logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
ஜெய் லண்டன் சென்று 4 நாட்கள் ஆகிவிட்டது . காலையில் காலேஜ் சென்றுவிட்டு மாலை தன் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு இரவானால் வீட்டிற்கு வந்துவிடுவாள் மீனு.

அவள் வரும்போதே மிருதுளாவும் மீனுவின் வீட்டிற்கு வந்துவிடுவாள் இரவு அவளோடு தாங்கிக்கொள்ள...

இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு சாப்பிட்டு முடித்ததும் . மீனு ஜெய் உடன் வீடியோ காலில் பேசுவதற்காக கார்டானுக்கு சென்றுவிடுவாள். சரியாக மணி 10 அடிக்கும்போது ஜெய் வீடியோ கால் செய்துவிடுவான் .

இன்றும் அவள் கார்டானுக்குள் நுழையவும் ஜெய் கால் செய்யவும் சரியாக இருந்தது . சிரித்தபடி காலை அட்டென்ட் செய்த மீனு வீடியோ காலில் தெரிந்தவனை பார்த்தாள் .

வழக்கமாக தன் ரூமிற்கு வந்து கால் செய்யும் ஜெய் இன்று வெளியில் ஏதோ பார்ட்டியில் இருந்து கால் செய்து இருந்தான்.

அதை பார்த்ததும் மீனு "என்ன ஜெய் வெளியே வந்து இருக்கீங்க போல... அதுவும் ஏதோ பார்ட்டிக்கு ... " என்று புருவம் உயர்த்தி அவனை பார்த்தாள்.

அதை பார்த்தவன் சிரித்துக்கொண்டே "ஆமா மீனு கிளைன்ட் ஒருத்தர் மீட் பங்கிட்டு ரூமுக்கு தான் கிளம்பினேன் . ஆனா அவர் வற்புறுத்தி என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டார் " என்றான் கையில் மதுக்கோப்பையை வைத்துக்கொண்டே ...

அவன் கையில் இருந்த கிளாஸை பார்த்த மீனு " ஜெய் நீங்க ட்ரின்க் பண்ணுவிங்களா? " என்றாள் ஆச்சர்யமாக.

"அப்பாவும் இல்லை மீனு இந்த மாதிரி யாரும் கிளைண்ட்ஸை மீட் பண்ற அப்போ அவங்க இன்சிஸ்ட பண்ணினா குடிப்பேன் " என்றான் கையில் இருந்த கிளாஸை பார்த்தபடி .

"ஆமா ... ஆமா ... என்கூட முதல் முறையா ஹோட்டலில் இருந்த அப்போ கூட நீங்க ரொம்ப அதிகமா ட்ரின்க் பண்ணி இருந்திங்க... உங்க ரூமில் ஒரு பெரிய விஸ்கி பாட்டில் இருந்துச்சு ... நான் பார்த்தேன் " என்றாள்.

அவர்களுடைய முதல் முறை என்றதுமே மீனு நினைவில் வைத்து இருக்கும் தங்களின் முதல் சந்திப்பை தான் இன்னமும் அறிந்திருக்கவில்லை என்று ஜெய்யிற்கு வருத்தமாக இருந்தது. இருந்தும் அதை காட்டிக்கொள்ளாமல் அவளிடம் பேசினான்.

"நம்மோட பழைய நினைவுகள் எனக்கு திரும்ப வரணும்னு தவிப்பா இருக்கு மீனு... நீ மட்டுமே உணர்ந்து அனுபவிக்குற அந்த பீல் ... எனக்கும் வேணும் " என்றான்.

அதை கெட்டவளுக்கு வருத்தமாக தான் இருந்தது " அதுக்கு உங்க பழைய நியாபகங்கள் எல்லாம் வருமே ஜெய் " என்றாள்.

"ம்ம்ம்... தெரியும். நான் இந்தியா வந்ததும் என்னுடைய நியாபகங்களை திரும்ப பெற... என்ன முயற்சி செய்யணும்.. எதுவும் டிரீட்மென்ட் இருக்கான்னு என்னோட டாக்டரை போய் மீட் பண்ணனும். நான் டாக்டரை பார்க்க போகும்போது கூட நீயும் வா மீனு. நீ வந்தா நமக்குள்ள நடந்ததையும் நான் சீகிரியாம் தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு " என்றான் .

