logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
ரியாவின் அப்பா அவளை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்வதாக தன்னோடு அவளை கூப்பிட...

ஆனால் ரியாவோ அவருடன் வீட்டிற்கு செல்ல மறுத்தவள் "ஜெய்யை முறையா நான் தான் கல்யாணம் செய்திருக்கேன். அவன் எங்கே இருக்கானோ அங்கே தான் நானும் இருப்பேன்" என்று பிடிவாதமாக அங்கேயே இருப்பதாக கூற ..அங்கிருந்து அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் ஜெய்யை பார்த்தனர் .

அவனோ ரியாவிடம் வந்தவன் "ஒரு சாதாரண பேப்பர காட்டி உனக்கும் எனக்கும் உறவு இருக்குன்னு சொன்னா அதை நம்பிட்டு நீ சொன்னதை எல்லாம் கேட்டுட்டு என்னால தலையாட்டிக்கிட்டு உன் கூட இருக்க முடியாது. நான் மனசார விரும்புறது என்னோட மீனுவை மட்டும் தான் . அவளுக்கு மட்டும் தான் என் மனசுலையும் என் வாழ்க்கையிலும் இடம் இருக்கு... நீ என் கூடவே இருந்தாலும் சரி... எங்க இருந்தாலும் சரி, உன்னை பற்றி நான் துளியும் நினைக்க போறது இல்ல. நீ என்கூட வந்து இருக்கிறதல்ல எந்த பிரயோஜனமும் இல்ல தயவு செய்து உன் அப்பாவோட ஊருக்கு கிளம்பிடு இங்கே இருந்து எங்க எல்லார் நிம்மதியையும் கெடுக்காதே" என்றான் அவளைப் பார்த்து .




"என்ன ஜெய் இப்படி பேசுற அப்போ நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டதெல்லாம் பொய்னு சொல்றியா!! . நம்ம ரெண்டு பேரும் முறையா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கோம். நியாயப்படி பார்த்தா நான் தான் உன்னோட முதல் மனைவி . உன் கூட ஒண்ணா இருக்குறதுக்கு எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு வேற எவளுக்கும் கிடையாது" என்று மீனுவை பார்த்து திமிராக ரியா பேச .




அவள் யாரை சுட்டிக்காட்டி பேசினாள் என்று புரிந்து கொண்ட ஜெய் ரியாவின் முன்பு கையை நீட்டி "ஏய்!! உனக்கு அவ்வளவு தான் மரியாதை ஒருமுறை சொன்னா புரியாது... ஒழுங்கா இங்கிருந்து போயிடு வீணா இங்கே இருந்து என் கோபத்தை கிளறாத. நான் உன்னை என்ன செய்வேன்ன்னு எனக்கே தெரியாது" என்றான் .




"என்ன ஜெய் என்ன மிரட்டி பாக்குறியா... இதுக்கெல்லாம் நான் மிரண்டு போற ஆளே கிடையாது. நீ என்னை என்ன வேணா செய்துக்கோ... நான் உன்னுடைய மனைவி சட்டப்படி உன்னுடைய மனைவியை யார் நினைச்சாலும் உன்னை என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது. நீ எங்கே இருக்கிறயோ அங்கே தான் நானும் வருவேன்" என்றாள் .




இதற்கு மேல் இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கொண்ட ஜெய் ஜனனி இடமும் குருவிடமும் திரும்பி ... "நீங்க ரெண்டு பேரும் ஆரம்பத்தில் இருந்து பார்த்துட்டு தான் இருக்கீங்க. எனக்கு என் பக்கத்தில் நியாயத்தை எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல.. ஏன்னா இவ சொல்றதெல்லாம் என்னால நம்ப முடியல , எனக்கு புரியல தயவு செய்து எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க.. இந்த விஷயத்தை எல்லாம் நான் சீக்கிரம் சரி பண்ணிடுறேன். அதுவரை என் மேல கொஞ்சம் நம்பிக்கையா இருங்க... என்னை வெறுத்து ஒதுக்கிடாதீங்க ப்ளீஸ்..." என்றான் .




அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தங்கள் மகளின் வாழ்க்கை திருமணம் ஆன சில நாட்களிலேயே இப்படி கேள்விக்குறியாகவும் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை ஜெய் சொல்வதை நம்புவதா அல்லது ரியா சொல்வதை ஏற்றுக் கொள்வதா என்று அவர்களுக்கு குழப்பமாக இருக்க ... "மாப்பிள்ளை நீங்க சொல்றது எனக்கு புரியுது. எங்களுக்கும் இந்த சூழ்நிலையை புரிஞ்சுக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது அதுவரைக்கும் மீனு இங்கேயே இருக்கட்டும்" என்றார்




அதைக் கேட்டதும் ஜெய் என்ன சொல்வது என்று தெரியாமல் செய்வதரியாது நின்றிருந்தான். அவன் குருவின் கையைப் பிடித்துக் கொண்டு "மாமா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க இவ பேச்சை நம்பிட்டு என்னையும் மீனுவையும் பிரிச்சிடாதீங்க.. மீனு இல்லாம என்னால இருக்க முடியாது, தயவு செய்து மீனுவ என் கூட என் வீட்டுக்கே அனுப்பி வச்சிடுங்க. அவள எந்த குறையும் இல்லாமல் கண்டிப்பா நான் பாத்துக்குவேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தா நீங்க மீனு வை என் கூட அனுப்பி வைங்க" என்றான் .




அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசவும் அதை பார்த்த கஜேந்திரனும் தன் மகனுக்காக குரு ஜனனி இருவரிடமும் பேச அவர்களால் இதற்கு மேலும் மறுப்பு பேச முடியாமல் சரி என்று சம்மதித்தனர் .




அவர்கள் சம்மதம் சொன்னதும் ஜெய் சந்தோஷமாக திரும்பி மீனுவிடம் வந்தவன் "மீனு வா நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று அவள் கையை பிடித்து அழைத்தான்.




அவன் கையை உதறிய மீனு "நான் எங்கேயும் வரல..." என்று விரைப்பாக நின்றிருந்தாள் .




"உன்னோட அம்மா அப்பாவே என் மேல நம்பிக்கை வைத்து உன்னை என் கூட அழைச்சிட்டு போக சம்மதம் சொன்ன பிறகு நீ வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம். அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?" என்றான் .




கண்களில் கண்ணீரோடு அவனைப் பார்த்த மீனு "எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு ஜெய், ஆனா..." என்று சொல்லி ரியாவை அவள் பார்க்க ...




அவள் பார்வை சென்று இடத்தை திரும்பிப் பார்த்த ஜெய் "இவள பார்த்து நீ ஏன் யோசிக்கணும் மீனு... அவ என்ன செய்திடப் போறா அவளால உன்னையும் என்னையும் என்ன நினைச்சாலும் பிரிக்க முடியாது. நான் சொல்றது கேளு இந்த பிரச்சனையை சீக்கிரமா நான் சரி பண்ணிடுவேன் தயவுசெய்து என் மேல நம்பிக்கை வைத்து என் கூட வா" என்றான் .




"இல்ல ஜெய் நான் உங்க கூட வரல இந்த பிரச்சனைக்கு எண்ணிக்கை ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறீர்களோ... அந்த அன்னைக்கு நீங்க கூப்பிடாமலேயே நான் உங்க முன்னாடி வந்து நிற்பேன்" என்றாள் மீனு ,




"மீனு நான் இவ்வளவு சொன்ன பிறகும் நீ என்னை நம்பாமல் என் கூட வர மறுக்கிறது இவ்வளவு நாள் நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையை நான் உடைத்து விட்டதா எனக்கு வருத்தமா இருக்கு. தயவு செய்து இப்படி என்ன ஒதுக்காத மீனு என் கூட கிளம்பி வா.." என்றான் ஜெய் .




இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு பக்கத்தில் வந்த ரியா "என்ன டார்லிங் அவதான் உன் கூட வரலைன்னு சொல்றாளே திரும்ப எதுக்கு அவளை போர்ஸ் பண்ணிட்டு இருக்க... உனக்கு கம்பெனி கொடுக்கத் தான் நான் இருக்கேன் வா நம்ம ரெண்டு பேரும் அந்த புது வீட்டில் போய் ஜாலியா சந்தோசமா இருக்கலாம்" என்று ஜெய் கையைப் பிடித்து ரியா அழைக்க ..




