logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
மீனுவின் காலேஜுக்கு வந்து ரியா அவளை அழைத்துச் சென்றாள் .

மீனு புதிதாக குடிபுகுந்திருக்கும் வீட்டிற்கு செல்லாமல் அவளுடைய பிறந்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள் ரியா

காரை வீட்டின் முன்பு நிறுத்தியதுவும் வேகமாக காரில் இருந்து இறங்கிய மீனு வீட்டுக்குள் நுழைய அங்கே ஹாலில் கஜேந்திரன், சந்தோஷ், சூர்யா, மீனுவின் அப்பா குரு, அம்மா ஜனனி, பூஜா,பரமன் சாந்தா என அனைவரும் இருந்தனர் .

அனைவர் முகமும் கலவரமும் பீதியுமாக இருக்க மீனு உள்ளே வந்து "அம்மா என்ன ஆச்சு? இவ எதுக்கு என்ன காலேஜில் வந்து கூப்பிட வந்தா... இப்ப என்ன பிரச்சனை "என்று கேட்டுக் கொண்டே சென்றாள்.

மீனுவின் குரல் கேட்டு குருவின் அறையில் இருந்த ஜெய் வேகமாக வெளியே வந்தான் .

அவனைப் பார்த்ததும் வேகமாக அவனிடம் ஓடிச் சென்ற மீனு "என்ன ஆச்சு ஜெய் நீங்கதான் இவளை அனுப்பி என்னை கூட்டிட்டு வர சொன்னீங்களா? ஏன் நீங்களே வந்திருக்க வேண்டியதுதானே ,இவ எதுக்கு என்ன வந்து காலேஜ்ல பிக்கப் பண்ண வரணும்... எனக்கு இதுல கொஞ்சம் கூட இஷ்டமில்லை" என்று முகம் சுணங்க கேட்டாள் மீனு .

ஜெய் எதுவும் பேசாமல் தன்னோடு ஒட்டி நிற்கும் மீனுவை விட்டு சற்று விலகி நின்றவன் .

"மீனு என்ன மன்னிச்சிடு நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். உனக்கு துரோகம் பண்ணிட்டேன். நானே இப்படி செய்வேன்னு எதிர்பார்க்கல என்ன மன்னிச்சிடு" என்றான் .

மீனு புருவம் சுருங்க ஜெய்யை பார்த்து "என்ன ஆச்சு ஜெய்.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டீங்க.. எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலையே" என்றாள் .

கஜேந்திரன் எழுந்து வந்து மீனுவின் கைப்பிடித்து "அம்மாடி மீனு இந்த விஷயம் முன்னாடியே எங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்கள் உனக்கு ஜெய்யை கல்யாணமே செஞ்சு வைத்திருக்க மாட்டோம் . இப்போ இருக்கிற சூழ்நிலையில முடிவெடுக்க முடியாம நாங்க எல்லாரும் இருக்கோம். நீ தாம்மா ஒரு நல்ல முடிவு எங்களுக்கு சொல்லணும்" என்று அவர் சொல்ல ..

அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மீனுவின் இதயம் கனத்தது அவள் கண்களில் கண்ணீர் குலம் போல தேங்கி நிற்க அதை துடைத்துக் கொண்டே கஜேந்திரனை பார்த்து "மாமா இப்போ என்ன ஆயிடுச்சு ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க ... நீங்களே யாரும் வற்புறுத்தி இவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலையே நான் தானே விரும்பி ஜெய் வேணும்னு கல்யாணம் செஞ்சேன் .

அவரும் என் கூட சந்தோஷமா தானே இருக்காரு... இப்ப என்ன திடீர்னு இப்படி பேசுறீங்க என்னதான் நடக்குது எனக்கு எதுவுமே புரியலை" என்று மீனு அழுதாள்.

மீனு அழுவதை பார்த்துக் கொண்டு ஜெய்யால் அமைதியாக நிற்க முடியவில்லை அவளிடம் வேகமாக ஓடி வந்து மீனுவின் கையைப் பிடிக்க போக இருவருக்கும் இடையில் புகுந்த ரியா "முதல்ல எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டு அதுக்கப்புறம் உரிமையா போய் உங்க மனைவியை சமாதானம் பண்ணுங்க மிஸ்டர் ஜெய்" என்றாள் .

அவள் பேசுவதைக் கேட்ட மீனு" உனக்கு என்ன பதில் சொல்லணும்? அதுதான் அத்தனை பேரும் முன்னாடி இவர் வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டியே... உனக்கு அவர்கிட்ட என்ன வேண்டி இருக்கு. உன்னை இந்த வீட்டுக்குள்ள விட்டதே ரொம்ப பெரிய தப்பு. பூஜா அப்பவே சொன்னா இவள எதுக்கு வீட்டுக்குள்ள விட்டீங்கன்னு முதல்ல என் வீட்டுல இருந்து வெளியே போ" என்றாள் மீனு கோபத்தோடு .

