logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
"ஆமா ரியா நீ என்ன சொன்னாலும் சரிதான் . ப்ளீஸ் நீ ஓகே மட்டும் சொல்லு நான் ஹாஸ்பிடலுக்கு போகணும் " என்றவன் தன் கையில் இன்னமும் மயக்கம் தெளியாமல் இருந்த மீனுவின் முகத்தை கவலையோடு பார்த்தான்.

"சரி போ... நீ ரொம்ப பதட்ட படுற.. உனக்கு இப்போ இருந்து சரியா ரெண்டு மணி நேரம் தான் டைம் அதுக்குள்ள நீ வீட்டுக்கு வந்தாகணும் சரியா" என்றாள் திமிராக .

"ஓகே" என்று அவள் முகத்தை கூட பார்க்காமல் ஒரு வார்த்தையில் பதில் சொன்னவன் "டேய் சந்தோஷ் வந்து காரை எடு" என்று வாசலை நோக்கி வேகமாக சென்றான்.

இப்பொது எதுவும் பேச நேரம் இல்லை என்று உணர்ந்த சந்தோஷ் வேகமாக சென்று காரை எடுத்து வந்து மண்டப வாசலில் நிறுத்தினான் . மீனுவை தூக்கிக்கொண்டு வந்தவன் காரில் ஏற அவனோடு பூஜா முன் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் hospitaluku விரைந்தான் .

குரு , ஜனனி அவர்கள் பின்னால் வேறொரு காரில் கிளம்பினர் .

ஹோப்பிடல் வந்தவர்கள் மீனுவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மீனுவிற்கு டிரீட்மென்ட் பார்க்க ஆரம்பித்தனர். நேரம் வேறு சென்று கொண்டே இருந்தது . டாக்டர் வந்து எதுவும் சொல்லவில்லை . ரியா சொன்ன நேரம் முடிய இன்னும் அரை மணி நேரமே இருந்தது. அடிக்கடி தன் வாட்சை பார்த்துக்கொண்டு இருந்த ஜெய்யை அனைவரும் பார்த்தனரே ஒழிய எந்த கேள்வியும் கேட்கவில்லை . முதலில் மீனுவிற்கு என்ன ஆனது என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் பிறகு மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்துவிட்டனர்.

2 மணி நேரம் முடிய 5 நிமிடம் இருக்கும்போது எமெர்ஜென்சி அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் "பேசண்ட் மீனுவோட ரிலேஷன் யாரும் இங்கே இருக்கீங்களா? " என்று சுற்றிலும் பார்த்தார்.

ஜெய் அவசரமாக அவரிடம் வந்தவன் "சார் நான் மீனுவோட ஹஸ்பண்ட் ஜெய் " என்றான் .

சுற்றி இருந்தவர்கள் அவனை பார்க்கும் பார்வையை புரிந்தவன் எதுவும் பேசவில்லை அவர்களிடம் .

ஜெய்யை பார்த்தவர் "முதல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜெய் . உங்க மனைவி மீனு கர்ப்பமா இருக்காங்க " என்று அவன் கையிற் பிடித்து வாழ்த்து கூறினார்.

அவர் சொன்னதை கேட்டு ஜெய் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் மனநிலையில் இருந்தான் . ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் "தேங்க்ஸ் டாக்டர் "என்றான் .

"உங்க மனைவி ரொம்ப வீக்கா இருக்காங்க. அவங்க சாப்பிட்டே பல நாள் அழகிற்கும் போல.. ஒரு கர்ப்பமா இருக்க பொண்ணை இப்படி தான் பட்டினி போட்டு கஷ்டப்படுத்துவீங்களா? நீங்க உண்மையாவே அவுங்க புருஷன் தானா ? இப்படி அந்த பொண்ணை கஷ்டப்படுத்தி வெச்சிருக்குற உங்களை நியாயமா நான் போலீசில் தான் பிடிச்சு கொடுக்கணும் " என்று ஜெய்யிடம் கோபமாக பேசினார் அந்த டாக்டர்.

அவர் கோபம் நியாயம் தான் ஆனால் ஜெய்யால் எதுவும் அவரிடம் பேசமுடியவில்லை. ஒரு பக்கம் மீனு கர்பம் அவனுக்கு சந்தோசத்தை அளித்தாலும் . மறுபுறம் அவளை இத்தனை நாள் கடத்தி வைத்து கஷ்டப்படுத்திய ரியாவை நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் வந்தது .

டாக்டரிடம் தன் கவனக்குறைவிற்காக மன்னிப்பு கேட்டவன் "இனிமேல் நான் மீனுவை பத்திரமா பாத்துக்கிறேன் டாக்டர் , இப்போ என் மீனு எப்படி இருக்கா ? அவளுக்கு வேற எதுவும் பிரச்சனை இல்லையே " என்றான்.

"அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க... அதனால் தான் இந்த சமயத்துல அவங்களால சமாளிக்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை . ஒரு ரெண்டு நாள் டிரீட்மென்ட் கொடுத்து அவங்களை சரியா கவனிச்சாலே போதும் அவங்க குணம் ஆகிடுவாங்க. அதுக்கு அப்பறோம் நீங்க தான் அவங்களை கவனமா பார்த்துக்கும் . அவங்களுக்கு இந்த நேரத்தில் தான் உங்க அரவணைப்பு தேவைப்படும் " என்றார்.

"சரிங்க டாக்டர் நான் பார்த்துகிறேன் "என்று அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஜெய்யின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது . அதை எடுத்து பார்க்க ரியா தான் அழைத்து இருந்தாள். அட்டென்ட் செய்து காதில் வைத்தவன் அமைதியாக இருக்க... "என்ன ஜெய் உன் காதலியை பார்த்ததும் நம்ம டீலிங்கை மறந்துட்டியா? நான் சொன்ன ரெண்டு மணி நேரம் முடிஞ்சு 5 நிமிஷம் ஆச்சு . இன்னும் அங்கே இருந்து கிளம்பாம என்ன செய்ற... உன்னோட முன்னாள் பொண்டாட்டியை பார்த்ததும் நான் போட்ட கண்டிஷனை மறந்துட்டியா?" என்றாள் .

"இதோ இப்போ கிளம்புறேன் ரியா வந்துடறேன். நான் எதையும் மறக்கல .." என்று பல்லை கடித்துக்கொண்டு சொன்னவன் .

ஜனனி , குரு இருவரிடமும் வந்தவன் "மாமா என்னை மன்னிச்சிருங்க.. மீனுவை ரியாதான் கடத்தி வெச்சிருக்கான்னு எனக்கு தெரிஞ்சதும் அவளை காப்பாற்ற எவ்வளவோ நான் முயற்சி செய்தேன். ஆனா என்னால மீனுவை கண்டுபிடிக்கவே முடியலை என்னால... நான் அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்த அப்போ ரியாவே என் வீடு தேடி வந்தா ..." என்று அன்று நடந்ததை தன் குடும்பத்தாரிடம் சொல்ல ஆரம்பித்தான் ஜெய்

ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான் ஜெய் மீனுவை எப்படி கண்டுபிடிப்பது. ரியா மீனுவை எங்கே அடைத்து வைத்து இருப்பாள் என்று யோசித்து யோசித்து அவன் மூளை குழம்பிப்போகும் நிலைமைக்கு வந்துவிட்டது .

"என்ன ஜெய் உன் பொண்டாட்டியை காணோம்னு ரொம்ப குழம்பிப் பொய் இருக்க போல..." என்று கேட்டுக்கொண்டே அவன் வீடு படிகளில் ஏறி உள்ளே நுழைந்தாள் ரியா.

"ஏய்... நீயா!! நீ துக்காக என் வீட்டுக்கு வந்த.. முதல்ல அநேக இருந்து வெளியே போ..." என்று கத்திய ஜெய் "வாட்ச்மான் ...வாட்ச்மென் அங்கே என்ன பங்கிட்டு இருக்கீங்க.. வீட்டுக்குள்ள யார் வந்தாலும் விட்டுருவீங்களா? " என்று கத்தினான் .

"ஜெய்... ஜெய்... பொறுமை.. பொறுமையா இரு.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற .. என் மேல கோபப்படுறதுனால எதுவும் மாறிடபோறது இல்லை."என்றவள் கூலாக வந்து சோபாவில் அமர்ந்தவள் "உக்காரு ஜெய் " என்று அவனை தனக்கு எதிரே இருந்த சோபாவை காட்டி அமர சொன்னாள் .

"ஏய் முதல்ல எழுந்திரு... என் வீட்டுக்குள்ள உன்னை விட்டதே தப்பு முதல்ல எழுந்து வெளியே போ.." என்று கோபம் தாளாமல் கர்ஜித்தான்.

"ஜெய் எதுக்கு இவ்ளோ கோபம் என்கிட்டே கோபித்து என்னை வெளியே அனுப்பிட்டா மீனுவை அப்பறோம் நீ பார்க்கவே முடையது. உனக்கு கோபம் வர மாதிரியே எனக்கும் கோபம் வரும் . எனக்கு கோபம் வந்த நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்றவள் ."மீனுவை நீ திரும்ப பார்க்கணும்னு நினைச்சா பேசாம உக்காரு" என்றாள் திமிராக.

ரியா மீனுவின் பெயரை சொன்னதும் கண்கள் மூடி கோபத்தை அடக்கியவன் வந்து சோபாவில் அமர்ந்தவன் "என் மீனுவை நீ தான் கடத்தி வெச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும் . சொல்லு என் மீனுவை எங்கே கடத்தி வெச்சிருக்க? அவளை கடத்திக்கொண்டு போய் வெச்சு என்ன செய்தே.."என்றான் கோபமாக .

