- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
மீனு மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தாள் . அவள் டென்டிற்குள் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் இருந்தாள் . கண்களை தேய்த்துவிட்டுக்கொண்டு அவள் சுற்றிலும் நோட்டம் விட்டாள் .
மீனு இருந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டாள் . ஒரு அறைக்குள் மங்கிய விளக்கொளியில் மீனு ஒரு மூலையில் போடப்பட்டு இருட்னஹா சேரில் அமர்ந்து இருக்க... அவள் கை கால்கள் கட்டப்பட்டு அவள் வாயும் பேசமுடியாதவாறு கட்டிவைக்கப்பட்டு இருந்தது.
அப்போது தான் அவளுக்கு தான் இருந்த சூழ்நிலை புரிந்தது . தன்னை யாரோ இங்கு இரவோடு இரவாக கடத்தி வந்து இருக்கிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது . மீனுவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. தன்னை யார் இங்கு கடத்தி வந்து இருப்பார்கள் . எதற்காக கடத்தி வந்து இருக்கிறார்கள் என்று யோசித்தவள் நினைவில் முதலில் வந்தது ரியா தான்.
அவள் தான் தன்னை கடத்தி வந்திருப்பாளோ... என்று யோசித்தவாறே தன்னை கட்டி இருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள் . அப்ப்போது அந்த அரை கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் என்ன செய்யலாம் என்று யோசித்தவள் சட்டென்று தன் கண்களை ஏற்கனேவே இருந்தது போல மயக்கம் வந்தவள் போல அமர்ந்து இருந்தாள் .
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஒருவன் மீனுவின் அருகில் வந்தான் அவள் இன்னமும் கண்கள் மூடி மயக்கம் தெளியாமல் படுத்து இருப்பதை பார்த்தவன் பின்னல் திரும்பி "மேடம் அவங்க இன்னும் கண்ணை திறக்கலை மயக்கத்துல தான் இருகாங்க" என்றான் .
"இன்னமுமா மயக்கம் தெளியாம இருப்பா... அவளுக்கு கொடுத்த மயக்க மருந்தோட வீரியம் குறைஞ்சு இந்த நேரத்துக்கு எல்லாம் இவ கண்ணு முழிச்சிருக்கணுமே..." என்று யோசனையோடு மீனு அமர்ந்து இருந்த சேரிற்கு முன் வந்து நின்றாள் ரியா .
அவள் கேட்ட கேள்விக்கு அவள் அடியாட்கள் பதில் கூறாமல் நின்று இருக்க... அவர்களை முறைத்தவள் சுற்றிலும் பார்த்தாள் . அருகில் தண்ணீர் பாட்டில் இருக்க அதை எடுத்தவள் அதன் மூடியை திறந்து தண்ணீர் மொத்தமும் மீனுவின் தலை மேல் ஊற்றினாள் .
அதை எதிர்பாராத மீனு மயக்கம் வந்தவள் போல நடித்துக்கொண்டு இருந்தவள் சில்லென்ற நீர் அவள் மேல் படவும் வேகமாக கண் திறந்த மீனு தன் எதிரே நின்று இருந்த ரியாவை பார்த்தாள் .
"என்ன டி... மயக்கம் தெளிஞ்சிருச்சா தெளிய வெச்சேனா ... என்று சிரித்தவள் . எப்படி மயக்கம் தெரிஞ்சும் அப்படியே அமைதியா கண் மூடி படுத்து இருக்க... என் குரல் கேட்டு கூட உன்னை யார் கடத்தினதுனு தெருஞ்சுக்க ஆர்வம் வரலையா? உனக்கு" என்றாள் .
"நான் மயக்கம் தெளிஞ்சு கண்ணு முழிச்சதுமே என்னை இப்படி கடத்திட்டு வந்தது நீயா தான் இருக்கும்னு நான் தெரிஞ்சுகிட்டேன் உன் குரல் கேட்டு தான் நான் இதை கண்டுபிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை" என்றாள் அந்த நிலையிலும் பயம் கொள்ளாமல் .
"ஓஹோ... அப்போ நான் உன்னை ஏன் கடத்தி இங்கே கொண்டு வந்தேன்னு உனக்கு நல்லாவே தெரியும் அப்படித்தானே" என்றாள் ரியா .
