logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
அதன்பின் ஜெய் அவளை வற்புறுத்தவில்லை அவள் தோளிலிருந்து தன் கையை அவள் தடவிக் கொண்டே அவள் முகத்திற்கு வர …

கண்கள் கட்டப்பட்டிருந்த ஜெய்யிக்கும் அவள் லீலைகளை அனுபவிக்க ஆரம்பித்தான். முதலில் ஆரம்பித்தது என்னவோ அவள் தான் ஆனால் ஆட்டுவித்தது அவன் . நேரம் செல்ல செல்ல உணர்ச்சிகள் அதிகமாக கண்ணை கட்டி இருந்த டவளை அவிழ்த்து வீசியவன் கீழே குனிந்து அவளை பார்த்தவன் மீனுவின் தோளில் கை வைத்து அவளை தூக்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .

அவள் மூச்சு வாங்க அவனை அணைத்திருக்க... அவனும் மயக்கத்தில் மூச்சு விடவும் சிரமப்பட்டவனாக அணைத்து இருந்த அவள் தோள் மீது சரிந்து நின்றிருந்தான் .

அவன் பாரம் தாங்காமல் தடுமாறி மீனு நின்று இருக்க... அவனை அப்படியே கைத்தாங்களாக அழைத்து வந்து கண்ணாடி முன்பு இருந்த மேஜை மீது சாய வைத்து நின்றாள் .

மயங்கிய கண்களோடு மீனுவை பார்த்தவன் சிரிக்க, அவளோ வெட்கப்பட்டவளாக அவன் மார்பில் முகம் புதைத்தாள் .

"சும்மா சொல்லக்கூடாதுடி கொஞ்ச நேரத்துல எனக்கு சொர்க்கலோகத்தையே காட்டி என்ன ஒரு வழி பண்ணிட்டே" என்று சொல்லி அவன் சிரிக்க... அவன் மார்பில் அடித்தவள் "இதையெல்லாம் பேசக்கூடாது ச்சி.." என்று வெட்கப்பட்டாள் .

" பேசக்கூடாது.. ஆனா... " என்று அவளை முகம் நிமிர்த்தி அவன் பார்க்க...

மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்தாள் பெண் அவள் வெட்கத்தில் .

"சரி வா நான் உன்னை குளிப்பாட்டுறேன்" என்றான் ஜெய் .

"இல்ல வேண்டாம் இப்போ நீங்க ரொம்ப டயர்ட் ஆகி பாக்குறதுக்கு சோர்ந்து போய் இருக்கீங்க நானே குளிச்சிட்டு வரேன்" என்று மீனு அவனை வெளியே போகச் சொல்ல ...

"யாரைப் பார்த்து சோர்ந்து போயிட்டேன்னு சொன்ன.. என்ன பத்தி தெரிஞ்சுமா நீ இப்படி பேசுவ" என்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அங்கிருந்த டப்பில் படுக்க வைத்து வெதுவெதுவென்று தண்ணீரை திறந்து விட்டான்

"நீ இவ்வளவு நேரம் பீம் பாய்க்கு செய்த பணிவிடையை எல்லாம் தோற்றுப் போகும் படி நான் உனக்கு இப்போ பணிவிடை செய்யப் போறேன்" என்றான் .

மீனு கூச்சப்பட்டு கொண்டே சிவந்த முகத்தோடு ஜெய்யை பார்க்க .... தண்ணீர் முக்கால் பாகம் நெருங்கியதும் தண்ணீரை நிறுத்தியவன் டப்பிற்குள் ஜெய்யும் இறங்கினான்.

டப்பிற்குள் இறங்கியவன் அவன் எதிரே அவனை பார்த்தபடி டப்பில் சாய்ந்து அமர்ந்திருந்த மீனுவை நோக்கி தன் கைகளை நீட்ட அவன் கையை மீனு பிடித்ததும் சல்லென்று இழுத்து அவளை தன் மீது அமர வைத்தான்.

சிறிது நேரத்தில் டப்பிற்குள் இருந்த தண்ணீர் எல்லாம் சலசலத்த சத்தத்தோடு வெளியே தெரிந்து தரையை ஈரமாக்கியது . அவன் கையில் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருந்த மீனு எட்டி மீண்டும் டப்பிற்குள் தண்ணீரை திறந்துவிட்டவள் விட்டவள் அதில் குளிப்பதற்காக லிக்விட் சோப்பையும் கலக்க தண்ணீர் முழுவதும் நுறை தள்ளி இருந்தது .

மீனு கூச்சப்பட்டு கொண்டு தண்ணீருக்குள் இருக்கும் அவள் உடலை ஜெய் ரசிப்பதை கண்டு இந்த வேலையை செய்திருக்க... சோப்பு நுறை முழுவதும் இருவரின் உடலையும் தண்ணீருக்குள் மறைத்திருக்க இருவரின் முகம் மட்டுமே வெளியே தெரிந்திருந்தது

ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிட்டு கொண்டு ஜெய் தன் வேலையை துவங்க ... டப்பிற்குள் இருந்த நீர் சலசலக்க ஆரம்பித்தது.

