- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
ஜெய் மீனுவிற்கு குருவும், கஜேந்திரனும் வாங்கி கொடுத்த வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் கோலாகலமாக நடைபெற ஆரம்பித்தது .
அதிகாலையிலேயே பூஜைகள் எல்லாம் தொடங்கப்பட்டு ஜெய் மீனு இருவரும் ஹோம குண்டத்தில் அமர்ந்து பூஜைகள் எல்லாம் செய்து முடித்தனர் .
தன் மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளை எல்லாம் எந்த குறையும் இல்லாமல் குருவும் ஜனனியை செய்ய ... அதை மறுத்து விட்டான் ஜெய் . அனைவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் மீனுவிற்காக செய்ய இருந்த சீர் வரிசைகளை வாங்க மறுத்த ஜெய் அவர்கள் இருவருக்கும் எடுத்துக் கொடுத்த புதிய ஆடைகளை மட்டும் சீர்வரிசையாக பெற்றுக் கொண்டான் .
தங்கள் மருமகனின் நல்ல குணத்தை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டனர் குருவும் ஜனனியும் .
அவர்கள் கொடுத்த ஆடையை இருவரும் மாற்றி வர சென்று விட்டனர் .
மிருதுளாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்துவிட அவர்களோடு காலையில் நேரமே கிரகப்பிரவேசத்திற்கு வந்துவிட்டாள் .
மிருதுளா அழகாக பாவாடை தாவணி அணிந்து அதற்கு ஏற்றார் போல ஆடம்பரம் இல்லாத நகைகள் அணிந்து தலை நிறைய பூ வைத்து வட்ட பொட்டிட்டு குடும்ப குத்து விளக்காக கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தாள் .
அதை பார்த்து வாயைப் பிளந்தான் சூர்யா இதுவரை மாடர்ன் ட்ரெஸ்ஸையே அணிந்து வந்த மிருதுளாவை இன்று பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வருவதை பார்த்துவிட்டு அவனால் தன் பார்வையை அவள் மேலிருந்து திருப்ப முடியவில்லை.
ஜெய் ,மீனு இருவரும் உடை மாற்றி விட்டு கீழே வரவும் விசேஷத்திற்கு அவர்கள் அழைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் சரியாக .
தங்க இலைகளால் நெய்யப்பட்ட பட்டு சட்டையும், வெள்ளி கரை வைத்த வேஷ்டியையும் அணிந்து கொண்டு கழுத்தில் தங்கச் சங்கிலியோடு படிகளை கீழே இறங்கி வந்த ஜெய் பார்த்த கஜேந்திரனுக்கு சந்தோஷமாக இருந்தது.
இத்தனை நாள் தன் வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்தவன். இப்போது குடும்பம் உறவு என்று சந்தோஷமாக வளம் வருவதை பார்த்து மகிழ்ந்தார் கஜேந்திரன்.
அவன் பின்னே சிவப்பு நிற பட்டு உடுத்தி தலைவாரி கொண்டையிட்டு அதை சுற்றி மல்லிகை பூச்சரங்களால் பூச்சூடி கொடி இடையை வளைத்து படிகளில் ஜெய்யோடு சேர்ந்து நடந்து வந்தா்ள் மீனு.
அவர்கள் இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து நெட்டி முறித்தார் ஜனனி.
அவர்கள் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் சந்தனம் குங்குமம் இட்டு அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்த ஜனனியும் குருவும் கஜேந்திரன் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள சொன்னார்கள் .
இருவரும் வீட்டில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு வந்திருந்தவர்களை வரவேற்க சென்று விட்டனர் .
இவ்வளவு நேரம் மிருதுளாவின் பின்னால் சுற்றிவிட்டு சந்தோஷை தேடி வந்தான் சூர்யா,.
அங்கே சந்தோஷ் மிகவும் சோகமாக இருந்தான் .
"ஏன்டா மாப்ள இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமான நாள். ஜாலியா என்ஜாய் பண்றது விட்டுட்டு ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க.. என்ன ஆச்சு?" என்று கேட்டான் சூர்யா .
