- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
கமல் நீட்டிய போனை வாங்கி பார்த்த ரியாவும், அவள் அம்மா சாந்தாவும் மொபைலில் ஓடிய விடியோவை பார்த்து அதிர்ந்தனர்.
ஐயர் கெட்டி மேளம்.. கெட்டி மேளம் ... என்று வாத்தியகோஷ்டிகளை பார்த்து சொன்னவர் . ஜெய் கையில் தாலியை நீட்ட... ஜெய்யோ அதை இருக்கியா முகத்தோடு வாங்கியவன் ஒரு முறை ரியாவின் முகத்தை பார்த்துவிட்டு அவள் கழுத்தருகில் தாலியை கொண்டு செல்வது போல சென்றான்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் ரியாவின் பின்னால் இருந்து அவள் முகத்தின் இருபக்கமும் ஒரூ கை நீல... ஜெய் அந்த கையில் தாலியை கொடுத்தான்.
தாலியை வாங்கிய மறுகணம் தனக்கு மேலே மேடையில் வைத்து இருந்த மொபைலை நிமிர்ந்து பார்த்த கமல் சிரித்தவன். பின் மேடையில் சாந்தாவின் அருகில் நின்று இருந்த ரியாவின் அப்பா பரமனை பார்த்து தாலி கட்ட சம்மதம் கேட்டு தலையை ஆட்ட... பரமனும் சந்தோசமாக கட்டுங்க என்று யாருக்கும் தெரியாமல் சம்மதம் சொன்னார். பிறகு ரியாவின் கழுத்தில் பின் இருந்து தாலி கட்டினான்.
ஜெய் வெறுமனே ரியாவின் கழுத்தை சுற்றி தாலி கட்டுவது போல பாவனை தான் செய்தான். ஆனால் தாலியை வாங்கி ரியா கழுத்தில் முழுசாக மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கினான்.
அந்த விடியோவை பார்த்துக்கொண்டு இருந்த சாந்தா அதற்குமேல் அதை பார்க்க முடியாமல் "ஐயோ.. ஜயோ இப்படி என் பொண்ணு வாழ்க்கையை அந்த மனுஷன் தெரிஞ்சே நாசம் பண்ணிட்டாரே... இப்படி யாரு என்னனு தெரியாத ஒருத்தனை கல்யாணம் செய்துட்டு என் பொண்ணு தான் கஷ்டப்படப்போறா... " என்று புலம்பினார் சாந்தா.
"ஏய் மாப்பிள்ளையை மரியாதையை இல்லாம பேசாதே டி... அவரு நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்காரு அதை முதல்ல நியாபகம் வெச்சுக்கோ.." என்றபடி அங்கே பரமனும் அவருடன் குருவும் வந்தனர்.
அவரை பார்த்ததும் கொதித்தெழுந்த சாந்தா "எதுக்காக இப்படி பண்ணுணிங்க... நம்ம பொண்ணு வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டிங்களே... இவன் யாரு என்னன்னே தெரியலை .இவனை எப்படி நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொன்னிங்க... என் பொண்ணை பாருங்க... அவ எப்படி அதிர்ச்சியாகி நிக்குறான்னு.. இதெல்லாம் யாரால.. உங்களளையும், இதோ பண்றது எல்லாம் பங்கிட்டு எதுவும் தெரியாம நிக்குறானே இந்த ஜெய் இவனாலையும் தான் வந்துச்சு" என்று பரமனிடம் சண்டையிட்டார் சாந்தா.
