Home Uncategorizedஎனை மாயம் செய்யும் ராட்சசன் 4

எனை மாயம் செய்யும் ராட்சசன் 4

by Layas Tamil Novel
207 views

EPISODE 4

மீனுவின் கிளாஸ் முடிந்தது விக்ரம் மைதிலி இடம் சொல்லிக்கொண்டு தன் வீட்டிற்கு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் பொழுதே பூஜாவும் நிவியும் சிரிக்கும் சத்தம் வாசல் வரை கேட்டது.

ரெண்டு பேரும் சேர்ந்துட்டார்களா இனி வீடு ரெண்டு படப் போகுது என அவர்களை நினைத்து  சிரித்தபடி உள்ளே வந்தால் மீனு.

தன் மகள் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் வருவதை பார்த்த குரு மாமா மீனு வந்துட்டியா எப்படி இருந்தது உன்னோட ஃபர்ஸ்ட் டே காலேஜ் என்று கேட்டார்.

சூப்பர் பா என்னோட பழைய ஃப்ரெண்ட்ஸ் யாருமே என் கூட படிக்க வரலையேன்னு நான் ரொம்ப வருத்தத்தில் இருந்தேன் ஆனா என்னோட கிளாஸ்ல நியூவா இரண்டு பேர் எனக்கு பிரண்டா இருக்காங்க விக்ரம் மைதிலி என்று ஒரு நாள் அவங்கள ரெண்டு பேரையும் நான் இங்கே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் என்றால் மீனு.

கூட்டிட்டு வா மீனு ஒரு நாளைக்கு தடபுடல சமைச்சு போட்டு அவங்களுக்கு விருந்து வைத்துவிடலாம் என்று படி கையில் காபியுடன் வந்த ஜனனி என்னிடம் திரும்பி இன்னைக்கு உங்க ஃபர்ஸ்ட் டைல பஸ்ட் காலேஜ்ல யாரையும் புதுசா மீட் பண்ணவில்லையா? யார் கூடயும் பிரண்ட்ஷிப் வச்சுக்கலையா? என்று கேட்டார்.

ஓ…அதெல்லாம் மா இந்த காலேஜ்ல எங்களுக்கு சீனியரா ரெண்டு பேர் இருக்காங்க ஒருத்தர் சந்தோஷ் இன்னொருத்தவங்க குமார் அவங்க ரெண்டு பேரும் தான் எங்களோட பிரண்ட்ஸ் என்றால் நிவி.

நிவி சந்தோஷ் பெயரைச் சொன்னதும் உனக்கு ஏதாவது அறிவு இருக்கா அவங்க ரெண்டு பேரையும் எதுக்குடி என் வீட்ல இன்டர்வியூஸ் பண்ணி வைக்கிற என்றாள்.

எப்படியும் ஒரு நாள் சந்தோஷப்பத்தி இவங்க கிட்ட நீ சொல்லித்தான் ஆகணும் அதை ஏன் நாம் நல்லவிதமா சொல்லக்கூடாது என்றாள்.

திஸ் இஸ் டூ மச் நிவி என்றால் பூஜா.

என்னத்த டூ மச் நீ கொஞ்சம் பேசாம இரு என்றவள் திரும்பி ஜனனியிடம்  இருந்த காபியை எடுத்துக்கொள்ள.. ” ஏண்டி ஒரு பொண்ணு பிரண்டு கூடவாடி உங்களுக்கு கிடைக்கல போனதும் பசங்களத்தான் கண்டுபிடித்து வைத்திருப்பீர்களா? என்ன பொண்ணுங்களோ நீங்க ரெண்டு பேரும்” என தலையில் அடித்துக் கொண்டார்.

அம்மா நாங்க பொண்ணு பெண்ணுங்களை பிடிக்கவில்லை என்று யார் சொன்னது இன்னும் அக்கா அவங்க பிரண்ட்ஸ் கூட்டிட்டு வரும்போது நாங்களும் என்னோட பிரண்ட்ஸ கூட்டிட்டு வரோம் அப்ப தெரியும் உங்களுக்கு எங்களை பத்தி என்றாள் நிவி .