"என்னை ஏதும் செய்துட்டு என் இடத்துக்கு நீ வரணும்னு நினைச்சிருக்க அப்படி தானே"" என்றாள் மீனு சற்றும் பயம் இல்லாமல் .
"உன்னை ஏதும் செய்யணும்னா நான் எப்பவோ செய்திருப்பேன் . எனக்கு தேவை உன்னோட கையெழுத்து நீ ஜெய்யை டிவேர்ஸ் பண்ணனும். அதுக்காக இந்த டிவேர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடணும்" என்று அவள் முன்பு தன் கையில் இருந்த விவகாரத்து பாத்திரத்தை மேஜையில் போட்டாள்
தன் முன் இருந்த பேப்பரை பார்த்தவள் கையெழுத்து தானே போட்டு தரேன் என்றால் மீனு .
இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை ரியா "என்ன டி டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்த்து போட சொன்னா ... முடியாது என் ஜெய்யை விட்டு போக மாட்டேன் . என் உயிரே போனாலும் கையெழுத்து போடமாட்டேனு முரண்டு பிடிப்பேன்னு பார்த்தேன் . ஆனா நீ என்ன டி கையெழுத்து வேணும்னு சொன்னதும் போட்டு தரேன்னு சொல்லிட்டே.." என்று கேட்டாள்.
அவள் பேசியதற்கு ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு "இதுக்காகவா என்னை ஆளெல்லாம் வெச்சு கடத்திட்டு வந்தே..." என்று சத்தமாக சிரித்த மீனு "என் கை கட்டை கழட்டி விடு நான் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கேன். என் பிரெண்ட்ஸ் எல்லாம் அங்கே என்னை காணோம்னு தேடிட்டு இருப்பாங்க " என்றாள் .
ரியா தன் உடன் இருந்த அடியாளிடம் கண்ஜாடை செய்ய... அவன் வந்து மீனுவின் கை கட்டை கழட்டி விட்டான் .
தன் கை கட்டப்பட்ட இடத்தை தேய்த்துவிட்டுக்கொண்டே தனக்கு முன்னே இருந்த விவாகரத்து பத்திரத்தை கையில் எடுத்தவள் அதை முழுவதுமாக பொறுமையாக படித்து பார்த்தபின் "பேனா..." என்றாள் கண்களை உயர்த்தாமலேயே கையை நீட்டி .
"டேய் அவ தான் கேக்குறாளே பேனாவை குடுடா.." என்றால் ரியா .
மீனுவின் முன்பு பேனாவை நீட்ட... அவள் ரியாவை ஒருமுறை பார்த்துவிட்டு அவள் கொடுத்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட போனாள்.
'ஏய் நிஜமாவே நீ கையெழுத்து போடா போறியா? ஒரு வாட்டி கையெழுத்து போடுறதுக்கு முன்ன நல்லா யோசிச்சுக்கோ.. ஏன்னா நீ கையெழுத்து போட்ட பிறகு அந்த வீட்டை விட்டு ஜெய்யோட வாழ்க்கையை விட்டு நிரந்தரமா போய்டணும். அது தெரியும் தானே " என்றாள் ரியா .
மீனு சிரித்துவிட்டு "தெரியும்.." என்று ஒற்றை பதிலை மட்டும் தந்தவள் குனிந்து மேஜையில் இருந்த டிவேர்ஸ் பேப்பரில் கையொப்பமிட்டாள்.
ரியாவிற்கு சந்தோஷம் தாழ வில்லை தான் வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்ததை நினைத்து சந்தோசம் ஆனால் .
கையெழுத்து போட்டதும் மீனு ரியாவிடம் "ஆமா நீதான் முறையா ஜெய்யை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க... ஜெய் என் கழுத்தில் தாலி கட்டி என்னை அவர் பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டாரு. என் கூட சந்தோஷமாவும் வாழ ஆரம்பிச்சிட்டாரு ... நியாபடி நீ தான் உரிமையானவ... என்கிட்டே இந்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லையே ... அப்பறோம் எதுக்கு இதுல தேவை இல்லாம ரிஸ்க் எடுத்து என்னை கடத்திட்டு வந்து கையெழுத்து வாங்கின..." என்றாள் மீனு.
