logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
நேரத்திற்கு இன்று காலேஜ் வந்து விட்டால் மீனு அவளை காலேஜ் வரை வந்து டிராப் செய்தவன் முத்தம் கொடுத்தாள் தான் கார் கதவை திறந்து விடுவேன் என்று அவளிடம் டிமாண்ட் செய்து மாலை வரை ஞாபகம் இருக்கும் அளவிற்கு முத்தத்தை வாங்கி விட்டு தான் மீனுவை காரில் இருந்து இறங்க விட்டான் .

வெட்கப் புன்னகையோடு தன் உதட்டை துடைத்துக் கொண்டே காரை விட்டு இறங்கிய மீனு டாட்டா காட்டி ஜெய்யை ஆபீஸ்க்கு அனுப்பி விட்டு காலேஜுக்குள் செல்ல திரும்ப... அங்கே விக்ரமும் மைதிலி கைகட்டி கொண்டு அவளை பார்த்தவாறு நின்றிருந்தனர் .

அவர்கள் இருவரையும் பார்த்ததும் மீனு அப்படியே நின்றுவிட மைதிலி மீனுவிடும் வந்து "ஏன் டி... நைட்டு புல்லா வீட்ல ரொமான்ஸ் பண்ணது பத்தாதுனு காலேஜ் வந்து இந்த மாதிரி சிங்கிள்ஸ் முன்னாடி ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணி எங்களை டென்ஷன் பண்றீங்களா?" என்றாள் .

"உனக்கு என்னடி பொறாமை.. என் புருஷன் எனக்கு முத்தம் கொடுக்கிறார் நான் அதை வாங்கிட்டு வரேன். இத பார்த்து உனக்கு என்ன டென்ஷனா இருக்கு வேணும்னா நீ எவனையாவது உஷார் பண்ணி அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டியதுதானே அதைவிட்டு என்னை பார்த்து பொறாமைப்படுற" என்று வேண்டுமென்றே மைதிலி கடுப்பேற்றிவிட்டு அவர்கள் இருவரையும் தாண்டி சென்றாள் .

"நா முத்தம் கொடுக்க ரெடியா தான் இருக்கேன். இவ மட்டும் நான் என்னோட லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போது ஓகே சொல்லிட்டனா சந்தோஷம்" என்று மனதிற்குள் நினைத்தபடி விக்ரம் அவர்கள் இருவரின் பின்னால் சென்றான் .

மூவரும் பேசியபடி கிளாஸ் ரூமுக்குள் நுழைய வகுப்பு ஆரம்பிப்பதற்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது ;.

வழக்கம் போல கிளாஸ்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்க அவர்களுடைய ஹச்ஓடி இன்று கடைசி ஏற்றியதற்கு வந்தவர் "இன்னும் ஒரு வாரத்தில் நாம எல்லாரும் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள அணைக்கட்டி போகப்போறோம் அங்க உங்களோட ரிசர்ச் ஆரம்பிக்க போறீங்க . யாருமே வரல வீட்ல வேலை இருக்கு அம்மா வேண்டாம்னு சொன்னாங்க ...ஆயா வேண்டான்னு சொன்னாங்க... பொம்பள புள்ளைய தனியா அனுப்ப பயமா இருக்கு... அப்படி இப்படின்னு சொல்றவங்க யாரா இருந்தாலும் முதலிலேயே சொல்லிடுங்க . அவங்களை எல்லாம் கழித்துவிட்டு தைரியமா காட்டுக்குள்ள என் கூட வர நினைக்கிறவங்க மட்டும் வந்தா போதும்" என்றார்.

"இந்த கேம்ப் ஒரு ஃப்ரீ ஓப்பன் கேம்ப் யார் வேணா அவங்க கூட கம்பெனிக்கு யார் வேணா அழிச்சிட்டு வரலாம். ஆனால் எத்தனை பேர் வரீங்கன்னு முன்கூட்டியே எங்க கிட்ட சொன்னா மட்டும் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்" என்றார் அவர்களுடைய எச்ஓடி .