"சாந்தா நீ நல்லா யோசிச்சுப்பாரு . நம்ம பொண்ணுக்கும் ஜெய்யிக்கும் கல்யாணம் நடந்து இருந்தா அது அவளோட பிடிவாதத்துனால தான் நடந்திருக்குமே ஒழிய... அவங்க ரெண்டு பெருகும் புடிச்சு இந்த கல்யாணம் நடந்திருக்காது. ஏன்னா உன் பொண்ணு ஜெய் மாப்பிள்ளையை பிளாக் மெயில் பண்ணி ... மீனுவை கததி வெச்சு இந்த கல்யாணத்துக்கு அவரை வற்புறுத்தி இருக்கா... இப்படி கட்டாய கல்யாணத்தால அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகத்துல தான் வாழ முடியும் . நீயே சொல்லு கேவலம் சொத்து பாதுகாக்க உன் பொண்ணு ஜெய்
மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்க இவ்வளவையும் பண்ணி இருக்கா... ஏன் நம்ம கிட்டே இல்லாத சொத்துக்களா... என்னோட ஒரே பொண்ணு தானே இவ... நான் சம்பாதிச்ச மொத்த சொத்துக்களும் ரியாவுக்குத்தானே சொந்தம். நமக்கு அப்பறோம் எல்லாமே அவளுக்கு தானே.. அப்படி இருக்க அப்போ இந்த வீட்டுக்கும் ஜெய் மாப்பிள்ளை கிட்டே இருக்க காசுபணத்துக்கும் ஆசை பட்டு அவ இந்த மாதிரி எல்லாம் ஒரு கேட்ட எண்ணம் புடிச்சிட்டு நடந்துகிட்டு இருக்கா.. அவளை பெத்த கடமைக்கு ரியாவை அதட்டி அவளுக்கு நாம தானே நல்ல புத்தி சொல்லணும். ஆனா நீ என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு நம்ம பொண்ணு வாழ்க்கை அழியுறதுக்கு நீயே அவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்க... ச்சீ..." என்று பரமன் தன மனைவியும் மகளும் செய்து வந்த தப்பை எல்லாம் சுட்டி காட்டவே ...
"எங்க... என்ன இப்படி எல்லாம் சொல்றிங்க... எனக்கு நம்ம பொண்ணு அவளுக்கு பிடிச்சவனோட வாழணும்னு தான் ஆசையே ஒழிய அவன்கிட்டே இருக்க பணம் காசு எல்லாம் பெருசாவே தோணலைங்க... எனக்கு என் பொண்ணு நல்லா இருக்கனும். அதுவும் அவ விருப்பப்பட்டவனை கல்யாணம் செய்துட்டு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதாங்க " என்றவர் . ரியாவிடம் திரும்பி "ஏண்டி ரியா அப்பா சொல்றது எல்லாம் நிஜமா நீ மீனுவை கடத்தி வெச்சு ஜெய் மாப்பிள்ளையை பிளாக் மெயில் பண்ணுனியா ... அவர் கிட்டே இருக்க காசு பணத்துக்கும், இந்த வீட்டுக்காகவும் தான் நீ அவரை கல்யாணம் செய்துக்க நினைச்சியா ? அப்போ உனக்கு அவர் மேல விருப்பம் இல்லையா ? அவர் கிட்டே இருக்க வசதிக்காக தான் அவரை கல்யாணம் செய்துக்க இத்தனையும் பண்ணுனியா ? சொல்லு டி... ஏன் நான் கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லாம இருக்க... சொல்லு " என்று அவள் தோளை பிடித்து சாந்தா உலுக்கினார்.
அதுவரை அமைதியாக இருந்த ரியா கோபம் எல்லையை கடந்தவளாக , தான் போட்ட அனைத்து பிளானும் இப்படி வீணாய் போய்விட்ட ஏமாற்றத்தினாலும். தன் தாய் தன்னை கேள்வியால் துளைத்தெடுக்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் குறுகிப்போனவள் . தன் தோளில் இருந்த சாந்தாவின் கையை தட்டி விட்டவள் "ஆமா.. ம்மா... ஆமா ... நீங்க சொன்னது அம்மா சொன்னது எல்லாம் நிஜம் தான் எனக்கு ivanai விட இந்த வீடு இவன் கிட்டே இருக்க இந்த சொத்து தான் பிடிச்சிருக்கு ... எனக்கு இது எல்லாம் வேணும். நான் அனுபவிக்க வேண்டிய இந்த வாழ்க்கையை அந்த மீனு அனுபவிக்கிறது பக்க எனக்கு பொறாமையா இருக்கு... அதனால் தான் அவளை கடத்தி வெச்சு ஜெய்யை கல்யாணம் செய்துக்க நான் திட்டம் போட்டேன். ஆனா... ஆனா... அதை எல்லாத்தையும் இவன் கெடுத்த்துட்டான் " என்று அவள் முன்பு நின்று இருந்த கமலை பார்த்து சொன்னவள் நேராக அவனிடம் வந்து ..
"டேய் யாரு டா நீ.. என் அப்பாவும் இவனும் வந்து என் கழுத்துல தாலி கட்ட சொன்னா என்னை பத்தி எதுவும் தெரியாம ... நான் யாருன்னு புரிஞ்சுக்காம என் கழுத்துல நீ தாலி கட்டி இருக்க... நீ என்ன முட்டாளா ?" என்றாள் அவன் சட்டையை பிடித்து உலுக்கி.