"கண்டிப்பா போகணும் நானே உங்க பழைய நியாபகஙகள் எப்போ திரும்பி வரும்னு ஒரு எதிர்பார்ப்போட இருக்கேன் ஜெய் . நம்ம்மை முதல் சந்திப்பு.. அதை பற்றிய எண்ணம் உங்க மனசுல எந்த அளவுக்கு இருக்கு... நீங்க என்னை பற்றி என்ன நினைச்சிட்டு இருந்திங்க... எனக்காக எங்குனீங்களா ... என்னை மீட் பண்ண தவிச்சிங்களா ... இப்படி எல்லாமும் தெரிஞ்சுக்கணும். கூடவே அந்த ரியா உங்களை என்ன சொல்லி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டான்னு நான் தெரிஞ்சுக்கணும் " என்றாள்.

"ம்ம்ம்... ஆமா மீனு , பழைய நியாபகங்கள் எனக்கு தெரியும்ப வரும்போது பல நல்ல விஷயங்கள் என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் எல்லாம் நான் தெரிஜுக்கும். அதே போல அந்த ரியா... அவ செய்த சதி வேலையையும் அப்போதான் கண்டுபிடிக்க முடியும் " என்றான் .


"சீக்கிரமா உங்க பிசினஸ் எல்லாம் முடிச்சிட்டு வாங்க ஜெய் வந்ததும் மதத்தை எல்லாம் பேசிக்கலாம் "என்றவள் "ஆஹ்... ஜெய் நான் ஒரு முக்கியமான விஷயத்தை உங்க கிட்டே சொல்ல மறந்துட்டேன் " என்றாள் .

" என்ன மீனு" என்றான் கையில் இருந்த மதுக்கோப்பையை குடித்தவாறு .

"நாளைக்கு மதியம் எங்க காலேஜில் இருந்து கோயம்பத்தூர் பக்கத்துல இருக்குற அணைகட்டி போரெஸ்டுக்கு எஸ்க்கர்ஸன் கூட்டிட்டு போறாங்க , அந்த எஸ்க்கர்ஸன்க்கு நான், மைதிலி, விக்ரம் மிருதுளா எல்லாரும் எங்க டிபார்ட்மெண்டில் இருந்து எல்லாரும் போறோம் என்றாள்.

"உங்க காலேஜில் எப்போ மிருதுளா ஜோஇன் பண்ணினாங்க " என்றான் ஜெய் சிரித்துக்கொண்டே...

"அப்படி இல்ல இந்த எஸ்க்கர்ஸன்க்கு யார் வென அவங்க பேமிலியில் இருந்து கூட்டிட்டு போகலாம்னு சொன்னாங்க . நன் ஆக்ச்சுவலா உங்களை தான் என்னோட கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்" என்று அவனை பார்த்தாள்.

"அப்பறோம் என்கிட்டே ஒரு வார்த்தை இதை பத்தி கூட சொல்லாம நீயும் உன் பிரெண்டும் என்னை விட்டுட்டு போறீங்க.." என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு .

"அசோ உங்க கிட்டே சொல்லக்கூடாதுனு எல்லாம் எதுக்குவம் இல்லை ஜெய். நாங்க எஸ்க்கர்ஸன் போறதா எங்க ஹெச்ஓடி இன்போர்ம் பணிநதியா உங்க கிட்டே சொல்லலாம்னு தான் இருந்தேன் . ஆனா அப்போ தான் அந்த றிய உங்களை கல்யாணம் செய்துகிட்டேன்னு வந்து வீட்டில் பெரிய பிரச்சனையே பண்ணிட்டா.. அந்த டென்னஸினில் நான் இதை சொல்ல மறந்துட்டேன் " என்றாள்.

" சரி விடு அவளை பத்தி பேச வேணாம் . நாளைக்கு மத்தியம் போயிடு எப்போ திரும்பி வருவீங்க ?" என்றான் ஜெய்.

"2 டேஸ் எஸ்க்கர்ஸன் ஜெய் இன்னிக்கு வியாழக்கிழமை" என்று கணக்குப்போட்டவள் "சண்டே நைட் அங்கிருந்து கிளம்பி மன்டே மோர்னிங் வந்திருவோம்" என்றாள்.

"ஓ... அப்போ நான் சண்டே நைட் வீட்டுக்கு வரும்போது நீ இருக்க மாட்டியா ?" என்றான் ஏக்கமாக .

அமாம் என்று மீனு தலையாட்டியவள் " ஒரு நைட் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ஜெய் " என்றாள்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது ஜெய்யை பார்ட்டிக்கு அழைத்து வந்து இருந்தவர் அங்கு வந்துவிட... அவரிடம் மீனுவை அறிமுகம் செய்துவைத்தான்.

