logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
சோபாவில் செய்வதறியாமல் அமர்ந்து இருந்தான் ஜெய். "சொல்லு ரியா நான் என்ன செய்யணும் உனக்கு என்ன வேணும் .. சொல்லு . நான் என்ன செய்தா என் மீனுவை நீ ரிலீஸ் பண்ணுவ சொல்லு " என்று அவளிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான் ஜெய்.

அதை ரசித்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தவள் "ரொம்ப சிம்பிள் ஜெய் , நான் ஏற்கனவே சொன்னது தான் . நீ ஊரறிய என்னை கல்யாணம் செய்து . என்னை உன்னோட அதிகாரபூர்வ மனைவியா அறிவிக்கும். நீ எப்போ என் கழுத்தில் எல்லார் முன்னாடியும் தாலி கட்டி உன் மனைவி ஆகிக்கிறியோ அடுத்த நிமிஷம் மீனுவை நான் ரிலீஸ் பண்ணிடுவேன்" என்றாள் .

"ரியா ப்ளீஸ் என் மீனு இருந்த இடத்தில என்னால வேற யாரையும் வெச்சு பார்க்க முடியாது . அதை தவிர வேற என்ன வேணும்னாலும் கேளு ரியா நான் செய்றேன் " என்றான் அவளை பார்த்து .

"இல்ல ஜெய் எனக்கு நான் கேட்டது தான் வேணும் . நீ நல்லா பொறுமையா யோசிச்சு முடிவு சொல்லு ... ஆனா நீ தாமதிக்குற ஒவ்வொரு நிமிஷமும் மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்றியே உன் மீனு... உன் மீனுன்னு... அவ அங்கே கஷ்டப்பட்டது இருப்பா" என்று படு சாதாரணமாக ஜெய்யை மிரட்டிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லப்போனாள் .

"நான் உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதிக்குறேன்" என்று அடுத்த நொடி ஜெய்யின் குரல் அவள் காதுகளை குளிர்வித்தன..

அதை கேட்டதும் "குட் ஜெய் இப்படி தான் தாக்கு டக்குன்னு முடிவு எடுக்கணும்" என்றவள் .

தன் தந்து பேகில் இருந்து மீனு கையெழுத்து போட்ட விவாகரத்து பாத்திரத்தை வான் முன் நீட்டி "இதை படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போட்டு கொடு. உனக்கும் மீனுவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு உன் ஆசை மீனுவே நான் கேட்டதும் கையெழுத்து போட்டு கொடுத்துட்டா.. அவளை மாதிரியே நீயும் எந்த கேள்வியும் கேட்க்காம கையெழுத்து போட்டு கொடுத்திரு " என்றாள் ரியா.

அவள் நீட்டிய டிவேர்ஸ் பேப்பரை வாங்கியவன் அதில் மீனு போட்டிருந்த கையெழுத்தை பார்த்து அதிர்ச்சியானான். அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. உண்மையாகவே மீனு தான் கையெழுத்து போட்டிருக்கிறாளா? என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது . அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சியையும் குழப்பத்தையும் பார்த்த ரியா "என்ன ஜெய் நம்ப முடியலையா? அது மீனு போட்ட கையெழுத்து தான் " என்றவள்.

"ம்ம்.. சீக்கிரம் இதில் கையெழுத்து போடு... அடுத்த முகுர்த்தத்திலேயே உனக்கும் எனக்கும் கல்யாணம் . நீ என் கழுத்தில் தாலி காட்டி முடித்த அடுத்த நொடி மீனு உன் கண்ணு முன்னாடி இருப்பா. அதுக்கு நான் கேரண்டி " என்றாள் .

ஜெய்யிற்கு இப்பொது ஏசிப்பதற்கு நேரம் இல்லை அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மீனு தான் கஷ்டப்படுவாள் . அவளை இந்த நிலையில் பார்த்த பின்னும் இந்த பாத்திரத்தில் கையெழுத்திட்டு மீனுவை காப்பற்றுவதை தவிர ஜெய்ற்கு வேறு வழியே இல்லை.

