- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது மீனு காணாமல் போய் அவளை எங்கு தேடியும் கிடைக்காமல் குடும்பம் மொத்தமும் இடிந்து பொய் இருந்தனர். ரியா மீதும் வலுவாக சந்தேகம் உண்டாகி இருக்க அவள் வீடு ஆபீஸ் என்று ரியாவிற்கு தெரிந்த இடம் அவளுக்கு சொந்தமான இடம் என எங்கெல்லாமோ தேடி களைத்து விட்டனர் அனால் மீனு மட்டும் இன்று வரை கிடைக்கவில்லை .
எப்போதும் கிளீன் சேவ் செய்து முகத்தை பளிச்சென்று வைத்திருக்க ஜெய்யின் முகம் இன்று பொலிவிழந்து காணப்பட்டது . அவன் முகம் முழுக்க தாடி வளர்ந்து புதர் போல மண்டிக்கிடக்க ... அதை எல்லாம் தாண்டி அவன் முகம் சோகத்தை தத்தெடுத்து இருந்தது .
மணமகன் கோலத்தில் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மணமேடையில் ஜெய் அமர்ந்து இருக்க... அவன் அருகில் ரியா மணப்பெண் கோலத்தில் தான் நினைத்ததை சாதிக்கப்போகிறோம் என்று சந்தோசத்தில் அமர்ந்து இருந்தாள் .
சொல்லப்போனால் அங்கு அவள் திருமணத்திற்கு வந்து இருந்த யாருக்குமே இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை ரியாவின் அம்மாவை தவிர...
"ஐயரே என்ன இவ்ளோ மெதுவா மந்திரத்தை சொல்லிட்டு இருக்கீங்க... சீக்கிரம் சீக்கிரமா சொல்லி முடிங்க என் மக கழுத்துல என் மருமகன் தாலி கட்டணும் " என்று அவரை அவசரப்படுத்திக்கொண்டு இருந்தார்.
எப்போதும் ரியாவையும், சந்தாவையும் அதட்டி தன் சொல் பேச்சு கேட்க வைக்கும் பரமன் கூட இவர்களை இன்று எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதற்கு காரணம் ஜெய் தான் . இந்த கல்யாணத்திற்கு பரமன் சம்மதம் சொல்லவில்லை . இது மீனுவிற்கு செய்யும் துரோகம் என்று அவர் எவ்வளவோ எடுத்தது சொல்லியும் ஜெய் ஒரே அடியாக மறுத்து விட்டான் .
"மாமா நான் ரியாவை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணின பிறகு மீனுவை கல்யாணம் செய்த்திருக்க கூடாது . அது நான் ரியாவுக்கு செய்த துரோகம் . மீனுவை கல்யாணம் செய்து இன்னோரு பெண்ணின் வாழ்க்கையும் கெட்டுபோவதற்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன். எப்போ மீனு திரும்ப கிடைக்குறாளோ அப்போ நான் அவகிட்டே பேசி புரியவெச்சு இனி என்னோட வாழ்க்கை ரியாவுடன் தான் " என்று பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வந்தவனாக ஜெய் தீர்க்கமாக சொல்லிவிட அவனிடம் பரமன் மட்டும் இல்லை குரு, ஜனனி கூட எதுக்குவம் கேட்க முடியாத நிலையில் இருந்தனர் .
மணமகன் பக்கத்தல் நின்று இருந்த சூர்யா ஜெய்யிடம் குனிந்து "ஜெய் இப்பவும் onum கேட்டு போய்டல.. மீனுவும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு ஒரு அருமையான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டீங்க... இந்த ரியாவால தான் உனக்கும் , மீனுவுக்கும் இடையில் பிரச்சனையே ஆரம்பம் ஆச்சு டா... ஆனா அதை கூட மீனு பெருசா எடுத்துக்காம உன் கூட சந்தோசமாதான் வாழ்ந்துட்டு இருந்தா.அவ எப்போ காணாம போனாலோ... உனக்கு எப்படி பழசு எல்லாம் நியாபகம் வந்துச்சோ அப்போவே எல்லாம் மாறி போய்டுச்சு டா ... சொன்னா கேளு இந்த கல்யாணத்தை பண்ணிக்காத டா.." என்று தன் நண்பனுக்கு எடுத்து சொன்னான்.
