Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 10

உன் ரகசிய ரசிகை நான் 10

by Layas Tamil Novel
911 views

EPISODE 10

அறை அமைதியாக இருக்க, பாத்ரூம் கதவை லேசாகத் திறந்து பார்த்த துர்கா, ஆதியைத் தேடினாள். அவன் அங்கிருந்த மெத்தையில் தலை சாய்த்து அமர்ந்தவாறு கண்கள் மூடி இருக்க, அவன் அருகில் மெதுவாக வந்த துர்கா, அவன் முகத்தருகே குனிந்து பார்த்தவள், அவன் மூச்சுக்காற்று சீராக இருக்கவும், தூங்கிவிட்டான் என்று உறுதிப்படுத்தினாள்.

அவன் முகத்தில் இருந்த சிறு சிறு சிவப்பு கொப்பளங்களும், ஆங்காங்கே அந்த கொப்பளங்கள் உடைந்து காயமாகி இருந்ததையும் பார்த்த துர்காவுக்கு மனம் ஏனோ கனத்தது. இவை எல்லாவற்றையும் தாண்டியும் அவன் அழகிய முகமே அவளுக்குத் தெரிந்தது. ‘சின்ன சின்ன கொப்பளம் தானே இருக்கு? இதுக்கு போய் யாராவது முகத்தை மாஸ்க் போட்டு இந்த அழகான முகத்தை மறைச்சுக்குவார்களா என்ன?’ என்றவள், அவன் மூடிய இமைகளைப் பார்த்தாள்.

அழகிய தடித்த புருவங்கள், இமைகள் மூடி இருப்பதிலும் அழகாகவே இருந்தது அவளுக்கு. கண்ணை மூடியும் மூடாமலும் அவன் வைத்திருக்க, அதைப் பார்த்தவள் ‘தூங்கலையோ?’ என்று அவள் கைகளை அவன் கண்களுக்கு முன் ஆட்டினாள். ஆதி எந்த எதிர்வினையும் காட்டாமல் இருக்கவே, அவன் முகத்தை ரசித்தவள் அவன் சிவந்த உதட்டைப் பார்த்தாள்.

அவன் உதட்டைத் தொடாமல் கிள்ளுவதுபோல காற்றில் செய்து, தன் உதட்டால் அவன் உதட்டைக் கிள்ளிய தன் விரல்களுக்கு “உம்மா…” என்று முத்தமிட, அவள் முத்தமிட்ட சத்தம் அமைதியாக இருந்த அந்த அறையில் நன்றாக எதிரொலிக்க, துர்கா செய்வதறியாமல் அப்படியே திகைத்துப்போய் நின்றாள்.

அவள் அவ்வாறு செய்ததும், அதுவரை தூங்குவதுபோல இவள் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் தன் உதட்டிற்கு முத்தம் கொடுப்பதுபோல அவள் உதடுகளைக் குவித்து அவளுடைய விரல்களுக்கு முத்தமிட, ஆதிக்கு ‘என்னுடைய அந்த விரல்கள் நானாக இருந்திருக்கக்கூடாதா?’ என்று அவன் மனம் ஏங்கியது.

ஆதியைத் திரும்பிப் பார்த்தவள், அவன் கண் விழிக்காததைக் கண்டு நிம்மதி அடைந்தவள், பெருமூச்சொன்றை விட்டவள், ‘இனி இப்படி எல்லாம் பண்ணக் கூடாது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கட்டிலின் மறுபக்கம் சென்று ஆதிக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள்.

அவள் அவன் முகத்தருகே தன் முகத்தை வைத்து இவ்வளவு நேரம் நின்றிருந்ததில் அவள் மூச்சுக்காற்று ஆதியின் முகத்தில் பட்டதில், அவனை உள்ளுக்குள் ஏதேனும் செய்ய, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவ்வளவு நேரம் தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருந்தான் ஆதி.

அவள் படுத்துவிட்டாள் என்று உறுதி செய்த பின், தன் கண்களைத் திறந்து, துர்கா படுத்திருந்த பக்கம் திரும்பிப் பார்க்க, அவள் அவனிடம் முதுகு காட்டிப் படுத்திருந்தாள். அவனிடம் முதுகு காட்டி ஒருபுறமாகச் சாய்ந்து படுத்திருந்த துர்காவின் முதுகைப் பார்த்தவன், அவள் மஞ்சள் வண்ண மேனி லேசாக அவள் முதுகிலும் லேசாகத் தெரிந்த அவள் இடுப்பிலும் தெரிய, அதைப் பார்க்கும் ஆவலைக் கட்டுப்படுத்தி அவளைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டான்.

