- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
மிருதுளா பூஜா இருவரும் குரு ஜனனி உடன் வீட்டுக்கு கிளம்புவதாக கூற மீனு மட்டும் ஏதோ திடீரென தனியாக இருப்பது போல உணர்ந்தாள்.
அதைப் புரிந்து கொண்ட ஜெய் அவன் அப்பாவிடம் "அப்பா கல்யாணம் ஆன பிறகு நானும் நீயும் முதல் முதல்ல நீங்க எங்களுக்காக பரிசா கொடுக்க வீட்டுக்கு போய் தங்கி இருக்க போறோம். இப்படி திடீர்னு எங்கள ஒரே நாள்ல நைட் ஒரு நைட் அனுப்பி வைக்கலாம்னு நினைக்கிறீங்களா அதுதான் முடியாது. நீங்களே ஒரு நல்ல நாளா பார்த்து அந்த வீட்டுக்கு எப்போ நாங்க ரெண்டு பேரும் குடி போகலாம்னு சொல்லுங்க அதுக்கு அப்புறமா மீனுவும் நானும் அந்த வீட்டுக்கு குடி போகிறோம்" என்றான்.
"ஆமாம் மாப்பிள்ளை நானும் அதைத்தான் நினைச்சேன். ஆனா திடீர்னு என் வீட்டுக்காரரும் உங்க அப்பாவும் உங்களுக்கு கிப்ட் பண்ண வீட்டு சாவியை கொடுத்து உங்களை இன்னைக்கே அங்க போக சொன்னப்போ நான் இது காரணமா சொல்லி தடங்கல் பண்ண கூடாதுன்னு தான் அமைதியா இருந்துட்டேன்" என்றார்.
"பாருங்க நான் நெனச்ச மாதிரி தான் அத்தையும் நெனச்சி இருக்காங்க. அதனால இன்னைக்கு நம்ம எல்லாரும் மீனு வீட்டுக்கு தான் போறோம். நானும் மீனுவும் எப்போ அந்த வீட்டுக்கு போறோமோ அப்பதான் நீங்க எல்லாருமே அவங்கவங்க வீட்டுக்கு போகணும் ஓகேவா" என்றான்.
அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒன்றாக மீனுவின் வீட்டிற்கு கிளம்பினர்.
வீட்டிற்கு வந்ததும் வெங்கடாசலமும் குருவும் அவரவர் அறைக்கு சென்று விட.. ஜனனி வீட்டிற்கு புதிதாக வந்த வேலையாட்களிடம் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்னவெல்லாம் வாங்க வேண்டும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
சூர்யாவும் சந்தோஷம் ஜெய்யிடம் அவனுடைய ஆபீஸ் ஒர்க் எல்லாம் இன்று எப்படி ஆரம்பமானது என அவனிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.
மிருதளாவும் மீனுவும் மட்டும் தனியாக கார்டனில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர். தன்னுடைய தோழி ஒருவரிடம் பேசிவிட்டு போனை வைத்த மிருதளா மீனுவை திரும்பி பார்க்க... மீனுவின் முகம் ஏதோ தீவிர யோசனையில் இருப்பது போல இருந்தது. அதை பார்த்ததும் மீனுவின் தோளில் கை வைத்து "என்ன ஆச்சு ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு ஏதோ ரொம்ப யோசனை இருக்கிற மாதிரி தெரியுது" என்றாள்.
"ஒன்னும் இல்லடி" என மீனு தலையாட்ட...
"பொய் சொல்லாத மீன்ஸ் எனக்கு தெரியாதா... சொல்லு ஏன் உன் முகம் இப்படி இருக்கு மறுபடியும் ஜெய் எதுவும் உன்ன சொன்னாரா எதுவும் பேசி சங்கடப் படுத்திட்டாரா" என கேட்டாள் மிருதுளா.
"அவன் அப்படி சொல்லி இருந்தா கூட பரவாயில்லையே.. ஆனா அவன் செஞ்ச வேலையை எல்லாம் உன்கிட்ட சொன்னேன்னு வை ச்சி... ச்சி... வேணாம் விடு" என்றாள் மீனு.
