logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
ஜெய் ஏற்பாடு செய்திருந்த ரெஸ்டாரண்டில் அனைவரும் வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் . அவனோடு ரெஸ்டாரண்டுக்கு வந்ததிலிருந்து மீனு ஜெய் இருந்த பக்கமே திரும்பவில்லை.

அவன் தன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையும் அத்துமீறலும் அவளை என்னென்னமோ செய்தது. தன் மனதில் அவனை பார்க்கும் பொழுதெல்லாம் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவனுக்கு இசைந்து போவதை நினைத்து தன்னை நொந்து கொண்டாள்.

ஆனால் ஜெய்யோ அதற்கு நேர் மாறாக இருந்தான். ரெஸ்டாரண்டிற்கு வந்ததிலிருந்து மீனுவை விட்டு எங்கேயும் போகவில்லை அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

இருவரும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க அவன் கைகள் சும்மா இருக்காமல் அவளை நோண்டிக்கொண்டே இருந்தது.

அவள் உன் இடையில் தன் விரலால் கோலம் போடுவதும். தன்னிடம் வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்த மீனு மற்றவர்களுடன் சிரித்து பேசுவதை கண்டு காண்டானவன் அவள் தொடையை பிடித்து நறுக்கென்று கிள்ளுவதுமாக இருந்தான்.

முதன்முறை அவன் கிள்ளி வைக்கையில் மீனு அதிர்ச்சியானவள் அவனைத் திரும்பிப் பார்க்க.. அவனோ எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கிள்ளி வைத்த அவள் தொடையை வலிக்காமல் தடவி கொடுத்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தன் தொடையில் இருந்து கைகளை எடுக்காமல் பிசைந்து கொண்டே இருந்தவனின் கையில் எடுத்துவிடப் போக அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டான்.

அவனைத் திரும்பி முறைத்தவள் "கைய விடுங்க" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.

"வந்ததுல இருந்து என் பக்கம் திரும்பவே மாட்டேங்குற... என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குற.. நீ இப்படி இருந்தா நானும் இப்படித்தான் பண்ணுவேன்" என்றான் சிறுபிள்ளை தாயின் அன்பிற்கு ஏங்குவது போல அவளின் அருகாமைக்கு ஏங்கியவனாக பேசினான் ஜெய்.

"இங்க பாருங்க எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். முதல்ல கையை விடுங்க... எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க. எனக்கு என்னவோ போல இருக்கு" என்று அவன் கையிலிருந்த தன் கையை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அவனை விட்டு லேசாக தன் சேரை நகர்த்தி போட்டு அமர்ந்தாள்.

மீனுவுக்கு எதிரே இருந்த மிருதுளா மீனுவை பார்த்து "மீனு நீ சொல்லு உனக்கு இப்படி திடீர்னு கல்யாணம் ஆகும்னு நீ நினைச்சு பார்த்திருக்க மாட்ட இல்லை. ஒரே நாள்ல உன் வாழ்க்கை சிங்கிளிருந்து கமிட் ஆயிடுச்சு" என்றாள்.

"ஆமா மிருதுளா நான் சிங்கிள் லைஃப் இப்போ ரொம்ப மிஸ் பண்றேன். நீங்க எல்லாரும் அடிக்கடி வெளியில போறீங்க நைட் பார்ட்டி, பிரண்ட்ஸ் கூட கெட்டு கெதர்னு ஜாலியா இருக்கீங்க. ஆனா நான் கமிட் ஆகிட்டேனே குடும்பம், கணவர்னு இருக்க வேண்டியது தான்" என்றாள் மீனு.

"உன்னை யார் அப்படி இருக்கச் சொல்லி கம்பெல் பண்ணினாங்க மீனு. உனக்கு உன் பிரெண்ட்ஸ் கூட வெளியே போகணுமா.. அவங்கள மாதிரி பார்ட்டி பண்ணனுமா.. நீயும் போயிட்டு வாயேன் உன்னை யார் எங்கே தடுக்க போறாங்க" என்றார் கஜேந்திரன்.

"இல்ல மாமா எனக்கும் அங்கெல்லாம் போகணும்னு தான் ஆசை ஆனா..." என்று தன் அருகில் இருந்த ஜெய்யை பார்த்துவிட்டு " என் அம்மா இருக்காங்களே அவங்க தான் இனிமேல் பழையபடி ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஊர் சுத்துறது.. டூர் போறேன் பார்ட்டி பண்றேனு அடிக்கடி வெளியே லேட் நைட்ல போறது இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்க கூடாது குடும்பம் கணவர்னு குடும்பத்தை பார்த்துட்டு தான் இருக்கணும்னு சொல்ராங்க" என்றாள் .

"ஆமா அதுவும் சரிதான் நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து நீ என்கூட சரியா பேசவே இல்ல நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரணும்னு தான் அத்தை என் கூடவே இருக்கணும்,,, என்ன விட்டு எங்கேயும் போகக்கூடாதுனு சொல்லி இருக்காங்க. நம்ம ரெண்டு பேரும் நல்லா பேசி ஒருத்தர ஒருத்தர் நல்ல புரிஞ்சுகிட்ட பிறகு அதுக்கப்புறம் நீ எப்பவும் போல ஜாலியா இருக்கலாமே நமக்கான நேரம் இப்பதானே அமைஞ்சிருக்கு அத நம்ம சரியா இன்னும் பயன்படுத்திக்கவே இல்லை" என்று அவன் குதர்க்கமாக மீனுவை பார்த்து கூற.