இப்போதுதான் சூர்யவின் முகத்தை கவனித்தான் சந்தோஷ் வழக்கத்தை விடவும் இன்று அவன் முகம் மிகவும் சந்தோஷமாகவும் பிரகாசமாகவும் இருக்க... அதை பார்த்து வயிறு எரிந்த சந்தோஷ் "ஆமா என்னைக்கும் இல்லாம உன் முகத்தை இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கு" என்றான் ஆர்வம் தாங்காமல்
"அது ஒன்னும் இல்லடா மச்சான் என் ஆளு இன்னைக்கு பாவாடை தாவணியில சும்மா பாக்குறதுக்கு தேவதை மாதிரி இருக்கா தெரியுமா !! என் இதயம் றெக்க கட்டிட்டு அவ பின்னாடி பறந்து போயிடுச்சுடா... அதை தேடிக்கிட்டே சுத்திக்கிட்டு இருக்கேன் . இப்ப வரைக்கும் என் இதயம் எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது" என்று தன் இதயத்தில் கை வைத்தபடி சூர்யா கூற .
ஏற்கனவே பூஜா இன்னமும் அவன் வாங்கி கொடுத்த ஆடையை போட்டுக் கொண்டு வராமல் இழுத்தடிப்பதில் கடுப்பில் இருந்த சந்தோஷ் சூர்யா பேசுவது எல்லாம் கேட்டு மேலும் அவன் உயிரை பற்றிக் கொண்டு எறிந்தது . சூர்யாவே முறைத்தபடி பார்த்துக் கொண்டு நின்ற சந்தோஷிடம் "ஏன்டா மாப்பிள்ளை இப்படி இருக்கு என்ன ஆச்சு உனக்கு . முகத்தை இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வெச்சிருக்க" என்று கேட்டேன் சூர்யா .
"யாரு குரங்கு.. நானா?" என்று கோபமாக கேட்டான் சந்தோஷ் .
அவன் கோபத்தை அப்போதுதான் கவனித்த சூர்யா "சரிடா மாப்ள நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். என்னை மன்னிச்சுக்கோ சரியா" என்றவன் .
"சரி சொல்லு ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க" என்றான் சூர்யா.
"இல்லை டா மாப்ள உனக்கே தெரியும் எனக்கு பூஜாவை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லிட்டு. நான் அவகிட்ட எவ்வளவு தூரம் போய் பேசினாலும் அவ என்கிட்ட சரியா பதில் கொடுத்து பேசவே மாட்டேங்குறா. எப்ப பாரு என்ன நோஸ்கட் பண்ணி விடுவது வேலையே இருக்கு. அதான் இன்னைக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சாகணும்னு அவளுக்கு ஒரு டிரஸ் எடுத்து கொடுத்து என்னை பிடிச்சிருந்தா இந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு வா அப்படி இல்லன்னா இனிமே அவ பக்கம் நான் தலை வைத்து கூட நான் படுக்க மாட்டேன்னு சொல்லி இருந்தேன். சரி அவளும் இன்னிக்கு நான் வாங்கி கொடுத்த டிரஸ்ஸ போட்டுட்டு வராலா இல்லையான்னு பாக்கலாம்னு காலையிலிருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன் . ஆனா அவ என் கண்ணுலையே படல டா மச்சான். இங்க தான் இருக்காளா எங்க போனானு கூட தெரியல யார் கிட்ட போய் அவளை கேட்கிறது என்று யோசனையா இருக்கு" என்றான் சந்தோஷ் .
"இப்ப என்னடா மச்சான் எங்க இருக்கான்னு உனக்கு தெரிஞ்சாகணும் அவ்வளவுதானே" என்றான் சூர்யா .
"ஆமாண்டா.." என்று சந்தோஷ் ஆர்வமாக தலையாட்ட ..
"ஒரு நிமிஷம் இரு.." என்று அவர்களை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்த சூர்யா அங்கே தன் பெற்றோரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மிருதுளாவை பார்த்து கண்ணடித்து ஜாடை செய்து அவளை தன்னிடம் வருமாறு அழைக்க .
அவன் திடீரென தன்னை பார்த்து கண்ணடித்து அழைக்கவும் தன் பெற்றோர் இருக்கும் பொழுது எவ்வளவு தைரியமாக இவன் என்னை இப்படி ஜாடை செய்து கூப்பிடுகிறான் என்று சூர்யாவின் மீது கோபம் வந்தது மிருதுளாவிற்கு .
அவன் அழைத்தது பார்த்தும் கண்டும் காணாமல் மிருதுளா திரும்பிக் கொள்ள..