உன்கிட்டே கையெழுத்து வாங்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை . ஜெய்யோட முதல் மனைவி நான் தான்னு கோட்டுல சொன்னாலே போதும் , நான் ஜெய்யை எப்படியும் மனசு மாத்திருவேன் . அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அவன் மனசு மாறி என்ன கொடாஅ வாழ ஆரம்பிக்கும்போது நீ வந்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாதுனு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைையா உன்கிட்டே இந்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கிட்டேன் "என்றாள் ரியா .
"ம்ம்ம்... பிரிலியண்ட் ரியா நீ..." என்று நக்கலாக கூறிய மீனு .
"சரி இப்போதான் உன் வேலை முடிஞ்சிருச்சே .. என்னை கூட்டிட்டு பொய் காம்பில் விட சொல்லு ஏற்கனவே விடியப்போகுது யாரும் என்னை தேடுறதுக்குள்ள நான் போகணும் "என்றாள் மீனு.
"ம்ம்ம்.. போலாம் போலாம் ... என்ன மீனு அவசரம் கொஞ்சம் பொறு" என்றாள்.
"அதான் வந்த வேலை முடிஞ்சிருச்சே.. அப்பறோம் என்ன " என்றாள் மீனு .
"என் வேலை முடிஞ்சுது தான் ஆனாலும் உன்னை இப்படியே அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை. நான் கேட்டதும் நீ எந்த பிரச்னையும் பண்ணாம கையெழுத்து போட்டு கொடுத்துட்டே... ஆனாலும்... "என்று அவள் அருகில் வந்த ரியா தன் ஆட்களை பார்க்க... அவர்கள் உடனே மீனுவை ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக்கொண்டனர் .
இதை சற்றும் எதிர்ப்பாராத மீனு "ஏய் ரியா என்ன இது ... ஒழுங்கா என்னை விட சொல்லு இவங்களை "என்று அவர்கள் கைகளில் இருந்து விடுபட முயற்சித்துக்கொண்டு ...
உன்னை இப்பிடியே அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை மீனு . நீ இவ்ளோ சாதாரணமா கையெழுத்து போட்டுக்கொடுத்துட்டு போறேன்னா அது எனக்கு சரியா படல . நீ கையெழுத்து போட்டு கொடுத்துட்டா ஜெய் எப்படியும் உன்கிட்டே வந்து பிரச்சனை பண்ணுவான். உன்னை விட்டு போகமுடியாதுனு சொல்லுவான் . நீ வேணும்னு அவன் பிடிவாதமா இருப்பான் எனக்கு அது நல்லாவே தெரியும் . நான் அதை பார்த்தேனே... நீ அவன்கூட வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்ன அப்போ உன்னை வலுக்கட்டாயமா தூக்கிட்டு போனதை நானும் பார்த்தேனே..."என்றவள் .
"நீ டிவேர்ஸ் பண்ணினாலும் அவன் உன்னை விட மாட்டான் . உன்னை விடாம சுத்துவான் "என்றாள் .
"அதுக்கு நான் என்ன செய்யமுடியும் . ஜெய் என்னை விடாம சுத்திகிட்டு இருக்குரான்னா அவனுக்கு என் மேல அவ்ளோ காதல் இருக்கு . நீ என்கிட்டே டிவேர்ஸ் வாங்கி எங்க ரெண்டு பேரையும் லீகலா பிரிக்கலாம்னு நினைக்கலாம். நாங்க ரெண்டு பெரும் மனசால ஒன்னு சேர்ந்து எவ்ளோவோ நாள் ஆச்சு .நீ என்னையும் ஜெய்யையும் பிரிக்கலாம் . ஆனா நாங்க எங்கே இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் நினைச்சிட்டு எங்கே இருந்தாலும் சந்தோசமா வாழ்ந்திருவோம் " என்றாள் மீனு .
