logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
தூக்கம் களைந்து கண்விழித்த போது மீனுவின் வயிறு நன்றாக மேடிட்டு இருக்க... அவளையும் வயிற்றில் இருக்கும் பிள்ளையையும் இடையோடு கட்டிக்கொண்டு கண்கள் மூடி உறங்கிக்கொண்டு இருந்தான் ஜெய் .

அவள் கண் விழித்த வேளையில் வயிற்றில் இருந்த சிசு லேசாக அசைந்து தானும் விழித்து விட்டதை அவளுக்கு உணர்த்த ... மெல்ல சிரித்த படி ஜெய்யின் தூக்கம் கலையாதவாறு எழுந்து அமர்ந்த மீனு தன் மேடிட்ட வயிற்றை தடவி "குட் மோர்னிங் செல்ல குட்டி .. நல்ல பொண்ணா சமைத்து குட்டியா அம்மா அப்பா கூட நீங்களும் தூங்குனீங்களா ... இதே போல அம்மா வயித்துக்குள்ள இருந்து வெளியே வந்த பிறகும் சமத்து குட்டியா அம்மா அப்பாவை தொந்தரவு செய்யாம தூங்கிடணும் சரியா " என்று தன் மணி வயிற்றை தடவிக்கொடுத்தாள் .

பின் தன் இடுப்பை கட்டிக்கொண்டு தூங்கிகொண்டு இருந்த ஜெய்யின் தூக்கம் கலையாதவாறு மெல்ல தன் வயிற்றில் இருந்த அவன் கையை மெதுவாக எடுத்துவிட்டு கட்டிலில் இருந்து உறங்கிய மீனு குளிப்பதற்காக பாத்ரூம் நோக்கி செல்ல போக... அவளை அடுத்த ஆதி எடுத்து வைக்க விடாமல் மீனுவின் புடவை தலைப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தான் ஜெய் .

"இப்போ தானே தூங்கிட்டு இருந்திங்க அதுக்குள்ள தூக்கம் கலைஞ்சிடுச்சா என்ன ? " என்றாள்.

"நீ நம்ம பாப்பாகிட்டே பேசிகிட்டு இருக்கும்போதே நான் எழுந்துட்டேன் . நீ என்ன செய்றேன்னு பார்க்கலாம்னு அமைதியா இருந்தேன் " என்றான் சிரித்துக்கொண்டே .

"அது சரி நான் தூக்கத்துல இப்படின்னு லேசா அசைஞ்சாலே இப்போ எல்லாம் நீங்க உடனே கண்ணு முழிச்சிடறீங்க... இப்படியே அடிக்கடி சரியா தூங்காம முழிச்சுட்டே இருந்தா உங்க உடம்பு என்ன ஆகும் " என்று கவலைப்பட்டாள் மீனு .

"முன்ன மாதிரி நீ தனி ஆள் இல்லையே செல்லம். கூட இனொரு குட்டி மீனு வேற வயித்துல இருக்காளே.. ரெண்டு பேரையும் பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு இல்லையா . ஏற்கனவே ஒரு முறை நான் கவனமா இல்லாம போனதுல உன்னை 2 மாசத்துக்கு மேல பிரிஞ்சு இருந்தேன் . அந்த நேரத்துல நீ எவ்ளோ கஷ்டப்பட்டு இருந்திருப்ப... அதான் இனி அந்த மாதிரி எந்த விஷயமும் நடந்திரக்கூடாதுனு நான் கவனமா இருக்கேன் " என்றான்.

"ம்ம்... சரி சரி.. எழுந்துட்டீங்களே போய் முதல்ல குளிச்சிட்டு வாங்க . இன்னிக்கு கோர்ட்ல உங்களுக்கும் , ரியாவுக்கும் டிவேர்ஸ் வாங்குற தடவை வந்திருச்சில்ல.. அதுக்கு நேரத்தோட போகணும் இல்ல.." என்றாள் மீனு .

" என்ன இன்னிக்கு மேடம் இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க.. எப்படியும் இன்னிக்கு எனக்கும் ரியாவுக்கும் டிவேர்ஸ் கிடைச்சிருமே.. அது ஏற்கனவே தெரிஞ்சது தானே அதுக்கு ஏன் இவ்ளோ பரபரப்பு " என்றான் ஜெய் .

