logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
கட்டிலில் வயிற்றில் கை வைத்து அழுத்திக் கொண்டு அமர்ந்து இருந்த மீனு மிருதுளா தன்னை பார்த்து சிரித்துக்கொண்டே வருவதை கவனித்தவள் " என்ன டி ஆச்சு இப்படி லூசு மாதிரி தனியா சிரிச்சிட்டு வர.. என்ன விஷயம் சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல " என்றாள் மீனு.

"அது ஒன்னும் இல்லை டி ..நேத்து யாரோ ரூமுக்கு வரத்துக்கே பயமா இருக்குன்னு சொல்லி என்கிட்டே கார்டனில் புலம்பிட்டு இருந்தா . ஆனா அவ தான் இன்னிக்கு இடுப்பு வலிக்குது....வயிறு வலிக்குதுன்னு உக்காந்து இருக்கா " என்று சொல்லி மீனுவை பார்த்து மீண்டும் கிண்டல் செய்து சிரித்தாள் மிருதுளா .

"என்ன டி இது புரியுற மாதிரி சொல்லு அதுக்கும் என் வயிற்று வலிக்கும் என்ன சம்மந்தம் " என்று கூறி முடிக்கும் முன் மீனுவிற்கு நேற்று நடந்தது நிலையில் வந்துவிட...அவள் முகம் எல்லாம் குப்பென்று ஒரு நொடியில் சிவந்துவிட்டது .

உடனே தன் முகத்தை மூடிக்கொண்டு " ஐயோ இது தான் விஷயம்னு எனக்கு முன்னமே தெரியாம போயிருச்சே.. தெரிஞ்சிருந்தா நான் அம்மாகிட்டே சொல்லி இருக்க மாட்டேன் . அம்மா என்னை பற்றி என்ன நினைப்பாங்க . ஐயோ ஆண்டவா " கட்டிலில் படுத்து போர்வையிற் முகத்தில் போர்த்த்திக்கொண்டு புலம்பினாள் மீனு.

"இப்போ புலம்பி என்ன பண்றது இது நேத்து உன் புருஷன் கூட நேத்து நைட் முழுக்க... ஜல்ஸா பண்ணிட்டு இருக்கும்போது தோணலையே" என்று ஓட்டினாள் .

" ஏய் கொஞ்ச நேரம் சும்மா இரு டி... நீ வேற " என்று தலையணையை தூக்கி வீசினாள் .

பிறகு கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து பாத்ரூம் செல்ல போக... மீனுவினாள் எழுந்து நடக்க முடியவில்லை . அவள் எடுத்து வைக்குற ஒவ்வொரு அடிக்கும் அவள் அடிவயிறு வின்னென்று வலி எடுக்க அப்டியே தன் வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள் .

மீனு நடப்பதற்கே சிரமப்படுவதை பார்த்து "நேத்து நைட் உன் பீம்பாய் உன்னை வெச்சு செஞ்சிட்டாரு போல.." என்று நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே மீனுவின் அருகில் வந்தாள் மிருதுளா .




அவள் அப்டி சொன்னதும் இரவு நடந்ததை நினைத்துப்பார்த்த மீனுவிற்கு உடல் முழுவதும் ஆயிரம் பட்டம் பூச்சி பறந்து அவள் சந்தோசமாக இருந்த தருணங்களை அவளுக்கு அசை போட்டுக்காட்டியது .

சிரித்த படி நின்று இருந்தவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு இருந்த மிருது என்ன டி நேத்து நடந்ததெல்லாம் உன் கண்ணு முன்னே ஓடும் போல...சொல்லு சொல்லு நேத்து நைட் நீயும் உன் பீம்பாயும் என்ன எல்லாம் செய்திங்கன்னு சொல்லு என்று அவள் இடையில் மிருதுளா கிள்ள..

" ஏய் ச்சீ...போ டி ...அதெல்லாம் சொல்ல முடியாது போ ..." என்று மீனு வெட்கப்பட ..

" இப்போ நீ சொல்ல போறியா இல்லையா ?"அவள் இடையில் காய் வைத்து கிச்சு கிச்சு மூட்ட...

"ஏய் என்ன டி இது விடு" என்று மீனு சிரித்துக்கொண்டே மிருதுளாவின் கையை தடுத்துக்கொண்டு இருந்தால் .

இவர்கள் இருவரும் இங்கே விளையாடிக்கொண்டு கிண்டல் செய்து கொண்டு இருப்பதை பார்த்தவாறு கதவில் சாய்ந்து நின்று இருந்த ஜெய் கைகளை கட்டியவாறே தோழிகள் இருவரின் விளையாட்டுத்தனத்தை ரசித்தவன் " நேத்து NIGHT என்ன நடந்ததுன்னு நான் வேணும்னா சொல்லட்டுமா மிருதுளா . என் மனைவி பாவோம் அவள் ஏற்கனவே ரொம்ப டையர்டா இருக்கா " என்றான்.

அவன் குரல் கேட்டு இருவரும் அதிர்ந்து போய் வாசலை பார்க்க அங்கே ஜெய் NINDRU இருப்பதாய் பார்த்தது இருவரும் அசடு வழிய சிரித்தனர்.

உடனே மிருதுளா மீனுவிடம் " ஏய் உன் பீம்பாய் எப்போ டி வந்தாரு . நான் வேற உங்கிட்ட பேசிட்டு இருந்ததை அவர் வேற கேட்டுட்டாரே.." என்று நெளிந்தாள் .


" நேத்து என்ன நடந்ததுன்னு என்னை கேட்டே இல்ல ..வேணும்னார் சொல்றேன்னு சொன்னயில்ல நீ வேணா அவர் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோயேன் " என்றல் மீனு நக்கலாக .