அதை பார்த்து மீனுவிற்கு மேலும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது ஜெய்யை பார்த்து "அதான் உங்க அதிகாரப்பூர்வமான மனைவி கூப்பிடறாளே நீங்க கிளம்பி அவ கூடவே போங்க... நான் எதுக்கு நான் யாரோ தானே" என்று மீனுஆதங்கத்தோடு அவனைப் பார்த்து பேசினாள் .

தன் கை பிடித்திருந்த ரியாவின் கையை உதறிய ஜெய் அவளை ஓங்கி அறைந்தவன் "இப்படி தேவையில்லாமல் என்னை தொட்டு பேசுற வேலை வெச்சுக்காத... முதல்ல நான் இருக்கிற இடத்திலேயே உன்னை நான் பார்க்க கூடாது ஒழுங்கா இங்கிருந்து போயிடு" என்று மீண்டும் அவளை ஓங்கி அறைந்தவன்.

மீனுவை பார்த்து "இப்ப நீ என் கூட வரப் போறியா? இல்லையா?" என்றான் அதே ஆத்திரத்தோடு.




தீர்க்கமாக முடியாது என்று மீனு கூற ...




பெருமூச்சொன்றை விட்டவன் ஜனனி , குரு இருவரையும் பார்த்து "என்ன மன்னிச்சிடுங்க.." என்றான்.

அவர்கள் "என்ன!!..." என்று புரியாமல் அவனைப் பார்க்க...

நொடிப்பொழுதில் மீனுவிடம் திரும்பி அவளை குண்டு கட்டாக தூக்கி தன் தோளில் போட்டவன் . அவனுடன் வர மறுத்தவளை பிடிவாதமாக பிடித்துக் கொண்டு அவர்கள் புதிதாக குடியேறிய வீட்டுக்கு மீனுவை கூட்டிச் செல்ல காரை நோக்கி சென்றான் .




அவன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த குரு ஜனனி இருவருக்குமே ஜெய் தன் மகள் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறான் என்பது புரிய ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் .

இங்கே பிரச்சனை செய்வதற்காக வந்திருந்த ரியாவினால் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று வருத்தத்தோடும் அவர் வெளியே பார்த்துக் கொண்டிருக்க மீனுவை மறுக்க மறுக்க காருக்குள் வைத்து கதவை சாற்றியவன் காரை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பினான் .

ஜெய் தன்னை புறக்கணித்துவிட்டு மீனுவோடு செல்வதை பார்த்த ரியாவிற்கு ஆத்திரமாக வந்தது திரும்பி அவள் அம்மாவிடம் "மம்மி வாங்க இவன் எப்படி என்ன வேண்டாம்னு சொல்றான்னு பார்க்கலாம் ... நானும் அங்கே போறேன். நானா அந்த மீனுவான்னு இன்னைக்கு ஒரு கை பார்த்துடலாம்" என்று அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல போக...

அப்போது குறுக்கே வந்த பரமன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து "அம்மாவும் பொண்ணு ஒரு குடும்பத்தை கெடுக்கிறதுன்னே கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கீங்களா?.. ஒழுங்கா கிளம்பி என்கூட ஊருக்கு வந்திங்கனா உங்களுக்கு ஒரு வேளை சோறு கிடைக்கும். இல்லை இப்படியே போய் மீனு வாழ்க்கையில பிரச்சனை பண்றீங்கன்னு தெரிஞ்சா என்கிட்ட இருந்து ஒரு சல்லி பைசா கூட உங்களுக்கு தேறாது ரெண்டு பேரும் நடுரோட்டில் பிச்சை எடுக்க வேண்டியது தான்" என்று அவர்கள் இருவரையும் மிரட்ட...

இருவரும் வேறு வழியில்லாமல் இப்போதைக்கு இந்த பிரச்சனையை ஆறப்போட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பேசாமல் கிளம்பி பராமனோடு இருவரும் சென்றனர் .

