- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
பூஜா கோபப்படுவதை புரிந்து கொண்ட குரு மெல்ல தன் மகளை பார்த்து சிரித்தவர் ." அவங்க ரெண்டு பேரும் அப்படிங்குறதுக்காக நம்ம வீட்டு விசேஷத்திற்கு என் அண்ணன் குடும்பத்தை கூப்பிடாம இருக்க முடியுமா பூஜா அதனாலதான் கூப்பிட்டேன் கொஞ்ச நேரம் தானே அவங்க பங்க்ஷன் முடிச்சதும் கிளம்பி போயிடுவாங்க அதுவரை நீ முகத்தை தொக்கி வெச்சிட்டு இருக்காதே பெரியப்பா பார்த்தா சங்கடப்படுவாரு அவருக்காகவாது கொஞ்சம் சிரிச்ச மாதிரி முகத்தை வைத்துக்கொள்" என்றார் குரு .
"என்னவோ பண்ணுங்க எனக்கு அந்த ரியாவையும் அவ அம்மாவையும் பார்த்தா கோபம் கோபமா வருது. அவங்க மண்டபத்துல வச்சு உங்களையும் அக்காவையும் என்ன பேச்சு பேசினாங்க அதை எல்லாம் நினைச்சு பார்த்திருந்தா நீங்கஅவர்களை இங்கே கூப்பிட்டு இருக்கவே மாட்டீங்க" என்றாள் பூஜா .
"சரி டி நடந்தது நடந்து போயிடுச்சு அவங்க குணம் அப்படித்தான் தெரிஞ்ச பிறகும் நம்ம பேசிட்டு இருக்குறதுல என்ன பிரயோஜனம் விடு பங்க்ஷன் முடிஞ்சதும் கிளம்ப போறாங்க அதுவரை நீ பேசாம இரு" என்று அவளை அனுப்பியவர் அவர்களை நோக்கி வந்த பரமனையும், சாந்தா, ரியா இருவரையும் பார்த்து சிரித்த முகமாக "வாங்க அண்ணா... அண்ணி வாங்க... ரியாமா வா டா.. எப்படி இருக்க? நல்லா இருக்கியா?" என்று கேட்டார் குரு.
சாந்தாவும் ,ரியாவும் குரு கேட்டதற்கு எந்த பதிலும் பேசாமல் நக்கலாக ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு அந்த வீட்டை விழுங்குவது போல சுற்றி சுற்றி நின்ற இடத்தில் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் மூவரும் வருவதை ஜெய்யும், மீனுவும் ஏற்கனவே பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். இருந்தும் அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்திருப்பதால் அவர்களை கூப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்காது என மீனு ஜெய் கையை பிடித்து அழைத்துக் கொண்டு அவர்கள் முன்பு போய் நின்றாள்.
பரமனை பார்த்ததும் மீனு சிரித்துக்கொண்டே அவர் அருகில் சென்றவள் "பெரியப்பா... வரதுக்கு இவ்வளவு நேரமா நேற்று வரச் சொல்லி உங்களை கூப்பிட்டு இருந்தேனே அப்புறம் ஏன் இவ்வளவு லேட்டா வந்தீங்க" என்றாள் சிறிய கோபத்தோடு .
"இல்லடா பெரியப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு அதையெல்லாம் முடிச்சிட்டு வரேன் அதான் இவ்வளவு லேட் ஆயிடுச்சு சாரி டா" என்றார் .
சரி பெரியப்பா பரவாயில்ல என்ற மீனும் அவர் அருகில் நின்றிருந்த ரியாவையோ சாந்தாவையோ சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை அதை பரமனும் கவனித்தார் . இருந்தாலும் அவர்கள் செய்ததற்கும் ,பேசியதற்கும் இது தேவைதான் என்று நினைத்துக் கொண்டு "ஜெய்யை பார்த்து நல்லா இருக்கீங்களா? தம்பி நீங்க எழுந்து நடந்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க எழுந்து நடந்ததுமே என்கிட்ட குரு போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னான். இத்தனை நாள் நீங்க இப்படி இருந்ததற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எனக்கு அப்போ புரிஞ்சுது ரொம்ப சந்தோசம் தம்பி" என்றார் பரமன் எந்த ஒரு வருத்தமோ கோபமோ இல்லாமல் மிகவும் எதார்த்தமாக ஜெய் இடம் பேசினார் .