தன் சட்டையில் இருந்த ரியாவின் கையை பிரிக்காமல் அவள் கையை ஆதரவாக பற்றிய கமல் "யாரு சொன்னது உன்னை பத்தி எனக்கு தெறியாதுனு... உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் . உனக்கும் ஜெய்யுக்கும் முதல்ல கல்யாணம் பிஸ் ஆனா நாளில் இருந்து எனக்கு உன்னை தெரியும் . முதல்ல நீ ஜெய்யோட நிச்சயதார்த்தம் பண்ணிக்க இருந்த அப்போ நீ தான் ஜெய்யை கல்யாணம் செய்துக்க போற பொண்ணுன்னு தெரியாமையே எனக்கு உன்னை பிடிச்சு போயிருச்சு . உன்கிட்டே என் மனசுல உள்ளதை சொல்ல நினைச்ச அப்போ தான் நீயும் ஜெய்யும் கல்யாணம் செய்துக்க போறதே எனக்கு தெரியும். முதல்ல ஷாக் ஆஹ் தான் irunthathu எனக்கு. ஆனா என்ன செய்ய எனக்கு கொடுத்துவைகளை இந்த a;அங்கு தேவதையை கல்யாணம் செய்துக்கணு நான் நினைச்சேன் " என்று அவளை பார்க்க...
ரியா அவனின் இந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள் அவன் கையை உதறிவிட்டு அவன் சட்டையில் இருந்து கையெடுத்தாள் ." என்ன டியர் கதையை முழுசா கேட்காம விலகிட்டே... பரவால்ல நான் சொல்றேன் கேளு "என்றவன் ஜெய்யை பார்க்க...
"நானே சொல்றேன் கமல் "என்ற ஜெய் ரியாவை பார்த்து "எப்போ நான் மீனு கழுத்தில் தாலி கட்டி எனக்கு மனைவி ஆகிகிட்டேனோ.. அப்போவே கொஞ்ச நாளில் என் உடம்பு குணம் ஆகி நான் ஆபீஸ் போன அப்போ கமல் என்னை என் ஆஃபிஸில் மீட் பண்ண வந்திருந்தார் . நாங்க ரெண்டு பேருமே நல்ல பிசினஸ் பார்ட்னர்ஸ். என்கிட்டே தயக்கமே இல்லாம வந்து எனக்கு ரியாவை பிடிச்சிருக்கு. நான் அவளால் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்னு சொன்னான். நானும் நடந்த எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்லி நீ எந்த மாதிரி நடந்துக்குவே.. உன்னோட மனசு எப்படி பத்தாதுன்னு எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லி இருந்தேன் . நீ எப்படி இருந்தாலும் உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு ஒரே முடிவா இருந்தான் கமல் . சரி நேரம் வரும்போது நான் உன்கிட்டேயேயும் , உன் அப்பாகிட்டேயும் இது பத்தி பேசலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள என்ன என்னவோ நடந்து போயிருச்சு. நீ எப்போ என் வீட்டுக்கு வந்து என்னை கல்யாணம் செய்துக்கணும்னு பிளாக் மெயில் பண்ணிட்டு போனியோ... அப்போவே நான் கமலுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன் . முதல்ல நீ இந்த அளவுக்கு இறங்குவேன்னு அவன் எதிர்பாக்கல.. உன்னை பத்தி நினைச்சிருந்த அவன் எண்ணத்தை அந்த சூழ்நிலையும் மாத்திக்கவே இல்லை அவன் . அவன் ஒரு முடிவோட உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னான் . .அதுக்கு அப்பறோம் தான் உன்னை பத்தி எடுத்
து சொல்லி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினேன். அவரும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அதுவே போதும்னு சொல்லி நாங்க போட்ட பிளானுக்கு சம்மதம் சொல்லிட்டாரு " என்று நடந்த அனைத்தையும் எடுத்து கூறினான் ரியாவிடம் பொறுமையாக .
அனைவரும் சேர்ந்து தன்னை முட்டாள் ஆக்கிவிட்டார்கள் என்று அவளுக்கு ஆத்திரமாக வந்தது அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தினாள் ரியா "பின் ஜெய்யை பார்த்தவள் நீ போட்ட பிளான் படி இவனை என் தலையில் கட்டிட்டே.. ஆனா உனக்கும் எனக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்திருக்கே... அப்படி இருக்க அப்போ இந்த கல்யாணம் எப்படி செல்லும் " என்றாள் அந்த நிலையிலும் யோசித்து .