அவன் இதயம் ஏனோ படபடத்தது. துர்காவின் மூச்சுக்காற்றும், அவள் அருகாமையும், இவ்வளவு நேரம் அவள் அவன் அருகில் இருந்து கொண்டு அவனை ரசித்துப் பேசிய வார்த்தைகளும், முத்தமிட்ட அவள் குவிந்த உதட்டின் ஈரம்… இவை அனைத்தும் ஆதியை ஏதோ செய்ய. முழுக்க முழுக்க அவள் நினைவாகவே அவனுக்கு இருக்க, ஒருமுறை திரும்பி அவளைப் பார்க்க, ‘இவ்வளவு நாள் துர்காவிடம் தோழியாகப் பழகி இருந்தாலும், தினமும் ஆஃபீஸில் தன்னுடனேயே அவள் இருந்திருந்தாலும், அப்போதெல்லாம் வராத ஒரு உணர்வு, இன்று அவளைப் பார்த்ததும், அவள் தன்னிடம் இவ்வளவு அருகாமையில் இருந்தும், தன்னைப் பிடிப்பதுபோல் அவள் பேசும் வார்த்தைகளும், தன் போட்டோவிற்கு முத்தமிட்ட அவள் உதடுகளும் அவனின் உணர்வுகளை வேறு ஒரு உலகத்திற்கு அவனை இழுத்துச் சென்றது.’

கண்கள் மூடி யோசித்துக்கொண்டிருந்த ஆதி, ‘அப்போ துர்காவுக்கு என்னை பிடிச்சிருக்கு. கல்யாணம் ஆனதுக்காக பிடிச்சிருந்தது அப்படின்னா அவள் இவ்வளவு நெருக்கமா என்கிட்ட பேசி இருக்க மாட்டா. ஆனா, அவள் என்னிடம் ரொம்ப உரிமை எடுத்துப் பேசுறா. நான் தூங்கிட்டு இருக்கும்போதும், நான் இல்லாதபோதும், அவள் என்னை நினைத்து இவ்ளோ உரிமையா பேசுறா அப்படின்னா, அவ மனசுக்குள்ள நான் இருக்கேனா…? அவளுக்கு உண்மையாவே என்னைப் பிடிச்சிருந்ததுனாலதான் எங்க கல்யாண போட்டோல இருக்கிற என்னோட போட்டோவுக்கு அவள் முத்தம் கொடுத்தாளா….?’ என்று யோசித்தான் ஆதி.

இப்படி யோசிக்கும்போது ஆதியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல இருந்தது. அவன் உடலெல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தது. துர்கா என் மேல் இவ்வளவு நாள் இருந்த உணர்வு, இப்போது வேறு ஒரு விதமாக அவனுக்குத் தோன்றியது. அது என்ன உணர்வு என்று அவனால் யூகிக்க முடியவில்லை. ‘நான் ஏன் இப்படி இருக்கேன்?’ என்று யோசித்துக்கொண்டே ஆதி துர்காவை ஒருமுறை திரும்பிப் பார்க்க, அவன் உதடு தானாக ஒரு புன்முறுவலைச் சிந்தியது. அவனும் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று கண்கள் மூடிப் படுக்க, இருவருமே படுத்து உறங்கிவிட்டனர்.

சங்கவியை ஆதியுடன் அவர்களுக்கு இருந்த பிசினஸ்ஸில் உள்ளே நுழைத்துவிட வழி தேடிக்கொண்டிருந்தார் அவளுடைய அப்பா. சங்கவிக்கும் ஆதிக்கும் நடக்க இருந்த திருமணம் நின்ற பிறகு, அவர்களுடனான தொடர்பை, அவர்களுடன் இருக்கும் பிசினஸில் மட்டுமே இணைக்க முடியும் என்று யோசித்த சங்கவியின் அப்பா ஒரு முடிவுடன் ஆதியின் அப்பாவிற்கு கால் செய்தார்.