"அதுக்குத் தான் நான் ஒரு வழி வச்சிருக்கேன்" என்றார் குரு.

மீனவும் , ஜெய்யும் திரும்பி குருவை பார்க்க... "என்ன பாக்குறீங்க உங்களுக்கும் என் மகளுக்கும் திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சு. நான் என் பொண்ணோட கல்யாணத்தை இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் நிறைய கனவு கண்டு இருந்தேன் . பரவாயில்ல அது ஒரு பெரிய விஷயம் கிடையாது . உங்களோட சொந்தம் எல்லாருக்குமே மீனுவை நீங்க கல்யாணம் பண்ணின விஷயம் தெரியும். அதேபோல என்னுடைய சொந்தங்களுக்கும் நான் தெரியப்படுத்திட்டேன்" என்ற குரு "இனி அடுத்ததா அப்பாவா என் பொண்ணுக்கு நான் செய்ய வேண்டிய ஒரு பெரிய விஷயம் இருக்கு" என்றவர்.

தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு அழகான சிறிய பெட்டியை வெளியே எடுத்தார். அது கிப்ட் ட்ராப் செய்யப்பட்டு அதில் பர்பிள் நிற ரிப்பன் கட்டப்பட்டு இருக்க அதை அவர்களிடம் நீட்டினார்.

"என்னப்பா இது?" என கேட்டுக்கொண்டே மீனு அந்த கிப்டை வாங்க போக ஜெய்யும் அதை வாங்குவதற்காக கை நீட்ட இருவரின் கையும் உரசிக்கொள்ள.. அவன் கைபட்டதும் மின்சாரம் பாய்ந்து போல சட்டெனு தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் மீனு .

அதை கவனித்த ஜெய் லேசாக சிரித்தவன் குரு கொடுத்த கிஃப்ட் வாங்கி அதை ஓபன் செய்தாள் அதில் ஒரு சாவிக் கொத்து இருந்தது.

"என்ன மாமா இது ஏதோ வீட்டோட சாவி மாதிரி இருக்கு" என்றான்.

"ஆமா மாப்பிள்ளை இது வீட்டோட சாவி தான்" என்றவர்.

ஒரு பிரபலமான இடத்தை சொல்லி "அங்கே உங்களுக்கும் மீனுவுக்கும் நாங்க ஒரு பெரிய வில்லாவை வாங்கி இருக்கோம். இனிமேல் நீங்களும் மீனுவும் அந்த வீட்ல தான் இருக்க போறீங்க. உங்க ஆபீஸ் மீனுவோட காலேஜுக்கு நடுவுல தான் இந்த வில்லா அமைந்திருக்கு ரெண்டு பேருக்குமே போயிட்டு வர வசதியா இருக்கும்" என்றவர்.

"அங்க உங்க ரெண்டு பேரையும் யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க" என்று சொல்லி சிரித்தவர்.

"நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சென்னை வந்த பிறகு நானும் உங்க அப்பாவும் ரெண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்து வாங்கின வீடு தான் இது. கண்டிப்பா உங்க ரெண்டு பேருக்கும் அந்த வீடு பிடிக்கும்னு நினைக்கிறேன். அந்த வீட்டுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செஞ்ச பிறகு உங்ககிட்ட அதை சொல்லிடலாம்னு தான் நாங்கள் இரண்டு பேரும் இத்தனை நாளா அந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லாம இருந்தோம். ஆனா நீங்க இன்னைக்கு எங்க ரெண்டு பேர் எங்க எல்லாருக்குமே பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துட்டீங்க அந்த சந்தோஷத்தை கொண்டாடத்தான் அந்த வீட்டோட சாவியை உங்க ரெண்டு பேருக்கும் நாங்க பரிசா கொடுக்கிறோம்" என்றார் குரு சந்தோஷமாக.

"அப்போ நானும், மீனுவும் தனியாக அந்த வீட்ல தான் இருக்க போறோம் இல்லையா மாமா" என்றான் குருவிடம் ஜெய்.

"ஆமாம் மாப்பிள்ளை அது உங்க ரெண்டு பேர் இருக்காங்க நாங்க கொடுக்கிற கல்யாணம் பரிசு" என்றார் குரு.

"அப்போ நாங்க இன்னைக்கே அங்க போய்க்கலாமா.." என்றான் ஜெய்.

"தாராளமா ஜெய் ஏற்கனவே அங்கே எல்லா வேலையும் செய்து முடிச்சாச்சு . நீங்க ரெண்டு பேரும் குடி போக வேண்டியது தான் பாக்கி" என்றார் கஜேந்திரன்.

ஜெய்யுடன் தனியாக ஒரே வீட்டில் இனிமேல் இருக்கப் போகிறோம் என்று நினைத்ததுமே நினைவை முதுகுத்தண்டு சில்லிட்டது காருக்குள் வைத்து அவன் செய்த சில்மிஷங்களையே அவளால் சமாளிக்க முடியவில்லை.

இனி அவனுடன் தனியாக ஒரே வீட்டில், ஒரே அறையில் என்று நினைக்கையிலேயே அவள் உடல் எல்லாம் ஏதோ செய்தது.

மைதிலியும், விக்ரமும் சீக்கிரமா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

கஜேந்திரன் சந்தோஷை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு செல்வதாக கூறினார்.

மிருதுளா பூஜா இருவரும் குரு ஜனனி உடன் வீட்டுக்கு கிளம்புவதாக கூற மீனு மட்டும் ஏதோ திடீரென தனியாக இருப்பது போல உணர்ந்தாள்.
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 32
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top