அவர் பேசியதை பார்த்து லேசாக புன்னகைத்தவன் "நான் அந்த மாதிரி நடிச்சதுனால தான் இங்கே நிறைய பேரோட உண்மை முகம் எனக்கு தெரிய வந்துச்சு" என்று தன்னையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்த ரியாவை கண்டும் காணாதவன் போல பரமனிடம் பேசினான் ஜெய் .
ஜெய் யாரைச் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட பரமன் உள்ளுக்குள் தன் மகளை நினைத்து வருத்தப்பட்டாலும் அவள் அவசரத்தாலும் திமிர்த்தனத்தாலும் ஒரு நல்ல வாழ்க்கையை அவளாகவே இழந்து விட்டால் என்று மறுபுறம் கோபமும் இருந்தது .
ஜெய் மீனு இருவரும் சாந்தாவையும் ரியாவையும் புறக்கணித்ததும் ஜாடை மாடியாக பேசியதையும் கேட்டு அவர்கள் இருவருக்கும் ஆத்திரமாக வந்தது உடனே திரும்பி பரமனை பார்த்து "பாருங்க இவங்க எல்லாம் எங்களை பார்த்து எப்படி பேசுறாங்கன்னு.. இதுக்குத்தான் எங்களை இங்க வேண்டாம் கூட்டிட்டு வந்தீங்களா நாங்க ரெண்டு பேரும் தான் வரலைன்னு சொன்னோமே" என்றார் சாந்தா .
"ஏய் கொஞ்ச நேரம் பேசாம வாய் மூடிக்கொண்டு இரு வந்த இடத்துல தேவையில்லாமல் பேசி பிரச்சனை பண்ணாத ஒழுங்கா இரு" என்றவர் குருவை பார்த்து "குரு என்னடா எங்களை வாசலிலேயே நிக்க வச்சு பேசிகிட்டு இருக்க கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்ட மாட்டியா" என்று தன் தம்பியிடம் உரிமையாக பரமன் பேச ....
"அண்ணா உங்களுக்கு இல்லாததா இது உன் வீடு மாதிரி தான் நீ போய் சுத்தி பாத்துட்டு வா அண்ணியையும் ரியாவையும் கூட கூட்டிட்டு போ" என்றவர் பூஜாவை பார்த்து பூஜா அவங்களை கூட்டிட்டு போய் நம்ம வீட்டை சுத்தி காட்டுக்கு மா என்றார்
பூஜா குருவைப் பார்த்து முறைக்க அவர் கண்களை சுருக்கி "ப்ளீஸ் கூட்டிட்டு போ..." என்று கெஞ்சவும் தன் தந்தைக்காக வேறு வழியே இல்லாமல் அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு மீனுவின் வீட்டை பொறுமையாக ஒவ்வொரு அறையாக சுத்திக்காட்ட ஆரம்பித்தாள் பூஜா .
ஒவ்வொரு அறையாக சுத்திக் காட்டியபடி பரமனிடம் சந்தோசமாக பேசிக்கொண்டு பூஜா அந்த வீட்டை வளம் வர... இங்கே ரியாவிற்கு வயிறு பற்றி கொண்டு இருந்தது இவ்வளவு பெரிய மாதம் மாளிகை அந்த மீனுக்கா கிடைத்திருக்க வேண்டும் நான் மட்டும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இந்த நேரம் ஜெய் என் கழுத்தில் தாலி கட்டி இருப்பான் எல்லாம் என் அவசரத்தனம் என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டவள் .
"இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு அவனோட குடுமி என் கையில தானே இருக்கு இனி என்ன செஞ்சாலும் யாரு தடுத்தாலும் அவனை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. அந்த மீனுகிட்ட இருந்து அவனைப் பிரித்து நான் இதே வீட்ல ஜெய்யோட சந்தோசமா வாழ போறேன்" என்று தனக்குத் தானே மனதில் கட்டம் கட்டிக் கொண்டிருந்தாள் ஜெய்யை மடக்குவதற்காக.
காலை நேரமே வந்த பரமன் சாந்தா பிரியா மூவரும் மாலை ஆனதும் பரமன் குரு ஜனனி இடம் வந்து "சரிமா நாங்க ஊருக்கு கிளம்புறோம் இப்ப கிளம்பினால் தான் நைட்டுக்குள்ள வீட்டுக்கு போக முடியும்" என்றார் .
"மாமா ஏன் இப்பவே வீட்டுக்கு போறேன்னு சொல்றீங்க, நம்ம வீட்ல ஒரு ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு போலாமே உடனே போகணுமா?" என்றார் ஜனனி .
அவர் அருகில் அமர்ந்திருந்த பூஜா குனிந்து "அம்மா அவங்க தான் போறேன்னு சொல்றாங்களே பேசாம போகட்டும்னு விட வேண்டியது தானே இல்லன்னா பெரியப்பா மட்டும் இருக்க சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரையும் துரத்தி விடு முதல்ல... அவங்க வந்ததிலிருந்து பேச்சும் பார்வையும் எதுவுமே சரியில்ல அந்த ரியா நம்ம ஜெய் மாமாவ அடிக்கடி பார்த்துட்டே இருக்கா . எனக்கு அது பிடிக்கவே இல்லை இந்த மீனுக்கும் தான் அறிவில்ல அவளும் கூட சேர்ந்து பெரியப்பாவ இந்த பங்க்ஷன்க்கு அனுப்பி கூப்பிட்டு இருக்கீங்க பாத்தீங்களா உங்களுக்கு இது தேவை தான்" என்றால் பூஜா கடுப்போடு .
"ஏய் பூஜா பேசாம இருடி குடும்பம்னு இருந்தா நாலு பேர் அப்படித்தான் இருக்கு செய்வாங்க அதுக்காக அவர்களை எங்கேயுமே கூப்பிடாம இருக்க முடியுமா அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ பேசாம இரு" என்று அவளை யாருக்கும் தெரியாமல் அதட்டியவர் .
"இங்க பாருங்க நான் சொன்னா சொன்னதுதான் இன்னும் ஒரு ரெண்டு நாள் நீங்க எல்லாரும் நம்ம வீட்ல இருந்துட்டு அதுக்கப்புறம் தான் ஊருக்கு கிளம்பி போகணும் யாரும் எங்கேயும் போக வேண்டாம்" என்று ஜனனி கரராக சொல்லிவிட பரமனுக்கும் ஜனனியின் பேச்சை மீற முடியாமல் தன் மனைவியையும் மகளையும் பார்க்க சாந்தா திரும்பி ரியாவை பார்த்தார் "என்ன டி இருக்கலாமா? போகலாமா?" என்று கண் ஜாடையிலேயே கேட்க கண்மூடி திறந்து இருக்கலாம் என்று சொல்லவும் "சரிமா நாங்களும் தங்கிக்கிறோம்" என்றார் பரம்பன் .
அனைவரும் கிளம்பி ஜனனி வீட்டிற்கு சென்று விட்டனர் . அவர்களையெல்லாம் வழி அனுப்பி வைத்துவிட்டு மிகவும் சோர்வோடும் களைப்போடும் மீனு வீட்டுக்குள் ஜெய் உடன் வந்தாள் .
வேலையாட்கள் சிலர் இருக்க அவர்களிடம் மற்ற வேலைகள் எல்லாம் மறுநாள் காலை பார்த்துக் கொள்ளலாம் அனைவரையும் சென்று ஓய்வெடுக்கச் சொல்லி இருவரும் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தனர்.
மீனு நடந்து வருவதை பார்த்த ஜெய் "என்ன மீனு ரொம்ப டல்லா இருக்க" என்று கேட்டான் .