யோசிக்காமல் அந்த பாத்திரத்தில் கையெழுத்து போட்டு ரியாவிடம் நீட்டினான் . அதை வாங்கி பார்த்த ரியா மிகவும் சந்தோஷப்பட்டாள் . ஜெய் அருகில் வந்தவள் அவன் கண்ணத்தை கிள்ளி "இவ்ளோ சீக்கிரம் நீங்க ரெண்டு பேருமே என்னோட வேலையை சுலபமா முடிச்சு கொடுத்துட்டீங்க... நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் " என்றவள் .

"சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் வந்திரு என் கழுத்தில் தாலி கட்ட .. அப்பறோம் ரெண்டு பெரும் எங்கே ஹனிமூன் போகலாம்னு முடிவு பண்ணிக்கலாம் என்றவள் அங்கிருந்து கிளம்பினாள் .

அதன் பிறகு தான் நடந்த அனைத்தும் அங்கிருப்பவர்களுக்கு தெரியுமே சொன்னது போல ஜெய் ரியா கழுத்தில் மூன்று முடிச்சிட்டதும் தான் மீனுவை அவள் அனைவர் கண்களிலும் காட்டினாள்.

நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் சொன்ன ஜெய் தான் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தேன் என்று விலகியதும் அனைவர்க்கும் ரியாவின் மீது ஆத்திரம் தான் வந்தது . இப்படி ஒரு கேட்ட எண்ணம் பிடித்தவளாக ரியா இருப்பதை நினைத்து அனைவரும் அவளை வெறுத்தனர் . அங்கே அவர்களோடு சேர்ந்து நடந்த அனைத்தையும் கேட்ட பரமனும் தன் மகளின் குணத்தை எண்ணி கவலை அடைந்தார்.

அப்போது மீண்டும் ஜெய் போனிற்கு ரியா அழைத்திருக்க ... அதிக பார்த்தவன் " நான் கிளம்புறேன் மீனுவை பத்திரமா பாத்துக்கோங்க " என்றான் .

"மாப்பிள்ளை நீங்க எங்கையும் போக வேணாம் இங்கயே மீனு கூட இருந்த என் பொண்ணை நான் சமாளிச்சுகிறேன். நீங்க அவ கழுத்தில் தாலி கட்டினதை மறந்திருங்க ... அவ கழுத்தில் நீங்க கட்டின தாலி அவ கையாலேயே கழட்டி ஏறிய வைக்குறேன்" என்று பரமன் ஆவேசமாக கூற ..

"இல்லை வேணாம் மாமா இது என்னோட பிரச்சனை நானே பார்த்துகிறேன். நீங்க வீனா இதில் தலையிட்டு உங்களுக்கும் உங்க மகளுக்கும் இடையில் பிரச்சனையை வளர்த்துக்க வேணாம்" என்றவன் மீனுவை ஒரு முறை பார்த்தது விட்டு வெளியே வந்தவன்.

"என் மீனு கண்விழிக்கும் குணமாகி வீடு திரும்புறதுக்குள்ள நான் எல்லா பிரச்சனையையும் சரி செய்துட்டு அவளை பார்க்க வந்துருவேன் அவளோட ஜெய்யா ,அவளோட புருஷனா இங்கே இருப்பேன்" என்றவன் அங்கிருந்து ரியாவை சந்திக்க கிளம்பினான்.

ஜெய் கிளம்பிய சிறிது நேரத்தில் மீனு மெல்ல கண் விழித்தாள் . அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்ததும் முதலில் தேடியது ஜெய்யை தான் . அவள் அருகி அமர்ந்து இருந்த ஜனனி தன் மகள் கண் விழித்து பார்தததும் சந்தோஷமடைந்தவர் .

"மீனு ஒரு வழியா கண்ணு முழிச்சுட்டியா! உனக்கு என்னவோ ஏதோன்னு நாங்க பயந்தே போய்ட்டோம் மீனு " என்றார் .

"அம்மா ஜெய் எங்கே? அவர் எங்கே ம்மா... அவருக்கும் அந்த ரியாவுக்கும் உண்மையிலேயே கல்யாணம் ஆகிடுச்சா ? ஜெய்க்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பிடுச்சா ? அதனால் தான் என்னை மறந்துட்டு அந்த ரியாவை கல்யாணம் செய்துகிட்டாரா? சொல்லுங்க ம்மா... ஏன் எதுவுமே பேசாம நிக்குறீங்க.. என்ன ஆச்சு ? நான் இல்லாத இந்த நாட்களில் என்ன தான் நடந்தது " என்று அழுதுகொண்டே கேட்டாள் மீனு .