அதை எல்லாம் கேட்டு தன் நண்பனிடம் "அப்படி நான் தான் வேணும்னு நினைச்சிருந்த மீனு ஏன் நான் வேணாம்னு டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கும். முடியாதுனு சொல்லி இருக்கனும் இல்லையா. இப்போ இதை நீ என்னனு சொல்லுவ .."என்று தன் நண்பனிடம் தன் கையில் இருந்த டிவேர்ஸ் பேப்பரை காட்டி கேட்டான்.
அதை வாங்கிய சூர்யா அதில் இருந்த விபரங்களையும் கீழே இந்த விவாகரத்து பத்திரத்தில் தனக்கு இந்த விவாகரத்தில் முழு சம்மதம் என்று மீனுவின் கையெழுத்தையும் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "டேய்.. இது.. இது .. நிஜமாவே மீனு கையெழுத்து தானா ? உனக்கு யாரு இதை கொடுத்தது. கண்டிப்பா மீனு இந்த டைவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டிருக்க மாட்டா.."என்றான் தீர்க்கமாக.
அவன் கையில் இருந்த அந்த பாத்திரத்தாய் வாங்கி குருவும், ஜனனியும் பார்த்தவர்கள் அது மீனுவின் கையெழுத்து தான் என்று உறுதி செய்தனர்.
"மாப்பிள்ளை இந்த விவாகரத்து பத்திரம் யார் உங்களுக்கு அனுப்பினது . இது.. இது மீனுவோட கையெழுத்து தான் .ஆனா..." என்று அவர் அடுத்தது சொல்ல வர...
"இங்கே பாருங்க நீங்களே இந்த பேப்பரில் இருக்குறது மீனுவிட கையெழுத்துனு சொல்லிட்டீங்க,, அப்படி இருக்க அப்போ இது உண்மைத்த்தானே " என்றவன் .
"முதல்ல நான் ரியாவை கல்யாணம் செய்துக்க ரொம்ப யோசிச்சேன். என்னால ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை வீணா போய்டுமோன்னு பயந்தேன் . ஆனா இந்த டிவேர்ஸ் பேப்பர் எப்போ என் கைக்கு வந்ததோ அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன். என்னை வேண்டாம்னு சொல்லிட்டு எங்கயோ சொல்லிக்காம கொள்ளாம போய்ட்டா... ஆனா இங்கே என்கொடுங் இந்த ரெண்டு மாசமா நான் பழைய நினைவுகள் மீண்டு உலண்டுட்டு இருந்த அப்போ ரியா எனக்கு துணையா இருந்து என் மேல காட்டின அக்கறையும் , பாசத்தையும் பார்த்து தான் நான் இந்த கல்யாணத்தையே நடத்தணும்னு அவசரமா முடிவு பன்னினேன். என்னால இனி யாரோட வாழ்க்கையும் வீணாகிடக்கூடாது .அதனால் தான் இந்த் கல்யாணம் . என்னை தயவு செய்து யாரும் தப்பா நினைக்காதீங்க... முடிஞ்சா எங்க கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க ..." என்றான் .
ஜெய் பேசியதை கேட்டு அங்கிருந்த யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை அனைவரும் அமைதியாகி விட "அதான் என் மாப்பிள்ளை எல்லாம் தெளிவா சொல்லிட்டாரே இனி யாரும் எதுவும் சொல்லி என் மாப்பிள்ளை மனசை கலைக்கணும்ன்னு நினைக்காதீங்க"என்ற சாந்தா .
"ஐயரே இன்னும் என்ன அங்கே முணுமுணுத்துட்டு.... முதல்ல தாலியை எடுத்து கொடுங்க..."என்று சாந்தா ஐயரை அதட்ட.. சாந்தா போட்ட போட்டில் ஐயர் எதுவும் பேசாமல் தாலியை எடுத்து ஜெய் கையில் கொடுத்து "இந்தாங்கோ... சீக்கிரம் தாலியை கட்டிடுடுங்கோ... மாப்பிள்ளை பொண்ணை விட பொண்ணோட அம்மா தான் ரொம்ப அவசரப்படுறாங்கோ .."என்றார்.