பிறகு அனைவரிடம் சொல்லிக்கொண்டே நிவி அங்கிருந்து கிளம்பினாள்.

மா நைட் டின்னருக்கு என்ன என்றால் மீனு வேற என்னடி காலைல வச்ச சப்பாத்தி குருமா இருக்கு அதை சூடு பண்ணி வச்சிருக்கேன் மாவு மட்டும் உருட்டி சப்பாத்தி போட்டா போதும் என்றார்.

பீமா நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் என்று விட்டு மீண்டும் தன்னரைக்குச் செல்ல…

என்னங்க கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும் நீங்க வெளியே போயிட்டு வரும்போது அப்படியே நான் எழுதிக் கொடுக்கிறது வாங்கிட்டு வந்துட்றீங்களா என்றார் ஜனனி.

நான் வெளியே எங்கேயும் போகலையே மா என்றார் குரு.

அப்போ கிடைக்காது போயிட்டு வந்து கொடுங்களேன் காலையில அரக்க பறக்க வேலை பார்த்துட்டு இருக்கிறப்போ அது இல்லை இது இல்லைன்னு டென்ஷன் ஆகும் என்றார். 

சரிமா நீ லிஸ்ட் எழுதி கொடு நான் போயிட்டு வரேன் என்று தன் சட்டை மாட்ட கிளம்ப அப்பா நானும் உன் கூட வரேன் ப்ளீஸ் என்றால் பூஜா.

நீ எதுக்குமா இப்போ தானே காலேஜ்ல இருந்து வந்த உனக்கு டயர்டா இருக்கும் நீ ரெஸ்ட் எடு அப்பா போய் வாங்கிட்டு வந்துட்டேன் என்றார் குரு.

ஏங்க நீங்க வேண்டான்னு சொன்னா அவ என்ன விடவா போற கூட்டிட்டு போயிட்டு வாங்க அவ அங்க வந்து ஏதாவது அவளுக்கு வேணும்கிறத வாங்கிபா அதுக்காக தான் உங்க கூட வரேன்னு அடம் பிடிக்கிறா என்று ஜனனி தன் மகளின் மனதில் இருந்ததை அப்பட்டமாக படித்துக் கூற.

அம்மா சூப்பர் மா நீ…நான் என்ன நெனச்சேனோ அத அப்படியே சொல்லிட்ட என்றவள் அப்பா சீக்கிரம் போய் சட்டையை மாட்டிட்டு வா போகலாம் என்றாள்.

குரு சிரித்துக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டு ஜனனியிடம் மளிகை லிஸ்டையும் பையையும் வாங்கிவிட்டு தன்மகள் பூஜாவை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார் .

இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் மொட்டை மாடியில் அமர்ந்து இருக்க… குருவிற்கு அவர் அண்ணனிடம் இருந்து போன் வந்தது.

அதை பார்த்தது ” இதோ என்னடா பொழுது இன்னும் போகலையே உங்க பாசமான அண்ணன் போனை காணோமேன்னு நினைச்சேன். நினைச்சு முடிக்கல கால் பண்ணிட்டாரு” என்று குருவையும் அவர் அண்ணன் பரமன் இருவருக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை  பற்றி பேசி கிண்டல் செய்தார் ஜனனி.

என் அண்ணனையும் பத்தி பேசலைன்னா உனக்கு தூக்கமே வராது என்று குரு ஜனனியை கடிந்து விட்டு போனை அட்டென்ட் செய்தார்.

அண்ணா சொல்லுங்க எப்படி இருக்கீங்க என்றார் குரு.

நல்லா இருக்கேன் குரு நீ எப்படி இருக்க என்றார் பரமன்.

இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததும்  “ஹே மீனு உன் அப்பாப்பா உன் அப்பாவ பார்த்தியா நேத்து நைட்டு தானே ரெண்டு பேரும் பேசினாங்க.என்னமோ பேசி ரொம்ப நாள் ஆன மாதிரி இரண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிறத” என்று சொல்லி ஜனனி சிரிக்க.

” மா சும்மா இருங்க எப்ப பாரு  அப்பாவை ஓட்டுறது உங்களுக்கு வேலையா போச்சு” என்று மீனும் குருவிற்கு சப்போர்ட் செய்தாள்.

“ஷ்…ரெண்டு பேரும் பேசாம இருங்க ஏதோ முக்கியமான விஷயம் பேச ஆரம்பிச்சிருக்காங்க” என்றால் பூஜா அவர்கள் இருவரையும் இடைமறித்து.

அவள் சொன்னதும் இருவரும் அமைதியாகி விட்டு குரு பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.

” என்ன அண்ணா சொல்றீங்க திடீர்னு நம்ம ரியாவுக்கு கல்யாணம்னு சொல்றீங்க.. அவ இப்பதானே படிச்சு முடிச்சா அதுக்குள்ள கல்யாணமா? ” என்றார் குரு.

“ஆமா பா…தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையால இந்த கல்யாணத்தை பண்ண வேண்டியதா போயிடுச்சு. நீ நேர்ல கிளம்பி வா நான் உனக்கு மத்தத விவரமா சொல்றேன் என்றார் பரமன் சற்று வருத்தம் கலந்த குரலில்.

அண்ணா நான் ஏன் உங்க குரல் ரொம்ப சோகமா இருக்கு அப்போ நம்ம ரியாவோட கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்ல அப்படியா என்றார் குரு.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல குரு நீ காலைல நேரமே கிளம்பி வந்துடு…புதன்கிழமை கல்யாணம் ” என்றார்.

“என்ன அண்ணா சொல்றிங்க..ரியா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ” என்றார் அதிர்ச்சியாக.

குரு தன் அண்ணனுடன் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த ஜனனியும், மற்றவர்களும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள… போன் பேசிவிட்டு வைத்த குரு தன் குடும்பத்திடம் விபரம் சொன்னார்.

“என்னங்க சொல்றிங்க நம்ம ரியாவுக்கு அதுக்குள்ள கல்யாணமா? அதுவும் இன்னும் ஒருநாள்ளயா? மாப்பிள்ளை எந்த ஊரு? என்ன பண்ணிட்டு இருக்காரு? எப்போ மாப்பிளை பாத்தாங்க நம்மகிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல. நேத்து நைட் கூட பேசினாரு அப்போ கூட எதும் சொல்லையே ” என்று நம்ப முடியாமல் கேட்டார். 

என்னனு தெரில ஜனனி நாளைக்கு நேருல போய் தான் கேட்கணும் என்றார் குரு.

“சரிங்க அப்போ நான் போய் ரெண்டு நாளைக்கு தேவையான ட்ரெஸ்ஸ எடுத்து வைக்குறேன் என்றுவிட்டு ஏய் வாங்க ரெண்டு பேரும் நீங்களும் உங்களுக்கு வேணும்னேக்குற ட்ரெஸ்ஸய் எடுத்துவையுங்க வாங்க… என்று இருவரையும் அழைத்துசென்றார்.

மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு தன் அண்ணனின் குரலில் ஏதோவித்யாசம் இருப்பதை உணர்ந்த குரு “ஏன்? இந்த திடீர் கல்யாணம் ” என்று யோசனையில் மூழ்கினார்.

நாளைக்கு ஊருக்கு செல்லும் குருவின் குடும்பத்திற்கு காத்திருக்க போகும் அதிர்ச்சி என்ன? 

தன் அண்ணன் பரமனின் மகள் ரியா திருமணம் இவ்வளவு அவசரமாக நடக்க என்ன காரணம். 

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured