logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
410
கோர்ட்டில் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துக்கொண்டு ஜெய் மீனு இருவரும் வெளியில் வர... அங்கே தயங்கியபடியே ரியா அவர்கள் பின்னால் வந்தாள்.

அவளுக்கு ஜெய்யிடமும் , மீனுவிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றியது . அனால் அவர்களிடம் சென்று பேச தயக்கம் . அவள் தயங்கி நிற்பதை பார்த்து அவள் அருகில் வந்த கமல் "ஹே.. பொண்டாட்டி உன் தங்கச்சிகிட்டேயும், அவங்க புருஷன்கிட்டேயும் பேசணும்னு வந்துட்டு இப்போ இப்படி எதுவும் பேசாம நின்னுட்டு இருக்க... " என்றான் .

"இல்லை கமல் நான் எவ்ளோ பெரிய விஷயத்தை எல்லாம் செய்திருக்கேன். அதை எல்லாம் செய்துட்டு இப்போ எப்படி அவங்க கிட்டே போய் பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு அவங்கள பேஷ் பண்ண " என்றாள் தயங்கிக்கொண்டே..

" ஒரு ஆறு மாசத்துக்கு முன்னே நான் பார்த்த ரியாவா இது . என்னால நமபவே முடியலையே ... என் செல்லக்குட்டி இவ்ளோ நல்லவளா மாறிட்டியா நீ .. " என்று ஆச்சர்யமாக அவளை பார்த்தான் கமல் .

அவனை செல்லமாக முரைத்த ரியா " எல்லாம் உன்னால தான் டா ராஸ்கல் . அவளோ கோபக்காரியா இருந்த என் பின்னாடி குட்டி போட்ட நாய் மாதிரி சுத்தி சுத்தி வந்து என்னை உன் வலையில் விழா வெச்சிட்டே... அப்பறோம் நான் இப்டி இருக்காம வேற எப்படி இருக்கறது சொல்லு..." என்றாள்.

" இந்த நாய்க்குட்டி இன்னமும் உன் பின்னாடி சுத்திகிட்டு தான் இருக்கு . நீ எப்போ இந்த நாய் குட்டிக்கு விருந்து வைக்க போற.. அதுக்காக இந்த கமல் பல கமல் படம் பார்த்து லிப் லாக் கிச் பண்ண எல்லாம் கத்து வெச்சிருக்கேன். கத்துகிட்ட வித்தையை எல்லாம் உன்கிட்டே ஒரு நாள் கட்டணும்னு பாக்குறேன் நீ என்னை கிட்டயே விட மாட்டெங்குறியே,.." என்று அவளிடம் குழைந்தவன் .

ரியாவின் அருகில் நெருங்கி வந்து "இந்த சேலையில் நீ எப்படி சும்மா கும்முனு இருக்கே தெரியுமா ... நீ மட்டும் கொஞ்சம் எனக்காக இறங்கி வந்தா நான் உன்னை அப்டியே தள்ளிட்டு போய்... பகல்லையே முதல் ராத்திரி கொண்டாடிடுவேன் . உனக்கு ஓகேவா "என்று அவள் இடையில் கைகொடுத்து தன் பக்கம் இழுத்து அணைத்தான்.

" ஐயோ கமல் என்ன இது ... விடு என்னை . இது கோர்ட் எவ்ளோ பேர் இங்கே இருகாங்க விடு " என்று தன் இடையில் இருந்த கமல் கையை பிரித்துவிட்டவள் .

" நீ இப்படி எல்லாம் அவசர படாதே ப்ளீஸ்.." என்றாள் அவனிடம் மட்டும் காட்டும் இந்த அமைதியான முகத்தை காட்டி ரியா கெஞ்சினாள்.

"சரி ஓகே நீ தானே சொன்னே இந்த டிவேர்ஸ் வாங்கின கையோட என்கூட என் வீட்டுக்கு என்கூட வாழ வரேன்னு சொல்லி இருக்க.. சோ நாம முதல்ல ஜெய் , மீனு கிட்டே பொய் பேசலாம் அதுக்கு பிறகு என்கூட என் பொண்டாட்டிய என் வீட்டுக்கு போகலாம் " என்றான்.

"அப்போ என் அம்மா அப்பா... அவங்க எல்லாம் நாம் கோர்ட்டுக்கு கிளம்பி வந்த கொஞ்ச நேரத்துல என் வீட்டுக்கு போயாச்சு . நீ மட்டும் தான் பாக்கி.. என்ன பொண்டாட்டி ரெடியா ?" என்றான் .

ரியாவும் சேலை தலைப்பை தன் விரல்களில் சுருட்டிக்கொண்டே.. "ம்ம்ம்... போகலாம் " என்றாள்.

"சரி சரி முதல்ல இவங்க ரெண்டு பேரையும் சமாளிச்சிட்டு வா... அதுக்கு பிறகு என்வீட்டுல இருக்க ஒரு பெரிய ஆளை நீ சமாளிக்கும் . எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோ... ரியா . என் அண்ணி உன்னை விட கோபக்காரங்களா இருந்தவங்க... உன்னை விட திமிர் பிடிச்சு தெரிஞ்சவங்க ... கிட்டதட்ட உன்னோட லைஃபும் அவங்களோட லைஃபும் ஒன்னு போல தான் இருக்கும் " என்றான்.

"யாரு உன் அன்னை சங்கவி பத்தி தானே சொல்றே நீ ... அவளை பத்தி நான் ஏற்கனவே தெரிஞ்சு வெச்சிட்டேன். மேகமோ அவள் கதையில் அவங்க வில்லியா வந்து எதனை பேர் கண்ணுல விரலை விட்டு ஆட்டி இருக்காங்கனு எனக்கு தெரியும். குறிப்பா ... 200வது எபிசோடில் அவங்க பண்ணின அளப்பறையில் ரீடேர்ஸ் மொத்தமும் பொங்கி எழுந்தது எனக்கு நல்லாவே தெரியும் நீ கவலை படாதே.. அவளை நான் பார்த்துகிறேன் "என்று பழைய ரியாவின் சாயல் லேசாக வெளியே எட்டி பார்க்க...