ஐயர் கொடுத்த தாலியை வாங்கிய ஜெய் திரும்பி அங்கு நின்று இருந்த தன் அப்பா கஜேந்திரனை பார்த்தான் . பின் எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த தாலியை நொடியும் தாமதிக்காமல் ரியாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
தன் மகளுடன் திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து இருந்த ஜெய் இப்படி பழைய நினைவுகள் திரும்ப வந்ததில் தன் மகளுடனான வாழ்க்கை மறந்துவிட்டு அவள் வாழ்க்கை அழிய வேண்டும் என்று துடிக்கும் ரியா கழுத்தில் தாலி காட்டியதை குரு, ஜனனி இருவராலும் பார்க்க முடியவில்லை. அவர்களை போல தான் அங்கு நின்று இருந்த பூஜாவும் இந்த காட்சியை காண பிடிக்காமல் . "நீங்க எல்லாரும் இங்கயே இருந்து இந்த கருமத்தை பார்த்துட்டு வாங்க நான் போறேன்" என்று அங்கிருந்து கிளம்ப போனாள் . அப்போது சரியாக ஜெய் ரியா கழுத்தில் தாலி காட்டும் வேளையில் மண்டபத்திற்குள் நுழைந்த மீனு தன் கண் முன்னாள் ஜெய் ரியாவின்
கழுத்தில் தாலி கட்டியதை கண்டு அப்படியே உறைந்து போனாள் .
மீனு அங்கு வந்திருந்ததை பார்த்து பூஜா ஒட்டி சென்று "அக்காஆ... "என்று அழுதபடி மீனுவின் அருகில் ஓடிச்சென்று அவளை கட்டிக்கொண்டு "அக்கா...அக்கா... எங்க அக்கா போன இவ்ளோ நாளா.. உன்னை காணாம நாங்க எங்கே எல்லாம் தேடினோம் தெரியுமா ? நீ எங்க அக்கா போன இவ்வளவு நாளா ? "என்று பூஜா கேட்டுக்கொண்டு இருக்க ஆனால் அவள் பேசியதை கேட்கும் நிலையில் மீனு இப்பொது இல்லை .
அவள் கண்முன் வேறு ஒரு பெண்ணின் கழுத்தில் தலை கட்டி முடித்த ஜெய்யையும் , அவன் அருகில் தான் சாதித்து விட்டதாக பெருமை தாளாத முகத்தோடு ரியா மீனுவை பார்த்து "எப்படி நான் சொன்ன மாதிரியே உன் கண்ணு முன்னாடியே ஜெய்யை என் கழுத்தில் தாலி கட்ட வெக்குறேனு சொன்னது போலவே செய்துட்டேன் பார்த்தியா "என்பது போல மீனுவை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவள் பார்வையில் தெரிந்த ஏளனத்தாய் கவனித்த மீனு தான் ரியாவிடம் தோற்றுப்போய் விட்டோமே என்று வலியில் அழுதுகொண்டே ஜெய் எதிரே வந்து நின்றவள் "ஜெய்.. அப்போ நீங்க உண்மையாவே இந்த ரியாவை கல்யாணம் செய்துட்டீங்களா ? அப்போ என்னை விட்டு போகமாட்டேனு சொன்னது... யார் என்ன சொன்னாலும் என்னை விட்டு பிராய மாட்டேன்னு சொன்னது எல்லாம் பொய்யா?"என்றாள் அழுதுகொண்டே .
ஜெய் இப்போதுதான் மீனுவை முதல் முறை பார்த்தது போல அவளையே பார்த்துக்கொண்டு அவள் கேட்ட கேள்விக்கு பதில் கோரோல் அமர்ந்து இருந்தான் . "என்ன ஜெய் என்னை அப்படி பாக்குறீங்க... நான் யாரோ மாதிரி தெரியுறேனா இப்போ.."என்று அவன் பார்வையில் இருந்த குழப்பத்தை கண்டு கேட்டாள் மீனு .