மைதிலி விக்ரம் இருவரும் அணைக்கட்டி கேம்புக்கு போவதாக முடிவு செய்து இருக்க ... மீனு மட்டும் போவதா? வேண்டாமா" என்ற யோசனையோடு அமர்ந்திருந்தாள் .

அவளைப் பார்த்து மைதிலி "சார் சொன்னது கேட்டுதா? இல்லையா? அடுத்த வாரம் நாலு நாள் கேம்புக்கு ஒழுங்கா வந்து சேரு அப்படியே உனக்கு தனியா வாரத்துக்கு யோசனையா இருந்தா கூட உன் புருஷனையும் சேர்த்து அழைச்சிட்டு வந்துரு " என்றாள் மைதிலி .

"நம்ம டிபார்ட்மெண்ட்ல இருந்து கேம்ப் கூட்டிட்டு போறாங்க அங்க அவரை கூட்டிட்டு வர முடியுமா?" என்றாள் மீனு

"என்னடி நம்ம சாரே வீட்டில் இருந்து யாரை வேணா கூட்டிட்டு வரலாம்னு சொல்றாரு நீ என்னடான்னா உன் புருஷனை உன் கூட கூட்டிட்டு வரதுக்கு இவ்வளவு யோசிக்கிறே... ஏன் அவர் கூட்டிட்டு வந்தா நாங்க எல்லாம் உன் வீட்டுக்காரர் பிச்சு தின்னுட போறோமா... என்ன" என்றாள் மைதிலி .

"ஏய் லூசு அவங்க வீட்டுக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரர் அவரெல்லாம் நம்ம கூட வந்து காட்டுக்குள்ள நம்மளோட ஒன்னா தங்குவாரான்னு யோசிக்கிறா... அதை புரிஞ்சுக்காம அவகிட்ட வம்பு இழுத்துட்டு இருக்க எல்லாரும் உன்ன மாதிரியே இருப்பாங்களா எங்க கூப்பிட்டாலும் உடனே கிளம்பி வரதுக்கு" என்றான் விக்ரம் .


"டேய் வார்த்தையை அளந்து பேசு எங்க கூப்பிட்டாலும் யார் கூப்பிட்டாலும் போறவ நான் இல்ல...இது நம்ம ஆப் காலேஜ் கேம்ப்னால தான் வரேன். இதுவே நீ என்னை கூப்பிட்டு பாரு உன்னை செருப்பால அடிப்பேன்" என்றாள் கோபமாக .

"அடிப்பாவி நான் என்னடி பேசுறேன்... நீ என்ன சொல்ற... போதும்டி உன் சங்காத்தமே வேணாம் , உன்கிட்ட பேசும் போதெல்லாம் எனக்கு இந்த மாதிரி நோஸ்கட் தான் வந்து விழுது எனக்கு இது தேவையா? என்னமோ பண்ணுங்க ரெண்டு பேரும் நான் கிளம்புறேன்" என்றுவிட்டு விக்ரம் கோபமாக வீட்டிற்கு கிளம்ப ....

அவன் செல்லும் வரை அமைதியாக இருந்த மீனு "உன்மேல எவ்வளவு அக்கறையா உன் கூட பேசுறான் அவன் . ஆனா நீ என்னடா எடுத்தெரிஞ்சு பேசிக்கிட்டே இருக்க அவன்கிட்டே ... பாவம் டி அவன் " என்றாள் மீனு .

"யாரு அவன் தானே நான் அவனை எவ்வளவு கழுவி ஊத்தினாலும் திரும்ப என்கிட்ட தான் வருவான். இப்போ பாரு இன்னும் அஞ்சு செகண்ட் தான் ஒன்னா போனவ திரும்பி வரணும் இல்லன்னா எனக்கு கால் பண்ணுவான் பாரு "என்று மைதிலி சொல்லி முடிக்கும் முன்பு அவள் போன் அடித்தது அதை எடுத்து மீனுவின் முகத்தின் முன்பு ஆட்டி காட்டினாள் அதில் விக்ரம் தான் அழைத்து இருந்தான் .