"ஆமாங்க காலையிலிருந்து நின்னுட்டே இருந்தேன். நம்ம வீடு முழுக்க வந்தவர்களுக்கு கூட்டிட்டு போய் சுத்தி காட்டிட்டு இருந்தேன். எனக்கு கால் எல்லாம் ரொம்ப வலிக்கு உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்குது" என்றாள் .
"அது எப்படி ஒரு விசேஷம்னா எல்லாருக்கும் முன்னாடி நேரமே எழுந்திருச்சு காலைல சக்கரம் கட்டி வேலை பாக்குற நீங்க அதுவே சாயங்காலம் ஆனதும் அப்படியே மொத்த எனர்ஜியும் படிஞ்சு போய் பேட்டரி டவுன் ஆனது மாதிரி டல்லாயிரிங்க" என்றான்.
"எனக்கும் தெரியலையே.." என்று மீனு சொல்ல அவள் உடன் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென மீனு வை தன் கையில் தூக்கிக்கொண்டு மாடியில் இருந்த தங்கள் அறையை நோக்கி படியேறினான் .
"ஏங்க என்ன பண்றீங்க இறக்கி விடுங்க நானே வரேன் அவ்வளவு ஒன்னும் நான் டயர்டா இல்லை" என்றாள்.
"அப்படியா!! நீ டயர்டா இல்லையா?" என்றான் ஜெய் .
அவன் எதற்காக கேட்கிறான் என்று புரியாமல் மீனுவும் ஆமாம் தனக்கு டயர்டாக இல்லை என்று தலையாட்டி விட ...
"அப்போ உன்னை நான் டயர்ட் ஆக்குறேன்" என்றான்.
அவள் புரியாமல் பார்க்க... "உன் பீம் பாய்க்கு வேலை வந்திருச்சு என் சின்னக்குட்டி " என்று சொல்லி தன் ரூமை நோக்கி மீனுவை தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான் ஜெய் .
"|அச்சச்சோ இவர் இதுக்கு தான் கேட்கிறார் என்று தெரியாமல் அவசரப்பட்டு தலையாட்டிடேனே போச்சு இன்னைக்கு நைட்டு நான் அவ்வளவுதான் தூங்குற மாதிரி தான்" என்று நினைத்துக் கொண்டே சிரித்தபடி அவன் தோளை கட்டிக்கொண்டு அவனோடு சென்றாள்
"என்னவோ பண்ணுங்க எனக்கு அந்த ரியாவையும் அவ அம்மாவையும் பார்த்தா கோபம் கோபமா வருது. அவங்க மண்டபத்துல வச்சு உங்களையும் அக்காவையும் என்ன பேச்சு பேசினாங்க அதை எல்லாம் நினைச்சு பார்த்திருந்தா நீங்கஅவர்களை இங்கே கூப்பிட்டு இருக்கவே மாட்டீங்க" என்றாள் பூஜா .
"சரி டி நடந்தது நடந்து போயிடுச்சு அவங்க குணம் அப்படித்தான் தெரிஞ்ச பிறகும் நம்ம பேசிட்டு இருக்குறதுல என்ன பிரயோஜனம் விடு பங்க்ஷன் முடிஞ்சதும் கிளம்ப போறாங்க அதுவரை நீ பேசாம இரு" என்று அவளை அனுப்பியவர் அவர்களை நோக்கி வந்த பரமனையும், சாந்தா, ரியா இருவரையும் பார்த்து சிரித்த முகமாக "வாங்க அண்ணா... அண்ணி வாங்க... ரியாமா வா டா.. எப்படி இருக்க? நல்லா இருக்கியா?" என்று கேட்டார் குரு.