"ஹே ஹே... ரிலாக்ஸ் ஜெய் . மீனுவை நான் கடத்தி வெச்சிருக்கிறது உண்மைதான் ஆனா அவளை நான் எதுவும் செய்யலை . அவ பத்திரமா என்னோட இடத்துல பாதுகாப்பா இருக்கா . நீ அவளை பத்தி ஒரி பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை . நீ அவளை பார்த்துக்குறதியா விட அவளை நான் என் அடியாளுங்களை வெச்சு 24 மணி நேரமும் கண்காணிச்சிட்டு தான் இருக்கேன்" என்றாள் .

"இப்போ எதுக்காக நீ மீனுவை கடத்தி வெச்சிருக்க... அவளை கடத்தி வெச்சு நீ என்ன செய்ய போற... உனக்கு என்ன வேணும் சொல்லு.. என் கிட்டே இருக்க காசு பணம் வேணுமா ? என்னோட சொத்துக்கள் எல்லாம் வேணுமா ? இல்லே வேற ஏதும் எதிர் பார்க்குறியா? சொல்லு ரியா . நீ எது கேட்டாலும் நான் அதை உனக்கு கொடுக்க தயாரா இருக்கேன் . சொல்லு என்ன வேணும் " என்றான் அவளிடம் இறங்கி வந்து .

"இதெல்லாம் நீ அங்கு எழுதி கொடுக்கணும்னு எந்த அவசியமம் இல்லை ஜெய் . நான் கேக்குற ஒண்ணே ஒன்னை மட்டும் நீ எனக்கு தந்துட்டா இதெல்லாம் எனக்கு தானாவே வந்து சேர்ந்திடும்" என்றாள் .

"சொல்லு என்ன வேணும் சொல்லு நான் நீ கேட்டதை எல்லாம் தர தயாரா இருக்கேன். அதுக்கு பதிலா எனக்கு என் மீனுவை திருப்பி கொடுத்திரு ப்ளீஸ்"என்றான் ஜெய் .

"மீனுவை நான் வெளியே விடுறேன் ஆனா அதுக்கு பதிலா நீ என் கழுத்துல தாலி கட்டி என்னை ஊரறிய உன் மனைவியா அறிமுகம் செய்யணும். இதை நீ செய்தா நான் மீனுவை ரிலீஸ் பண்றேன் " என்றாள் கால் மேல் கால் போட்டுகொண்டு அமர்ந்து திமிராக ஜெய்யை பார்த்து .

அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஜெய் "ஏய் என்ன டி சொன்ன... என் மீனு இருந்த இடத்துல உன்னை வெச்சு பார்க்க சொல்றியா... ஒரு தேவதை இருந்த இடத்தில உன்னை... குப்பையை வெச்சு பார்க்க சொல்றியா.. " என்று ஆக்ரோஷமாக எழுந்தவன் ரியாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்து அவள் கையை பிடித்து தர தரவென இழுத்து வாசல் நோக்கி சென்றான்.

அப்போது திடீர் என்று அவன் வீடு வாசலில் வந்து ஒரு ஆம்னி வேன் நின்றது . அதை பார்த்ததும் ஜெய் அப்படியே நிற்க.. அவன் பிடித்து இருந்த தன் கையை உதறிய ரியா.

தன் கையை தட்டிக்கொண்டே அவன் முன் வந்து நின்றா ரியா "என்ன டா நம்ம வீட்டு வாசல்ல வந்து சம்மந்தமே இல்லாம ஒரு வேன் வந்து நிக்குதேன்னு பாக்கறியா ? நீ இப்போ சொன்னியே உன் தேவதை உன் தேவதை தான் அந்த வேனுக்குள்ள இருக்கா பாக்கறியா? " என்றவள் தன் கையை மேலே உயர்த்த ...

அந்த வேனிற்குள் மீனு இருப்பதாய் ரியா சொன்னதை கேட்டு அதிர்ந்த ஜெய் அடுத்த நொடி அந்த வேனை நோக்கி ஓடினான்.

ரியாவின் கை அசைவில் வேன் கதவு திறக்கப்பட அதன் உள்ளே மீனு கை கால்கள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் போடு ஒட்டிய படி வேனிற்குள் கீழே படுத்து கிடந்தாள் . அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்த ஜெய் அப்படியே விக்கித்துப்போனவன் மீனு..... என்று அலறியபடி வேனை நோக்கி ஓட... அவன் வேனிற்கு அருகில் செல்வதற்குள் அந்த வேன் கதவு மூடப்பட்டு அந்த இடத்தை விட்டு சீறிபாய்ந்தது .

இதை சற்றும் எதிர்பாராத ஜெய் வேனின் பின்னால் ஓடினான் , ஆனால் அவன் பார்வையில் இருந்து அந்த வேன் சிட்டாக பறந்து சென்று காற்றோடு காற்றாய் மறைந்தது புழுதிக்குள் .

 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 50.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top