- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
மீனு மிருதுளாவிடம் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ஜெய். மீனு அவளிடம் தான் காரில் நடந்து கொண்டதை மிகைப்படுத்தி கூறியதை எல்லாம் செய்து காட்டிட வேண்டும் என்று அவள் அறை நோக்கி விரைந்தான்.
உள்ளே வந்ததும் மீனுவை தேட அவள் ட்ரெஸ்ஸிங் ரூமில் உடை மாற்றிக்கொண்டு இருந்தாள் .
மெல்ல சத்தம் இல்லாமல் ட்ரெஸ்ஸிங் ரூமின் முன்பு வந்து நின்ற ஜெய் அவள் வெளியே வரட்டும் என்று காத்திருந்தவன் பிறகு எதற்காக நேரம் கடத்த வேண்டும் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் .
மேலே உள்ளாடையுடனும், கீழே ஸ்கர்ட்டும் அணிந்து நின்று இருந்த மீனு கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நின்ற இடத்தில் இருந்து திரும்பி பார்த்தாள்
ஜெய் அவள் நின்று இருந்த கோலம் கண்டு அப்படிய்யே அதிர்ந்து போனான் .
உள்ளாடையை தாண்டி வெளியே தளும்பிக்கொண்டு இருந்த அவள் அழகு அவன் கவனத்தை ஈர்க்க… உடனே அவள் அழகை மறைத்து இருந்த அவள் ஆடையை கலைந்து அவள் அழகை சுவைக்க அவன் நா துடித்தது.
இப்படி தன்னையே விழுகுவது போல பார்த்தவனின் பார்வை நிலை குத்தி இருந்த இடத்தை தானாக அவள் கைகள் சென்று மறைத்துக்கொண்டது .
உள்ளே வந்தவன் கதவை சாற்றிவிட்டு அவளை நெருங்கினான் .
மீனு சற்று பதட்டமாக பின்னால் சென்றவள் . "நீங்க எதுக்கு இப்போ இங்கே வந்திங்க கொஞ்சம் வெளியே இருங்க நான் டிரஸ் change பண்ணனும்" என்றாள் .
“டிரஸ் தானே மாத்தணும் நீ மாத்து நான் இங்கயே இருக்கேன்" என்று அங்கே இருந்த அலமாரியின் மீது சாய்ந்து நின்றவன் கை கட்டிக்கொண்டு அவளை கண்களாலே உரிப்பது போல பார்த்தான் .
அவன் பார்வை எதிர்கொள்ள முடியாமல் கழட்டி போட்ட சேலையை எடுத்து தன் உடலை மறைத்தவள் அவனை பார்த்து "ப்ளீஸ் கொஞ்சம் வெளியே இருங்க நீங்க இங்கே இருந்தா நான் எப்படி டிரஸ் மாத்துறது " என்றாள் தயக்கமாக .
" ஏன் நான் ஏற்கனவே பார்த்தது தானே திரும்ப பாக்குறதுல என்ன பிரச்சனை" என்றான் .
அவன் அபப்டி சொன்னதும் மீனுவின் முகம் பிரகாசம் ஆனது .
வேகமாக அவனிடம் வந்தவள் " அப்போ நீங்க பழசை எல்லாம் ஞாபகம் வெச்சு இருக்கீங்களா ?" என்றாள் ஆர்வமாக
அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பும் , காதலும் ஜெய்க்கு மனதின் ஆழம் வரை சென்று தாக்கியது .
அவளை இடையில் கை கொடுத்து இழுத்து அணைத்தவன் "இல்லை !" என்று அவன் தலையை ஆட்ட.
அவள் முகம் உடனே சுருங்கிவிட்டது. மீனு சோகமாக தலையை குனிந்து கொள்ள… அவள் மோவாயில் பிடித்து நிமிர்த்தியவன் ஏமாற்றம் நிறைந்த கண்களை பார்த்து அதில் முத்தம் வைத்தவன் .