"ஷ்..ஷ்.." என்று மீண்டும் ஜாடை செய்து சத்தம் எழுப்பி சூர்யா மிருதுளாவை அழைத்தான் .
"கொஞ்ச நேரம் அமைதியா இருக்கானா பாரு திமிர் பிடித்தவன். கொஞ்சம் கூட பெரியவங்க இருக்காங்கன்னு மரியாதை இல்லாம அவங்க முன்னாடியே என்ன இப்படி கூப்பிடுறானே" என்று கடுப்பானது "அம்மா ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்துடுறேன்"என்று கோபமாக இருந்தவள் சூர்யாவை நோக்கி வேகமாக சென்றாள் .
அவள் அணிந்திருந்த பாவாடை தாவணிக்கும் நடந்து வரும் நடைக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை .
மிருதுளா நடந்து வரும் அழகை பார்த்து சூர்யா சந்தோசை பார்த்து சிரிக்க சந்தோசும் அதை பார்த்து சிரிக்க வந்தவன் அதற்குள் மிருதளா தங்கள் அருகில் வந்ததும் தன் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் .
"ஹலோ சூர்யா உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க. இப்படித்தான் பொதுவில் வைத்து என்ன கண்ணடிச்சு கூப்பிடுவீங்களா,,, அதுவும் என் அம்மா அப்பா இருக்கும்போதே என்ன நீங்க அப்படி கூப்பிடுறீங்க" என்றவள் "உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும் நடந்துக்கணும்னு உங்களுக்கு தெரியாதா?" என்றாள் கோபமாக .
"ஹலோ ஹலோ கொஞ்சம் பொறுமையா இருங்க தப்பு தான்... நான் உங்க அம்மா அப்பா இருக்கும்போது உங்கள கண் அடிச்சு கூப்பிட்டது தப்புதான் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பான அர்த்தத்துல உங்களை கூப்பிடல அத புரிஞ்சுக்கோங்க முதல்ல" என்றான் சூர்யாவும் கோபமாக .
"கண்ணடிச்சு கூப்பிட்டதே தப்புதான் இதில் என்ன தப்பான அர்த்தத்தில் கூப்பிடல வேற அர்த்தத்துல கூப்பிட்டேன்னு சொல்றது" என்றாள் மிருதுளா .
"ஒரு நிமிஷம் நான் சொல்றத கேட்டுட்டு அதுக்கப்புறம் பேசுங்க தயவு செய்து இப்படி கோபப்படாதீங்க" என்ற சூர்யா .
"ஆமா காலையிலிருந்து எங்க பூஜாவை காணும் அவ்ளோ நாங்க யாருமே பார்க்கலையே" என்றான் .
"அவளை எதுக்கு நீங்க கேக்குறீங்க அவஇங்கதான் எங்கயாவது இருப்பா" என்ற மிருதுளா சிறிது யோசித்து விட்டு "ஆமா நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் பூஜா என் கண்ணுலையே படலையே அவ எங்க" என்று அவன் கேட்ட அதே கேள்வியையே திருப்பி சூர்யாவிடம் கேட்டாள் .
"சரியா போச்சு போங்க பூஜாவை காணோம்னு தான் உங்ககிட்ட அவள பத்தி விசாரிக்க கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா என்ன அதுக்குள்ள தப்பா நினைச்சுட்டீங்க உங்களுக்கும் அவ எங்கன்னு தெரியலையா?" என்றான் சூர்யா .
பூஜாவை பற்றி பேசியதில் ்மிருதுளா சூர்யா அவளைப் பார்த்து கண்ணடித்து கூப்பிட்டதை மறந்துவிட்டாள் .
"தெரியலையே இருங்க நான் போய் ஜனனி அம்மாகிட்ட அவ எங்கே போயிருக்கான்னு விசாரிச்சுட்டு வரேன்" என்று சொல்லி அங்கிருந்து செல்ல போக..
"இல்ல வேண்டாம் அவ இங்கதான் வந்துட்டு இருக்கா என்கிட்டே தான் வந்துட்டு இருக்கா" என்று சந்தோஷ் வாசல் பக்கம் பார்த்தபடி பேசினான் .
