logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
மீனு தொடர்ந்து காலேஜ் போக ஆரம்பித்து இருந்தாள். ஜெய்யும் மீனு வீட்டில் இருந்து தன் ஆபீஸ் சென்று வந்து கொண்டு இருந்தான் . நல்ல நாள் பார்த்து மீனு , ஜெய் இருவருக்கும் வாங்கி இருக்கும் வீட்டிற்கு குடி புக நேரம் பார்த்து வந்துவிட்டாகள் குரு ,ஜனனி , கஜேந்திரன் என மூவரும் .

வீடு கிரக பிரவேசம் செய்வதால் அனைவரையும் அழைத்து விசேஷத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைக்க ஆரம்பித்து இருந்தனர்.

பூஜா தன்னுடன் காலேஜில் பயிலும் தோழிகளை அழைத்து இருந்தாள் நிவியையும் சேர்த்து . சந்தோஸும் அவன் நண்பர்களை அழைத்து இருந்தான் குமாரையும் சேர்த்து .

இருவரும் அழைப்பை முடித்துவிட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பி இருக்க... ஒரே வண்டியில் இருவரும் கிளம்பி காலேஜ் விட்டு வெளியே வந்தனர். இன்னமும் சந்தோஷிடம் கோபம் இருப்பது போல காட்டிக்கொண்டு சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறாள் பூஜா .

சந்தோசும் எவ்வளவோ பூஜாவிடம் சமாதானம் பேசிவிட்டு இருந்தான் . ஆனால் வேண்டும் என்று அவனை அலைய விட்டுக்கொண்டு இருந்தாள்

வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த சந்தோஷ் "பூஜா..." என்று அவள் பெயர் சொல்லி அழைத்தான் .

"சொல்லு சந்தோஷ்" என்றாள் உர்ரென்று .

"ஏன் என்கிட்டே ஒரு பிரெண்டா கூட நீ பேச மாட்டேன்ற ...அப்படி நான் என்ன செய்தேன் உனக்கு . என்னை ஏன் எந்த வகையிலும் உனக்கு பிடிக்கல" என்றான் சோர்ந்த குரலில் .

அவன் பேசுவதை கேட்டு அவளுக்கு சற்று வருத்தமாக தான் இருந்தது " பாவம் சந்தோஷ் இவனை ரொம்ப அலைய விட்றோமோ? " என்று பூஜாவிக்ரு தோன்றியது.

" என்ன பூஜா எதுவும் பேச மாட்டேங்குற ..என்கூட பேச கூட உனக்கு பிடிக்கலையா" " என்றான் வருத்தமாக .

"இல்லை சந்தோஷ் அப்படி எல்லாம் இல்ல" என்றாள் பூஜா .

"அடலீஸ்ட் என்கிட்டே உன் வீட்டுல இருக்குற யாரோ ஒருத்தரா நினைச்சு சகஜமா பேசலாம்ல " என்றான் சந்தோஷ் .

"நான் ஏன் யாரோ ஒருத்தர்கிட்டே சகஜமா பேசணும் " என்றாள் கோபமாக இருப்பது போல.

அவள் குரலில் இருந்த கோபத்தையும் , அவள் வார்த்தையில் இருந்த அலட்சியத்தையும் கவனித்தவன் அதன் பின் அவளிடம் எதுவும் பேசிக்கொள்ள வில்லை . அமைதியாக பைக்கை ஓட்டிக்கொண்டு இருந்தான்.

அவன் பின்னால் அமர்ந்து இருந்த பூஜா "என்ன அமைதியாகிட்டான் நான் சொன்ன வார்த்தை அவனுக்கு கண்டிப்பா கஷ்டமா இருந்திருக்கும் . போவோம் அவன் " என்று நினைத்தவள் .

"சந்தோஷ் நீ யாரோ இல்ல டா .. நீ தான் டா எனக்கு எல்லாமே.. நீ இல்லாம நான் இல்லை" என்று நினைத்தவள்.

"இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்கோ சந்தோஷ் நான் என் மனசுல இருக்கிறதை உன்கிட்டே நேரம் பார்த்தது கண்டிப்பா சொல்றேன் டா... அதுவரை கொஞ்சம் பொறுமையா என் மேல கோபப்படமா இரு டா என் வெல்ல காட்டி " என்று அவனை பின்னால் இருந்து கொஞ்சினாள் .

நேராக வீட்டிற்க்கு செல்லாமல் பூஜாவை அழைத்துக்கொண்டு ஒரு பெரிய மாலிற்கு அழைத்து சென்றான் .

" சந்தோஷ் வீட்டுக்கு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தே . உன் இஷ்டத்துக்கு ஊர் சுத்தணும்னா நீ மட்டும் போயிட்டு வாயேன். என்னையும் ஏன் உன் கூட கூட்டிட்டு போற.." என்றாள் அவனை வெறுப்பேற்றும் விதமாக .