மீனு சொன்னதை கேட்டு ரியாவிற்கு கடுப்பானது . "ஏய் என்ன டி சும்மா காதல் கண்றாவினு பேசி என்னை வெறுப்பேத்துற... நீ இவ்ளோ உறுதியா ஜெய்க்கு உன்மேல காதல் இருக்குன்னு நீ சொல்றதை கேக்குற அப்போ
உன் மேல காதலா உருகுன ஜெய்யை நான் முறையா எல்லார் முன்னாடியும் கல்யாணம் செய்து அவன்கூட வாழணும்னு தோணுது என்றாள் ரியா.
அதை கேட்டு சிரித்த மீனு அது "அக்கனவுலயும் நடக்காது என் ஜெய் கண்டிப்பா உன் கழுத்துல தாலி கட்ட மாட்டான் . என் இடத்துல இன்னோருத்தரை அதுவும் உன்னை என்னோட இடத்துல வெச்சு பார்க்க என் ஜெய் ஒன்னும் முட்டாள் இல்லை" என்றாள் மீனு ஜெய் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையால் .
"பாக்கலாமா ? நான் உன்னோட ஜெய்யை உன் கண்ணு முன்னாடியே கல்யாணம் செய்து நீ இப்போ வாழ்ந்த அதே வீட்டுல அவனோட பொண்டாட்டியா அந்த வவாழ்ந்து காட்டுறேன் பாக்குறியா " என்றாள் ரியா மீனுவிடம் சவால் விடும் ரீதியில் .
நடக்காத ஒன்றிற்கு தன் முன் சவால் விட்டு நின்ற ரியாவை பார்த்து மீனுவிற்கு சிரிப்பு தான் வந்தது. " நீ சொன்னது போல நடக்க வாய்ப்பே இல்லை " என்றாள் மீனு உறுதியாக .
"நடத்திக் காட்டுறேன்... நான் நினைச்சதை நடத்தியே காட்டுவேன்"என்றாள் ரியா ஒருவித உறுதியோடு பின் தன் ஆட்களை பார்த்து இவளை பிடிச்சு நான் சொன்ன இடத்துல அடைச்சு வைங்க... இவளை நான் சொல்ற வரைக்கும் வெளியே விடக்கூடாது கவனமா பார்த்துக்கணும்" என்று சொன்னவள் மீனுவை அவள் ஆட்களிடம் கூறி ரியாவிற்கு சொந்தமான பாக்டரியில் அவளை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்தாள் .
மீனு இருந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டாள் . ஒரு அறைக்குள் மங்கிய விளக்கொளியில் மீனு ஒரு மூலையில் போடப்பட்டு இருட்னஹா சேரில் அமர்ந்து இருக்க... அவள் கை கால்கள் கட்டப்பட்டு அவள் வாயும் பேசமுடியாதவாறு கட்டிவைக்கப்பட்டு இருந்தது.
அப்போது தான் அவளுக்கு தான் இருந்த சூழ்நிலை புரிந்தது . தன்னை யாரோ இங்கு இரவோடு இரவாக கடத்தி வந்து இருக்கிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது . மீனுவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. தன்னை யார் இங்கு கடத்தி வந்து இருப்பார்கள் . எதற்காக கடத்தி வந்து இருக்கிறார்கள் என்று யோசித்தவள் நினைவில் முதலில் வந்தது ரியா தான்.
அவள் தான் தன்னை கடத்தி வந்திருப்பாளோ... என்று யோசித்தவாறே தன்னை கட்டி இருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள் . அப்ப்போது அந்த அரை கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் என்ன செய்யலாம் என்று யோசித்தவள் சட்டென்று தன் கண்களை ஏற்கனேவே இருந்தது போல மயக்கம் வந்தவள் போல அமர்ந்து இருந்தாள் .
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஒருவன் மீனுவின் அருகில் வந்தான் அவள் இன்னமும் கண்கள் மூடி மயக்கம் தெளியாமல் படுத்து இருப்பதை பார்த்தவன் பின்னல் திரும்பி "மேடம் அவங்க இன்னும் கண்ணை திறக்கலை மயக்கத்துல தான் இருகாங்க" என்றான் .
"இன்னமுமா மயக்கம் தெளியாம இருப்பா... அவளுக்கு கொடுத்த மயக்க மருந்தோட வீரியம் குறைஞ்சு இந்த நேரத்துக்கு எல்லாம் இவ கண்ணு முழிச்சிருக்கணுமே..." என்று யோசனையோடு மீனு அமர்ந்து இருந்த சேரிற்கு முன் வந்து நின்றாள் ரியா .
