logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
காலையில் கண்விழிக்கையில் மீனு மிகவும் சோர்வாக இருந்தாள். இரவெல்லாம் அவளை விடாமல் இம்ஸை செய்த்து அதிகாலையில் தன தூங்கவிட்டு இருந்தான் ஜெய் .

காலையில் அவள் போன் அலாரம் அடித்துதான் எழுந்தாள் மீனு எழுந்தவள் அலாரத்தை ஆப் செய்தவள் தன் மேல் போர்த்தி இருந்த போர்வை முழுவதையும் எடுத்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து நேராக பாத்ரூம் சென்றாள்.

பைப்பை திறந்துவிட்டு ஷவருக்கு அடியில் நின்றவள் உடலில் தண்ணீர் படவும் அங்கங்கே அவள் உடலில் ஜெய் ஏற்படுத்திய பற்தடங்களும், கண்ணிப் போய் இருந்த இடங்களையும் பார்த்தாள்.

நேற்று இரவு ஜெய் செய்த கட்டில் போரில் கிடைத்த காயங்களும் , தழும்புகளும் இது அதை நினைக்கையில் ஜெய் தன் மீது உரிமையும், ஆதிக்கமும் நடத்தியதை நினைக்கையில் மலைப்பாக இருந்தது. தன்னிடம் அவனை நிரூபிக்கிறேன் என்று நேற்று இரவு முழுவதும் அவளை பாடாய் படுத்துவிட்டான்.

அவன் தனக்கானவன் என்று அவன் நிலையை மீனுவிற்கு உணர்த்தி இருந்தாலும்

ரியாவுடன் அவன் திருமணம் செய்திருக்கும் விஷயம் இன்னமும் அவள் மனதை அரித்துக்கொண்டு இருந்தது . பழைய நினைவுகள் எதுவும் நியாபகத்தில் இல்லாத நிலையில் எப்படி ஜெய் தனக்கு தன் நிலையினை உயர்த்தப்போகிறான்.

அவனுக்கு அச்சிடேன்ட் ஆனந்திற்கு முன்பு என்ன நடந்திருக்கும் . தான் அவனோடு ஒன்றாக இருந்த நினைவுகள் அவனுக்கு நியாபகம் இருந்திருக்குமா ? அப்படி இருந்திருந்தால் ஜெய் எப்படி தன்னை பற்றிய நினைவுகளை மறந்துவிட்டு ரியாவை பதிவு திருமணம் செய்து இருப்பான் என்று தோன்றியது அவளுக்கு... இந்த யோசனையினூடே கிளம்பி கீழே வந்தவள் விழிகள் ஜெய்யை தேடியது .

ஆனால் அவன் அங்கு இல்லை அதற்குள் ஆபீஸ் சென்று இருப்பானா என்று யோசனையில் அவள் வர அவள் வீடு பணிப்பெண் மீனுவிடம் வந்து ஒரு கவரை நீட்டி "சார் இந்த கவர உங்க கிட்டே கொடுக்க சொன்னாரு மா..." என்றவர் " பாப்பா சாப்பாடு ரெடி ஆஹ் இருக்கு . உங்களை சாப்பிட வெச்சதுக்கு பிறகு தான் காலேஜ் போகவே விடணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காரு .நான் பொய் நீங்க சாப்பிட எடுத்துவைக்குறேன் பாப்பா.." என்றவர் அங்கிருந்து சென்றுவிட...

தன் உடல் நலன் மீது எப்போதும் அக்கறை கொள்ளும் தன் கனவை நினைத்து பெருமையாக இருந்தது. அவனை பற்றி நினைத்துகொன்டே அவளுக்காக கொடுத்துவிட்டு சென்ற அந்த கவரை பிரித்துப் பார்த்தாள் மீனு .

அதில் ஜெய் அவன் கைப்பட ஒரு கடிதத்தை மீனுவிற்கு எழுதி இருந்தான். "என்ன டி பொண்டாட்டி ... எழுந்து வந்துட்டியா ? உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குதா? " என்று எழுதி இருந்ததை படித்ததும் அவள் முகம் புன்னகைத்தது .

"வலிக்காம இருக்குமா டா புருசா .. நீயும் உன் பீம் பாயும் செய்த வேளையில் கட்டிலை விட்டு என்னால் எழுந்து நடக்கவே முடையல . " என்று அவனிடம் தன் மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டவள் .

மேலும் அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள் . "சாரி சின்னக் குட்டி ... நான் உன்னை ரொம்ப தொல்லை பண்ணிட்டேன் " என்று எழுதி இருக்க அந்த வரிகளை படித்ததும் மீனுவின் முகம் சிவந்துவிட்டது ... பீம் பாய் ... என்று அவநை திட்டியவள் கீழ் உதட்டை கடித்துக்கொண்டவள் மேலும் படிக்கலானாள் .

