரம் பார்க்க.. மைதிலியும் விக்ரமைபோல வாயடைத்து நின்றாள் . அவர்கள் இருவரும் தன்னை பார்ப்பதிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது . இருவரும் நேற்று தன்னை வீல் சேரில் பார்த்துவிட்டு இன்று காரை ஓடிக்கொண்டு வருவதை பார்த்தாள் இப்படித்தான் அதிர்ச்சி ஆகும் என்று நினைத்தவன் . நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு புரியுது. என்னை பற்றி பிரீ யா இருக்கும்போது மீனுகிட்டே கேட்டு தெரிய்ஞ்சுக்கோங்க என்றவன் .
"இன்னிக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கு if u dont mind எங்க கூட நீங்க ரெண்டு பெரும் ஜாயின் பண்ணிக்குறிகளா?" என்றான் ஜெய் .
உடனே மீனு குறுக்கே புகுந்து "இல்ல...அவங்க வீட்டுக்கு கிளம்ப போறாங்க" என்று இடை மறித்து சொல்ல வர... அவள் கையை பிடித்து நிப்பாட்டிய மைதிலி .
"சார் எந்த ஹோட்டலுக்கு வரணும்னு சொல்லுங்க நானும் இவனும் நேரா அங்கே வந்துடறோம் நீங்க மீனுவை கூட்டிட்டு போங்க" என்றாள் மைதிலி .
சரி என்று தலை ஆடிய ஜெய் விக்ரமிடம் ரெஸ்டாரண்ட் செல்ல வழி சொல்லிவிட்டு மீனுவை பார்த்தான்.
அவள் ஜெய்யையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவளை பார்த்து கண்ணடித்த ஜெய் "சரி நீங்க ரெண்டு பேரும் கிளம்பி நான் சொன்ன ரெஸ்டாரண்டுக்கு வந்துருங்க" என்றவன் மீனுவை பார்த்து "மீனு போலாமா" என்றான் .
நீண்ட நாள் கழித்து ஜெய் திடீரென ஆபீசுக்கு வரவும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். எத்தனை நாள் நடக்க முடியாமல் இருந்த தங்களுடைய முதலாளி இன்று கம்பீரமாக ஆபீஸிற்குள் வருவதை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்தனர் .
ஜெய் வந்ததும் நேராக தன் கேபினுக்கு சென்று விட அவன் சென்றதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த சிலர் "சார் கல்யாணத்துக்கு போயிருந்தப்ப கூட சார் வீல்சேரில் தானே உட்கார்ந்திருந்தார். அப்ப கூட அவருக்கு உடம்பு குணமான மாதிரியே தெரியலையே அதுக்குள்ள எப்படி அவர் உடம்பு இவ்வளவு சீக்கிரம் சரியா இருக்கும்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்
தன் காபினுக்குள் வந்த ஜெய் தன்னுடைய பிஏ வனஜாவை அழைத்தான் .
இத்தனை நாள் அவன் ஆபிஸிற்கு வராமல் போயிருக்க வனஜா மிகவும் அலட்சியப்போக்கோடு வேலை செய்து கொண்டு இருந்தாள் . என்னதான் கஜேந்திரன் அடிக்கடி வந்து ஆபீசை பார்த்துக் கொண்டாலும் அவரை எளிதில் இவர்கள் எல்லாம் ஏமாற்றி விடுவார்
அவரும் அடிக்கடி தன் மகனிடம் சொல்லி அங்க அழைத்துக் கொள்வார் ஆபீஸ் முன்பு போல இல்லாமல் அவரவர் அவரவர் சொந்த வேலைகளை பார்க்கவே செல்வதாகவும் ஆபிசில் இருந்தாலும் ஆபீஸ் வேலையை கவனிக்காமல் ஜாலியாக பேசிக்கொண்டு சுற்றித்திரிந்து இருப்பதையும் நிறைய முறை கூறியிருந்தார் .
வந்ததும் முதல் வேலையாக இந்த விஷயங்களை தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துதான் தன்னுடைய பிஏ வனஜாவை அழைத்தான் .
தன் மொபைலில் படம் பார்த்துக் கொண்டு இருந்த வனஜா ஜெய்யிடம் இருந்து இன்று காமில் அழைப்பு வந்ததும் அதில் வந்த என்னை பார்த்து அதிர்ந்தாள் "சார் ஆபீசுக்கு வந்துட்டாரா! இது யாரும் என்கிட்ட சொல்லவே இல்லையே" என அவசரமாக போனை எடுத்து ஹலோ சார் குட் மார்னிங் என்றால் .
"குட் மார்னிங் , நம்ம ஆபீஸ்ல அடுத்து போயிட்டு இருக்குற காண்ட்ராக்ட் டீலிங் பத்தி இருக்கிற எல்லா விஷயத்தையும் எடுத்துட்டு என்னோட கேபினுக்கு வாங்க" என்றான் .