"சரி நான் இங்கே இருக்கல இப்பவே கிளம்பறேன். ஆனால் என் கூட போகும்போது நான் ஜெய்யையும் கூட்டிட்டு தான் போவேன்:" என்றாள் .

"என்ன சொல்ற ரியா .... அவரை எதுக்கு உன் கூட கூட்டிட்டு போகணும் அவர் என்னோட புருஷன் அவர் எதுக்காக உன் கூட வரணும் . இன்னொருத்தர் புருஷனை உன்கூட கூட்டிட்டு போறேன்னு சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல" என்றாள் மீனு .

"ஏன் கூட்டிட்டு போகக்கூடாது அவருக்கும் எனக்கும் தானே முதல்ல கல்யாணம் நிச்சயம் ஆச்சு... நீ வந்து தான் எங்க கல்யாணத்தை கெடுத்து அவரை கல்யாணம் செய்துகிட்டே... அப்படி இருக்க அப்போ உன்னோட இந்த கல்யாணம் செல்லாது . நீ எத்தனை பேர் முன்னாடி அவர் கழுத்துல தாலி காட்டி இருந்தாலும் செல்லாது .ஆனா ஜெய்யும் , நானும் முறையா 6 மாசத்துக்கு முன்னாள் நடந்த எங்க நிச்சயதார்த்தம் அன்னிக்கே நாங்க ரெண்டு பேருமே முறையா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கோம். இந்தா அதுக்கான சர்டிபிகேட்" என்று ரியாவின் அம்மாவிடம் இருந்த ஜெய் ரியா இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ததற்கான சான்றிதழை மீனுவின் முன்பு தூக்கி போட்டாள் .

அதை பார்த்ததும் மீனு அதிர்ந்து போய் ஜெய்யை திரும்பி பார்க்க ... அவனும் செய்வதறியாது மீனுவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் .

அந்த திருமண பதிவை கையில் கூட எடுத்துப் பார்க்காத மீனு நேராக ஜெயிடம் வந்து "என்ன ஜெய் இதெல்லாம்... இவ சொல்றதெல்லாம் உண்மையா? உங்களுக்கும் அவளுக்கும் ஏற்கனவே ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துருச்சா!! இது உங்களுக்கு தெரியாதா? தெரிஞ்சும் அப்புறம் எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுனீங்க? என்றாள் மினு அழுது கொண்டே .

"மீனு இப்படி அவசரப்பட்டு வார்த்தையை விடாத... என்ன நடந்ததுனு முழுசா கேளு அதுக்கப்புறம் எதுவாயிருந்தாலும் நீ முடிவெடு அதுக்கு நான் சம்மதிக்கிறேன்" என்றான் ஜெய் .

"இன்னும் என்ன ஜெய் நான் தெரிஞ்சுக்கணும் உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு ரியா மேரேஜ் ரிஜிஸ்டர் சர்டிபிகேட் எடுத்துட்டு வந்து நிற்கிறா.. அதை பார்த்துட்டு என்ன என்ன செய்ய சொல்றீங்க" என்றாள் .

"ஐயோ மீனு நான் சொல்றது கொஞ்சம் கேளு .... எனக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு முன்னாடி நடந்த விஷயம் எதுவும் நியாபகம் இல்லை . இவை சொல்றது எல்லாம் உண்மையா பொய்யானு கூட எனக்கு இன்னும் தெரியல, அப்படி இருக்கும்போது இவ சொல்றத நம்பிட்டு அவ கூப்பிட்டதும் நான் அவ பின்னாடி போயிடுவேன்னு நினைச்சியா?" என்றான் ஜெய் ,

ஜெய் சொன்னதை கேட்டு அவனை செய்வதரியாது பார்த்த மீனு ... "நீங்களே சொல்லுங்க ஜெய்" என்றவள் திருமண பதிவு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னிட்டு "இதில் இருக்கிறது உண்மையா ? பொய்யா? இதுல இருக்குற கையெழுத்து உங்களோடது தானா?" என்றாள் .

ஜெய் தயங்கியவாரே அதை வாங்கியவன் ஏற்கனவே அந்த பத்திரத்தை அலசி ஆராய்ந்து இருந்த ஜெய் மீண்டும் ஒருமுறை திறந்து பார்த்தவன் "ஆமாம் மீனு இதில் இருக்கிறது என்னோட கையெழுத்து தான் நான் போட்டதுதான்" என்றான் .