அப்போதும் ஜெய் அமைதியாக இருக்க... அவள் அருகில் வந்த குருவும் ஜனனியும் மீனுவிடம் வந்தவர்கள் "ஏய் மீனு எங்க டி போன இவ்ளோ நாளா... எங்க கிட்டே எல்லாம் சொல்லாம எங்க டி போன.. உன்னை காணாம நாங்க எலாம் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டோம் தெரியுமா ? நீ மட்டும் இருந்திருந்தா இப்படி உன்னோட வாழ்க்கையிற் அந்த ரியா பங்கு போட்டுக்க வந்திருக்க மாட்டாளே 'என்று தன் மகள் வாழ்க்கை பறிபோவிட்டதை நினைத்து அழுதார் ஜனனி .
அவர்களிடம் ரியா தான் தன்னை இத்தனை நாள் அடைத்துவைத்து இருந்தாள் என்று மீனுவிற்கு சொல்ல தோன்றவில்லை . இத்தனை நாள் தான் ஜெய்யை காணாத போது வலித்திடாத அவள் இதயம் இன்று ஜெய் ரியா கழுத்தில் தளி கட்டி அவள் கணவனாக அமர்ந்து இருப்பதை பார்த்தது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அதே அதிர்ச்சியிலும் , இத்தனை நாள் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு இருந்த மீனு இப்பொது அவள் முன் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த ஜெய் ,ரியாவை பார்த்து அதிர்ச்சி தாளாமல் மயங்கி அப்படியே தரையில் சரியப் போக... அவள் அருகில் நின்று இருந்த ஜனனியும், பூஜாவும் மீனுவை விழாமல் தாங்கி பிடித்தனர் .
மீனு மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்துக்கொண்டு மேடையில் அமர்ந்து இருந்த ஜெய் பதறியடித்துக்கொண்டு மீனுவை நோக்கி மணமேடையில் இருந்து ஓடி வந்தவன் மீனுவை தன் மடியில் ஏந்தி "மீனு... மீனு.. ஏய் சின்னக்குட்டி.. என்னை பாரு டி.. நீ எங்கே இருக்கேன்னு தெரியாம நான் எவ்ளோ கஷ்டபட்டுட்டேன் தெறியுமா ? "என்று அவளை கட்டிக்கொண்டு ஜெய் அழ ..
அதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . மீனுவின் மீது இவ்வளவு பாசத்தை பொழியும் ஜெய் எப்படி அந்த ரியாவை திருமணம் செய்துகொண்டான் என்று புரியவில்லை .
எப்போதும் கிளீன் சேவ் செய்து முகத்தை பளிச்சென்று வைத்திருக்க ஜெய்யின் முகம் இன்று பொலிவிழந்து காணப்பட்டது . அவன் முகம் முழுக்க தாடி வளர்ந்து புதர் போல மண்டிக்கிடக்க ... அதை எல்லாம் தாண்டி அவன் முகம் சோகத்தை தத்தெடுத்து இருந்தது .
மணமகன் கோலத்தில் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மணமேடையில் ஜெய் அமர்ந்து இருக்க... அவன் அருகில் ரியா மணப்பெண் கோலத்தில் தான் நினைத்ததை சாதிக்கப்போகிறோம் என்று சந்தோசத்தில் அமர்ந்து இருந்தாள் .
சொல்லப்போனால் அங்கு அவள் திருமணத்திற்கு வந்து இருந்த யாருக்குமே இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை ரியாவின் அம்மாவை தவிர...
"ஐயரே என்ன இவ்ளோ மெதுவா மந்திரத்தை சொல்லிட்டு இருக்கீங்க... சீக்கிரம் சீக்கிரமா சொல்லி முடிங்க என் மக கழுத்துல என் மருமகன் தாலி கட்டணும் " என்று அவரை அவசரப்படுத்திக்கொண்டு இருந்தார்.
எப்போதும் ரியாவையும், சந்தாவையும் அதட்டி தன் சொல் பேச்சு கேட்க வைக்கும் பரமன் கூட இவர்களை இன்று எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதற்கு காரணம் ஜெய் தான் . இந்த கல்யாணத்திற்கு பரமன் சம்மதம் சொல்லவில்லை . இது மீனுவிற்கு செய்யும் துரோகம் என்று அவர் எவ்வளவோ எடுத்தது சொல்லியும் ஜெய் ஒரே அடியாக மறுத்து விட்டான் .
"மாமா நான் ரியாவை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணின பிறகு மீனுவை கல்யாணம் செய்த்திருக்க கூடாது . அது நான் ரியாவுக்கு செய்த துரோகம் . மீனுவை கல்யாணம் செய்து இன்னோரு பெண்ணின் வாழ்க்கையும் கெட்டுபோவதற்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன். எப்போ மீனு திரும்ப கிடைக்குறாளோ அப்போ நான் அவகிட்டே பேசி புரியவெச்சு இனி என்னோட வாழ்க்கை ரியாவுடன் தான் " என்று பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வந்தவனாக ஜெய் தீர்க்கமாக சொல்லிவிட அவனிடம் பரமன் மட்டும் இல்லை குரு, ஜனனி கூட எதுக்குவம் கேட்க முடியாத நிலையில் இருந்தனர் .
மணமகன் பக்கத்தல் நின்று இருந்த சூர்யா ஜெய்யிடம் குனிந்து "ஜெய் இப்பவும் onum கேட்டு போய்டல.. மீனுவும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு ஒரு அருமையான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டீங்க... இந்த ரியாவால தான் உனக்கும் , மீனுவுக்கும் இடையில் பிரச்சனையே ஆரம்பம் ஆச்சு டா... ஆனா அதை கூட மீனு பெருசா எடுத்துக்காம உன் கூட சந்தோசமாதான் வாழ்ந்துட்டு இருந்தா.அவ எப்போ காணாம போனாலோ... உனக்கு எப்படி பழசு எல்லாம் நியாபகம் வந்துச்சோ அப்போவே எல்லாம் மாறி போய்டுச்சு டா ... சொன்னா கேளு இந்த கல்யாணத்தை பண்ணிக்காத டா.." என்று தன் நண்பனுக்கு எடுத்து சொன்னான்.
அதை எல்லாம் கேட்டு தன் நண்பனிடம் "அப்படி நான் தான் வேணும்னு நினைச்சிருந்த மீனு ஏன் நான் வேணாம்னு டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கும். முடியாதுனு சொல்லி இருக்கனும் இல்லையா. இப்போ இதை நீ என்னனு சொல்லுவ .."என்று தன் நண்பனிடம் தன் கையில் இருந்த டிவேர்ஸ் பேப்பரை காட்டி கேட்டான்.
அதை வாங்கிய சூர்யா அதில் இருந்த விபரங்களையும் கீழே இந்த விவாகரத்து பத்திரத்தில் தனக்கு இந்த விவாகரத்தில் முழு சம்மதம் என்று மீனுவின் கையெழுத்தையும் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "டேய்.. இது.. இது .. நிஜமாவே மீனு கையெழுத்து தானா ? உனக்கு யாரு இதை கொடுத்தது. கண்டிப்பா மீனு இந்த டைவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டிருக்க மாட்டா.."என்றான் தீர்க்கமாக.
அவன் கையில் இருந்த அந்த பாத்திரத்தாய் வாங்கி குருவும், ஜனனியும் பார்த்தவர்கள் அது மீனுவின் கையெழுத்து தான் என்று உறுதி செய்தனர்.
"மாப்பிள்ளை இந்த விவாகரத்து பத்திரம் யார் உங்களுக்கு அனுப்பினது . இது.. இது மீனுவோட கையெழுத்து தான் .ஆனா..." என்று அவர் அடுத்தது சொல்ல வர...
"இங்கே பாருங்க நீங்களே இந்த பேப்பரில் இருக்குறது மீனுவிட கையெழுத்துனு சொல்லிட்டீங்க,, அப்படி இருக்க அப்போ இது உண்மைத்த்தானே " என்றவன் .