சாந்தாவும் ,ரியாவும் குரு கேட்டதற்கு எந்த பதிலும் பேசாமல் நக்கலாக ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு அந்த வீட்டை விழுங்குவது போல சுற்றி சுற்றி நின்ற இடத்தில் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் மூவரும் வருவதை ஜெய்யும், மீனுவும் ஏற்கனவே பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். இருந்தும் அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்திருப்பதால் அவர்களை கூப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்காது என மீனு ஜெய் கையை பிடித்து அழைத்துக் கொண்டு அவர்கள் முன்பு போய் நின்றாள்.
பரமனை பார்த்ததும் மீனு சிரித்துக்கொண்டே அவர் அருகில் சென்றவள் "பெரியப்பா... வரதுக்கு இவ்வளவு நேரமா நேற்று வரச் சொல்லி உங்களை கூப்பிட்டு இருந்தேனே அப்புறம் ஏன் இவ்வளவு லேட்டா வந்தீங்க" என்றாள் சிறிய கோபத்தோடு .
"இல்லடா பெரியப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு அதையெல்லாம் முடிச்சிட்டு வரேன் அதான் இவ்வளவு லேட் ஆயிடுச்சு சாரி டா" என்றார் .
சரி பெரியப்பா பரவாயில்ல என்ற மீனும் அவர் அருகில் நின்றிருந்த ரியாவையோ சாந்தாவையோ சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை அதை பரமனும் கவனித்தார் . இருந்தாலும் அவர்கள் செய்ததற்கும் ,பேசியதற்கும் இது தேவைதான் என்று நினைத்துக் கொண்டு "ஜெய்யை பார்த்து நல்லா இருக்கீங்களா? தம்பி நீங்க எழுந்து நடந்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்க எழுந்து நடந்ததுமே என்கிட்ட குரு போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னான். இத்தனை நாள் நீங்க இப்படி இருந்ததற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எனக்கு அப்போ புரிஞ்சுது ரொம்ப சந்தோசம் தம்பி" என்றார் பரமன் எந்த ஒரு வருத்தமோ கோபமோ இல்லாமல் மிகவும் எதார்த்தமாக ஜெய் இடம் பேசினார் .
அவர் பேசியதை பார்த்து லேசாக புன்னகைத்தவன் "நான் அந்த மாதிரி நடிச்சதுனால தான் இங்கே நிறைய பேரோட உண்மை முகம் எனக்கு தெரிய வந்துச்சு" என்று தன்னையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்த ரியாவை கண்டும் காணாதவன் போல பரமனிடம் பேசினான் ஜெய் .
ஜெய் யாரைச் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட பரமன் உள்ளுக்குள் தன் மகளை நினைத்து வருத்தப்பட்டாலும் அவள் அவசரத்தாலும் திமிர்த்தனத்தாலும் ஒரு நல்ல வாழ்க்கையை அவளாகவே இழந்து விட்டால் என்று மறுபுறம் கோபமும் இருந்தது .
ஜெய் மீனு இருவரும் சாந்தாவையும் ரியாவையும் புறக்கணித்ததும் ஜாடை மாடியாக பேசியதையும் கேட்டு அவர்கள் இருவருக்கும் ஆத்திரமாக வந்தது உடனே திரும்பி பரமனை பார்த்து "பாருங்க இவங்க எல்லாம் எங்களை பார்த்து எப்படி பேசுறாங்கன்னு.. இதுக்குத்தான் எங்களை இங்க வேண்டாம் கூட்டிட்டு வந்தீங்களா நாங்க ரெண்டு பேரும் தான் வரலைன்னு சொன்னோமே" என்றார் சாந்தா .
"ஏய் கொஞ்ச நேரம் பேசாம வாய் மூடிக்கொண்டு இரு வந்த இடத்துல தேவையில்லாமல் பேசி பிரச்சனை பண்ணாத ஒழுங்கா இரு" என்றவர் குருவை பார்த்து "குரு என்னடா எங்களை வாசலிலேயே நிக்க வச்சு பேசிகிட்டு இருக்க கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்ட மாட்டியா" என்று தன் தம்பியிடம் உரிமையாக பரமன் பேச ....
"அண்ணா உங்களுக்கு இல்லாததா இது உன் வீடு மாதிரி தான் நீ போய் சுத்தி பாத்துட்டு வா அண்ணியையும் ரியாவையும் கூட கூட்டிட்டு போ" என்றவர் பூஜாவை பார்த்து பூஜா அவங்களை கூட்டிட்டு போய் நம்ம வீட்டை சுத்தி காட்டுக்கு மா என்றார்
பூஜா குருவைப் பார்த்து முறைக்க அவர் கண்களை சுருக்கி "ப்ளீஸ் கூட்டிட்டு போ..." என்று கெஞ்சவும் தன் தந்தைக்காக வேறு வழியே இல்லாமல் அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு மீனுவின் வீட்டை பொறுமையாக ஒவ்வொரு அறையாக சுத்திக்காட்ட ஆரம்பித்தாள் பூஜா .
ஒவ்வொரு அறையாக சுத்திக் காட்டியபடி பரமனிடம் சந்தோசமாக பேசிக்கொண்டு பூஜா அந்த வீட்டை வளம் வர... இங்கே ரியாவிற்கு வயிறு பற்றி கொண்டு இருந்தது இவ்வளவு பெரிய மாதம் மாளிகை அந்த மீனுக்கா கிடைத்திருக்க வேண்டும் நான் மட்டும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இந்த நேரம் ஜெய் என் கழுத்தில் தாலி கட்டி இருப்பான் எல்லாம் என் அவசரத்தனம் என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டவள் .
"இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு அவனோட குடுமி என் கையில தானே இருக்கு இனி என்ன செஞ்சாலும் யாரு தடுத்தாலும் அவனை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. அந்த மீனுகிட்ட இருந்து அவனைப் பிரித்து நான் இதே வீட்ல ஜெய்யோட சந்தோசமா வாழ போறேன்" என்று தனக்குத் தானே மனதில் கட்டம் கட்டிக் கொண்டிருந்தாள் ஜெய்யை மடக்குவதற்காக.
காலை நேரமே வந்த பரமன் சாந்தா பிரியா மூவரும் மாலை ஆனதும் பரமன் குரு ஜனனி இடம் வந்து "சரிமா நாங்க ஊருக்கு கிளம்புறோம் இப்ப கிளம்பினால் தான் நைட்டுக்குள்ள வீட்டுக்கு போக முடியும்" என்றார் .
"மாமா ஏன் இப்பவே வீட்டுக்கு போறேன்னு சொல்றீங்க, நம்ம வீட்ல ஒரு ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு போலாமே உடனே போகணுமா?" என்றார் ஜனனி .
அவர் அருகில் அமர்ந்திருந்த பூஜா குனிந்து "அம்மா அவங்க தான் போறேன்னு சொல்றாங்களே பேசாம போகட்டும்னு விட வேண்டியது தானே இல்லன்னா பெரியப்பா மட்டும் இருக்க சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரையும் துரத்தி விடு முதல்ல... அவங்க வந்ததிலிருந்து பேச்சும் பார்வையும் எதுவுமே சரியில்ல அந்த ரியா நம்ம ஜெய் மாமாவ அடிக்கடி பார்த்துட்டே இருக்கா . எனக்கு அது பிடிக்கவே இல்லை இந்த மீனுக்கும் தான் அறிவில்ல அவளும் கூட சேர்ந்து பெரியப்பாவ இந்த பங்க்ஷன்க்கு அனுப்பி கூப்பிட்டு இருக்கீங்க பாத்தீங்களா உங்களுக்கு இது தேவை தான்" என்றால் பூஜா கடுப்போடு .
"ஏய் பூஜா பேசாம இருடி குடும்பம்னு இருந்தா நாலு பேர் அப்படித்தான் இருக்கு செய்வாங்க அதுக்காக அவர்களை எங்கேயுமே கூப்பிடாம இருக்க முடியுமா அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ பேசாம இரு" என்று அவளை யாருக்கும் தெரியாமல் அதட்டியவர் .
"இங்க பாருங்க நான் சொன்னா சொன்னதுதான் இன்னும் ஒரு ரெண்டு நாள் நீங்க எல்லாரும் நம்ம வீட்ல இருந்துட்டு அதுக்கப்புறம் தான் ஊருக்கு கிளம்பி போகணும் யாரும் எங்கேயும் போக வேண்டாம்" என்று ஜனனி கரராக சொல்லிவிட பரமனுக்கும் ஜனனியின் பேச்சை மீற முடியாமல் தன் மனைவியையும் மகளையும் பார்க்க சாந்தா திரும்பி ரியாவை பார்த்தார் "என்ன டி இருக்கலாமா? போகலாமா?" என்று கண் ஜாடையிலேயே கேட்க கண்மூடி திறந்து இருக்கலாம் என்று சொல்லவும் "சரிமா நாங்களும் தங்கிக்கிறோம்" என்றார் பரம்பன் .
அனைவரும் கிளம்பி ஜனனி வீட்டிற்கு சென்று விட்டனர் . அவர்களையெல்லாம் வழி அனுப்பி வைத்துவிட்டு மிகவும் சோர்வோடும் களைப்போடும் மீனு வீட்டுக்குள் ஜெய் உடன் வந்தாள் .
வேலையாட்கள் சிலர் இருக்க அவர்களிடம் மற்ற வேலைகள் எல்லாம் மறுநாள் காலை பார்த்துக் கொள்ளலாம் அனைவரையும் சென்று ஓய்வெடுக்கச் சொல்லி இருவரும் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தனர்.
மீனு நடந்து வருவதை பார்த்த ஜெய் "என்ன மீனு ரொம்ப டல்லா இருக்க" என்று கேட்டான் .
"ஆமாங்க காலையிலிருந்து நின்னுட்டே இருந்தேன். நம்ம வீடு முழுக்க வந்தவர்களுக்கு கூட்டிட்டு போய் சுத்தி காட்டிட்டு இருந்தேன். எனக்கு கால் எல்லாம் ரொம்ப வலிக்கு உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்குது" என்றாள் .
"அது எப்படி ஒரு விசேஷம்னா எல்லாருக்கும் முன்னாடி நேரமே எழுந்திருச்சு காலைல சக்கரம் கட்டி வேலை பாக்குற நீங்க அதுவே சாயங்காலம் ஆனதும் அப்படியே மொத்த எனர்ஜியும் படிஞ்சு போய் பேட்டரி டவுன் ஆனது மாதிரி டல்லாயிரிங்க" என்றான்.
"எனக்கும் தெரியலையே.." என்று மீனு சொல்ல அவள் உடன் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென மீனு வை தன் கையில் தூக்கிக்கொண்டு மாடியில் இருந்த தங்கள் அறையை நோக்கி படியேறினான் .
"ஏங்க என்ன பண்றீங்க இறக்கி விடுங்க நானே வரேன் அவ்வளவு ஒன்னும் நான் டயர்டா இல்லை" என்றாள்.
"அப்படியா!! நீ டயர்டா இல்லையா?" என்றான் ஜெய் .
அவன் எதற்காக கேட்கிறான் என்று புரியாமல் மீனுவும் ஆமாம் தனக்கு டயர்டாக இல்லை என்று தலையாட்டி விட ...
"அப்போ உன்னை நான் டயர்ட் ஆக்குறேன்" என்றான்.
அவள் புரியாமல் பார்க்க... "உன் பீம் பாய்க்கு வேலை வந்திருச்சு என் சின்னக்குட்டி " என்று சொல்லி தன் ரூமை நோக்கி மீனுவை தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான் ஜெய் .
"|அச்சச்சோ இவர் இதுக்கு தான் கேட்கிறார் என்று தெரியாமல் அவசரப்பட்டு தலையாட்டிடேனே போச்சு இன்னைக்கு நைட்டு நான் அவ்வளவுதான் தூங்குற மாதிரி தான்" என்று நினைத்துக் கொண்டே சிரித்தபடி அவன் தோளை கட்டிக்கொண்டு அவனோடு சென்றாள்
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 38
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 38
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.