" நீ தானே சொன்ன நாம ஒண்ணா ஒரு நைட் இருந்தோம்னு .. அப்போ நான் உன்னை முழுசா பார்த்து இருப்பேனே அதை தான் ஏற்கனவே நான் பார்த்தது தான்னு சொன்னேன் " என்றான் .
மீனு எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தாள் . " ஏன் மீனு எதுவும் பேசாம இருக்க.." என்றான்.
" ம்ஹும்...ஒன்னும் இல்லை " என்றாள் .
"ம்ச்..சொல்லு மீனு நீ மனசுல என்ன நினைக்குறேன்னு என்கிட்டே சொன்னால் தானே எனக்கு புரியும் . இப்படி நீ ஏதும் சொல்லாம இருந்தா நான் என்ன செய்வேன் . எனக்கு தான் எதுவுமே ஞாபகம் இல்லையே " என்றான் ஜெய்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் " உங்களுக்கு உண்மையாவே நாம ஒண்ணா இருந்த அந்த நைட் நியாபகம் இல்லையா?" என்றாள் .
"ம்ஹும் .."என்றான் உதட்டை பிதுக்கி .
அவன் உதட்டை பிதுக்கி குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்க்க… அதை ரசித்துக்கொண்டே " ஏன் ?" என்றாள் கேள்வியாக அவனை பார்த்து .
" ஏன்னா அமெரிக்காவில் எனக்கு நடந்த அச்சிடேன்ட்டில் நான் பழசை எல்லாம் மறந்துட்டதா என் அப்பா சொன்னார் " என்றான் .
" அப்போ உங்களுக்கு ரியா கூட கல்யாணம் பிக்ஸ் ஆனதுக்கு பிறகு தானே உங்களுக்கு அச்சிடேன்ட் ஆச்சு . அப்போ நமக்குள்ள நடந்தது உங்களுக்கு நியாபகம் இருந்து இருக்கும் தானே ... அப்போ உங்களுக்கு என்ன பார்க்கணும் , என்கிட்டே பேசணும், நான் யாருன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணவே இல்லையா ?" என்றாள் ஏமாற்றம் நிறைந்தவளாக .
" தெரியல மீனு நிஜமாவே நான் எப்படி இவ்வளவு பெரிய விஷயம் என் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம் நடந்த பிறகு ரியாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னேனு தெரியலை . என் கால் உடைஞ்சு நான் கண்விழிச்சு பார்க்குற அப்போ எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியலை . என் கார்ட்ஸ் எனக்கு தெரிஞ்ச விஷயங்கள்னு நிரைய விஷயங்களை எனக்கு நியாபக படுத்துறதுக்காக என்கிட்டே சொன்னாங்க . ஆனா அதில் யாரும் உன்னை பற்றியோ இப்படி ஒரு சம்பவம் நமக்குள்ள நடந்திருக்குங்குற விஷயத்தை பற்றியோ என்கிட்ட சொல்லவே இல்லை " என்றான் ஜெய் .
மீனு எதுவும் பேசவில்லை அவள் கன்னத்தை பிடித்து அவள் இதழில் முத்தம் வைத்தவன் "ஆனா நீ ஆசைப்பட்டது போல என்னையே கல்யாணம் செய்துக்கிட்டியே அப்பறோம் ஏன் மீனு இன்னமும் சோகமா இருக்க " என்றான் .
அவள் எதுவும் பேசாமலே சோகத்தில் இருக்க .." சரி, நான் உன்கிட்டே ஒன்னு கேட்கணும் ' என்றான்.
அவனை பார்த்து " என்ன " என்றால் பார்வையாலேயே .