அவள் கேட்ட கேள்விக்கு அவள் அடியாட்கள் பதில் கூறாமல் நின்று இருக்க... அவர்களை முறைத்தவள் சுற்றிலும் பார்த்தாள் . அருகில் தண்ணீர் பாட்டில் இருக்க அதை எடுத்தவள் அதன் மூடியை திறந்து தண்ணீர் மொத்தமும் மீனுவின் தலை மேல் ஊற்றினாள் .
அதை எதிர்பாராத மீனு மயக்கம் வந்தவள் போல நடித்துக்கொண்டு இருந்தவள் சில்லென்ற நீர் அவள் மேல் படவும் வேகமாக கண் திறந்த மீனு தன் எதிரே நின்று இருந்த ரியாவை பார்த்தாள் .
"என்ன டி... மயக்கம் தெளிஞ்சிருச்சா தெளிய வெச்சேனா ... என்று சிரித்தவள் . எப்படி மயக்கம் தெரிஞ்சும் அப்படியே அமைதியா கண் மூடி படுத்து இருக்க... என் குரல் கேட்டு கூட உன்னை யார் கடத்தினதுனு தெருஞ்சுக்க ஆர்வம் வரலையா? உனக்கு" என்றாள் .
"நான் மயக்கம் தெளிஞ்சு கண்ணு முழிச்சதுமே என்னை இப்படி கடத்திட்டு வந்தது நீயா தான் இருக்கும்னு நான் தெரிஞ்சுகிட்டேன் உன் குரல் கேட்டு தான் நான் இதை கண்டுபிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை" என்றாள் அந்த நிலையிலும் பயம் கொள்ளாமல் .
"ஓஹோ... அப்போ நான் உன்னை ஏன் கடத்தி இங்கே கொண்டு வந்தேன்னு உனக்கு நல்லாவே தெரியும் அப்படித்தானே" என்றாள் ரியா .
"என்னை ஏதும் செய்துட்டு என் இடத்துக்கு நீ வரணும்னு நினைச்சிருக்க அப்படி தானே"" என்றாள் மீனு சற்றும் பயம் இல்லாமல் .
"உன்னை ஏதும் செய்யணும்னா நான் எப்பவோ செய்திருப்பேன் . எனக்கு தேவை உன்னோட கையெழுத்து நீ ஜெய்யை டிவேர்ஸ் பண்ணனும். அதுக்காக இந்த டிவேர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடணும்" என்று அவள் முன்பு தன் கையில் இருந்த விவகாரத்து பாத்திரத்தை மேஜையில் போட்டாள்
தன் முன் இருந்த பேப்பரை பார்த்தவள் கையெழுத்து தானே போட்டு தரேன் என்றால் மீனு .
இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை ரியா "என்ன டி டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்த்து போட சொன்னா ... முடியாது என் ஜெய்யை விட்டு போக மாட்டேன் . என் உயிரே போனாலும் கையெழுத்து போடமாட்டேனு முரண்டு பிடிப்பேன்னு பார்த்தேன் . ஆனா நீ என்ன டி கையெழுத்து வேணும்னு சொன்னதும் போட்டு தரேன்னு சொல்லிட்டே.." என்று கேட்டாள்.
அவள் பேசியதற்கு ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு "இதுக்காகவா என்னை ஆளெல்லாம் வெச்சு கடத்திட்டு வந்தே..." என்று சத்தமாக சிரித்த மீனு "என் கை கட்டை கழட்டி விடு நான் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கேன். என் பிரெண்ட்ஸ் எல்லாம் அங்கே என்னை காணோம்னு தேடிட்டு இருப்பாங்க " என்றாள் .
ரியா தன் உடன் இருந்த அடியாளிடம் கண்ஜாடை செய்ய... அவன் வந்து மீனுவின் கை கட்டை கழட்டி விட்டான் .
தன் கை கட்டப்பட்ட இடத்தை தேய்த்துவிட்டுக்கொண்டே தனக்கு முன்னே இருந்த விவாகரத்து பத்திரத்தை கையில் எடுத்தவள் அதை முழுவதுமாக பொறுமையாக படித்து பார்த்தபின் "பேனா..." என்றாள் கண்களை உயர்த்தாமலேயே கையை நீட்டி .