"ஏய் என்னடி இப்படி சொல்ற அப்போ கண்டிப்பா அவர் உங்கிட்ட என்ன பேசினாருன்னு நான் தெரிஞ்சு ஆகணும். ஒழுங்கா இப்போ சொல்ல போறியா? இல்லையா ? காலையில உன்னை காலேஜ்ல டிரா பண்ணப்போ நாங்க இருக்கும்போது உன்னை காருக்குள்ள வச்சு கிஸ் அடிச்சாரு.. அதே போல எதுவும் நடந்திருச்சா!!" என்ன என்றாள் ஆர்வமாக.
"ஆமா டி.." என்று மீனு முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மிருதளாவை பார்த்து தலையாட்ட..
"என்னடி சொல்ற ! என்ன நடந்துச்சுன்னு விடாம மறைக்காம என்கிட்ட சொல்லிடு நம்ம ரெண்டு பேரும் ஆல்ரெடி அக்ரிமெண்ட் போட்டு இருக்கோம் கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன் புருஷன் உன்கிட்ட எப்படி ரொமான்ஸ் பண்ணினாலும் அதேபோல நான் கல்யாணம் பண்ணிக்க போறவர் என்கிட்ட என்ன ரொமான்ஸ் பண்ணினாலும் அப்படியே சொல்றன்னு நீயும் நானும் பேசி இருக்கோம் இப்ப மட்டும் நீ ஏதாவது மறைச்சு என்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சது வை அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது " என்று மீனுவை மிரட்டினாள் மிருதுளா.
"சரி சரி டி நான் இப்ப என்ன சொல்ல மாட்டேன்னா சொன்னேன்" என்றவள்.
"அப்புறம் என்ன சீக்கிரம் சொல்லு குயிக்.. குயிக்... " என்று அவளை பார்த்தவாறு திரும்பி கன்னத்தில் கை வைத்து மீனுவை பார்த்தாள் மிருதுளா.
"அது வந்து நானும் ஜெய்யும் காலேஜிலிருந்து கார்ல வந்துட்டு இருந்தோமா..." என மீனு ஆரம்பிக்க.
"ம்ம்ம் ... வந்துட்டு இருந்தீங்க அப்போ என்ன ஆச்சு?" என்றாள் மிருதுளா.
"அப்போ ஜெய் கூட எனக்கு வாக்குவதும் வந்திருச்சு அவன் மேல நான் கோபமா இருந்தா ஒரு கட்டத்துக்கு மேல வந்ததும் அவன் என்ன செஞ்சான் தெரியுமா!!" என மீனு அங்கே நிறுத்த.
"ஏய் இப்படியே பாதி பாதியா நிறுத்தாம முழுசா சொல்லுடி.. எனக்கு டென்ஷன் ஆகுது" என்றாள் மிருதளா.
"சரி சரி கோபப்படாத டி என்றவள் அதன் பிறகு காரைக்குள் வைத்து ஜெய் மீனுவை என்ன எல்லாம் செய்தான்" என்று ஒன்று விடாமல் அவளுக்கு நேரில் நடந்ததை விட மிகவும் வர்ணனை கூட்டி...உணர்வுகளை அதிகப்படுத்தி மிருதுளாவிடம் சொன்னாள் மீனு .
மீனு சொல்லி முடிக்கும் வரை வாயை பிளந்து கொண்டு அனைத்தையும் கேட்டேன் |"நீ அவருக்கு பீம்பாய் என்று பெயர் வைத்ததுல தப்பே இல்ல" என்றவள்.
"ம்ஹும்.. " என்று பெருமூச்சு ஒன்றை உதிர்த்து "நீ கொடுத்து வச்சவ தான்" மீனு என்றாள்.
மிருதுளா சொன்னதே கேட்டு மீனு வெட்கப்பட்டவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள.
அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவள் "உன்ன மாதிரி நான் எப்ப கல்யாணம் பண்ணி இப்படி எல்லாம் வெட்கப்பட்டு இருக்கிறதுனு தெரியலை பரவாயில்லை அதெல்லாம் விடு.. இப்ப எதுக்கு நீ முகத்தை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன ஆச்சு அதை முதல்ல சொல்லு" என்றாள்.
"அதுவா நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது எனக்கு முத்தம் கொடுத்தானா?" என்றாள் மீனு.