அவள் கேட்டதற்கு ஜெய் என்ன பதில் வைத்திருக்க போகிறான் ....
ஐயர் கெட்டி மேளம்.. கெட்டி மேளம் ... என்று வாத்தியகோஷ்டிகளை பார்த்து சொன்னவர் . ஜெய் கையில் தாலியை நீட்ட... ஜெய்யோ அதை இருக்கியா முகத்தோடு வாங்கியவன் ஒரு முறை ரியாவின் முகத்தை பார்த்துவிட்டு அவள் கழுத்தருகில் தாலியை கொண்டு செல்வது போல சென்றான்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் ரியாவின் பின்னால் இருந்து அவள் முகத்தின் இருபக்கமும் ஒரூ கை நீல... ஜெய் அந்த கையில் தாலியை கொடுத்தான்.
தாலியை வாங்கிய மறுகணம் தனக்கு மேலே மேடையில் வைத்து இருந்த மொபைலை நிமிர்ந்து பார்த்த கமல் சிரித்தவன். பின் மேடையில் சாந்தாவின் அருகில் நின்று இருந்த ரியாவின் அப்பா பரமனை பார்த்து தாலி கட்ட சம்மதம் கேட்டு தலையை ஆட்ட... பரமனும் சந்தோசமாக கட்டுங்க என்று யாருக்கும் தெரியாமல் சம்மதம் சொன்னார். பிறகு ரியாவின் கழுத்தில் பின் இருந்து தாலி கட்டினான்.
ஜெய் வெறுமனே ரியாவின் கழுத்தை சுற்றி தாலி கட்டுவது போல பாவனை தான் செய்தான். ஆனால் தாலியை வாங்கி ரியா கழுத்தில் முழுசாக மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கினான்.
அந்த விடியோவை பார்த்துக்கொண்டு இருந்த சாந்தா அதற்குமேல் அதை பார்க்க முடியாமல் "ஐயோ.. ஜயோ இப்படி என் பொண்ணு வாழ்க்கையை அந்த மனுஷன் தெரிஞ்சே நாசம் பண்ணிட்டாரே... இப்படி யாரு என்னனு தெரியாத ஒருத்தனை கல்யாணம் செய்துட்டு என் பொண்ணு தான் கஷ்டப்படப்போறா... " என்று புலம்பினார் சாந்தா.
"ஏய் மாப்பிள்ளையை மரியாதையை இல்லாம பேசாதே டி... அவரு நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்காரு அதை முதல்ல நியாபகம் வெச்சுக்கோ.." என்றபடி அங்கே பரமனும் அவருடன் குருவும் வந்தனர்.
அவரை பார்த்ததும் கொதித்தெழுந்த சாந்தா "எதுக்காக இப்படி பண்ணுணிங்க... நம்ம பொண்ணு வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டிங்களே... இவன் யாரு என்னன்னே தெரியலை .இவனை எப்படி நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொன்னிங்க... என் பொண்ணை பாருங்க... அவ எப்படி அதிர்ச்சியாகி நிக்குறான்னு.. இதெல்லாம் யாரால.. உங்களளையும், இதோ பண்றது எல்லாம் பங்கிட்டு எதுவும் தெரியாம நிக்குறானே இந்த ஜெய் இவனாலையும் தான் வந்துச்சு" என்று பரமனிடம் சண்டையிட்டார் சாந்தா.
"சாந்தா நீ நல்லா யோசிச்சுப்பாரு . நம்ம பொண்ணுக்கும் ஜெய்யிக்கும் கல்யாணம் நடந்து இருந்தா அது அவளோட பிடிவாதத்துனால தான் நடந்திருக்குமே ஒழிய... அவங்க ரெண்டு பெருகும் புடிச்சு இந்த கல்யாணம் நடந்திருக்காது. ஏன்னா உன் பொண்ணு ஜெய் மாப்பிள்ளையை பிளாக் மெயில் பண்ணி ... மீனுவை கததி வெச்சு இந்த கல்யாணத்துக்கு அவரை வற்புறுத்தி இருக்கா... இப்படி கட்டாய கல்யாணத்தால அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகத்துல தான் வாழ முடியும் . நீயே சொல்லு கேவலம் சொத்து பாதுகாக்க உன் பொண்ணு ஜெய்
மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்க இவ்வளவையும் பண்ணி இருக்கா... ஏன் நம்ம கிட்டே இல்லாத சொத்துக்களா... என்னோட ஒரே பொண்ணு தானே இவ... நான் சம்பாதிச்ச மொத்த சொத்துக்களும் ரியாவுக்குத்தானே சொந்தம். நமக்கு அப்பறோம் எல்லாமே அவளுக்கு தானே.. அப்படி இருக்க அப்போ இந்த வீட்டுக்கும் ஜெய் மாப்பிள்ளை கிட்டே இருக்க காசுபணத்துக்கும் ஆசை பட்டு அவ இந்த மாதிரி எல்லாம் ஒரு கேட்ட எண்ணம் புடிச்சிட்டு நடந்துகிட்டு இருக்கா.. அவளை பெத்த கடமைக்கு ரியாவை அதட்டி அவளுக்கு நாம தானே நல்ல புத்தி சொல்லணும். ஆனா நீ என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு நம்ம பொண்ணு வாழ்க்கை அழியுறதுக்கு நீயே அவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்க... ச்சீ..." என்று பரமன் தன மனைவியும் மகளும் செய்து வந்த தப்பை எல்லாம் சுட்டி காட்டவே ...