"மீனு உன்னை உன் அம்மா வீட்டில் இருக்க விடாமல் இங்கே கூடி வந்ததற்கு உன்கிட்டே முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன். இது தான் உன் வீடு நீ இங்கே தான் இருக்கனும் . இந்த வீட்டில் தான் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. நீ எனக்கு சொந்தமானவ ... நான் உன்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் அதை நீ நம்பனும் " என்று எழுதி இருந்ததை படித்தவள் .

"ஆனா அந்த ரியாவை ரெஜிஸ்டர் மேரேஜ் பங்கிட்டு அவகிட்டே என்னை விட்டு கொடுத்துட்டீங்களே ஜெய் " என்று நினைத்தவள் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது . அதை துடைத்துக்கொண்டவள் மேலும் படிக்க ஆரம்பித்தாள் .

"உடனே ரியாவை நான் ரெஜிஸ்டர் மேரேஜ் பணமிக்கிட்டு அவகிட்டே உன்னை விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்காதே..." என்று மீனு என்ன யோசித்திருப்பாள் என்று அதற்கு சரியாக பதிலும் கூறி இருந்தான் ஜெய்.

மேலும் படிக்க துவங்கினாள். "கண்டிப்பா நான் மனசறிஞ்சு உனக்கு துரோகம் செய்த்திருக்க மாட்டேன் மீனு . என்னை நம்பனும் நீ ... கூடிய சீக்கிரத்துல நான் அதை நிரூபிப்பேன் . அந்த ரியா சொன்னது எல்லாமே பொய்யின்னு நான் உனக்கு நிரூபிச்சு காட்டுறேன். அவ முகத்துல கரியை பூசுறேன்" என்று எழுதி இருந்தான்.

பின் .., " மீனு நான் ஒரு அவசர வேலையா லண்டன் போறேன் . அங்கே இருக்க நம்ம கான்ஸ்டருக்ஷன் சைட்டில் பிரச்சனையினு நேத்தே எனக்கு கால் வந்திருச்சு.. இந்த ரியா பண்ணின களேபரத்தில் நான் இதை மறந்தே போய்ட்டேன் . சாரி டி... நான் ஏர்லி மோர்னிங் பிலைட்டில் லண்டன் கிளம்பிட்டேன் . நீ இந்த லெட்டரை படிச்சிட்டு இருக்க அப்போ நான் பறந்தது இருப்பேன் லண்டனுக்கு.." என்று எழுதி இருக்க...

"அப்போ ஜெய் இங்கே இல்லையா? இந்தியாவிலேயே இல்லையா ?" என்று ஷாக்கானாள் மீனு .

"என்ன டி நான் லண்டன் கிளம்பிட்டேன்னு சொன்னதும் ஷாக் ஆகிட்டியா.. ஒரு 1 வீக் பொறுத்துக்கோ டி சின்னக்குட்டி சீக்கிரமே லண்டன்ல வேலையை முடிச்சிட்டு பரந்து வந்துறோம் நானும்... அப்பறோம் உன்னோட... பீம் பாயும்" என்று எழுதியதை பார்த்து பற்கள் தெரிய சிரித்தவள் மேலும் படிக்கலானாள் .

"அதுவரை நீ காலேஜ் போய்ட்டு வா ... உன் அம்மாவீட்டுக்கு போய்ட்டு வா ... ஆனா அங்கேயே இருந்துடாத நைட் இங்கே வந்திரு... நான் டெய்லி நைட் உனக்கு வீடியோ கால் பண்ணி செக் பண்ணுவேன் நீங எங்கே இருக்கேன்னு ஓக்கவா... அப்பறோம் உன் கூட பூஜாவையோ... மிருதுளாவையோ துணைக்கு கூப்பிட்டுக்கோ.. செக்யூரிட்டி கிட்டே சொல்லி இருக்கேன் புதுசா நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் விடக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்கேன் . முக்கியமா ரியாவும் அவ அம்மாவும் அங்கே வந்தா அவங்களை வாசலோட திருப்பி அனுப்ப சொல்லி இருக்கேன் . நான் வரவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பணிக்கோ சின்னக்குட்டி வந்ததும் அங்கே இருக்க எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு உன்னை ஹனிமூன் கூட்டிட்டு போறேன் ஓக்கவா ... " என்று கடிதம் முடிந்து இருந்தது .

அதை படித்தவள் ஜெய் நேரில் இருப்பதாக நினைத்து அவன் சொன்னதற்கு சரி என்று தலையை ஆட்டினாள்.