"ஆமா கொடுத்தாரு அதுக்கு என்ன சொல்லு" என்றாள்.
"அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தனியா கார்ல வரும்போது என்ன என்னவெல்லாம் பண்ணினான்னு சொன்னேனா" என்றாள் மீண்டும் மீனு.
"ஆமாடி அதுக்காக ஏண்டி முகத்தை தூக்கி வச்சிருக்க ரெண்டுமே சந்தோஷமான விஷயம் தானே உன் புருஷன் உன்கிட்ட அப்படி நடந்துக்காம வேற என்ன செய்வா"ர் என்றால் மிருதளா ஜெய்க்கு வக்காலத்து வாங்கி.
"அது இல்லடி காருக்குள்ள இருக்கும்போதே இத்தனை சில்மிஷம் பண்றவன் நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா ஒன்னா ஒரே ரூம்ல இருக்கிறப்போ என்னவெல்லாம் செய்வாய் என்று எனக்கு ரொம்ப பயமாயிருக்கும் மிருதுளா" என்றாள்.
அதைக் கேட்டதும் சத்தமாக சிரித்த மிருதுளா "அன்னைக்கு ஒன்னா ஒரே ரூம்ல ஒரு ராத்திரி முழுக்க இருந்தியே அப்பெல்லாம் எப்படி இருந்துச்சோ.... அதே மாதிரி தான் இருக்கும். இதுக்காகவா முகத்தை தூக்கி வச்சிருப்ப... அவ அவளுக்கு ஒரு கிஸ் கொடுக்க கூட ஆள் இல்லைன்னு வருத்தமா இருக்கு. இவ என்னடான்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷன் கூட ஒன்னா தனியா இருக்கிறதுக்கு இவ்வளவு யோசிச்சிட்டு இருக்கா" என புலம்பியவள் எழுந்து உள்ளே சென்று விட...
அவள் பின்னாலேயே மீனுவும் தயங்கியபடி ஜெய்யை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு "கடவுளே இவன் ரூமுக்கு வந்து என்ன செய்ய போறானோ" என்று பயந்த படி வீட்டிற்குள் சென்றாள்
இவ்வளவு நேரம் மீனுவும் மிருதுளாவும் பேசுவதை எல்லாம் கேட்டபடி அங்கே நின்றிருந்த ஜெய் அதைக் கண்டும் காணாதவன் போல சூர்யாவிடமும் சந்தோஷிடமும் பேசிக்கொண்டு இருக்க.
அவனைப் போலவே இவர்கள் இருவருமே மீனு மிருதளா பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் பேசி முடித்துவிட்டு மிருதளா, மீனு எழுந்து செல்லும் வரை அமைதியாக இருந்தவர்கள்.
இருவரும் வீட்டிற்குள் சென்று விட்டார்களா என்பதை உறுதி செய்தவர்கள் அடுத்த நொடி ஜெய்யிடம் வந்து ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக் கொண்டு "பார்த்தாலும் பார்த்த உன்ன மாதிரி ஒருத்தனை நான் பாக்கவே இல்ல டா. காலையில என்னடான்னா நானும் மிருதுளாவும் இருக்கும்னு கொஞ்சம் கூட யோசிக்காம கார்ல வச்சு சிஸ்டரை கிஸ் பண்ண. ஈவினிங் வேற சிஸ்டர் கிட்ட காருக்குள்ள வச்சு ஏதோ பெருசா வேலை பண்ணியிருக்க... அதுக்கு பயந்துட்டு அவங்க உன் கூட தனியா இருக்க எவ்வளவு யோசிக்கிறாங்க பாரு பாவம்டா கொஞ்சம் பார்த்து அவங்களுக்கு கருணை காட்டு ஆர்வத்துல ரொம்ப பாஞ்சிறாத" என்று சூர்யா ஜெய்யின் வயிற்றில் குத்த.
ஜெய் எதுவும் பேசாமல் மீனு சொன்னதையே நினைத்துக் கொண்டு நின்றிருந்தான். ஏனென்றால் காரில் அவன் என்ன செய்தான் என்று அவனை விடவா மற்றவர்களுக்கு தெரிந்து விடப் போகிறது. ஆனால் அதைவிட அனைத்தையும் மிகைப்படுத்தி கூறிய மீனுவை என்னவென்று நினைப்பது என யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஜெய் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்த சந்தோச, "சூர்யா இப்போ நம்ம ரெண்டு பேரும் இங்க நிக்கிறது ரொம்ப வேஸ்ட். அண்ணாவோட உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கு உயிர் எப்பவும் அண்ணி பின்னாடி போயிடுச்சு அதனால நீயும் நானும் இங்கு நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் நீ வா நம்ம போய் தூங்கலாம்" என்று சூர்யாவின் தோளில் கை போட்டு அங்கிருந்து அவனை அழைத்துச் சென்றான்
"டேய் சந்தோஷ் என் ஆளு என்ன சொல்லிட்டு போனான்னு தெரியுமா" என்றான்.
"யாரு மிருதுளாவா?" என்றான்.
"ஆமாடா அவ தான் என்ன சொல்லி புலம்பினா பாத்தியா.. அவளுக்கு கிஸ் பண்ண கூட ஒரு ஆள் இல்லைன்னு ரொம்ப வருத்தப்படுறாடா.. நான் வேணும்னா அவ ரூமுக்கு போய் கேட்டது கொடுத்துட்டு வரட்டுமா?" என்றான் சூர்யா.
"சூர்யா இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல அப்படி இப்படி நீ அவங்க ரூமுக்கு சும்மா கூட போய் எட்டிப் பார்த்துடாத அப்புறம் கையில கிடைக்கிறத வச்சு உன்ன அடிச்சு துரத்திட போறாங்க. பேசாம ஒழுங்கா வந்து என் கூட தூங்கு" என அவனை இழுத்துக்கொண்டு சந்தோஷ் உள்ளே சென்றான்.
இங்கே மீனுவை நினைத்து உள்ளுக்குள் இருந்த அத்தனை உணர்வுகளையும் அவளிடம் ஒன்றாக இன்றே கொட்டி விட வேண்டும். அவள் மிகைப்படுத்தி சொன்னதை எல்லாம் செய்து காட்டிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் ரூமுக்கு விரைந்தான் ஜெய்.
அதைப் புரிந்து கொண்ட ஜெய் அவன் அப்பாவிடம் "அப்பா கல்யாணம் ஆன பிறகு நானும் நீயும் முதல் முதல்ல நீங்க எங்களுக்காக பரிசா கொடுக்க வீட்டுக்கு போய் தங்கி இருக்க போறோம். இப்படி திடீர்னு எங்கள ஒரே நாள்ல நைட் ஒரு நைட் அனுப்பி வைக்கலாம்னு நினைக்கிறீங்களா அதுதான் முடியாது. நீங்களே ஒரு நல்ல நாளா பார்த்து அந்த வீட்டுக்கு எப்போ நாங்க ரெண்டு பேரும் குடி போகலாம்னு சொல்லுங்க அதுக்கு அப்புறமா மீனுவும் நானும் அந்த வீட்டுக்கு குடி போகிறோம்" என்றான்.
"ஆமாம் மாப்பிள்ளை நானும் அதைத்தான் நினைச்சேன். ஆனா திடீர்னு என் வீட்டுக்காரரும் உங்க அப்பாவும் உங்களுக்கு கிப்ட் பண்ண வீட்டு சாவியை கொடுத்து உங்களை இன்னைக்கே அங்க போக சொன்னப்போ நான் இது காரணமா சொல்லி தடங்கல் பண்ண கூடாதுன்னு தான் அமைதியா இருந்துட்டேன்" என்றார்.
"பாருங்க நான் நெனச்ச மாதிரி தான் அத்தையும் நெனச்சி இருக்காங்க. அதனால இன்னைக்கு நம்ம எல்லாரும் மீனு வீட்டுக்கு தான் போறோம். நானும் மீனுவும் எப்போ அந்த வீட்டுக்கு போறோமோ அப்பதான் நீங்க எல்லாருமே அவங்கவங்க வீட்டுக்கு போகணும் ஓகேவா" என்றான்.
அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒன்றாக மீனுவின் வீட்டிற்கு கிளம்பினர்.
வீட்டிற்கு வந்ததும் வெங்கடாசலமும் குருவும் அவரவர் அறைக்கு சென்று விட.. ஜனனி வீட்டிற்கு புதிதாக வந்த வேலையாட்களிடம் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்னவெல்லாம் வாங்க வேண்டும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
சூர்யாவும் சந்தோஷம் ஜெய்யிடம் அவனுடைய ஆபீஸ் ஒர்க் எல்லாம் இன்று எப்படி ஆரம்பமானது என அவனிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.
மிருதளாவும் மீனுவும் மட்டும் தனியாக கார்டனில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர். தன்னுடைய தோழி ஒருவரிடம் பேசிவிட்டு போனை வைத்த மிருதளா மீனுவை திரும்பி பார்க்க... மீனுவின் முகம் ஏதோ தீவிர யோசனையில் இருப்பது போல இருந்தது. அதை பார்த்ததும் மீனுவின் தோளில் கை வைத்து "என்ன ஆச்சு ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு ஏதோ ரொம்ப யோசனை இருக்கிற மாதிரி தெரியுது" என்றாள்.
"ஒன்னும் இல்லடி" என மீனு தலையாட்ட...
"பொய் சொல்லாத மீன்ஸ் எனக்கு தெரியாதா... சொல்லு ஏன் உன் முகம் இப்படி இருக்கு மறுபடியும் ஜெய் எதுவும் உன்ன சொன்னாரா எதுவும் பேசி சங்கடப் படுத்திட்டாரா" என கேட்டாள் மிருதுளா.
"அவன் அப்படி சொல்லி இருந்தா கூட பரவாயில்லையே.. ஆனா அவன் செஞ்ச வேலையை எல்லாம் உன்கிட்ட சொன்னேன்னு வை ச்சி... ச்சி... வேணாம் விடு" என்றாள் மீனு.
"ஏய் என்னடி இப்படி சொல்ற அப்போ கண்டிப்பா அவர் உங்கிட்ட என்ன பேசினாருன்னு நான் தெரிஞ்சு ஆகணும். ஒழுங்கா இப்போ சொல்ல போறியா? இல்லையா ? காலையில உன்னை காலேஜ்ல டிரா பண்ணப்போ நாங்க இருக்கும்போது உன்னை காருக்குள்ள வச்சு கிஸ் அடிச்சாரு.. அதே போல எதுவும் நடந்திருச்சா!!" என்ன என்றாள் ஆர்வமாக.
"ஆமா டி.." என்று மீனு முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மிருதளாவை பார்த்து தலையாட்ட..
"என்னடி சொல்ற ! என்ன நடந்துச்சுன்னு விடாம மறைக்காம என்கிட்ட சொல்லிடு நம்ம ரெண்டு பேரும் ஆல்ரெடி அக்ரிமெண்ட் போட்டு இருக்கோம் கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன் புருஷன் உன்கிட்ட எப்படி ரொமான்ஸ் பண்ணினாலும் அதேபோல நான் கல்யாணம் பண்ணிக்க போறவர் என்கிட்ட என்ன ரொமான்ஸ் பண்ணினாலும் அப்படியே சொல்றன்னு நீயும் நானும் பேசி இருக்கோம் இப்ப மட்டும் நீ ஏதாவது மறைச்சு என்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சது வை அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது " என்று மீனுவை மிரட்டினாள் மிருதுளா.
"சரி சரி டி நான் இப்ப என்ன சொல்ல மாட்டேன்னா சொன்னேன்" என்றவள்.
"அப்புறம் என்ன சீக்கிரம் சொல்லு குயிக்.. குயிக்... " என்று அவளை பார்த்தவாறு திரும்பி கன்னத்தில் கை வைத்து மீனுவை பார்த்தாள் மிருதுளா.
"அது வந்து நானும் ஜெய்யும் காலேஜிலிருந்து கார்ல வந்துட்டு இருந்தோமா..." என மீனு ஆரம்பிக்க.
"ம்ம்ம் ... வந்துட்டு இருந்தீங்க அப்போ என்ன ஆச்சு?" என்றாள் மிருதுளா.