"ஓகே சார்" என்று விட்டு போனை வைத்தால் .
"ஐயோ இப்படி திடுதிப்புன்னு சொல்லாம கொள்ளாம இவரு ஆபீஸ்ல உட்கார்ந்து இருக்காரு.. அவர் கேட்ட பைலை இல்லாம ரெடி பண்ணவே எனக்கு எவ்வளவு நேரம் ஆகும். இப்ப நான் என்ன சொல்லி சமாளிப்பேன் அந்த கிழவன் வந்தால் கூட கம்ப்யூட்டர் சரியில்ல நெட்வொர்க் இல்ல அது இதுன்னு ஏதாவது பொய் சொல்லி சமாளித்து எல்லாம் ஆனால் ஜெயிக்கிட்ட ஒரு துரும்பு கூட நகர்த்த முடியாது அவர்கிட்ட எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது" என பரபரப்பாக தன் வேலையில் மூழ்க ஆரம்பித்திருந்தால் வனஜா .
வனஜா வருவதற்குள் தன் அப்பா வந்திருந்த போது அவர் சொல்லியிருந்த வேலைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்து இருந்தான்.
ஜெய் வனஜாவை அழைத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து அவன் கேபினுக்குள் நுழைந்தாள் வனஜா.
அவள் அறைகதவை தட்டிவிட்டு உள்ளே வர... பைலில் கையெழுத்து போட்டுக். கொண்டு இருந்த ஜெய் நிமிர்ந்து பார்க்காமலேயே.
"உங்க கேபின்ல இருந்து என் கேபினுக்கு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு" என்றான்.
"சார் அது... அது வந்து நீங்க ஆபீஸ்க்கு வருவீங்கன்னு எனக்கு தெரியாது" என்றாள்.
"அப்போ இனிமேல் தினமும் நான் ஆபீஸ் கிளம்பும்போது உங்களுக்கு கால் செய்து சொல்லிட்டு கிளம்புறேன். நீங்க நான் வரதுக்குள்ள பைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருங்க"என்றான் நக்கலாக.
"சார் அது.. அப்டி இல்லை சார். நீங்க ஆபீஸ்க்கு வரமாட்டிங்கன்னு..." என்று வனஜா முடிக்கும் முன்.
"நான் ஆபீஸ் வரமாட்டேன்னு முடிவு பண்ண நீங்க யாரு "என்றான் கோபமாக நிமிர்ந்து பார்த்து.
ஜெய்யின் இந்த கோப முகத்தை பார்த்து அரண்டுவிட்டாள் வனஜா.
"சாரி சார் இனிமேல் இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துகிறேன்" என்று தான் ரெடி செய்து வந்த பைல்களை எல்லாம் அவன் முன் வைத்துவிட்டு அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.
தன் கேபினுக்கு வியர்க்க விருவிருக்க வந்தவள் வந்ததும் முதல் வேலையாக தன் மொபைலை எடுத்து கால் செய்தாள்.
கால் செய்த சிறிது நேரத்தில் மறுமுனையில் அட்டென்ட் செய்த மறு நொடி. "ஏய் ரியா நீ என்ன டி என்கிட்டே சொன்ன... இனிமேல் அந்த ஜெய் ஆபீஸ் பக்கமே தலை வெச்சும் படுக்க மாட்டான்னு சொன்ன.. ஆனா அவன் இப்போ பாரு குத்துக்கல்லாட்டம் வந்து உக்காந்து என்னை அதிகாரம் பண்ணிட்டு இருக்கான்" என்றாள் வனஜா கடுப்பாக.
"என்ன வனஜா சொல்றே.. ஜெய் அங்கே ஆபீஸ் வந்து இருக்கானா!!" என்றாள் அதிர்ச்சியாக.
"ஆமா ரியா நீ என்ன சொன்ன அவன் கால் உடைந்து நொடிஞ்சு போய் வீட்டுக்குள்ளேயே இருக்கா இனிமே ஆபீஸ் பக்கமே வரமாட்டா.. அதனால நீ நெனச்ச மாதிரி ஆபீஸ்க்கு போலாம் வரலாம்னு என்கிட்ட சொன்னியா? இல்லையா? ஆனா அவன் என்னடான்னா இன்னைக்கு கம்பீரமா நட போட்டு ஆபீஸ்க்குள்ள வந்ததை பத்தி இங்க எல்லாரும் பேசி ஆச்சரியப்பட்டு இருக்காங்க இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அவனுக்கு உடம்பு குணமாச்சுன்னு அங்க எல்லாரும் பேசிக்கிறாங்க" என்றாள் வனஜா.
"என்ன சொல்ற வனஜா ஜெய் நடந்து போறானா! அவன் கால் குணமாகிடுச்சா! அது எப்படி அவனுக்கு கல்யாணம் ஆகும் பொழுது இரண்டு காலும் உடைந்து வீல் சேரில் தானே இருந்தான். கல்யாணம் ஆகி சில நாளில் அவனோட கால் குணமாயிடுச்சா இது என்னால நம்பவே முடியலை என்றால் ரியா.