"முதல்ல வண்டியை விட்டு கீழ இறங்குரியா " என்றான் அவள் பேசியதை கேட்டு கடுப்பாகிவிட்டான் .

அதை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் " வெல்லக்கட்டி நீ கோபப்படும் போது கூட கியூட்டா இருக்க டா " என்று அவனை மனதிற்குள் கொஞ்சிக்கொண்டே கீழே இறங்கினாள் .

அவள் இறங்கியதும் வண்டியை லாக் செய்துவிட்டு இறங்கி மாலிற்குள் செல்ல " டேய் சந்தோஷ் நீ உன் இச்சட்டத்துக்கு என்னை கூட்டிட்டு வருவ.. வந்து என்னை இங்கே உன் பைக்கிற்கு காவலுக்கு நிக்க வெச்சுட்டு நீ மட்டும் உள்ளே போற..." என்று கத்தினாள் .

"நான் உன்னை காவலுக்கு நிக்க சொல்லலையே " என்றான் திரும்பி அவளை பார்த்து.

" அப்பறோம் எதுக்கு டா என்னை இங்கே கூட்டிtட்டு வந்தே . எதுவும் சொல்லாம நீ உள்ளே போனா நான் என்ன செய்றது " என்றால் அவன் பின்னால் சென்றுகொண்டே .

" இப்போ நீ என்ன பன்னிட்டு இருக்க .." என்றான் அவள் தன் பின்னால் வருவதை பார்த்து .

" வேற வழி இல்லாம உன் பின்னாடி வந்துட்டு இருக்கேன் " என்று சத்தமாக சொன்னவள் .

"உன்னை சைட் அடிச்சுட்டே உன் பின்னாடி வரேன் டா என் வெல்லக் கட்டி " என்று மெதுவாக சொன்னவள் அவன் பின்னால் வேகமாக சென்றாள் சந்தோஷின் நடைக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாமல் .

"மெதுவா போறானா பாரு நடக்க சொன்னா ஓடுறான் " என்று புலம்பியபடி பின்னால் சென்றாள்.

பூஜா பேசுவது அவன் காதில் விழுந்ததும் தன் நடையை மெல்ல குறைத்துக்கொண்டான் .

அவள் நடந்து வருவதற்கு ஏற்ப தன் எட்டுக்களை மெதுவாக வைத்து சென்றான் .

அவன் செல்லும் இடம் எல்லாம் நாய் குட்டி போல பூஜா செல்ல.. அt ரசிதை ரசித்தவன் "இப்படியே என்னை லவ் பண்றேன்னு சொல்லி என் பின்னாடி வந்தா எவ்ளோ நல்ல இருக்கும்" என்று நினைத்தபடி அந்த மாலில் உள்ள ஒரு பெரிய துணிக்கடைக்கு சென்றான் .

சந்தோஷ் பின்னால் அவன் நடக்கும் அழகை ரசித்துக்கொண்டே ... அவன் கூந்தலை தன் கைகளால் கலைத்துவிட்டு சரி செய்வது என்று அவன் செய்யும் விளையாட்டை சிரித்துக்கொண்டே சென்றவள் தன் பார்வையை அவனை விட்டு வேறு பக்கம் திருப்பவில்லை .

" ஏய் பூஜா இங்க வாடி ..." என்று மீனுவின் குரல் கேட்டு தான் பூஜா தன்னிலை வந்தாள்

"அக்கா!! நீ எங்கே இங்கே ..." கேட்டுக்கொண்டே அவளை பார்த்தவளுக்கு அப்போது தான் தன் குடும்பம் மொத்தமும் அங்கே இருப்பதை கவனித்து விட்டு "என்ன எல்லாரும் இங்கே இருக்கீங்க... என்கிட்டே சொல்லவே இல்லை " என்றாள் பூஜா .

" ஏய் நாங்க காலையிலேயே சந்தோஷுக்கு கால் பண்ணி உன்னை இங்கே கூட்டிட்டு வர சொல்லிட்டோம் சந்தோஷ் உன்கிட்டே சொல்லலையா " என்ற ஜனனி .

" இல்ல ஆன்டி நான் தான் சர்பிரைசா இருக்கட்டும்னு சொல்லாம கூட்டிட்டு வந்தேன் என்றான் .

"சரிங்க தம்பி" என்று சிரித்த ஜனனி "ஏய் பூஜா ஏன் அங்கேயே நிக்குற இங்க வா நமக்கு எல்லாம் மாப்பிள்ளை டிரஸ் எடுத்து கொடுக்க தான் எல்லாரையும் இங்கே வர சொன்னாரு " என்றார்.

" ஏன் மா மாம்ஸ் !வர சொன்னாருன்னு சொல்றிங்க ஆனா அவரை மட்டும் காணோமே எங்கே?" என்றாள் பூஜா.

"அவர் மீட்டிங் ஒன்னு இருக்கு முடிச்சிட்டு வரேன்னு சொன்னாரு . அதான் நாங்க எல்லாரும் முன்ன வந்துட்டோம் " என்றாள் மீனு .