"அவன் உன்ன லவ் பண்றான்னு உனக்கு தெரியும் தானே... அப்புறம் ஏன் அவனை இப்படி உன் பின்னாடி அலைய விடுற.. பாவம் டி விக்ரம். பசங்கள ஓரளவுக்குத்தான் அலைய விடனும் ரொம்ப பின்னாடி சுத்த விட்டா .. அப்புறம் அவங்க உன்னை திரும்பி கூட பாக்க மாட்டாங்க ஞாபகத்துல வச்சுக்கோ" என்றாள் மீனு .

"சரிமா தாயே உன் பிரண்டுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு பேச வந்துட்டியா நம்ம கேம்ப் போற இந்த கேப்பில் நான் என் மனசுல இருக்குறத விக்ரம்கிட்ட சொல்லிடுவேன் ஓகேவா" என்றவள் காலை அட்டென்ட் செய்து "என்னடா" என்றாள் வரவழைக்கப்பட்ட கோபத்தோடு .

"நான் காலேஜ் வாசல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ வரியா... உன்னை வீட்டில் டிரா பண்ணிட்டு நான் கிளம்பனும். எனக்கு டைம் ஆச்சு" என்று விக்ரம் கோபமாக அழைத்தான் .

"சரி சரி அங்கேயே நில்லு நான் வந்துட்டேன்" என்று விட்டு போனை வைத்துவள் "ஓகே டி அவன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான். நான் கிளம்புறேன் உன் வீட்டுக்காரர் வந்ததும் நீ பத்திரமா கிளம்பி போற வழிய பாரு" என்றாள் மைதிலி .

"சரி டி.." என சிரித்துக் கொண்டே மைதிலி செல்வதை பார்த்தபடி காலேஜ் வாசலில் மீனு காத்திருக்க அப்போது அவள் முன்பு ஒரு கார் வந்து பிரேக் அடித்து நின்றது . வழக்கமாக ஜெய் வரும் கார் அது இல்லை யாராக இருக்கும் தன் முன்பு வந்து காரை நிப்பாட்டியது என்று யோசனையோடு மீனு அந்த காரையே பார்த்துக் கொண்டிருக்க அந்த காரில் இருந்து ரியா படு ஸ்டைலாக இறங்கி மீனுவை நோக்கி நடந்து வந்தாள் .

"இவளா!! இவ எதுக்கு இங்கே வந்து இருக்கா"என யோசனையோடு அவளை பார்க்க... மீனுவிடம் வந்த ரியா என்ன மீனு "என்னை இங்கே எதிர்பார்க்கலையில்ல .... சர்ப்ரைஸா இருக்கா " என்றவள் "சரி யாருக்காங்க வெயிட் பண்ணிட்டு இருக்க... ஓஹோ...உன் புருஷன் ஜெய்க்காகவா ..." என்றவள் .

"வா நானே உங்க வீட்டுல டிரா பண்றேன்" என்றாள் ரியா .

"சர்ப்ரைஸ் தான் நீ எதுக்கு தேவையில்லாம என் காலேஜ் முன்னாடி வந்து நிற்கிறேன்னு" என்றவள் "நோ தேங்க்ஸ் என் வீட்டுக்காரர் வருவார் என்ன பிக்கப் பண்ண" என்றாள் மீனு .

"அவர் எப்படி இங்கு வருவாரு உன்ன அழிச்சிட்டு வர சொல்லி அனுப்பினது உன் புருஷன் தானே" என்றாள் ரியா .

"என்ன!!" என்று புரியாமல் மீனு ரியாவை பார்க்க... "கிளம்பி வா டார்லிங் அங்க போய் மத்தத பேசிக்கலாம்" என்று மீனுவின் கைபிடித்து அழைக்க...

அவள் கையை உதறிவிட்டு சென்று முன் சீட்டில் மீனு அமர்ந்து கார் கதவை வேகமாக சாற்றினாள். சுற்றி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை மீனுவின் வீட்டிற்கு கிளப்பினாள் ரியா.

 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 40
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top