" வெளியே கார்டனில் நீயும் மிருதுளாவும் பேசிகிட்டு இருந்த அப்போ நாம ரெண்டு பெரும் காருக்குள்ள என்ன செய்தோம்னு சொல்லிட்டு இருந்தியே . நீ சொன்னது போலவா நான் செய்தேன் . உன் பிரென்ட்கிட்ட நிறைய பிட்டு போட்டு சொல்லிட்டு இருந்த.. நான் அந்த மாதிரியா உன்கிட்டே நடந்துகிட்டேனா ?" என்றான் அவள் மூக்கு நுனியில் முத்தம் வைத்து மீனுவின் கண்களை பார்த்து .
மீனுவிற்கு ஜெய் சொன்னதை கேட்டு அதிர்ச்சியானது " நாங்க பேசினது உங்களுக்கு எப்படி தெரியும் " என்றாள் கேள்வியாக .
" எனக்கு மட்டும் இல்ல அங்கே இருந்த சந்தோஷ் , சூர்யா ரெண்டு பேருக்குமே நல்லாவே கேட்டுது" என்றான் .
அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சி ஆனா மீனு அவனை விட்டு விலகி நின்றவள் "அப்போ நாங்க ரெண்டு பெரும் பேசினது நீங்க மூணு பெரும் கேட்டுட்டு இருந்திங்களா ?" என்றாள் .
"ம்ம்ம்... ஆமா நீ அவ்ளோ இன்டெரெஸ்ட்டா நாம காருக்குள்ள என்ன செய்துட்டு இருந்தோம்னு சொல்ற அப்போ அதை கேட்காம போக முடியுமா " என்றான் சிரித்துக்கொண்டே .
மீனுவிற்கு இதை கேட்டு வெட்கம் பிடுங்கித்தின்றது " ஐயோ !! கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது .நான் அவங்க முகத்துல எப்படி முழிப்பேன் " என்று வாய் விட்டு புலம்பியவள் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள் .
அதை பார்த்து சிரித்தவன் அவள் கைகளை விலக்கி தன் இடையை சுற்றி போட்டுக்கொண்டவன் மீனுவின் இதழில் முத்தம் வைத்து ஒற்றி எடுத்தவன் " எப்படி சொன்னே… முதல்ல...உன்னை தூக்கி என் மடி மேல உட்கார வெச்சு ..உன் லிப்ஸ்சை என் விரலால் அழுந்த தடவி இந்த உதட்டுல என்ன கள் வெச்சிருக்கியா மீனு முத்தம் கொடுக்க கொடுக்க போதை ஏறுது எனக்குன்னு சொல்லி அப்டியே உன் உதட்டை நான் எப்படி முத்தம் வைத்தேன் இப்படியா " என்று மீனு சொன்னது போல அவள் உதட்டை தன் விரலால் தடவி அவள் கண்களை பார்த்து .
" உண்மை தான் மீனு இதுல கள்ளை விட போதை தர கூடியது என்னவோ அந்த ப்ரஹ்மன் படைச்சிருக்கான் . அதனால் தான் இதை முதன் முறை முத்தம் வைத்த பிறகு உன்னை பார்க்கும்போது எல்லாம் என்னால உன் உதட்டில் முத்தம் கொடுக்கணும்னு தோணுற என் நினைவை கட்டுப்படுத்தவே முடியலை " என்றவன் குனிந்து அவன் மொத்த உணர்ச்சியையும் முத்தத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக மோகம் கொண்டு முத்தம் வைத்தான்.
அவன் பேசுவதை எல்லாம் கேட்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்த மீனு ஜெய் உணர்ச்சி போங்க அவளை அணைத்து முத்தம் வைக்கவும் அவன் கண்களை பார்த்துக்கொண்டு இருந்த மங்கை கண்களில் மயக்கம் கொண்டு கண் மூடி அவன் முத்தத்தை அனுபவித்தாள் .