அவன் பேசிய தோரணையை பார்த்த சூர்யாவிற்கு புரிந்து விட்டது அவனும் வாசல் பக்கம் திரும்பி பூஜாவை பார்க்க மிருதுளாவும் திரும்பி வாசலை பார்த்தாள் . சந்தோஷ் வாங்கி கொடுத்த ஆடையை மிகவும் அழகாக நேர்த்தியாக அணிந்து கொண்டு சிறிய ஒப்பனையை அதற்கு எடுப்பாக போட்டுக்கொண்டு படியேறி உள்ளே வந்து கொண்டு இருந்தவளின் முகம் மட்டும் மிகவும் இறுக்கமாக இருந்தது .
சந்தோசிற்க்கு ஒரே குழப்பமாக இருந்தது அவன் வாங்கி கொடுத்த உடையை போட்டுக்கொண்டு வந்தவள் சந்தோஷமாக தானே வந்திருக்க வேண்டும் அதற்கு மாறாக முகத்தை எதற்கு இப்படி உம்மென்று வைத்திருக்கிறாள் என்ற யோசனையோடு தன்னை நோக்கி வருபவர்களை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான் சந்தோஷ் .
நேராக படியேறி வீட்டிற்குள் வந்த பூஜா சந்தோஷிடம் வந்தவள் அவனைப் பார்த்து வெட்கப்பட்டு சிரித்தவள் "ஒரு நிமிஷம் சந்தோஷ் வந்துடறேன் " என்று திரும்பியவள் முகம் மீண்டும் இறுக்கமாக மாறியது .
"என்ன ஆச்சு இவளுக்கு சந்திரமுகி படத்துல வர மாதிரி நொடிக்கு துடி முகத்தில் மாத்திக்கிட்டே இருக்கா ஒன்னும் புரியலையே" என்று சந்தோஷ் குழப்பமாக தன் அருகில் நின்றிருந்த சூர்யாவை திரும்பி பார்க்க ...
"என்னடா ஆச்சு இவளுக்கு ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கா ... இது நீ வாங்கி கொடுத்த டிரஸ்ஸா? அதைத்தான் அவ போட்டுட்டு வந்து இருக்காளா? இல்ல வேற டிரஸ்ஸா?" என்றான் சூர்யா .
"என்ன டிரஸ்? யார் வாங்கி கொடுத்தா?" என்று கேட்டாள் மிருதுளா .
"அதுவா ... இவன் பூஜாவை ரொம்ப சின்சியரா லவ் பண்றான். அவகிட்ட நிறைய முறை அவன் லவ்வ சொல்லியும் அவ எதுக்குமே பிடி கொடுக்காமல் பதில் பேசிக்கிட்டு இருந்தா அதனால சந்தோஷ் ஒரு டிரஸ் செலக்ட் பண்ணி அவகிட்ட கொடுத்து அதை இன்னைக்கு கண்டிப்பா போட்டுட்டு வரணும் அப்படி அந்த டிரஸ் போட்டுட்டு வந்தா பூஜாவும் சந்தோஷை லவ் பண்றதா அர்த்தம்னு சொன்னான் . இவன் வாங்கி கொடுத்து டிரஸ் அவ போட்டுட்டு வந்துட்டான்னு தானே அர்த்தம் இவனோட காதலுக்கு அவ பச்சைக்கொடி காட்டிட்டான்னு தானே அர்த்தம்" என்றான் .
"ஆமா அப்படித்தானே" அர்த்தம் என்றாள் மிருதுளா .
"ஆனா இவன் முகத்தில் இருக்கிற சந்தோஷம் அவன் வாங்கி கொடுத்த டிரஸ் பூஜா போட்டுட்டு வந்துட்டாங்கறது நாள தானே.. அப்படின்னா அந்த டிரஸ் போட்டுட்டு வந்து பூஜாவும் சந்தோஷமா தானே இருக்கணும். ஏன் அவ முகம் மட்டும் சந்தோஷமா இல்லாம இறுக்கமா இருக்கு" என்று கேட்டான் .
"ஆமா சூர்யா நீங்க சொல்றத வச்சு பார்த்தா சந்தோஷ் முகம் இவ்ளோ ஹாப்பியா இருக்குன்னா பூஜா முகமும் சந்தோஷமா தானே இருக்கணும்" என்று யோசனையோடு பூஜாவை திரும்பிப் பார்க்க அவர்களை கடந்து சென்ற பூஜா நேராக அவள் குருவிடம் சென்றவள் "அப்பா உங்களை யாரு பெரியப்பாவை நம்ம ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ண சொன்னது" என்றாள் கோபமாக .