பிறகு இருவரும் பேசிவிட்டு வீடியோ காலில் அவன் வந்திருந்த இடத்தை காட்டினான் ஜெய் . மீனுவும் அந்த இடத்தை பார்த்தவள் ஜெய்யின் பின்னால் இருந்த நபரை அப்போது தான் கவனித்தாள் .

அந்த மங்கலான வெளிச்சத்தில் அவன் பின்னாள் இருந்த நபரின் முகத்தில் பார்ட்டி லைட் பளிச்சென்று மீனு பார்க்கும் வேளையில் அடிக்கவும் அங்கே சிரித்தபடி நின்று இருந்தவரை பார்த்து மீனுவின் முகம் அதிர்ச்சியானது. அவள் முகம் மாறுவதை உணர்ந்த ஜெய் மீனுவிடம் பேசப் போக... அப்போது சரியாக அந்த நேரம் அவன் கால் திடீர் என்று கட் ஆனது .

"ச்சே... இப்போ பொய் கேட் ஆகிருச்சே... " என்று புலம்பியவள் மீண்டும் ஜெய்யிற்கு பதட்டமாக கால் செய்யப்போக... அப்போதே அவனே கால் செய்து இருந்தான்.

காலை அட்டென்ட் செய்ததும் ஜெய்யின் பின்னல் யாரும் இருக்கிறார்களா என்று தான் பார்த்தாள் அவள் பார்வை தனக்கு பின்னல் இங்கும் அங்கும் அலைமோதுவதை பார்த்த ஜெய் " ஏய் மீனு என்ன ஆச்சு... என் பின்னாடி என்ன இருக்கு ... படி யாரை தேடுற ... " என்றான் .

" ஜெய் உன் பின்னாடி கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒருத்தர் நின்னிட்டு இருந்தாரு அவரை இதுக்கு முன்னே நான் எங்கயோ பார்த்திருக்கேன் . அவரை பார்த்ததும் உங்க கிட்டே சொல்ல வேந்தன் . அதுக்குள்ள கால் கட் ஆகிருச்சு " என்றாள்.

" என் பின்னாலா?... " என்று தனக்கு பின்னால் திரும்பி பார்த்த ஜெய் மீண்டும் மீனுவை பார்த்து தன் மொபைலை உயர்த்தி பிடித்து "நீ தேடிட்டு இருக்கவர் எங்கயும் இருக்காருன்னு பாரு" என்றான்.

அவன் காட்டிய திசைகளில் தான் சற்று முன்பு பார்த்த நபர் எங்கேயும் இல்லை மீனு குழப்பத்தோடு அங்கே தெரிந்தவர்களை எல்லாம் பார்த்தவள் "இல்லை ஜெய் அவர் இங்கே இல்லை " என்றாள்.

"உனக்கு அவர் பேரு... ஊரு... எதுவும் தெரியுமா ? தெரிஞ்சா சொல்லு நான் வேணா இங்கே யார்கிட்டயாவது சொல்லி விசாரிக்க சொல்றேன் " என்றான்.

"இல்லை ஜெய் எனக்கு அவரை பத்தி எதுவும் தெரியாது . சொல்லப்போனா நான் பார்த்த அந்த ஆளை இதுக்கு முன்னே எங்கே பார்த்தேன்னு கூட எனக்கு நியாபகம் இல்லை." என்றாள்.

" சரி விடு ... மீனு நேரம் ஆகிருச்சு பாரு நீ போய் தூங்கு . நான் நாளைக்கு கால் பண்றேன் " என்று போனை கேட் செய்தான்.

மீனுவும் யோசனையோடு வீட்டிற்குள் வந்தவள் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருட்னஹா மிருதுளா " என்ன டி உன் ஆளு கூட ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சிருச்சா ? தூங்க போகலாமா ?" என்றாள்.

"ஏய் போடி.. எப்பவும் உனக்கு இதே பேச்சு தான் " என்று அவள் தொழில் இடித்தபடி வந்து சோபாவில் அமர்ந்தாள் மீனு.

" ஏன் டி கல்யாணம் ஆகி நீதான் உன் புருஷன் கூட ரொமான்ஸ் பண்ணின நான் அதை என்னனு கூட கேட்க கூடாதா ... இதை எல்லாம் கேட்டு வெச்சுக்கிட்டா தானே நாளைக்கு நான் என் ஆளு கூட உங்களை மாதிரி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு என்ஜோய் பண்ண முடியும் " என்றாள் மிருதுளா.