"டேய் அவ தான் கேக்குறாளே பேனாவை குடுடா.." என்றால் ரியா .
மீனுவின் முன்பு பேனாவை நீட்ட... அவள் ரியாவை ஒருமுறை பார்த்துவிட்டு அவள் கொடுத்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட போனாள்.
'ஏய் நிஜமாவே நீ கையெழுத்து போடா போறியா? ஒரு வாட்டி கையெழுத்து போடுறதுக்கு முன்ன நல்லா யோசிச்சுக்கோ.. ஏன்னா நீ கையெழுத்து போட்ட பிறகு அந்த வீட்டை விட்டு ஜெய்யோட வாழ்க்கையை விட்டு நிரந்தரமா போய்டணும். அது தெரியும் தானே " என்றாள் ரியா .
மீனு சிரித்துவிட்டு "தெரியும்.." என்று ஒற்றை பதிலை மட்டும் தந்தவள் குனிந்து மேஜையில் இருந்த டிவேர்ஸ் பேப்பரில் கையொப்பமிட்டாள்.
ரியாவிற்கு சந்தோஷம் தாழ வில்லை தான் வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்ததை நினைத்து சந்தோசம் ஆனால் .
கையெழுத்து போட்டதும் மீனு ரியாவிடம் "ஆமா நீதான் முறையா ஜெய்யை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க... ஜெய் என் கழுத்தில் தாலி கட்டி என்னை அவர் பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டாரு. என் கூட சந்தோஷமாவும் வாழ ஆரம்பிச்சிட்டாரு ... நியாபடி நீ தான் உரிமையானவ... என்கிட்டே இந்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லையே ... அப்பறோம் எதுக்கு இதுல தேவை இல்லாம ரிஸ்க் எடுத்து என்னை கடத்திட்டு வந்து கையெழுத்து வாங்கின..." என்றாள் மீனு.
உன்கிட்டே கையெழுத்து வாங்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை . ஜெய்யோட முதல் மனைவி நான் தான்னு கோட்டுல சொன்னாலே போதும் , நான் ஜெய்யை எப்படியும் மனசு மாத்திருவேன் . அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அவன் மனசு மாறி என்ன கொடாஅ வாழ ஆரம்பிக்கும்போது நீ வந்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாதுனு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைையா உன்கிட்டே இந்த டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கிட்டேன் "என்றாள் ரியா .
"ம்ம்ம்... பிரிலியண்ட் ரியா நீ..." என்று நக்கலாக கூறிய மீனு .
"சரி இப்போதான் உன் வேலை முடிஞ்சிருச்சே .. என்னை கூட்டிட்டு பொய் காம்பில் விட சொல்லு ஏற்கனவே விடியப்போகுது யாரும் என்னை தேடுறதுக்குள்ள நான் போகணும் "என்றாள் மீனு.
"ம்ம்ம்.. போலாம் போலாம் ... என்ன மீனு அவசரம் கொஞ்சம் பொறு" என்றாள்.
"அதான் வந்த வேலை முடிஞ்சிருச்சே.. அப்பறோம் என்ன " என்றாள் மீனு .
"என் வேலை முடிஞ்சுது தான் ஆனாலும் உன்னை இப்படியே அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை. நான் கேட்டதும் நீ எந்த பிரச்னையும் பண்ணாம கையெழுத்து போட்டு கொடுத்துட்டே... ஆனாலும்... "என்று அவள் அருகில் வந்த ரியா தன் ஆட்களை பார்க்க... அவர்கள் உடனே மீனுவை ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக்கொண்டனர் .
இதை சற்றும் எதிர்ப்பாராத மீனு "ஏய் ரியா என்ன இது ... ஒழுங்கா என்னை விட சொல்லு இவங்களை "என்று அவர்கள் கைகளில் இருந்து விடுபட முயற்சித்துக்கொண்டு ...