அதிகாலையிலேயே பூஜைகள் எல்லாம் தொடங்கப்பட்டு ஜெய் மீனு இருவரும் ஹோம குண்டத்தில் அமர்ந்து பூஜைகள் எல்லாம் செய்து முடித்தனர் .
தன் மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளை எல்லாம் எந்த குறையும் இல்லாமல் குருவும் ஜனனியை செய்ய ... அதை மறுத்து விட்டான் ஜெய் . அனைவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் மீனுவிற்காக செய்ய இருந்த சீர் வரிசைகளை வாங்க மறுத்த ஜெய் அவர்கள் இருவருக்கும் எடுத்துக் கொடுத்த புதிய ஆடைகளை மட்டும் சீர்வரிசையாக பெற்றுக் கொண்டான் .
தங்கள் மருமகனின் நல்ல குணத்தை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டனர் குருவும் ஜனனியும் .
அவர்கள் கொடுத்த ஆடையை இருவரும் மாற்றி வர சென்று விட்டனர் .
மிருதுளாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்துவிட அவர்களோடு காலையில் நேரமே கிரகப்பிரவேசத்திற்கு வந்துவிட்டாள் .
மிருதுளா அழகாக பாவாடை தாவணி அணிந்து அதற்கு ஏற்றார் போல ஆடம்பரம் இல்லாத நகைகள் அணிந்து தலை நிறைய பூ வைத்து வட்ட பொட்டிட்டு குடும்ப குத்து விளக்காக கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தாள் .
அதை பார்த்து வாயைப் பிளந்தான் சூர்யா இதுவரை மாடர்ன் ட்ரெஸ்ஸையே அணிந்து வந்த மிருதுளாவை இன்று பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வருவதை பார்த்துவிட்டு அவனால் தன் பார்வையை அவள் மேலிருந்து திருப்ப முடியவில்லை.
ஜெய் ,மீனு இருவரும் உடை மாற்றி விட்டு கீழே வரவும் விசேஷத்திற்கு அவர்கள் அழைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் சரியாக .
தங்க இலைகளால் நெய்யப்பட்ட பட்டு சட்டையும், வெள்ளி கரை வைத்த வேஷ்டியையும் அணிந்து கொண்டு கழுத்தில் தங்கச் சங்கிலியோடு படிகளை கீழே இறங்கி வந்த ஜெய் பார்த்த கஜேந்திரனுக்கு சந்தோஷமாக இருந்தது.
இத்தனை நாள் தன் வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்தவன். இப்போது குடும்பம் உறவு என்று சந்தோஷமாக வளம் வருவதை பார்த்து மகிழ்ந்தார் கஜேந்திரன்.
அவன் பின்னே சிவப்பு நிற பட்டு உடுத்தி தலைவாரி கொண்டையிட்டு அதை சுற்றி மல்லிகை பூச்சரங்களால் பூச்சூடி கொடி இடையை வளைத்து படிகளில் ஜெய்யோடு சேர்ந்து நடந்து வந்தா்ள் மீனு.
அவர்கள் இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து நெட்டி முறித்தார் ஜனனி.
அவர்கள் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் சந்தனம் குங்குமம் இட்டு அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்த ஜனனியும் குருவும் கஜேந்திரன் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள சொன்னார்கள் .
இருவரும் வீட்டில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு வந்திருந்தவர்களை வரவேற்க சென்று விட்டனர் .
இவ்வளவு நேரம் மிருதுளாவின் பின்னால் சுற்றிவிட்டு சந்தோஷை தேடி வந்தான் சூர்யா,.
அங்கே சந்தோஷ் மிகவும் சோகமாக இருந்தான் .
"ஏன்டா மாப்ள இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமான நாள். ஜாலியா என்ஜாய் பண்றது விட்டுட்டு ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க.. என்ன ஆச்சு?" என்று கேட்டான் சூர்யா .