"இனி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ஜெய் ஏற்கனவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கீங்க. என்னையும் எல்லார் முன்னாடியும் அக்னி சாட்சியா என் கழுத்துல தாலி கட்டி கல்யாணம் செய்து இருக்கீங்க... இப்போ நீங்கதான் முடிவு பண்ணனும். உங்களுக்கு யார் வேணும்னு உங்களுக்கு நான் வேணும்னா அவள முறையா டைவர்ஸ் பண்ணிட்டு என்கிட்ட வாங்க இல்ல... அவ தான் வேணும் அப்படின்னா சொல்லுங்க இப்பவே நீங்க கட்டின தாலியை கழட்டி கையில் கொடுக்கிறேன். அவ கழுத்துல கட்டி அவள உங்க மனைவி ஆக்கிக்கோங்க" என்றாள் மீனு .

மீனு அந்த வார்த்தையை சொல்லி முடித்து அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார் என்று ஜெய் அறைந்திருந்தான் .

இதை சற்றும் எதிர்பாராத மீனு கன்னத்தில் kaivaithtapadi kangalil kaneerodu avanai paarthtthaal .

"இங்க பாரு மீனு இந்த ரெஜிஸ்டர் மேரேஜ் சர்டிபிகேட்ல நான் எப்படி சைன் பண்ணி இருந்தேன்னு எனக்கு தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கண்டிப்பா இதை நான் விரும்பி செய்திருக்க மாட்டேன் . உனக்கும் எனக்கும் இடையில நடந்த விஷயம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆனாலும் அதை உண்மைன்னு நான் மனப்பூர்வமா நம்புகிறேன் . எனக்கு ஆக்சிடென்ட் நடந்ததற்கு முன்னாடி என்ன நடந்தது என்று சுத்தமா எனக்கு ஞாபகம் இல்ல அப்படி இருக்கும்போது நமக்குள்ள நடந்த விஷயத்தை நீ சொன்னப்ப என்னால அதை ஏன் முழுசா நம்ப முடிஞ்சது . அதுக்கு காரணம் உன்னோட வார்த்தைகளில் பொய்யில்ல உன் கண்ணுல பொய் இல்ல நான் உன்ன முழுசா நம்புறேன்" என்ற ஜெய் .

அவன் அருகில் நின்றிருந்த ரியாவை காட்டி "ஆனா இவ சொன்னதில்ல எதுவுமே உண்மை இல்லைன்னு என்னால உணர முடியுது இந்த கையெழுத்தை நானே போட்டு இருந்தாலும். இந்த திருமணத்தை விரும்பி கண்டிப்பா நான் செய்திருக்க மாட்டேன் அத முதல்ல நம்பு . கூடிய சீக்கிரத்துல இந்த பிரச்சனைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். ரியா சொன்னது போல விரும்பி நான் இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணல . எனக்கு ஒருவேளை பழைய ஞாபகங்கள் வந்தாலும் கண்டிப்பா நான் உன்னை தேடி தான் வருவேன் என் மனசுல நீ மட்டும் தான் நிறைஞ்சிருக்க மீனு" என்றான் ஜெய் .

இருவரும் பேசுவதை எல்லாம் மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்க ஆனால் ரியாவும் அவள் அம்மாவும் அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு ரியா அவர்கள் இருவருக்கும் இடையில் வந்தவள் .

"இங்க பாரு ஜெய் முறையா உன்னை நான் தான் முதல்ல கல்யாணம் செய்துகொண்டேன். நியாயப்படி பார்த்தால் நான் தான் உன்னோட முதல் மனைவி இவ ரெண்டாவது வந்தவ தான் . ஊர் அறிய என்ன உன் பொண்டாட்டியா ஏத்துக்க இவ்வளவு விட்டு பிரிய மனசு இல்லையா? ஒன்னும் பிரச்சனை இல்ல இவளை சின்ன வீடா வேணா செக் பண்ணிக்கோ இப்போ இருக்கிற வீட்ல நீயும் நானும் சந்தோசமா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். இவ இங்கேயே இருக்கட்டும் உனக்கு எப்ப எல்லாம் தோணுதோ அப்போ இவகிட்ட நீ வந்துட்டு போ" என்றாள் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் .

அதை அவள் பேசி முடித்த மறுநொடி ரியாவின் அப்பா அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து "நீ எல்லாம் ஒரு பொண்ணா உன்னை என் பொண்ணுன்னு சொல்றதையே நான் வெட்கப்படுகிறேன். இப்படி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க உனக்கு எங்கே இருந்து தைரியம் வந்துச்சு... இத்தனை நாளா உனக்கு ஜெய்யை பிடிக்கல அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மணமேடை வரைக்கும் வந்து பிரச்சனை பண்ணிட்டு இன்னிக்கு என்ன புதுசா செய்த உன் புருஷன் உறவு கொண்டாடிட்டு வர" என்றவர் .

அவர் கையை உதறிய ரியா "நான் எங்கேயும் வரமாட்டேன் ஜெய் எங்க இருக்கிறானோ அங்கதான் நானும் இருக்க போறேன்" என்று முடிவாக கூறி விட ... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் ஜெய் பார்த்து நின்றனர்



 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 41
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top