"கிரகப்ரவேசத்துக்கு ஏற்கனவே டிரஸ் எலாம் எடுத்தாச்சே இப்போ எதுக்குமா " என்றாள் பூஜா .

" உன் அக்காவுக்கு புது வீட்டுக்கு போனதும் தாலி பிரிச்சு கோர்க்கணும் . நம்ம சொந்தக்காரவங்க எல்லாரும் மீனு கல்யாணத்தை பாக்கலையினு வருத்தப்பட்டாங்க அதனால கிரகப்ரவேசத்து அன்னிக்கே தாலி பிரிச்சு கோர்த்துடலாம்னு முடிவு பண்ணினோம் அதுக்கு தான் டி டிரஸ் எடுக்க வாதிருக்கு " என்றவர்.

" சும்மா கேள்வி கேட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாத டி டிரஸ் செலக்ட் பண்ணு " என்று டிரஸ் பார்க்க ஆரம்பித்தார் அனைவருடனும் சேர்ந்து .

மீனு தனக்கு பிடித்த ஆடைகளை தேர்ந்து எடுத்துக்கொண்டு இருக்க ,ஜனனி , குரு , கஜேந்திரன் மூவரும் வீட்டிற்கு வரும் முக்கியமான உறவினர்களுக்கு ஆடை தேடிக்கொண்டு இருந்தனர் .

பூஜாவிற்கு என்ன ஆடை செலக்ட் செய்வது என்று தெரியவில்லை . ஏனோ தானோ என்று ஆடை பார்த்துக்கொண்டு இருந்தவளை கவனித்துக்கொண்டே அவளருகில் அமர்ந்த சந்தோஷ் "ஏன் உனக்கு எதுவுமே நீ செலக்ட் பண்ணலையா' என கேட்டான் .

"இல்ல எனக்கு என்ன டிரஸ் செலக்ட் பண்றதுன்னு தெரியல எனக்கு டிரஸ் எடுக்குற மூடே இல்லை" என்றாள் .

"டிரஸ் எடுக்கிறதுக்கு எல்லாம் மூடு வேணுமா " என்று கேட்ட சந்தோஷ் அவள் பார்த்து வைத்துக் கொண்டிருந்த ஆடைகளை எல்லாம் ஒரு முறை நோட்டுமிட்டவன் அதிலிருந்து ஒரு பச்சை நிற லெகங்காவை தேர்ந்தெடுத்து அவளிடம் காட்டி இது போட்டுக்கோ இது உனக்கு நல்லா இருக்கும் என்றான்.

"உன்னை எனக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணி தர சொல்லி கேட்டேனா. இப்படி தேவை இல்லாம வந்து மூக்கை நுளைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத. எனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்க எனக்கு தெரியும்" என்றாள் வேண்டுமென்றே அவனை நோஸ்கட் செய்து .

அவள் பேசியது சந்தோஷத்திற்கு முகத்தில் அடித்தார் போல இருக்க அந்த ஆடையை தூக்கி அவள் கையில் திணித்தவன் "இங்க பாரு நான் உன்ன லவ் பண்றேன். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல உனக்கும் என்ன பிடிக்கும்னா ... அண்ணா அண்ணியோட வீட்டு கிரகப்பிரவேசம் அன்னிக்கு நீ இந்த டிரஸ் போட்டுக்கிட்டு வா... அப்படி நீ போட்டுட்டு வந்தா நீயும் என்னை லவ் பண்றேன்னு நான் தெரிஞ்சுக்கிறேன். அப்படி நீ இந்த டிரஸ் போட்டுட்டு வரலைன்னா இனிமேல் நான் இருக்கிற பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன்" என்றவன் .

அங்க கடைக்காரரிடம் பூஜா கையில் வைத்திருந்த ஆடையை வாங்கி அவரிடம் நீட்டி "அண்ணா இந்த டிரஸ்ஸ பில் பண்ணிடுங்க இதுக்கு நான் பே பண்ணிடுறேன்" என்று தன் கார்டை எடுத்து அவரிடம் நீட்ட..' தம்பி கேஷ் கவுண்டருக்கு வரீங்களா பணம் கட்டிட்டு வந்துடலாம்" என்று அவர் அழைக்க சந்தோசம் அவர் பின்னால் சென்றான் .

சந்தோஷ் தனக்காக முதல் முதலாக ஆடை தேர்ந்தெடுத்து கொடுத்ததை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்த பூஜா "நான் இந்த டிரஸ் போட்டுட்டு வரும்போது உன்னோட முகத்தில் தெரிகிற சந்தோஷம் எப்படி இருக்கணும்னு பாக்கணும் டா செல்லக்கட்டி" என மனதிற்குள் நினைத்தவள் இன்னும் இரண்டு தினங்களில் நடக்கவிருக்கும் கிரகப்பிரவேசத்திற்காக எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்.


 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 36
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top