இப்போதுதான் சூர்யவின் முகத்தை கவனித்தான் சந்தோஷ் வழக்கத்தை விடவும் இன்று அவன் முகம் மிகவும் சந்தோஷமாகவும் பிரகாசமாகவும் இருக்க... அதை பார்த்து வயிறு எரிந்த சந்தோஷ் "ஆமா என்னைக்கும் இல்லாம உன் முகத்தை இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கு" என்றான் ஆர்வம் தாங்காமல்
"அது ஒன்னும் இல்லடா மச்சான் என் ஆளு இன்னைக்கு பாவாடை தாவணியில சும்மா பாக்குறதுக்கு தேவதை மாதிரி இருக்கா தெரியுமா !! என் இதயம் றெக்க கட்டிட்டு அவ பின்னாடி பறந்து போயிடுச்சுடா... அதை தேடிக்கிட்டே சுத்திக்கிட்டு இருக்கேன் . இப்ப வரைக்கும் என் இதயம் எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது" என்று தன் இதயத்தில் கை வைத்தபடி சூர்யா கூற .
ஏற்கனவே பூஜா இன்னமும் அவன் வாங்கி கொடுத்த ஆடையை போட்டுக் கொண்டு வராமல் இழுத்தடிப்பதில் கடுப்பில் இருந்த சந்தோஷ் சூர்யா பேசுவது எல்லாம் கேட்டு மேலும் அவன் உயிரை பற்றிக் கொண்டு எறிந்தது . சூர்யாவே முறைத்தபடி பார்த்துக் கொண்டு நின்ற சந்தோஷிடம் "ஏன்டா மாப்பிள்ளை இப்படி இருக்கு என்ன ஆச்சு உனக்கு . முகத்தை இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வெச்சிருக்க" என்று கேட்டேன் சூர்யா .
"யாரு குரங்கு.. நானா?" என்று கோபமாக கேட்டான் சந்தோஷ் .
அவன் கோபத்தை அப்போதுதான் கவனித்த சூர்யா "சரிடா மாப்ள நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். என்னை மன்னிச்சுக்கோ சரியா" என்றவன் .
"சரி சொல்லு ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க" என்றான் சூர்யா.
"இல்லை டா மாப்ள உனக்கே தெரியும் எனக்கு பூஜாவை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லிட்டு. நான் அவகிட்ட எவ்வளவு தூரம் போய் பேசினாலும் அவ என்கிட்ட சரியா பதில் கொடுத்து பேசவே மாட்டேங்குறா. எப்ப பாரு என்ன நோஸ்கட் பண்ணி விடுவது வேலையே இருக்கு. அதான் இன்னைக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சாகணும்னு அவளுக்கு ஒரு டிரஸ் எடுத்து கொடுத்து என்னை பிடிச்சிருந்தா இந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு வா அப்படி இல்லன்னா இனிமே அவ பக்கம் நான் தலை வைத்து கூட நான் படுக்க மாட்டேன்னு சொல்லி இருந்தேன். சரி அவளும் இன்னிக்கு நான் வாங்கி கொடுத்த டிரஸ்ஸ போட்டுட்டு வராலா இல்லையான்னு பாக்கலாம்னு காலையிலிருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன் . ஆனா அவ என் கண்ணுலையே படல டா மச்சான். இங்க தான் இருக்காளா எங்க போனானு கூட தெரியல யார் கிட்ட போய் அவளை கேட்கிறது என்று யோசனையா இருக்கு" என்றான் சந்தோஷ் .
"இப்ப என்னடா மச்சான் எங்க இருக்கான்னு உனக்கு தெரிஞ்சாகணும் அவ்வளவுதானே" என்றான் சூர்யா .
"ஆமாண்டா.." என்று சந்தோஷ் ஆர்வமாக தலையாட்ட ..
"ஒரு நிமிஷம் இரு.." என்று அவர்களை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்த சூர்யா அங்கே தன் பெற்றோரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மிருதுளாவை பார்த்து கண்ணடித்து ஜாடை செய்து அவளை தன்னிடம் வருமாறு அழைக்க .
அவன் திடீரென தன்னை பார்த்து கண்ணடித்து அழைக்கவும் தன் பெற்றோர் இருக்கும் பொழுது எவ்வளவு தைரியமாக இவன் என்னை இப்படி ஜாடை செய்து கூப்பிடுகிறான் என்று சூர்யாவின் மீது கோபம் வந்தது மிருதுளாவிற்கு .
அவன் அழைத்தது பார்த்தும் கண்டும் காணாமல் மிருதுளா திரும்பிக் கொள்ள..
"ஷ்..ஷ்.." என்று மீண்டும் ஜாடை செய்து சத்தம் எழுப்பி சூர்யா மிருதுளாவை அழைத்தான் .