"முதல்ல நான் ரியாவை கல்யாணம் செய்துக்க ரொம்ப யோசிச்சேன். என்னால ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை வீணா போய்டுமோன்னு பயந்தேன் . ஆனா இந்த டிவேர்ஸ் பேப்பர் எப்போ என் கைக்கு வந்ததோ அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன். என்னை வேண்டாம்னு சொல்லிட்டு எங்கயோ சொல்லிக்காம கொள்ளாம போய்ட்டா... ஆனா இங்கே என்கொடுங் இந்த ரெண்டு மாசமா நான் பழைய நினைவுகள் மீண்டு உலண்டுட்டு இருந்த அப்போ ரியா எனக்கு துணையா இருந்து என் மேல காட்டின அக்கறையும் , பாசத்தையும் பார்த்து தான் நான் இந்த கல்யாணத்தையே நடத்தணும்னு அவசரமா முடிவு பன்னினேன். என்னால இனி யாரோட வாழ்க்கையும் வீணாகிடக்கூடாது .அதனால் தான் இந்த் கல்யாணம் . என்னை தயவு செய்து யாரும் தப்பா நினைக்காதீங்க... முடிஞ்சா எங்க கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க ..." என்றான் .
ஜெய் பேசியதை கேட்டு அங்கிருந்த யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை அனைவரும் அமைதியாகி விட "அதான் என் மாப்பிள்ளை எல்லாம் தெளிவா சொல்லிட்டாரே இனி யாரும் எதுவும் சொல்லி என் மாப்பிள்ளை மனசை கலைக்கணும்ன்னு நினைக்காதீங்க"என்ற சாந்தா .
"ஐயரே இன்னும் என்ன அங்கே முணுமுணுத்துட்டு.... முதல்ல தாலியை எடுத்து கொடுங்க..."என்று சாந்தா ஐயரை அதட்ட.. சாந்தா போட்ட போட்டில் ஐயர் எதுவும் பேசாமல் தாலியை எடுத்து ஜெய் கையில் கொடுத்து "இந்தாங்கோ... சீக்கிரம் தாலியை கட்டிடுடுங்கோ... மாப்பிள்ளை பொண்ணை விட பொண்ணோட அம்மா தான் ரொம்ப அவசரப்படுறாங்கோ .."என்றார்.
ஐயர் கொடுத்த தாலியை வாங்கிய ஜெய் திரும்பி அங்கு நின்று இருந்த தன் அப்பா கஜேந்திரனை பார்த்தான் . பின் எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த தாலியை நொடியும் தாமதிக்காமல் ரியாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
தன் மகளுடன் திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து இருந்த ஜெய் இப்படி பழைய நினைவுகள் திரும்ப வந்ததில் தன் மகளுடனான வாழ்க்கை மறந்துவிட்டு அவள் வாழ்க்கை அழிய வேண்டும் என்று துடிக்கும் ரியா கழுத்தில் தாலி காட்டியதை குரு, ஜனனி இருவராலும் பார்க்க முடியவில்லை. அவர்களை போல தான் அங்கு நின்று இருந்த பூஜாவும் இந்த காட்சியை காண பிடிக்காமல் . "நீங்க எல்லாரும் இங்கயே இருந்து இந்த கருமத்தை பார்த்துட்டு வாங்க நான் போறேன்" என்று அங்கிருந்து கிளம்ப போனாள் . அப்போது சரியாக ஜெய் ரியா கழுத்தில் தாலி காட்டும் வேளையில் மண்டபத்திற்குள் நுழைந்த மீனு தன் கண் முன்னாள் ஜெய் ரியாவின்
கழுத்தில் தாலி கட்டியதை கண்டு அப்படியே உறைந்து போனாள் .
மீனு அங்கு வந்திருந்ததை பார்த்து பூஜா ஒட்டி சென்று "அக்காஆ... "என்று அழுதபடி மீனுவின் அருகில் ஓடிச்சென்று அவளை கட்டிக்கொண்டு "அக்கா...அக்கா... எங்க அக்கா போன இவ்ளோ நாளா.. உன்னை காணாம நாங்க எங்கே எல்லாம் தேடினோம் தெரியுமா ? நீ எங்க அக்கா போன இவ்வளவு நாளா ? "என்று பூஜா கேட்டுக்கொண்டு இருக்க ஆனால் அவள் பேசியதை கேட்கும் நிலையில் மீனு இப்பொது இல்லை .