" உங்க ரெண்டு பேருக்கும் டிவேர்ஸ் கிடைக்க போறதை நினைச்சு நான் ஆர்வமா இல்லை. நீங்கதானே சொன்னிங்க . ரியாவுக்கும் , உங்களுக்கும் டிவேர்ஸ் கிடைச்சதும் . உங்களுக்கு பழைய நியாபகம் எப்படி வந்தது . என்னை எப்படி திரும்ப உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சுது்ன்னு சொல்றேன்னு சொல்லி இருக்கீங்க அது நியாபகம் இருக்கு தானே ... அதான் அந்த காரணத்துக்காக தான் நான் இவ்ளோ ஆர்வமா இருக்கேன் உங்க ரெண்டு பேர் டிவேர்ஸ்க்காக " என்றாள் .

"அதை நீ விடவே மாட்டியா கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?" என்றான் ஜெய் .

"கண்டிப்பா சொல்லணும். அப்போ தான் நீங்க எப்போ என்கிட்டே பால்கோவா பிடிக்கும்னு சொன்னிங்கன்னு நானும் சொல்லுவேன். இந்த சீக்ரெட் தெரியணும்னா .. நீங்களும் உங்க சீக்ரட்டை எனக்கு சொல்லணும் . எப்படி வசதி" என்று அவன் கையில் இருந்த தன் சேலை தலைப்பை வெடுக்கென இழுத்தவள்.

"எப்போ உங் சீக்ரட்ட்டை என்கிட்டே சொல்றிங்களோ... அப்போ தான் நான் உங்க கூட குளிப்பேன் . அதுவரை நான் குளிக்கும்போது பாத்ரூமுக்குள்ள வர உங்களுக்கு தடை போட்டிருக்கேன் அது நியாபகம் இருக்குல்ல... " என்று புருவம் உயர்த்தி அவரை பார்த்தவள் பின் திரும்பி பாத்ரூம் நோக்கி குளிக்க சென்றாள் .

"ஏய் .. ஏய்... சின்னக்குட்டி... இரு டி .. இப்போ என்ன உனக்கு என் பழைய நியாபகம எல்லாம் எப்படி வந்திச்சுன்னு தெரியனும் அவ்ளோ தானே . இப்பவே சொல்றேன் டி... இரு நானும் உன்கூட குளிக்க வரேன் " என்று அவசரமாக தன் டீ ஷர்ட்டை கழட்டி போட்டுவிட்டு பாத்ரூம் நோக்கி ஜெய் செல்ல...

பாத்ரூமிற்குள் நின்று அவன் மார்பில் கைவைத்து தடுத்த மீனு " நோ... deal is a deal நீங்க சொன்ன மாதிரி உங்க ரெண்டு பெருகும் டிவேர்ஸ் கிடைச்சதும் சொல்ரேன்னு தானே சொன்னிங்க ... அதனால கோர்ட்டுக்கு போயிடு வந்து பொறுமையா என்கிட்டே சொல்லுங்க ... அதுவரை நான் வெய்ட் பண்றேன் " என்றாள் .

"அது நான் அணிக்கு யோசிக்காம அப்பறோம் சொல்றேன்னு சொல்லிட்டேன் டி என் பொண்டாட்டி அதுக்காக என்னை இப்படி உன்கூட குளிக்க விடாம என்னை தள்ளி வெக்குறது எல்லாம் நியாயமே இல்லை தெரியுமா ?" என்றான் .

"பரவாயில்லை இன்னிக்கு மட்டும் தானே பொறுத்துக்கோங்க... "என்று அவனை பின்னால் தள்ளிவிட்டவள் பாத்ரூம் கதவை அடைத்துக்கொண்டாள் .

"ஏய்... மீனு.. சின்ன குட்டி... உன் பீம் பாய் பாவம் டி... அவனை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்துறியே.. இது எல்லாம் உனக்கே நியாயமா சொல்லு.. நீ மாசமா ஆனதுக்கு அப்பறோம் அவனை கவனிக்குறதையே விட்டுட்டியே... பாவோம் உன் பீம் பாய் " என்றான்.