அவளை முத்தம் வைத்த ஜெய் அவளிடம் இருது தன் உதட்டை பிரித்து அவள் உதட்டோடு தன் உதடு உரசும் அளவு இடைவெளி விட்டு நின்றவன் அவள் மூடிய விழிகளில் முத்தம் வைத்து " அப்ரோம் என்ன சொன்னே மீனு மூடி இருந்த உன் கண்களில் முத்தம் கொடுத்துட்டே மெல்ல மெல்ல ...கீழ வந்து உன் கழுத்து வளைவில் என் மீசை முடி வைத்து கூச்சம் வரும் அளவுக்கு உன்னை இம்ஸை செய்தேனா ?" என்றான்.
கண்கள் மூடி மயக்கத்தில் இருந்தவள் ஜெய் சொன்னதை கேட்டு மெல்ல சிரித்து " ம்ம்ம்... சொன்னேன் பீம் பாய் உன் மீசை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீயும் நானும் ஒண்ணா இருந்த அப்போ நீ என்னை இப்படி செய்து சிரிப்பு மூட்டின .." என்றால் மீனு .
" அப்போ நீ மிருதுளா கிட்டே சொன்னது எல்லாம் நாம ரெட்னு பெரும் போதையில் ஒண்ணா இருந்த அப்போ செய்ததா " என்றான் .
முகமெல்லாம் சிவந்து இருந்த மீனுவின் முகம் பழைய நினைவுகளை நினைத்த்து மேலும் சிவந்துவிட வெட்கத்தில் ஆமாம் என்று தலையை ஆட்ட …
அவள் சொன்னது போல மூக்கு நுனியில் இருந்து முத்தம் வைத்தவன் மெல்ல கீழே இறங்கி வந்து சுவற்றில் சாய்ந்து நின்று இருந்த மீனுவின் தலையை மேலே உயர்த்தி அவள் கழுத்து வளைவில் அவள் சொன்னது போல தன் மீசை முடியை வைத்து அவளை சிரிப்பு மூட்டியவன் அவளை பார்க்க...மோகம் ஒரு பக்கம் , வெட்கம் ஒரு பக்கம் , சிரிப்பு ஒரு புறம் என கலவையாக மிகவும் அழகாக இந்த தேவன் கண்களுக்கு அவள் தேவதையாய் ஜொலித்தாள் .
"அப்பறோம் என்ன சொன்ன..." என்று அவள் மார்பை மறைத்து பிடித்து இருந்த சேலையை i அவள் கையில் இருந்து மெதுவாக உருவி கீழே போட்டவன் மீனுவை நிமிர்ந்து பார்த்தான்
குனிந்து அவன் கண்களை ஏக்கமாக பார்த்து " சொல்லாத டா...செய் " என்று அவனை மார்போடு சேர்த்து அழுத்தி அணைத்தாள் .
அவள் மார்பில் மோதிய அவன் முகத்தை லேசாக உயர்த்தி அவள் மார்பில் உரசி முத்தம் வைத்தவன் "சொன்னதை மட்டும் செய்யவா ? சொல்லாததையும் செய்யவா ?" என்றான் .
" என்ன வேணாலும் செய் .. என்னை காதல் சித்ரவதை செய்தாலும் நான் மறுப்பு சொல்லாமல் அதை அனுபவிப்பேன் " என்றால் கூச்சம் இருந்தாலும் தன் தலைவனிடம் தானே தனக்கு வேண்டியதை சொல்ல முடியும் அவனிடம் என்ன சொல்வதற்கு தயக்கம் என்று நினைத்து சொன்னாள்.
அவள் பதில் அவனை ஆச்சரியப்படுத்தியது . பெண்கள் தங்கள் துணையிடம் இது வேண்டும் என்று கேட்டு பெறுவதில்லை ஆனால் அனுபவிக்க எண்ணுவார்கள் காதலை . ஆனால் மீனு அதில் இருந்து சற்று வித்தியாசமக இருந்தாள் அவனிடம் வேண்டும் என்று கேட்டவளை ஆசையாக பார்த்தவன் அப்படியே தன் கைகளில் அள்ளி எடுத்தவன் முல்லை பூங்கொடிக்கு தன்னையே பரிசளிக்க தயாராகினான் .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 33
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 33
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.