"எங்க... என்ன இப்படி எல்லாம் சொல்றிங்க... எனக்கு நம்ம பொண்ணு அவளுக்கு பிடிச்சவனோட வாழணும்னு தான் ஆசையே ஒழிய அவன்கிட்டே இருக்க பணம் காசு எல்லாம் பெருசாவே தோணலைங்க... எனக்கு என் பொண்ணு நல்லா இருக்கனும். அதுவும் அவ விருப்பப்பட்டவனை கல்யாணம் செய்துட்டு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதாங்க " என்றவர் . ரியாவிடம் திரும்பி "ஏண்டி ரியா அப்பா சொல்றது எல்லாம் நிஜமா நீ மீனுவை கடத்தி வெச்சு ஜெய் மாப்பிள்ளையை பிளாக் மெயில் பண்ணுனியா ... அவர் கிட்டே இருக்க காசு பணத்துக்கும், இந்த வீட்டுக்காகவும் தான் நீ அவரை கல்யாணம் செய்துக்க நினைச்சியா ? அப்போ உனக்கு அவர் மேல விருப்பம் இல்லையா ? அவர் கிட்டே இருக்க வசதிக்காக தான் அவரை கல்யாணம் செய்துக்க இத்தனையும் பண்ணுனியா ? சொல்லு டி... ஏன் நான் கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லாம இருக்க... சொல்லு " என்று அவள் தோளை பிடித்து சாந்தா உலுக்கினார்.
அதுவரை அமைதியாக இருந்த ரியா கோபம் எல்லையை கடந்தவளாக , தான் போட்ட அனைத்து பிளானும் இப்படி வீணாய் போய்விட்ட ஏமாற்றத்தினாலும். தன் தாய் தன்னை கேள்வியால் துளைத்தெடுக்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் குறுகிப்போனவள் . தன் தோளில் இருந்த சாந்தாவின் கையை தட்டி விட்டவள் "ஆமா.. ம்மா... ஆமா ... நீங்க சொன்னது அம்மா சொன்னது எல்லாம் நிஜம் தான் எனக்கு ivanai விட இந்த வீடு இவன் கிட்டே இருக்க இந்த சொத்து தான் பிடிச்சிருக்கு ... எனக்கு இது எல்லாம் வேணும். நான் அனுபவிக்க வேண்டிய இந்த வாழ்க்கையை அந்த மீனு அனுபவிக்கிறது பக்க எனக்கு பொறாமையா இருக்கு... அதனால் தான் அவளை கடத்தி வெச்சு ஜெய்யை கல்யாணம் செய்துக்க நான் திட்டம் போட்டேன். ஆனா... ஆனா... அதை எல்லாத்தையும் இவன் கெடுத்த்துட்டான் " என்று அவள் முன்பு நின்று இருந்த கமலை பார்த்து சொன்னவள் நேராக அவனிடம் வந்து ..
"டேய் யாரு டா நீ.. என் அப்பாவும் இவனும் வந்து என் கழுத்துல தாலி கட்ட சொன்னா என்னை பத்தி எதுவும் தெரியாம ... நான் யாருன்னு புரிஞ்சுக்காம என் கழுத்துல நீ தாலி கட்டி இருக்க... நீ என்ன முட்டாளா ?" என்றாள் அவன் சட்டையை பிடித்து உலுக்கி.