"கொஞ்ச நேரம் அமைதியா இருக்கானா பாரு திமிர் பிடித்தவன். கொஞ்சம் கூட பெரியவங்க இருக்காங்கன்னு மரியாதை இல்லாம அவங்க முன்னாடியே என்ன இப்படி கூப்பிடுறானே" என்று கடுப்பானது "அம்மா ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்துடுறேன்"என்று கோபமாக இருந்தவள் சூர்யாவை நோக்கி வேகமாக சென்றாள் .
அவள் அணிந்திருந்த பாவாடை தாவணிக்கும் நடந்து வரும் நடைக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை .
மிருதுளா நடந்து வரும் அழகை பார்த்து சூர்யா சந்தோசை பார்த்து சிரிக்க சந்தோசும் அதை பார்த்து சிரிக்க வந்தவன் அதற்குள் மிருதளா தங்கள் அருகில் வந்ததும் தன் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் .
"ஹலோ சூர்யா உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க. இப்படித்தான் பொதுவில் வைத்து என்ன கண்ணடிச்சு கூப்பிடுவீங்களா,,, அதுவும் என் அம்மா அப்பா இருக்கும்போதே என்ன நீங்க அப்படி கூப்பிடுறீங்க" என்றவள் "உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும் நடந்துக்கணும்னு உங்களுக்கு தெரியாதா?" என்றாள் கோபமாக .
"ஹலோ ஹலோ கொஞ்சம் பொறுமையா இருங்க தப்பு தான்... நான் உங்க அம்மா அப்பா இருக்கும்போது உங்கள கண் அடிச்சு கூப்பிட்டது தப்புதான் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பான அர்த்தத்துல உங்களை கூப்பிடல அத புரிஞ்சுக்கோங்க முதல்ல" என்றான் சூர்யாவும் கோபமாக .
"கண்ணடிச்சு கூப்பிட்டதே தப்புதான் இதில் என்ன தப்பான அர்த்தத்தில் கூப்பிடல வேற அர்த்தத்துல கூப்பிட்டேன்னு சொல்றது" என்றாள் மிருதுளா .
"ஒரு நிமிஷம் நான் சொல்றத கேட்டுட்டு அதுக்கப்புறம் பேசுங்க தயவு செய்து இப்படி கோபப்படாதீங்க" என்ற சூர்யா .
"ஆமா காலையிலிருந்து எங்க பூஜாவை காணும் அவ்ளோ நாங்க யாருமே பார்க்கலையே" என்றான் .
"அவளை எதுக்கு நீங்க கேக்குறீங்க அவஇங்கதான் எங்கயாவது இருப்பா" என்ற மிருதுளா சிறிது யோசித்து விட்டு "ஆமா நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் பூஜா என் கண்ணுலையே படலையே அவ எங்க" என்று அவன் கேட்ட அதே கேள்வியையே திருப்பி சூர்யாவிடம் கேட்டாள் .
"சரியா போச்சு போங்க பூஜாவை காணோம்னு தான் உங்ககிட்ட அவள பத்தி விசாரிக்க கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா என்ன அதுக்குள்ள தப்பா நினைச்சுட்டீங்க உங்களுக்கும் அவ எங்கன்னு தெரியலையா?" என்றான் சூர்யா .
பூஜாவை பற்றி பேசியதில் ்மிருதுளா சூர்யா அவளைப் பார்த்து கண்ணடித்து கூப்பிட்டதை மறந்துவிட்டாள் .
"தெரியலையே இருங்க நான் போய் ஜனனி அம்மாகிட்ட அவ எங்கே போயிருக்கான்னு விசாரிச்சுட்டு வரேன்" என்று சொல்லி அங்கிருந்து செல்ல போக..
"இல்ல வேண்டாம் அவ இங்கதான் வந்துட்டு இருக்கா என்கிட்டே தான் வந்துட்டு இருக்கா" என்று சந்தோஷ் வாசல் பக்கம் பார்த்தபடி பேசினான் .