உன்னை இப்பிடியே அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை மீனு . நீ இவ்ளோ சாதாரணமா கையெழுத்து போட்டுக்கொடுத்துட்டு போறேன்னா அது எனக்கு சரியா படல . நீ கையெழுத்து போட்டு கொடுத்துட்டா ஜெய் எப்படியும் உன்கிட்டே வந்து பிரச்சனை பண்ணுவான். உன்னை விட்டு போகமுடியாதுனு சொல்லுவான் . நீ வேணும்னு அவன் பிடிவாதமா இருப்பான் எனக்கு அது நல்லாவே தெரியும் . நான் அதை பார்த்தேனே... நீ அவன்கூட வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்ன அப்போ உன்னை வலுக்கட்டாயமா தூக்கிட்டு போனதை நானும் பார்த்தேனே..."என்றவள் .
"நீ டிவேர்ஸ் பண்ணினாலும் அவன் உன்னை விட மாட்டான் . உன்னை விடாம சுத்துவான் "என்றாள் .
"அதுக்கு நான் என்ன செய்யமுடியும் . ஜெய் என்னை விடாம சுத்திகிட்டு இருக்குரான்னா அவனுக்கு என் மேல அவ்ளோ காதல் இருக்கு . நீ என்கிட்டே டிவேர்ஸ் வாங்கி எங்க ரெண்டு பேரையும் லீகலா பிரிக்கலாம்னு நினைக்கலாம். நாங்க ரெண்டு பெரும் மனசால ஒன்னு சேர்ந்து எவ்ளோவோ நாள் ஆச்சு .நீ என்னையும் ஜெய்யையும் பிரிக்கலாம் . ஆனா நாங்க எங்கே இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் நினைச்சிட்டு எங்கே இருந்தாலும் சந்தோசமா வாழ்ந்திருவோம் " என்றாள் மீனு .
மீனு சொன்னதை கேட்டு ரியாவிற்கு கடுப்பானது . "ஏய் என்ன டி சும்மா காதல் கண்றாவினு பேசி என்னை வெறுப்பேத்துற... நீ இவ்ளோ உறுதியா ஜெய்க்கு உன்மேல காதல் இருக்குன்னு நீ சொல்றதை கேக்குற அப்போ
உன் மேல காதலா உருகுன ஜெய்யை நான் முறையா எல்லார் முன்னாடியும் கல்யாணம் செய்து அவன்கூட வாழணும்னு தோணுது என்றாள் ரியா.
அதை கேட்டு சிரித்த மீனு அது "அக்கனவுலயும் நடக்காது என் ஜெய் கண்டிப்பா உன் கழுத்துல தாலி கட்ட மாட்டான் . என் இடத்துல இன்னோருத்தரை அதுவும் உன்னை என்னோட இடத்துல வெச்சு பார்க்க என் ஜெய் ஒன்னும் முட்டாள் இல்லை" என்றாள் மீனு ஜெய் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையால் .
"பாக்கலாமா ? நான் உன்னோட ஜெய்யை உன் கண்ணு முன்னாடியே கல்யாணம் செய்து நீ இப்போ வாழ்ந்த அதே வீட்டுல அவனோட பொண்டாட்டியா அந்த வவாழ்ந்து காட்டுறேன் பாக்குறியா " என்றாள் ரியா மீனுவிடம் சவால் விடும் ரீதியில் .
நடக்காத ஒன்றிற்கு தன் முன் சவால் விட்டு நின்ற ரியாவை பார்த்து மீனுவிற்கு சிரிப்பு தான் வந்தது. " நீ சொன்னது போல நடக்க வாய்ப்பே இல்லை " என்றாள் மீனு உறுதியாக .
"நடத்திக் காட்டுறேன்... நான் நினைச்சதை நடத்தியே காட்டுவேன்"என்றாள் ரியா ஒருவித உறுதியோடு பின் தன் ஆட்களை பார்த்து இவளை பிடிச்சு நான் சொன்ன இடத்துல அடைச்சு வைங்க... இவளை நான் சொல்ற வரைக்கும் வெளியே விடக்கூடாது கவனமா பார்த்துக்கணும்" என்று சொன்னவள் மீனுவை அவள் ஆட்களிடம் கூறி ரியாவிற்கு சொந்தமான பாக்டரியில் அவளை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்தாள் .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 48
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 48
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.