"அப்ப நான் சொன்னத நீ நம்பலையா? உனக்கு நான் என் மேல நம்பிக்கை இல்லைன்னா பேசாம நீயே நேரில் வந்து பாரு அவன் பழைய ஜெய்யா திரும்ப வந்திருக்கான். இனி எங்களையெல்லாம் என்னென்ன பாடுபடுத்த போறானோ தெரியல" என்ற வனஜா போனை வைத்தாள்.
ரியாவிற்கு இன்னமும் வனஜா சொன்னதை நம்பவே முடியவில்லை. நாவல் சொன்னது போல உண்மையாகவே ஜெய்கணமாகி விட்டானா என்று ஆச்சரியப்பட்டவள். "அது எப்படி அவனுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் உடம்பு குணமாகும் இரண்டு நாள் முன்ன தானே பார்த்தேன்" என யோசனையோடு அமர்ந்திருந்தாள்.
மாலை கிளாஸ் முடிந்ததும் மைதிலியும் , விக்ரமும் மீனுவுடன் கிளம்பி வெளியே வந்தனர் .
"மீனு உன்னை கூட்டிட்டு போக யாரும் வருவார்களா இல்லை நான் வேணும்னா உன்னை ட்ரோப் பண்ணட்டுமா?" என்றான் விக்ரம்.
"இல்ல விக்ரம் என்னை கூட்டிட்டு போக மிருதுளா வரேன்னு சொல்லி இருக்கா அவ வர நேரம்தான் நீங்க வேணும்னா கிளம்புங்க நான் போய்க்குறேன்" என்றாள் மீனு.
"ஏய் ஏண்டி எங்களை கிளப்பி விடுறதுலயே குறியா இருக்க... நாங்க ரெண்டு பெரும் வீட்டுக்கு போய் என்ன செய்ய போறோம் உன்னை அனுப்பி வெச்சுட்டே நாங்க கிளம்புறோம்" என்று மைதிலி மீனுவிடம் உரிமையாக பேசினாள் .
மீனுவும் சிரித்துக்கொண்டே "சரி டி வாயாடி நான் சொன்னா நீ என்ன கேட்கவா போற... " என்றவள் அவர்களுடன் பேசிக்கொண்டு காலேஜ் வாசலில் நின்று இருக்க.. அப்போது ஒரு சிவப்பு நிற ஆடி சார் ஒன்று மீனுவின் முன்னாள் வந்து சடன் பிரேக் போட்டு நின்றது. அது நின்ற வேகத்தில் மூவரும் பயந்து சற்று பின்னால் தள்ளி நிற்க... கரை திறந்து கொண்டு அவள் முன் ஸ்டைலாக வந்து நின்றான் ஜெய் .
அவனை பார்த்ததும் "சார் நீங்களா ? நீங்க எப்படி கார் .." என்று அவனை மேலும் கீழும் விக்ரம் பார்க்க.. மைதிலியும் விக்ரமைபோல வாயடைத்து நின்றாள் . அவர்கள் இருவரும் தன்னை பார்ப்பதிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது . இருவரும் நேற்று தன்னை வீல் சேரில் பார்த்துவிட்டு இன்று காரை ஓடிக்கொண்டு வருவதை பார்த்தாள் இப்படித்தான் அதிர்ச்சி ஆகும் என்று நினைத்தவன் . நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு புரியுது. என்னை பற்றி பிரீ யா இருக்கும்போது மீனுகிட்டே கேட்டு தெரிய்ஞ்சுக்கோங்க என்றவன் .
"இன்னிக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கு if u dont mind எங்க கூட நீங்க ரெண்டு பெரும் ஜாயின் பண்ணிக்குறிகளா?" என்றான் ஜெய் .
உடனே மீனு குறுக்கே புகுந்து "இல்ல...அவங்க வீட்டுக்கு கிளம்ப போறாங்க" என்று இடை மறித்து சொல்ல வர... அவள் கையை பிடித்து நிப்பாட்டிய மைதிலி .
"சார் எந்த ஹோட்டலுக்கு வரணும்னு சொல்லுங்க நானும் இவனும் நேரா அங்கே வந்துடறோம் நீங்க மீனுவை கூட்டிட்டு போங்க" என்றாள் மைதிலி .
சரி என்று தலை ஆடிய ஜெய் விக்ரமிடம் ரெஸ்டாரண்ட் செல்ல வழி சொல்லிவிட்டு மீனுவை பார்த்தான்.
அவள் ஜெய்யையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவளை பார்த்து கண்ணடித்த ஜெய் "சரி நீங்க ரெண்டு பேரும் கிளம்பி நான் சொன்ன ரெஸ்டாரண்டுக்கு வந்துருங்க" என்றவன் மீனுவை பார்த்து "மீனு போலாமா" என்றான் .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 31
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 31
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.