அவன் பேசிய தோரணையை பார்த்த சூர்யாவிற்கு புரிந்து விட்டது அவனும் வாசல் பக்கம் திரும்பி பூஜாவை பார்க்க மிருதுளாவும் திரும்பி வாசலை பார்த்தாள் . சந்தோஷ் வாங்கி கொடுத்த ஆடையை மிகவும் அழகாக நேர்த்தியாக அணிந்து கொண்டு சிறிய ஒப்பனையை அதற்கு எடுப்பாக போட்டுக்கொண்டு படியேறி உள்ளே வந்து கொண்டு இருந்தவளின் முகம் மட்டும் மிகவும் இறுக்கமாக இருந்தது .
சந்தோசிற்க்கு ஒரே குழப்பமாக இருந்தது அவன் வாங்கி கொடுத்த உடையை போட்டுக்கொண்டு வந்தவள் சந்தோஷமாக தானே வந்திருக்க வேண்டும் அதற்கு மாறாக முகத்தை எதற்கு இப்படி உம்மென்று வைத்திருக்கிறாள் என்ற யோசனையோடு தன்னை நோக்கி வருபவர்களை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான் சந்தோஷ் .
நேராக படியேறி வீட்டிற்குள் வந்த பூஜா சந்தோஷிடம் வந்தவள் அவனைப் பார்த்து வெட்கப்பட்டு சிரித்தவள் "ஒரு நிமிஷம் சந்தோஷ் வந்துடறேன் " என்று திரும்பியவள் முகம் மீண்டும் இறுக்கமாக மாறியது .
"என்ன ஆச்சு இவளுக்கு சந்திரமுகி படத்துல வர மாதிரி நொடிக்கு துடி முகத்தில் மாத்திக்கிட்டே இருக்கா ஒன்னும் புரியலையே" என்று சந்தோஷ் குழப்பமாக தன் அருகில் நின்றிருந்த சூர்யாவை திரும்பி பார்க்க ...
"என்னடா ஆச்சு இவளுக்கு ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கா ... இது நீ வாங்கி கொடுத்த டிரஸ்ஸா? அதைத்தான் அவ போட்டுட்டு வந்து இருக்காளா? இல்ல வேற டிரஸ்ஸா?" என்றான் சூர்யா .
"என்ன டிரஸ்? யார் வாங்கி கொடுத்தா?" என்று கேட்டாள் மிருதுளா .
"அதுவா ... இவன் பூஜாவை ரொம்ப சின்சியரா லவ் பண்றான். அவகிட்ட நிறைய முறை அவன் லவ்வ சொல்லியும் அவ எதுக்குமே பிடி கொடுக்காமல் பதில் பேசிக்கிட்டு இருந்தா அதனால சந்தோஷ் ஒரு டிரஸ் செலக்ட் பண்ணி அவகிட்ட கொடுத்து அதை இன்னைக்கு கண்டிப்பா போட்டுட்டு வரணும் அப்படி அந்த டிரஸ் போட்டுட்டு வந்தா பூஜாவும் சந்தோஷை லவ் பண்றதா அர்த்தம்னு சொன்னான் . இவன் வாங்கி கொடுத்து டிரஸ் அவ போட்டுட்டு வந்துட்டான்னு தானே அர்த்தம் இவனோட காதலுக்கு அவ பச்சைக்கொடி காட்டிட்டான்னு தானே அர்த்தம்" என்றான் .
"ஆமா அப்படித்தானே" அர்த்தம் என்றாள் மிருதுளா .
"ஆனா இவன் முகத்தில் இருக்கிற சந்தோஷம் அவன் வாங்கி கொடுத்த டிரஸ் பூஜா போட்டுட்டு வந்துட்டாங்கறது நாள தானே.. அப்படின்னா அந்த டிரஸ் போட்டுட்டு வந்து பூஜாவும் சந்தோஷமா தானே இருக்கணும். ஏன் அவ முகம் மட்டும் சந்தோஷமா இல்லாம இறுக்கமா இருக்கு" என்று கேட்டான் .
"ஆமா சூர்யா நீங்க சொல்றத வச்சு பார்த்தா சந்தோஷ் முகம் இவ்ளோ ஹாப்பியா இருக்குன்னா பூஜா முகமும் சந்தோஷமா தானே இருக்கணும்" என்று யோசனையோடு பூஜாவை திரும்பிப் பார்க்க அவர்களை கடந்து சென்ற பூஜா நேராக அவள் குருவிடம் சென்றவள் "அப்பா உங்களை யாரு பெரியப்பாவை நம்ம ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ண சொன்னது" என்றாள் கோபமாக .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 37
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 37
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.