அவள் கண்முன் வேறு ஒரு பெண்ணின் கழுத்தில் தலை கட்டி முடித்த ஜெய்யையும் , அவன் அருகில் தான் சாதித்து விட்டதாக பெருமை தாளாத முகத்தோடு ரியா மீனுவை பார்த்து "எப்படி நான் சொன்ன மாதிரியே உன் கண்ணு முன்னாடியே ஜெய்யை என் கழுத்தில் தாலி கட்ட வெக்குறேனு சொன்னது போலவே செய்துட்டேன் பார்த்தியா "என்பது போல மீனுவை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
அவள் பார்வையில் தெரிந்த ஏளனத்தாய் கவனித்த மீனு தான் ரியாவிடம் தோற்றுப்போய் விட்டோமே என்று வலியில் அழுதுகொண்டே ஜெய் எதிரே வந்து நின்றவள் "ஜெய்.. அப்போ நீங்க உண்மையாவே இந்த ரியாவை கல்யாணம் செய்துட்டீங்களா ? அப்போ என்னை விட்டு போகமாட்டேனு சொன்னது... யார் என்ன சொன்னாலும் என்னை விட்டு பிராய மாட்டேன்னு சொன்னது எல்லாம் பொய்யா?"என்றாள் அழுதுகொண்டே .
ஜெய் இப்போதுதான் மீனுவை முதல் முறை பார்த்தது போல அவளையே பார்த்துக்கொண்டு அவள் கேட்ட கேள்விக்கு பதில் கோரோல் அமர்ந்து இருந்தான் . "என்ன ஜெய் என்னை அப்படி பாக்குறீங்க... நான் யாரோ மாதிரி தெரியுறேனா இப்போ.."என்று அவன் பார்வையில் இருந்த குழப்பத்தை கண்டு கேட்டாள் மீனு .
அப்போதும் ஜெய் அமைதியாக இருக்க... அவள் அருகில் வந்த குருவும் ஜனனியும் மீனுவிடம் வந்தவர்கள் "ஏய் மீனு எங்க டி போன இவ்ளோ நாளா... எங்க கிட்டே எல்லாம் சொல்லாம எங்க டி போன.. உன்னை காணாம நாங்க எலாம் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டோம் தெரியுமா ? நீ மட்டும் இருந்திருந்தா இப்படி உன்னோட வாழ்க்கையிற் அந்த ரியா பங்கு போட்டுக்க வந்திருக்க மாட்டாளே 'என்று தன் மகள் வாழ்க்கை பறிபோவிட்டதை நினைத்து அழுதார் ஜனனி .
அவர்களிடம் ரியா தான் தன்னை இத்தனை நாள் அடைத்துவைத்து இருந்தாள் என்று மீனுவிற்கு சொல்ல தோன்றவில்லை . இத்தனை நாள் தான் ஜெய்யை காணாத போது வலித்திடாத அவள் இதயம் இன்று ஜெய் ரியா கழுத்தில் தளி கட்டி அவள் கணவனாக அமர்ந்து இருப்பதை பார்த்தது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அதே அதிர்ச்சியிலும் , இத்தனை நாள் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு இருந்த மீனு இப்பொது அவள் முன் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த ஜெய் ,ரியாவை பார்த்து அதிர்ச்சி தாளாமல் மயங்கி அப்படியே தரையில் சரியப் போக... அவள் அருகில் நின்று இருந்த ஜனனியும், பூஜாவும் மீனுவை விழாமல் தாங்கி பிடித்தனர் .
மீனு மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்துக்கொண்டு மேடையில் அமர்ந்து இருந்த ஜெய் பதறியடித்துக்கொண்டு மீனுவை நோக்கி மணமேடையில் இருந்து ஓடி வந்தவன் மீனுவை தன் மடியில் ஏந்தி "மீனு... மீனு.. ஏய் சின்னக்குட்டி.. என்னை பாரு டி.. நீ எங்கே இருக்கேன்னு தெரியாம நான் எவ்ளோ கஷ்டபட்டுட்டேன் தெறியுமா ? "என்று அவளை கட்டிக்கொண்டு ஜெய் அழ ..
அதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . மீனுவின் மீது இவ்வளவு பாசத்தை பொழியும் ஜெய் எப்படி அந்த ரியாவை திருமணம் செய்துகொண்டான் என்று புரியவில்லை .
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 49
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 49
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.