இங்கே காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து ஓடும் காரில் இருந்து கதவை திறந்து கொண்டு கீழே குதிப்பதற்காக மீனு முயற்சிக்க... அவளை சீட் பெல்ட் போட்டு ஏற்கனவே அமர வைத்திருந்தவன். கார் கதவையும் லாக் செய்துவிட்டு

"ஏன் மீனு இப்படி எல்லாம் செய்ற... நான் சொல்றது கொஞ்சமாவது கேளு. உனக்கு என் மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்ற.. அப்புறம் ஏன் என் கூட நம்ம வீட்டுக்கு வர மறுக்கிற... தயவு செய்து நான் சொல்றது கொஞ்சம் கேளு டி." என்று அவள் கை பிடித்துக் கொண்டு கெஞ்சினான் ஜெய் .

"இங்கே பாருங்க ஏற்கனவே உங்களுக்கு எல்லாமே மறந்து போயிடுச்சு... அவ வேற உங்களை முறையா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு பத்திரத்தோட வந்து நிற்கிறா... கல்யாணத்துக்கு முன்னாடி நடந்தது எதுவுமே உங்களுக்கு ஞாபகம் இல்ல என்னையும் சேர்த்து தான். இப்போ எல்லாமே மறந்திருக்கிற நீங்க இப்போ வேணா என்ன காதலிக்கிறேன்னு சொல்லலாம். நாளைக்கு உங்களுக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பிடுச்சுன்னா ... என்னை யாரோன்னு ஒதுக்கி தள்ளிட்டு அந்த ரியா கூட சேர்ந்து வாழ மாட்டீங்கன்னு என்ன நிச்சயம். இதை நம்பி என்ன உங்க கூட வர சொல்றீங்களா...எனக்கு இருந்த கொஞ்சம் நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு" என்று அழுது கொண்டே பேசினாள் மீனு .




"இங்க பாரு மீனு எனக்கு எந்த மாதிரி சூழ்நிலையா இருந்தாலும் பழைய ஞாபகங்கள் திரும்பி வந்தாலும் கண்டிப்பா உன்ன நான் மறக்க மாட்டேன். நீ என் மனசுல அவ்வளவு ஆழமாக பதிஞ்சுட்ட டி... அதை முதலில் புரிந்து கொள்" என்று ஜெய் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக மீனுவிடம் கூற...

ஆனால் அவளோ அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இப்போது இல்லை "என்னை தயவு செய்து விடுங்க.." என்று மீனும் காருக்குள் இருந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்க... அதற்குள் ஜெய் காரை அவர்கள் வீட்டிற்கு ஓட்டி வந்திருந்தான்

"நான் சொன்னா நீ கேட்க மாட்டேங்கிற இல்ல.." என்று சொன்னவன் காரை நிறுத்திவிட்டு மறுபக்கம் வந்து கார் கதவை திறக்க.. அவனோடு காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வர மறுத்தாள் மீனு. "நான் சொல்றது கேளு டி..." என்று அவளை காருக்குள் இருந்து வெளியே இழுத்தான் .

ஆனால் அவளோ அதற்கெல்லாம் பயந்தவள் போல காட்டிக் கொள்ளாமல் அவனிடம் இருந்து திமிறி கொண்டு வாசலை நோக்கி ஓடினாள் .

அவள் பிடிவாதம் பிடிப்பதை பார்த்து கோபம் மீனுவிடும் வந்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தவன்.

மீனு கன்னத்தில் கைவைத்து தன்னை அறைந்தவனை பார்த்து மேலும் கோபம் கொண்டவள் அழுதுகொண்டே ஜெய்யை பார்க்க....

அவள் அழுத விழிகளை பார்த்த அடுத்த நொடியே மீனுவின் முகத்தை பிடித்து அவள் இதழில் ஆக்ரோஷமாக முத்தம் வைத்தான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த மீனு தன்னை அடித்துவிட்டு இப்பொது முத்தம் கொடுப்பவனிடம் இருந்து திமிறிக்கொண்டு பிரிய... அவள் கைகளை பிடித்தவன் குனிந்து அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு "உன்கிட்டே பொறுமையா சொன்ன நீ கேட்க மாட்டே... செயல்ல காட்டினா தான் நீ என் வழிக்கு வருவ..." என்று வீட்டுக்குள் நுழைந்தவன் பெட் ரூம் நோக்கி சென்றான் .



 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 42
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top