அப்போது தன் தோழி கிடைத்த செய்த கேட்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்த மிருதுளா மீனுவை வந்து பார்த்ததும் ஒட்டி வந்து அவளை கட்டிக்கொண்டாள். " ஏய் மிரு ... வந்துட்டியா .இங்கே என்ன தான் டி நடக்குது. ஜெய்க்கு பழைய நியாபகம் எல்லாம் வந்திருச்சா ... அவருக்கு நான் யாருனு மறந்து போய்டுச்சா? அதனால தான் அந்த ரியாவை கல்யாணம் செய்துகிட்டாரா? உனக்கு ஏதும் தெரியுமா டி.." என்று தன் தோழியை உலுக்கினாள் .

"ஏய் மீனு நீ துக்கு டி இப்படி எமோஷன் ஆகுற.. முதல்ல கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க பாரு டி.. நீ இப்போ ஒத்தை உசிர் இல்லை உன் வயித்துல உன்னை நம்பி இனொரு உயிர் இருக்கு டி.." என்று தாய்மைக்கே உரிய பாசத்தோடு தன் மகளை ஆறுதல் படுத்த எண்ணினார் ஜனனி .

அவர் சொன்னது கேட்டு உரைந்து போய் அவரை பார்த்தவள் "அம்மா என்ன சொல்றிங்க .. நான்... நான்... அம்மா ஆக போறேனா !! " என்று தன் வயிற்றை தடவி ஆனந்தப்பட்டவள்.

" மிரு நான் கர்பம் யிருக்குறது ஜெய்க்கு தெரியுமா? அவர் என் வயித்துல அவரோட வாரிசு வளரூரத்திற் நினைச்சு சந்தோஷப்பட்டாரா?" என்றால் ஒருவித எதிர்பார்ப்போடு .

"மீனு நான் இப்போதான் டி இங்கே வந்தேன் . ஜெய் இவ்வளவு நேரம் இங்கேதான் இருந்தாரா? எனக்கு தெரியலையே " என்ற மிருதுளா ஜனனியை பார்க்க...

அவர் சற்று வாடிய முகத்தோடு "இவ்வளவு நேரம் மாப்பிள்ளை இங்கே தான் இருந்தாரு . அந்த ரியா போன் செய்ததும் கிளம்பிட்டாரு" என்றார்.

அதை கேட்டதும் மீனுவின் முகம் வாடியது "அம்மா அவருக்கு நான் கர்பமா இருக்கருங் விஷயம் தெறியும் தானே.. அவர் என்ன சொன்னார் " என்றாள் ஆர்வமாக.

"டாக்டர் வந்து விஷயத்தை சொன்னதும் அவர் முகத்துல அவ்ளோ சந்தோசம் மீனு . ஆனா அடுத்து அவரு மாப்பிள்ளையை திட்டி நீங்க உங்க மனைவியை சரியா கவனிச்சுக்கிறது இல்லைனு சத்தம் போட்டதும் அவருக்கு அந்த ரியா மேல தான் கோபம் வந்துச்சு . அவளும் விடாம மாப்பிள்ளையை போன் பண்ணி வரசொலிட்டு இருந்தா . இப்போ தான் நீ கண்ணு முளிக்குறதுக்கு முன்னே மாப்பிளை கிளம்பிப்போனாரு " என்றார் குரு .

"அப்பா ஜெய் வேற ஏதும் சொல்லலியா " என்றாள் .

"நீ கண்ணு முழிச்சு குணமாகி வரதுக்குள்ள அவர் உன்கூட இருப்பேன்னு சொன்னாரு ம்மா..." என்று மீனுவின் தலையை ஆறுதலாக தடவிக்கொடுத்தார்.

மீனுவிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று யாருக்கும் எதுவும் புறியவில்லை . அவள் மனம் முழுவதும் ஜெய் நிறைந்து இருக்க... அவள் விழி முழுவதும் ஜெய்யை எதிர்பார்த்து காத்துக்கிடந்தது .

ரியாவை சந்திக்க சென்ற ஜெய் மீனுவை பார்க்க அவள் கணவனாக திரும்ப வருவானா?

 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 51
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top