"ஐயோ !! கபிலா... உன் பொண்டாட்டி சங்கவியை , என் பொண்டாட்டி ரியா சமாளிக்க போராளமா ... பாக்கலாம் என்ன நடக்குதுன்னு " என்று தன் அண்ணன் கபிலனை நினைத்து வருத்தப்பட்டான் கமல் .

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நின்று இருந்ததை பார்த்துவிட்டு அவர்களிடம் வந்த மீனு ஜெய் இருவரையும் பார்த்து ரியாவிற்கு சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது . அதை காட்டிக்கொள்ளாமல் மீனுவை பார்த்ததும் அவள் கையை பிடித்துக்கொண்டு "மீனு என்னை மன்னிச்சிரு டி... உனக்கு நான் எவ்ளோ கெடுதல் பண்ணிருக்கேன். உன்னை ஜெய் கூட சேர விடக்கூடாதுனு கடத்தி வெச்சு உன்னை நிறைய கொடுமை படுத்தி இருக்கேன் . ஜெய்யையும் நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் நான் செய்த த்ரோகத்த்தை கொடுமையை எல்லாம் தயவு செய்து மறந்திருங்க . நா செய்த தப்புக்கு உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன் " என்று குரல் தழுதழுக்க.. கண்களில் கண்ணீர் வழிய ரியா தன் தவறை உணர்ந்து ஜெய், மீனு இருவரிடமும் மன்னிப்பு கேட்டாள் .

தாங்கள் இதற்கு முன்பு பார்த்த ரியாவா இது என்பது போல ஜெய் , மீனு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அதை கவனித்த கமல் ஜெய் இடம் வந்தவன் " என்ன சகல ஆச்சர்யமா இருக்கா ..." என்றான்.

"ஆமா கமல் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை .நிஜமாவே இது ரியா தானா!! " என்றான் ஜெய்

"ஆமா ... ஆமா.. அதே ரியா தான் ஆனா நீங்க பார்த்த ரியா போய் . இதோ உங்க முன்னாடி நிக்குறவ தான் என்னோட ரியா . அவளோட ஈகோ.. கோபம், பழிவாகுற எண்ணம் இது எதுவும் இல்லாம . தன்னை முழுசா மாத்திக்கிட்டு மற்றவர்களை பத்தியும் யோசிச்சு அவங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்குற என்னோட ரியா " என்றான் பெருமையாக கமல்.

" கமல் என்ன இது நீ சொல்றது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை " என்று அவன் தோளில் அடித்த ரியா மீனுவிடம் திரும்பி " என்னை மன்னிச்சிட்டேன்னு மனசார ஒரு வார்த்தை சொல்லு மீனு போதும் எனக்கு . அப்போ தான் என்னால நிம்மதியா என்னோட வாழ்க்கையை கமல் கூட எந்த உறுத்தலும் இல்லாம சந்தோசமா வலா ஆரம்பிக்க முடியும் " என்றாள் .

"என்ன ரியா சொல்றே... அப்போ நீயும் , கமழும்.. இன்னமும்..." என்று மீனு இருவரையும் மாறி மாறி பார்க்க...

" ஆமா மீனு எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை ரியாவை நீங்க மன்னிக்குறதுல தான் இருக்கு. தயவு செய்து இவளை மன்னிச்சிருங்க .. இல்லை என்கூட என் வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிடுவா . கல்யாணம் ஆனா நாளில் இருந்து அவங்க அம்மா வீட்டுல தான் இருக்கா. டிவேர்ஸ் முடிஞ்சு உங்க ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு அதுக்கு பிறகு தான் என்கூட என் வீட்டுக்கு என்னோட மனைவியா வருவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா . அதனால ரெண்டு பேரும் என் பொண்டாட்டியை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ் " என்று ரியாவிற்க்ககா கமலும் கெஞ்ச...

அவன் நிற்கும் தோரணையும் பேசியதில் இருந்த குறும்பையும் பார்த்து சிரித்த மீனுவும், ஜெய்யும் " நாங்க உன்னை மன்னிச்சுட்டோம் போதுமா .." என்று ஒரு சேர கூற..

ரியாவிற்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது . அவள் முகத்தில் தெரிந்த நிம்மதியை பார்த்து கமலும் சந்தோஷமடைந்தவன் . " சரி சரி... நல்ல நேரம் முடியறதுக்குள்ள என் பொண்டாட்டியை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் மற்றதை அப்பறோம் பார்க்கலாம் " என்று ரியாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கமல்.

"கமல் இரு நான் இன்னும் சரியா மீனு கிட்டே பேசல... " என்று அவனை நிறுத்த... "இன்னோரு நாள் உன் தங்கச்சி கிட்டே ஆற அமர உக்காந்து பேசு இப்போ என் கூட வா.. " என்று அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் .

அவர்கள் இருவரும் சந்தோசமாக செல்வதை பார்த்து ஜெய் மீனுவிடம் திரும்பி "இவ்ளோ சீக்கிரம் பிரச்சனை முடிஞ்சது நினைச்சா எனக்கு சந்தோசமா இருக்கு மீனு " என்றான் .

ஆமாம் என்று மீனு தலையை ஆட்ட... "சரி வா ஜூஸ் குடிச்சிட்டு அப்பறோம் வீட்டுக்கு போகலாம் "என்று மீனுவை கைபிடித்து அழைத்து சென்றான்

 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 56
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top