"ம்ம்ம்... அதுக்கு முதல்ல ஆளு இருக்கனும் . இப்படி மொட்டையா சுத்திகிட்டு நீ ரொமான்ஸ் செய்றது பத்தி பேசாதே சரியா " என்று மீனு மருதுளாவை வம்பிழுத்தாள்.

"ஏய் நீ வேணா பாரு சீகிரியாமே ஒருத்தனை உசார் பண்ணிட்டு வந்து அவன்கூட உன்னை மாதிரியே ரொமான்ஸ் பண்ணல் என் பெரு மிருதுளா ... இல்லை டி.. மாத்தி வெச்சுக்கிறேன் " என்று சபதம் போட்டாள்.

" அப்போ உனக்கு சீகரியத்துல ஒரு நல்ல பேரா சூஸ் பண்ணனும். இந்த ரெண்டு வருசமா அமெரிக்காவில் நீ இருந்த அப்போ யாரையும் லவ் பண்ணாதவ சீக்கிரமே ஆளை தேடி லவ் பண்ண போறாளாம் ... போடி..." என்றால் மீனு .

" ஏய்... ஏய்.. ரொம்ப பேசாதே டி... உன்னை ஜெய் ரூமுக்குள்ள பிடிச்சு ஒருத்தன் இழுத்துவிட்டானே... அவன் மட்டும் அணிக்கு அப்படி செய்யலையின்னா ... நீ இந்த நேரம் ஜெய்யை கல்யாணம் செய்திருக்க முடியுமா சொல்லு... " என்று மிருதுளா கூற...

"ஆமா.. ஆமா... " என்று தலையை ஆட்டியவளுக்கு அமெரிக்காவில் மிருதுளாவுடன் ஒரு ஹோட்டலில் தங்கி ரியூட்டன்ஹ பொது போதையில் இருந்தவளை பிடித்து ஜெய் அறைக்குள் தள்ளியவனை தான் சற்று முன்பு லண்டனில் பார்ட்டியில் இருந்த ஜெய்யின் பின்னால் தான் கண்டதை அப்போது தான் உணர்ந்தாள்.

அடுத்த்ட்ட நொடி தன் மொபைலை எடுத்து ஜெய்யிற்கு அழைக்க... அனால் அவனுக்கு லைன் போகவில்லை . இரண்டு மூன்று முறை முயற்சித்தவள் பின் காலையில் அவனுடன் பேசுகையில் சொல்லிக்கொள்ளளாம் என்று விட்டுவிட்டாள்.

சற்று முன்பு ஜெய்யுடன் பேசும்போது தான் பார்த்த அந்த நபரை பற்றி மிருதுளாவிடம் சொன்னாள் மீனு .

"என்ன டி சொல்ற!!! நல்லா பார்த்தியா ? அவன் தானா ? நீயே அவனை போதையில் இருந்த அப்போ தானே பார்த்தே... அப்பறோம் எப்படி அவனை இதனை வருஷம் கழிச்சதும் பார்த்தம் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டே.. அதுவும் வீடியோ காலில் " என்று கேட்டாள் மிருதுளா .

"எனக்கும் அது ஆச்சர்யமா தான் இருக்கு மிரு .. எங்கையோ பார்த்த மாதிரி இருக்குன்னு தோணிச்சு ஆனா அந்த ஆள் தான் ஜெய் பின்னாடி இருந்ததுன்னு எனக்கு சுத்தமா தோணலை .. நீ இப்போ அணிக்கு நடந்த விஷயத்தை பத்தி பேசின அப்போ தான் எனக்கு நியாபகம் வைத்தது " என்றாள் மீனு .

"காலையில் முதல் வேலையா நீ ஜெய் கிட்டே விபரம் சொல்லி அவனை எப்படியாவது தேடி கண்டு பிடிக்க சொல்லு மீன்ஸ் அவன் கிடைச்சா எனக்கு எதுவும் விஷயம் கிடைக்கலாம் " என்றாள் மருதுளா .

ஆமாம் என்று தலையாட்டிய மீனு காலை ஜெய் இடம் இது பற்றி பேசவேண்டும் என்று யோசனையோடு தூங்க மிருதுளாவையும் இழுத்துக்கொண்டு சென்றாள்



 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 46
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

mehala

Member
Joined
Mar 18, 2025
Messages
34
Super super super super super super super super super super super
 
Top