ஆதியின் அப்பா வெங்கடசாலம் அவர்களின் புது வீட்டில் போய் படுத்துக்கொண்டிருக்க, தன் மொபைல் போன் ரிங் அடிக்கவும் எழுந்து எடுத்துப் பார்த்தவர், அதில் சங்கவியின் அப்பா பெயர் வந்திருப்பதைக் கண்டு ‘இவர் எதற்கு இப்போது கால் செய்து இருக்கிறார்?’ என்று யோசனையுடன் அந்த காலை அட்டென்ட் செய்தார்.

அட்டென்ட் செய்து காதில் வைத்தவர் “ஹலோ” என்று சொல்ல, சங்கவியின் அப்பா “நான் தான் சங்கவியின் அப்பா பேசுறேன்” என்றார். “தெரியுது, சொல்லுடா” என்றார் வெங்கடசாலம் எப்பொழுதும் போல.

தன்னிடம் நடந்த எதையுமே மனதில் வைத்துக்கொள்ளாமல் வெங்கடசாலம் நார்மலாகப் பேசுவதைப் பார்த்த சங்கவியின் அப்பாவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “என்னை மன்னித்துவிடு வெங்கடசாலம். என் பொண்ணுனால அதான் நான் அப்படியெல்லாம் அவகிட்ட பொய்யா அதையும் இதையும் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கதான் நான் அந்த மாதிரி எல்லாம் அவள்கிட்ட பேசிட்டு இருந்தேன். அதை யாரோ எனக்கே தெரியாம வீடியோ எடுத்து ஆதிகிட்ட கொடுத்துட்டாங்க. எனக்கு இப்போ உன்னை பார்க்கவும், ஆதியைப் பார்க்கவும் ரொம்ப தர்மசங்கடமா இருக்குது” என்றார்.

சங்கவியின் அப்பா வெங்கடசாலத்திடம், ‘தான் தெரியாமல் தன் பொண்ணு என்னிடம் அவளை சம்மதிப்பதற்காகத்தான் இப்படி எல்லாம் சொன்னேன்’ என்று சொன்னதை நம்பாத வெங்கடசாலம், மனதிற்குள் ‘யாராவது தன் பொண்ணுகிட்டேயே கட்டிக்கப் போற பையனோட தம்பியையும் வளைச்சு கைக்குள்ள வெச்சுக்க சொல்லிக் கொடுப்பாரா? இதை வந்து அவன் பொண்ணைச் சமாதானப்படுத்த சொன்னேன்னு என்கிட்ட திரும்ப வந்து சொல்றான். இவனை என்ன பண்றது?’ என்று நினைத்துக்கொண்ட வெங்கடசாலம், “இப்ப எதுக்கு அதெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்க?” என்று கேட்க, “என் பொண்ணு பண்ணின காரியத்துக்காக நம்மளோட ஃப்ரெண்ட்ஷிப் உடைந்து விடக்கூடாது. நம்மளோட பிசினஸ் உடைஞ்சிடக் கூடாதுன்னுதான் உனக்கு கால் பண்ணேன். அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். என்னையும் மன்னித்துவிடு வெங்கடசாலம்” என்று கூறிய சங்கவியின் அப்பா, “அவ செஞ்ச காரியத்திற்காக நம்மளோட இத்தனை வருஷம் பழக்கம் உடைஞ்சிடாது இல்லையா?” என்று வெங்கடசலத்திடம் கேட்க, மனதில் சங்கவியின் அப்பாவை நினைத்து கோபம் இருந்தாலும், ‘இத்தனை வருடப் பழக்கம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான். ஆனால் இத்தனை வருடமாக இவனது உண்மை முகம் எனக்குத் தெரியாமலேயே போய்விட்டது’ என்று யோசித்தவர், அதை அவரிடம் காட்டவும் முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டார். “சரிடா, நம்ம பழக்கம் எப்பவும் போலதான் இருக்கும்” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு சந்தோஷமா இருந்த சங்கவியின் அப்பா, “அப்போ நம்முடைய பிசினஸ்?” என்று கூறி நிறுத்த, “உன்னோட பழக்கத்தையே நான் இருக்கட்டும்னுதான் நான் சொல்றேன். அப்போ உன் பிசினஸை மட்டும் எப்படி நான் ஒடச்சிக்க முடியும்? இந்த ப்ராஜெக்ட் முடியிற வரைக்கும் நீ என்னோட பிசினஸ்ல இருக்கலாம். அது முடிஞ்ச பிறகு தானாவே நீயாக விலகிக்கணும் அப்படின்னு ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் எனக்குக் கொடு” என்றார் ஆதியின் அப்பா.

‘இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்’ என்பதுபோல, இந்த நிபந்தனையை கேட்டவுடன் சங்கவியின் அப்பா வேகமாக “சரிடா, நான் ஒத்துக்குறேன். இந்த ப்ராஜெக்ட் முடியுற வரைக்கும் என் பொண்ணு எப்பவும் போல உன் ஆஃபீசுக்கு வந்து பிசினஸ் பார்த்துப்பா. அது முடிஞ்ச பிறகு நாங்கள் இந்த பிசினஸை விட்டு விலகிப் போய்விடுவோம்” என்றார் சங்கவியின் அப்பா.

“என்ன, சங்கவிதான் மறுபடியும் பிசினஸ்க்கு வரப் போறாளா?” என்று ஆதியின் அப்பா கேட்க, “ஆமாடா. எனக்கும் உடம்பு ரொம்ப முடியல. என்னால முன்ன மாதிரி இந்த சம்பவத்துக்குப் பிறகு வெளியே தலை காட்ட ரொம்ப சங்கடமா இருக்கு. அதனாலதான் நான் சங்கவியே இந்த பிசினஸ் டேக் ஓவர் பண்ணிக்க சொல்லி அவ பேர்ல எல்லாத்தையும் எழுதி வச்சுட்டேன். இந்த ஒரு ப்ராஜெக்ட்டுக்கு மட்டும் அவளை மன்னிச்சு அவளைப் பொறுத்துக்கோங்க. எனக்காக தயவு செய்து” என்றார் சங்கவியின் அப்பா.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், நீண்ட யோசனைக்குப் பிறகு “சரி” என்று வெங்கடசாலம் கூறினார். இதைக் கேட்டதும் மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்த சங்கவியின் அப்பா, “சரி வெங்கடசலம், அப்போ என் பொண்ணு நாளைலிருந்து ஆஃபீசுக்கு வர சொல்லிவிடுகிறேன்” என்றார். “சரி” என்று பேசிவிட்டு போனை வைத்தார் வெங்கடசாலம்.

போனை பேசிவிட்டு வைத்த சங்கவியின் அப்பா, சங்கவியைப் பார்த்து, “நான் நினைத்ததுபோல முதல் கட்ட வேலை நடந்துவிட்டது. இனி எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது. ஆதியின் ஆஃபீஸில் நுழைந்ததும் நீ உன் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்றார் சங்கவியின் அப்பா.

அவர் கூறியதைக் கேட்ட சங்கவி, “இனிமேல்தான் இந்தச் சங்கவியோட உண்மையான முகத்தை அவங்க பார்க்கப் போறாங்க. என்னை அத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்தி, மணமேடையில் இருந்து துரத்தின அந்த ஆதியையும், அந்த துர்காவையும், அவன் குடும்பத்தையும் நான் சும்மா விடமாட்டேன்” என்றாள் சங்கவி.

கதிரும் விக்கியும் ஆஃபீஸ் சென்றுவிட்டு வேலைகளை எல்லாம் சிறிது பார்த்துவிட்டு, நேராக ஆதியின் புதிய வீட்டுக்கு வந்துவிட்டனர் மதிய உணவு சாப்பிடுவதற்காக. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு வீட்டிற்குள் வரும்போதே ஹாலில் இவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்த வெங்கடசாலம் இவர்களைப் பார்த்ததும், தன்னிடம் வருமாறு சைகை செய்ய, அவர்கள் இருவரும் அவர் அருகில் சென்று அமர்ந்தனர்.

“நான் இப்ப சொல்லப் போற விஷயத்தை ஆதிகிட்ட நீங்க ரெண்டு பேரும் தான் பொறுமையா போய் எடுத்து சொல்லணும். நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டதும், ‘தாம் தூம், அதெல்லாம் முடியாது, வேண்டாம். நம்மளுக்கு எவ்வளவு நஷ்டமானாலும் பரவாயில்லை, கேன்சல் பண்ணிடலாம். அது இது’ன்னு ஏதாவது சொல்லுவான்” என்று அவர் கூறவும், அவர் கூறியது எதுவும் புரியாமல் கதிரும் விக்கியும் ஒருவரை ஒருவர் பார்க்க, அவர்களைப் பார்த்த வெங்கடசாலம், “சங்கவியின் அப்பா போன் செய்திருந்தார்” என்று சொல்ல, அதிர்ச்சியாகி அவரைத் திரும்பிப் பார்த்து, “என்னப்பா சொல்றீங்க?” என்று கதிர் கோபத்துடன் கேட்க, “இதுக்குத்தான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் முதல்ல சொன்னேன். நான் ஆதிகிட்ட சொல்லாம நீயே இப்படி கோபப்படுற. அப்ப அவன் எவ்வளவு கோபப்படுவான்? சங்கவி பெயரை கேட்டாலே அவனுக்கு அப்படித்தான் கோபம் வரும். ஏன்னா அந்தப் பொண்ணு அவ்ளோ பண்ணிட்டு போயிடுச்சு ஒரே நாள்ல.”