அவளை முறைத்த மிருதுளா "நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் . நான் இங்கே இருந்து போறேன் " என்று வெளியே சென்றவள் ஜெய்யை பார்த்து அவனிடம் நின்று " கொஞ்சம் உங்க மீனுவை பார்த்து ஹண்ட்லே பண்ணுங்க ஒரே நாளில் என் பிரெண்டை நடக்க முடியமா செய்துட்டீங்க..." என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக அங்கே இருந்து ஓடிவிட்டாள் .

அவள் சென்றதும் கதவை சாற்றி லாக் செய்த ஜெய் " என்ன சொல்ராங்க உன் பிரெண்ட் உன்னை நான் பார்த்தது பார்த்து தானே ஹண்ட்லே பண்ணினேன் . இன்னமும் பார்த்து ஹண்ட்லே பண்ண சொல்ராங்க" என்று அவன் அணிந்து இருந்த டி ஷர்டை கழட்டி தூர இருந்தவன் மீனுவிடம் நெருங்கி வந்தான்.


" வேணாம் ...கிட்ட வராதீங்க...அங்கேயே நில்லுங்க ..ஏற்கனவே எனக்கு வயிறு வலிக்குது" என்றாள் .

தெரியும் என்றான்

எப்படி என்றல் அவனை பார்த்து .

நீ நிக்குற தினுசுலயே தெரியுதே நேத்து நைட் நான் செய்த வேளைக்கு பாலன் எப்படினு என்று சொல்லி அவன் சிரிக்க..

தன்னை குனிந்து பார்த்த மீனு தன் கால்கள் இரண்டையும் பின்னிக்கொண்டு நிற்பது போல நின்று இருந்தாள் .அதை பார்த்ததும் உடனே தன் கால்களை சற்று தள்ளி சாதாரணமாக நிற்க போக...அவள் வயிறு மீம்ண்டும் வலிக்கவே " அம்மா ..." என்று அடிவயிற்றில் கைவைத்து அப்படியே தரையில் அமர்ந்தாள்.

அவள் வழியில் துடிப்பதை பார்த்தவன் வேகமாக மீனுவிடம் வந்தவன் . அவளை அப்படியே தூக்கிவந்து பெடில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்ந்தியவன் " சாரி மீனு நேத்து நைட் கண்ட்ரோல் இல்லாம நான் கொஞ்சம் வேகமா .." என்று அவளிடம் தயங்கிய படி ஜெய் மன்னிப்பு கேட்க ..

" கொஞ்சம் இல்ல ரொம்பவே வேகம் " என்று அவன் மார்பில் தன் விரலால் கோலம் போட்டுக்கொண்டே பேசினாள் மீனு .

" அப்போ நேற்றே நீ வலிக்குதுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் என்னை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி இருப்பேனே " என்றான் அவளை பார்த்து .

" நான் உங்க கிட்டே கண்ட்ரோலா இருக்க சொன்னா நீங்க கேட்பிங்க ..ஆனா ..." என்று சொல்லி அவள் நிப்பாட்ட..

" என்ன ஆனா சொல்லு நீங சொல்லி இருந்தால் நான் கண்டிப்பா கேட்டிருப்பேன் . என்னனு சொல்லு " மீனு என்றான் தன மடியில் படுத்து இருந்தவள் வயிற்றை வலிக்கு இதமாக நீவிக் கொடுத்துக்கொண்டே .

அதில் அவளுக்கு ஊர் அளவுக்கு வலி குறையவே அவனை நிமிர்ந்து பார்த்தது " நீங்க அமைதியா இருந்து இருப்பிங்க...ஆனா ...உங்க பீம் பாய் "என்று சொல்லி அவள் பார்வை அவன் இடைக்கு கீழே செல்ல..

அவள் எதை பீம் பாய் என்று சொல்கிறாள் என்று உணர்ந்ததும் ." ஏய் அப்போ நீயும் மிருதுளாவும் என்னை பீம் பாய்யின்னு சொன்னது இதை தானா !!" ENDRAAN அதிர்ச்சியாக ,

ஆமாம் என்று மீனு தலையை மேலும் கீழும் ஆடி கள்ள சிரிப்பு சிரித்தாள்.

"அப்போ நாம பஸ்ட் டைம் ஒன்னா இருந்த அப்போ என்னை பார்த்துட்டு தான் நீ எனக்கு பீம் பாய்யின்னு பட்ட பேர் வெச்சு அதை வேற உன் பிரென்ட் லிட்டயும் சொல்லலி இருக்க..அப்டி தானே" என்றான் அவள் இடையில் இறுக்கம் கூட்டி

"ஷ்...என்ன பீம் பாய் இது எனக்கு வலிக்குது மெதுவா .." என்று அவள் இடையில் இருந்த ஜெய் கையை விலக்கி விட போக...

" ஏய் குட்டி கேர்ள் பீம் பாய்ன்னு மறுபடி சொன்னேன்னு வை " என்று அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை ஜெய் கொண்டு செல்ல...

"அதென்ன குட்டி கேர்ள் " என்றாள் மீனு புரியாமல் .


"ம்ம்...இந்த பீம் பாய்க்கு ஏற்ற குட்டி கேர்ள் தான் நீ " என்றான் அவளை கட்டிக்கொண்டு


ஜெய் கழுத்தில் கை கொடுத்து அவனை தன் முகத்திற்கு அருகில் இழுத்தவள் " பீம் பாய் முழிச்சுட்டான் போல.." என்று அவள் அவனை வம்பிழுக்க ...

அடுத்த நொடி அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான் .
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 35.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top