"அப்போ ஜெய் கூட எனக்கு வாக்குவதும் வந்திருச்சு அவன் மேல நான் கோபமா இருந்தா ஒரு கட்டத்துக்கு மேல வந்ததும் அவன் என்ன செஞ்சான் தெரியுமா!!" என மீனு அங்கே நிறுத்த.
"ஏய் இப்படியே பாதி பாதியா நிறுத்தாம முழுசா சொல்லுடி.. எனக்கு டென்ஷன் ஆகுது" என்றாள் மிருதளா.
"சரி சரி கோபப்படாத டி என்றவள் அதன் பிறகு காரைக்குள் வைத்து ஜெய் மீனுவை என்ன எல்லாம் செய்தான்" என்று ஒன்று விடாமல் அவளுக்கு நேரில் நடந்ததை விட மிகவும் வர்ணனை கூட்டி...உணர்வுகளை அதிகப்படுத்தி மிருதுளாவிடம் சொன்னாள் மீனு .
மீனு சொல்லி முடிக்கும் வரை வாயை பிளந்து கொண்டு அனைத்தையும் கேட்டேன் |"நீ அவருக்கு பீம்பாய் என்று பெயர் வைத்ததுல தப்பே இல்ல" என்றவள்.
"ம்ஹும்.. " என்று பெருமூச்சு ஒன்றை உதிர்த்து "நீ கொடுத்து வச்சவ தான்" மீனு என்றாள்.
மிருதுளா சொன்னதே கேட்டு மீனு வெட்கப்பட்டவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள.
அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவள் "உன்ன மாதிரி நான் எப்ப கல்யாணம் பண்ணி இப்படி எல்லாம் வெட்கப்பட்டு இருக்கிறதுனு தெரியலை பரவாயில்லை அதெல்லாம் விடு.. இப்ப எதுக்கு நீ முகத்தை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன ஆச்சு அதை முதல்ல சொல்லு" என்றாள்.
"அதுவா நீங்க ரெண்டு பேரும் இருக்கும்போது எனக்கு முத்தம் கொடுத்தானா?" என்றாள் மீனு.
"ஆமா கொடுத்தாரு அதுக்கு என்ன சொல்லு" என்றாள்.
"அப்புறம் நாங்க ரெண்டு பேரும் தனியா கார்ல வரும்போது என்ன என்னவெல்லாம் பண்ணினான்னு சொன்னேனா" என்றாள் மீண்டும் மீனு.
"ஆமாடி அதுக்காக ஏண்டி முகத்தை தூக்கி வச்சிருக்க ரெண்டுமே சந்தோஷமான விஷயம் தானே உன் புருஷன் உன்கிட்ட அப்படி நடந்துக்காம வேற என்ன செய்வா"ர் என்றால் மிருதளா ஜெய்க்கு வக்காலத்து வாங்கி.
"அது இல்லடி காருக்குள்ள இருக்கும்போதே இத்தனை சில்மிஷம் பண்றவன் நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா ஒன்னா ஒரே ரூம்ல இருக்கிறப்போ என்னவெல்லாம் செய்வாய் என்று எனக்கு ரொம்ப பயமாயிருக்கும் மிருதுளா" என்றாள்.
அதைக் கேட்டதும் சத்தமாக சிரித்த மிருதுளா "அன்னைக்கு ஒன்னா ஒரே ரூம்ல ஒரு ராத்திரி முழுக்க இருந்தியே அப்பெல்லாம் எப்படி இருந்துச்சோ.... அதே மாதிரி தான் இருக்கும். இதுக்காகவா முகத்தை தூக்கி வச்சிருப்ப... அவ அவளுக்கு ஒரு கிஸ் கொடுக்க கூட ஆள் இல்லைன்னு வருத்தமா இருக்கு. இவ என்னடான்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷன் கூட ஒன்னா தனியா இருக்கிறதுக்கு இவ்வளவு யோசிச்சிட்டு இருக்கா" என புலம்பியவள் எழுந்து உள்ளே சென்று விட...