அவன் அவளுக்காக எழுதி இருந்த கடிதத்தில் தன் மீது இருந்த அக்கறையையும், அதையும் தாண்டி காதலையும் மீனுவால் உணர முடிந்தது . அவள் மனம் ஜெய் அருகில் இல்லாதது ஏக்கமாக இருந்தாலும். அவனுடைய பூசினஸையும் பார்த்தாக வேண்டுமே என்று அவளுக்கு புரிந்தது .

கடிதத்தை மடித்து தன் காலேஜ் பேகில் வைத்தவள் சென்று சாப்பிட்டு முடித்து திரிவரை வர சொல்லி காரில் காலேஜிற்கு கிளம்பினாள்.

...

இங்கே ரியாவை குருவின் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு கூடி வந்து இருந்தார் பரமன் . அவள் இங்கே வரமறுத்தால் அவளுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் அனைத்தையும் ரியாவிற்கோ... அவர் மனைவி சாந்தாவுக்கோ இல்லாமல் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி் வைத்து விடுவதாக பிளாக் மெயில் செய்த பின் தான் இருவரும் அவருடன் இங்கு தங்கள் வீட்டிற்கு வரவே சம்மதித்தனர்.

வீட்டிற்குள் வந்ததும் பரமன் அவர் அறைக்கு சென்றுவிட... ரியாவும் அவள் அறைக்கு சென்றாள். அவளோடு சென்ற சாந்தா "ச்சே...இந்த மனுஷனோட ஒரே அக்கப்போறா இருக்கு... இவரு மட்டும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருந்திருந்தா இந்த நேரம் அந்த மீனுவையும் அவ குடும்பத்தையும் அந்த வீட்டை விட்டே துரத்தி அடிச்சிட்டு என் பொண்ணு அதே வீட்டுல ராணி மாதிரி வாழ ஆரம்பிச்சிருப்பா... இவரு என்னவோ உலகத்துலயே நியாயமானவர் மாதிரி அவர் தம்பி போனுக்கு வக்காலத்து வாங்கிட்டு என் போனோட வாழ்க்கையை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டாரு.." என்று புலம்பினார் .

அவர் புலம்புவதை எல்லாம் கேட்டுக்கொண்டு உள்ளே வந்த ரியா தன் அறைக்குள் நுழைந்ததும் நேராக போய் கட்டிலில் படுத்துக்கொண்டாள் .

"ஏன் டி நான் உனக்காக தான் பொலம்பிட்டு வரேன் . நீ என்னடான்னா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லேங்குற மாதிரி இல்ல பொய் படுத்துகிட்டே ..." என்றார்.

"மம்மி... ஏன் இப்படி வீணா டென்ஷன் ஆகுறீங்க... நாம நினைச்சது எல்லாம் கண்டிப்பா நடக்கும் கவலை படாதீங்க... " என்றாள் .

"என்ன டி சொல்ற... நீ சொன்ன மாதிரி நடக்குமா !" என்றார் ஆர்வமாக .

"ஆமாம் மம்மி ... ஏன்னா என் கிட்டே வலுவான ஆதாரம் இருக்கு.. " என்று தன் பாக்கெட்டில் வைத்து இருந்த ஜெய்யும் , ரியாவும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட பத்திரத்தை எடுத்து சாந்தாவின் முகத்தின் முன்பாக ஆட்டிக் காட்டினாள் .

அதை பார்த்தவர் அவள் அறைக்கதவை மறுமுறை நன்றாக சாற்றி இருக்கிறதா என்று சரிபார்த்தவர் . "ஆமா ரியா நானே கேட்கணும்னு நினைச்சேன் அங்கே எல்லாரும் நம்மளை சுத்தி இருந்ததில் உன்கிட்டே பேச முடியலை . நீயும் அந்த ஜெய்யும் உண்மையாவே கல்யாணம் செய்துக்கிட்டிங்களா ?" என்றார்.

"ஏன் மம்மி நான் சொன்னதை யாருமே நம்பலைன்னா ஓகே தான் . ஆனா நீங்களுமா நம்பலை " என்றாள் ரியா .

"இல்லை டி.. நீ சொன்னா மாதிரி அவனை ஏற்கனவே கல்யாணம் பண்ணி இருந்தா என்கிட்டே முன்னாடியே சொல்லி இருப்பியே .. ஆனா எனக்கே நீ அந்த ஜெய் கிட்டே விஷயத்தை சொல்லும்போது தானே தெரியும் . அதான் எனக்கு சந்தேகமா இருக்கு " என்றார் சாந்தா.

அவர் சொல்வதை கேட்டு வன்மமாக சிரித்தவள் "மம்மி நான் எதையும் சும்மா சொல்லமாட்டேன்ன்னு உங்களுக்கே தெரியும். பொறுமையா இருங்க நான் நினைச்சதை நடத்தி காட்டுறேன் " என்றாள்.
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 45
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top