தரை முழுவதும் டேபிள் இருந்த தண்ணீர் சிதறிக்கொண்டு இருந்தது .

காலை மீனு கண் திறக்கும்போது அவள் இடையை கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டு இருந்தான் ஜெய்.

வெற்றுடம்போடு படுத்து இருந்தவள் உடல் போர்வையால் மூடி இருக்க... அந்த போர்வைக்குள் இருந்த அவன் தலை போர்வைக்குள் மேலே பார்ப்பாதவளுக்கு மீனு வயிற்றில் கருவை சுமந்து மெடிட்டா வயிறு போல தெரிந்தது.

போர்வையை விளக்கி உள்ளே பார்க்க... ஜெய் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான்.

மீண்டும் போர்வையை போர்த்திக் கொண்டவள் மேடிட்ட தன் வயிரை ஆசையாக மீனு தடவிப் பார்த்தாள். பின் "செல்ல குட்டி உனக்கு அம்மாவை பிடிக்குமா? இல்லை அப்பாவை பிடிக்குமா?" என்றாள்.

"எனக்கு அப்பாவை தான் பிடிக்கும்.." என்று ஜெய் குழந்தை போல பேசினான் போர்வைக்குள் இருந்தாவாறே.

ஜெய் பேசுவதை கேட்டுவிட்டு சிரித்த மீனு.

"ஏன் என் செல்லத்துக்கு அம்மாவை பிடிக்காதா?" என்றாள் வேண்டுமென்றே குழந்தை கூட பேசுவது போல.

"ஏன்னா அப்பா தான் good boy , அதனால தான் எனக்கு அப்பாவை பிடிக்கும் "என்றான்.


"ஓஹோ.. உனக்கு அப்பாவை தான் பிடிக்கும்னுனா நீ உன் அப்பா கூடவே போ... ஏன் என்கிட்டே இருக்க..." என்று போர்வைக்குள் இருந்தவனை காதை பிடித்து திருகி மேலே இழுத்தாள்,

"ஏய் மீனு என்ன இது என் புள்ள என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னா நீ ஏன் என் காதை பிடிச்சு திருகுற" என்றான் ஜெய்.


"ம்ம்ம்... என் பிள்ளை குரலில் பேசினது நீங்க தானே அப்போ உங்க கதை தான் திருகனும்" என்றாள் மீனு.

"ஏய் மீனு வலிக்குதுடி காத விடு" என்று சொல்லி தன் காதில் இருந்து அவள் கைகளை விடுவித்தவன் மேலே முன்னேறி அவள் வெற்று உடம்பின் மீது படுத்துக்கொண்டு அவள் மூக்கோடு தன் மூக்கு உரசினான் .

"போதும் எழுந்திருங்க ஜெய் நான் போய் குளிக்கணும். மம்மி காலைல நேரமே எழுந்து பூஜை செய்து வைத்திருக்க படத்தை முன்னாடி விளக்கேற்றி சாமி கும்பிட சொல்லி இருக்காங்க நகருங்க" என்றாள் .

"ஜெய் வேல பாக்கறவங்க எல்லாரும் வந்துருப்பாங்க நான் இன்னைக்கு காலேஜ் வர போகணும் மறந்துட்டீங்களா. நமக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து நான் சரியா காலேஜுக்கு போறதே இல்ல அந்த ப்ரோபஸர் என்ன கழுவி ஊத்துறாரு.. இன்னைக்காவது நான் டைமுக்கு காலேஜ் போறேன் ப்ளீஸ்" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மீனு கெஞ்ச ..

"நான் நீ சொல்றதும் சரிதான் பாவம்தான் நீயும் சரி அப்போ ஒன்னு பண்ணு சின்னதா ஒரே ஒரு ரவுண்டு முடிச்சிட்டு அதுக்கப்புறம் கிளம்பலாமா?" என்றான் .

"நோ.. நோ.. நோ.. உங்களுக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு நானும் காலேஜ் கிளம்பனும் சின்னதா ஸ்டார்ட் பண்ணி அப்புறம் இன்னைக்கு என்னை மட்டம் போட வச்சிடுவீங்க அதெல்லாம் முடியாது . முதல்ல கீழ இறங்கிக்க என்று தன் உடலை அவள் அசைக்க .. அவள் மேல் இருந்து கட்டிலில் சரிந்தவன் மீனு..." என்று அவள் இடையை கட்டிக் கொள்ள "மத்ததெல்லாம் நைட்டு தான் பேசாம போய் கெளம்புங்க" என்று தன் இடையில் இருந்து அவன் கையை விளக்கி விட்டு குளிக்க சென்றாள்.

குளித்துவிட்டு வந்தவள் ரெடி ஆகி வந்தவள் சென்று உடைமாற்றிவிட்டு அவசர அவசரமாக கீழே வந்தவள்.

கிச்சனில் அவள் வருவதற்கு முன்னாள் எலாம் தயாராக இருக்க.. முதலில் சென்று விளக்கேற்றி சமிகும்பிட்டவள் வெளியே வர ஜெய்யும் வர... இருவரும் சாமி கும்பிட்டு முடித்து வந்து சாப்பிட்டு முடித்து இருவரும் கிளம்பினாள் .


 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 39.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top