"யாரு பாவோம் அவனா... நல்லா இருக்கா... தினமும் உங்க பீம் பாயை கவனிச்சு எனக்கு என் ரெண்டு கையும் கழுத்தும் தான் வலிக்குது .." என்றால் முகமெல்லாம் சிவந்து போய் நேற்று இவரு கூட அவன் பீம்பாய்க்கு பணிவிடை செய்ததை நினைத்து .

" அது ... அது ஓகே தான் .. ஆனாலும் உன் சின்ன குட்டி.... " என்று சொல்லவும் .

"டேய் வாயை மூடுடா ... இப்போ பேசாம இரு கோர்ட்டுக்கு போட்டி வந்து நீ நடந்ததை எல்லாம் சொல்லி முடிச்சதும். எல்லாம் பாத்துக்கலாம் " என்றாள் சிரித்துக்கொண்டே...

அவள் குரலில் இருந்த வித்யாசத்தை உணர்ந்தவன் "ஓகே டி... அப்போ சீகிரியாம் குளிச்சிட்டு வா... சீக்கிரம் கோர்ட்டுக்கு போகலாம் " என்றான்.

"சரி நான் குளிச்சிட்டு வரேன் " என்று தன் சேலையை கலட்டிக்கொண்டே வெளியே நின்று இருந்தவனிடம் பேசினாள் .

"மீனு... மீனு... " என்றான்.

"என்ன டா..." என்றாள் உடையை கலட்டிக்கொண்டே...

"எனக்கு ஒரு சந்தேகம் " என்று இழுத்தான்.

"என்ன டா.. சொல்லு... இப்படியே பேசிட்டு இருந்தேன்னு வை லேட்டாகிடும் " என்றாள் உள்ளிருந்துகொண்டே.

"இல்ல இல்ல... நான் இதை மட்டும் கேட்டுட்டு போய்டுறேன் நீ குளிச்சிட்டு வா.." என்றான்.

"சரி சொல்லுங்க என்ன சந்தேகம்" என்று மீண்டும் கதவருகில் வந்து நின்று கேட்டாள்.

கதவுக்கு வெளியே நின்று கொண்டு பாத்ரூம் கதவை தடவியபடி " உன்னோட பீம் பாய்க்கு... " என்று இழுக்க...

"என்ன இழுக்குற ... சீக்கிரம் சொல்லுங்க... " என்றாள் சிறிது வெட்கத்தோடு.

"இல்ல உன் பீம் பாயை கவனிச்சு கவனிச்சு கழுத்து கை எல்லாம் வலிக்குதுன்னு சொன்னியே... அப்போ... உனக்கு... " என்று ஜெய் நிறுத்த...

"ம்ம்ம்... உனக்கு... " என்று மீனு கதவின் மறுபுறம் இருந்து வெட்கத்தோடு கேட்டாள்.

"இல்ல கழுத்து கை எல்லாம் வலிச்சா மாதிரி உன்னோட லிப்ஸ்...." என்று ஜெய் முடிக்க...

பாத்ரூம் கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டிய மீனு "தன் கையில் வைத்து இருந்த ஷாம்பூ பாட்டிலை அவன் மேல் விட்டெறிந்தவள் . உனக்கு ரொம்ப கொழுப்பாகிடுச்சு ஜெய் ... என்ன கேக்குறோம்னு தெரிஞ்சு தான் கேக்குறியா ? இரு.. இரு.. உன்னையம் , உன் பீம் பாயையும் கொஞ்ச நாளைக்கு கவனிக்காம விடுறேன் . அப்போதான் ரெண்டு பேரும் அடங்குவிங்க " என்று கதவை அடித்துவிட்டு குளிக்க சென்றாள்.

"ஏய் சின்ன குட்டி இப்படி எல்லாம் செய்யாத டி... ஏற்கனவே 8 மாசமா என்னை கவனிக்குறதில்ல.. இதுல மறுபடியும் புதுசா ரூல்ஸ் போடாத ஓகேவா .. நான் ஏதும் கேக்கல ... நீ நான் கேட்டதை மறந்திரு ஓகேவா " என்றவன் சிரித்துக்கொண்டே பெட்டில் வந்து படுத்துக்கொண்டான் .

இங்கே குளித்துக்கொண்டு இருந்த மீனு ஜெய்யின் சேட்டைகளையும் அவன் துடுக்கு தனம் நிறைந்த பேச்சையும் நினைத்து சிரித்துக்கொண்டு இருந்தாள் .

 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 55
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top