தன் சட்டையில் இருந்த ரியாவின் கையை பிரிக்காமல் அவள் கையை ஆதரவாக பற்றிய கமல் "யாரு சொன்னது உன்னை பத்தி எனக்கு தெறியாதுனு... உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் . உனக்கும் ஜெய்யுக்கும் முதல்ல கல்யாணம் பிஸ் ஆனா நாளில் இருந்து எனக்கு உன்னை தெரியும் . முதல்ல நீ ஜெய்யோட நிச்சயதார்த்தம் பண்ணிக்க இருந்த அப்போ நீ தான் ஜெய்யை கல்யாணம் செய்துக்க போற பொண்ணுன்னு தெரியாமையே எனக்கு உன்னை பிடிச்சு போயிருச்சு . உன்கிட்டே என் மனசுல உள்ளதை சொல்ல நினைச்ச அப்போ தான் நீயும் ஜெய்யும் கல்யாணம் செய்துக்க போறதே எனக்கு தெரியும். முதல்ல ஷாக் ஆஹ் தான் irunthathu எனக்கு. ஆனா என்ன செய்ய எனக்கு கொடுத்துவைகளை இந்த a;அங்கு தேவதையை கல்யாணம் செய்துக்கணு நான் நினைச்சேன் " என்று அவளை பார்க்க...
ரியா அவனின் இந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள் அவன் கையை உதறிவிட்டு அவன் சட்டையில் இருந்து கையெடுத்தாள் ." என்ன டியர் கதையை முழுசா கேட்காம விலகிட்டே... பரவால்ல நான் சொல்றேன் கேளு "என்றவன் ஜெய்யை பார்க்க...
"நானே சொல்றேன் கமல் "என்ற ஜெய் ரியாவை பார்த்து "எப்போ நான் மீனு கழுத்தில் தாலி கட்டி எனக்கு மனைவி ஆகிகிட்டேனோ.. அப்போவே கொஞ்ச நாளில் என் உடம்பு குணம் ஆகி நான் ஆபீஸ் போன அப்போ கமல் என்னை என் ஆஃபிஸில் மீட் பண்ண வந்திருந்தார் . நாங்க ரெண்டு பேருமே நல்ல பிசினஸ் பார்ட்னர்ஸ். என்கிட்டே தயக்கமே இல்லாம வந்து எனக்கு ரியாவை பிடிச்சிருக்கு. நான் அவளால் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்னு சொன்னான். நானும் நடந்த எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்லி நீ எந்த மாதிரி நடந்துக்குவே.. உன்னோட மனசு எப்படி பத்தாதுன்னு எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லி இருந்தேன் . நீ எப்படி இருந்தாலும் உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு ஒரே முடிவா இருந்தான் கமல் . சரி நேரம் வரும்போது நான் உன்கிட்டேயேயும் , உன் அப்பாகிட்டேயும் இது பத்தி பேசலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள என்ன என்னவோ நடந்து போயிருச்சு. நீ எப்போ என் வீட்டுக்கு வந்து என்னை கல்யாணம் செய்துக்கணும்னு பிளாக் மெயில் பண்ணிட்டு போனியோ... அப்போவே நான் கமலுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன் . முதல்ல நீ இந்த அளவுக்கு இறங்குவேன்னு அவன் எதிர்பாக்கல.. உன்னை பத்தி நினைச்சிருந்த அவன் எண்ணத்தை அந்த சூழ்நிலையும் மாத்திக்கவே இல்லை அவன் . அவன் ஒரு முடிவோட உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னான் . .அதுக்கு அப்பறோம் தான் உன்னை பத்தி எடுத்
து சொல்லி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினேன். அவரும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அதுவே போதும்னு சொல்லி நாங்க போட்ட பிளானுக்கு சம்மதம் சொல்லிட்டாரு " என்று நடந்த அனைத்தையும் எடுத்து கூறினான் ரியாவிடம் பொறுமையாக .
அனைவரும் சேர்ந்து தன்னை முட்டாள் ஆக்கிவிட்டார்கள் என்று அவளுக்கு ஆத்திரமாக வந்தது அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தினாள் ரியா "பின் ஜெய்யை பார்த்தவள் நீ போட்ட பிளான் படி இவனை என் தலையில் கட்டிட்டே.. ஆனா உனக்கும் எனக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்திருக்கே... அப்படி இருக்க அப்போ இந்த கல்யாணம் எப்படி செல்லும் " என்றாள் அந்த நிலையிலும் யோசித்து .
அவள் கேட்டதற்கு ஜெய் என்ன பதில் வைத்திருக்க போகிறான் ....
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 53
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 53
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.