அவள் பின்னாலேயே மீனுவும் தயங்கியபடி ஜெய்யை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு "கடவுளே இவன் ரூமுக்கு வந்து என்ன செய்ய போறானோ" என்று பயந்த படி வீட்டிற்குள் சென்றாள்
இவ்வளவு நேரம் மீனுவும் மிருதுளாவும் பேசுவதை எல்லாம் கேட்டபடி அங்கே நின்றிருந்த ஜெய் அதைக் கண்டும் காணாதவன் போல சூர்யாவிடமும் சந்தோஷிடமும் பேசிக்கொண்டு இருக்க.
அவனைப் போலவே இவர்கள் இருவருமே மீனு மிருதளா பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் பேசி முடித்துவிட்டு மிருதளா, மீனு எழுந்து செல்லும் வரை அமைதியாக இருந்தவர்கள்.
இருவரும் வீட்டிற்குள் சென்று விட்டார்களா என்பதை உறுதி செய்தவர்கள் அடுத்த நொடி ஜெய்யிடம் வந்து ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக் கொண்டு "பார்த்தாலும் பார்த்த உன்ன மாதிரி ஒருத்தனை நான் பாக்கவே இல்ல டா. காலையில என்னடான்னா நானும் மிருதுளாவும் இருக்கும்னு கொஞ்சம் கூட யோசிக்காம கார்ல வச்சு சிஸ்டரை கிஸ் பண்ண. ஈவினிங் வேற சிஸ்டர் கிட்ட காருக்குள்ள வச்சு ஏதோ பெருசா வேலை பண்ணியிருக்க... அதுக்கு பயந்துட்டு அவங்க உன் கூட தனியா இருக்க எவ்வளவு யோசிக்கிறாங்க பாரு பாவம்டா கொஞ்சம் பார்த்து அவங்களுக்கு கருணை காட்டு ஆர்வத்துல ரொம்ப பாஞ்சிறாத" என்று சூர்யா ஜெய்யின் வயிற்றில் குத்த.
ஜெய் எதுவும் பேசாமல் மீனு சொன்னதையே நினைத்துக் கொண்டு நின்றிருந்தான். ஏனென்றால் காரில் அவன் என்ன செய்தான் என்று அவனை விடவா மற்றவர்களுக்கு தெரிந்து விடப் போகிறது. ஆனால் அதைவிட அனைத்தையும் மிகைப்படுத்தி கூறிய மீனுவை என்னவென்று நினைப்பது என யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஜெய் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்த சந்தோச, "சூர்யா இப்போ நம்ம ரெண்டு பேரும் இங்க நிக்கிறது ரொம்ப வேஸ்ட். அண்ணாவோட உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கு உயிர் எப்பவும் அண்ணி பின்னாடி போயிடுச்சு அதனால நீயும் நானும் இங்கு நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் நீ வா நம்ம போய் தூங்கலாம்" என்று சூர்யாவின் தோளில் கை போட்டு அங்கிருந்து அவனை அழைத்துச் சென்றான்
"டேய் சந்தோஷ் என் ஆளு என்ன சொல்லிட்டு போனான்னு தெரியுமா" என்றான்.
"யாரு மிருதுளாவா?" என்றான்.
"ஆமாடா அவ தான் என்ன சொல்லி புலம்பினா பாத்தியா.. அவளுக்கு கிஸ் பண்ண கூட ஒரு ஆள் இல்லைன்னு ரொம்ப வருத்தப்படுறாடா.. நான் வேணும்னா அவ ரூமுக்கு போய் கேட்டது கொடுத்துட்டு வரட்டுமா?" என்றான் சூர்யா.
"சூர்யா இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல அப்படி இப்படி நீ அவங்க ரூமுக்கு சும்மா கூட போய் எட்டிப் பார்த்துடாத அப்புறம் கையில கிடைக்கிறத வச்சு உன்ன அடிச்சு துரத்திட போறாங்க. பேசாம ஒழுங்கா வந்து என் கூட தூங்கு" என அவனை இழுத்துக்கொண்டு சந்தோஷ் உள்ளே சென்றான்.
இங்கே மீனுவை நினைத்து உள்ளுக்குள் இருந்த அத்தனை உணர்வுகளையும் அவளிடம் ஒன்றாக இன்றே கொட்டி விட வேண்டும். அவள் மிகைப்படுத்தி சொன்னதை எல்லாம் செய்து காட்டிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் ரூமுக்கு விரைந்தான் ஜெய்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 32.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 32.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.