சங்கவியின் அப்பா கூறியதை அனைத்தையும் இவர்களிடம் கூறிய வெங்கடசாலம், “இப்ப நான் சொன்னதெல்லாம் பொறுமையா கேட்டுட்டீங்க இல்லையா? நாளைலிருந்து அவள் நம்ம ஆஃபீஸ்க்கு வரப் போறா. இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சு அவ வெளியே போற வரைக்கும் அவகிட்ட வேற எந்தப் பிரச்சினையும் வெச்சுக்கக் கூடாது. ஆஃபீஸ்ல இருக்குற வேலைகளைத் தவிர்த்து, வேற இதுலயும் அவளை இன்வால் பண்ணக் கூடாது” என்றார்.

அவர் கூறியதெல்லாம் கேட்டு இருவரும் தலையாட்டிவிட்டு, “சரிப்பா, நாளைலிருந்து நாங்க பார்த்துக்கிறோம். எப்படி, அண்ணா வரதுக்கு இன்னும் பத்து நாள் ஆகிடும் இல்லையா? அதுக்கப்புறம் அண்ணன் வந்ததுக்கு அப்புறம்தான் அவளுக்கு இருக்கு. இது பத்தி எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவ ஜஸ்ட் நம்ம பிசினஸ் பார்ட்னர் தான். இனிமேல் அவளை நான் இன்வால் பண்ணிப் பேசவே மாட்டேன்” என்றான் கதிர். “அவளுக்கு அதற்கான தகுதியும் இல்லை” என்றான்.

“சரி, போங்க ரெண்டு பேரும் போய் பிரஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்” என்று கூறியவர், “முத்து” என்று தன் வேலைக்காரனை அழைக்க, “ஐயா, சொல்லுங்க” என்று வந்தான். “நீ மேலே சென்று துர்காவையும் ஆதியையும் ரெடியாகிச் சாப்பிட வரச் சொல்” என்றார். “அம்மா, விசாலாட்சி, எல்லாமே ரெடி ஆயிடுச்சா?” என்று கேட்க, “எல்லாம் ரெடி ஆயிடுச்சுங்க. எல்லாரும் வந்தா சாப்பிடலாம்” என்றார் விசாலாட்சி.

விக்கி பிரஷ் ஆகச் சென்றுவிட, கதிர் எழுந்து சென்றவன், “எங்கே நம்ம ஆள காணோமே…? இது ரொம்ப அமைதியா இருக்க மாதிரி இருக்கே. இது சரி இல்லையே” என்று அந்த ஹால் முழுவதும் நோட்டமிட, அவள் சமையலறையில் ஒரு திண்டின் மேல் அமர்ந்து அவள் அம்மாவிடம் பேசிக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் நொறுக்குத் தீனியை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

‘அதைத்தான் பார்த்தேன். நீ பெண்ணுக்குத்தான் வாய் சும்மா இருந்திருக்க சொன்னா சாப்பிடணும். இல்லன்னு ஏதாவது பேசிட்டு இருக்கணும். அப்படி இல்லைன்னா அந்த வாய்க்கு ஏதாவது வந்துடும்’ என்று நினைத்துச் சிரித்தவன், அவனும் பிரஷ் ஆகச் சென்றுவிட்டான்.

மேல சென்று முத்து தாத்தா கதவைத் தட்ட, அப்போதுதான் கண்விழித்த துர்கா எழுந்து வந்து கதவைத் திறந்தாள். அவரைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே “சொல்லுங்க தாத்தா” என்று கூற, “அம்மாடி கண்ணு, எல்லாரையும் கீழே சாப்பிட வரச் சொல்றாங்க கண்ணு. ஆதி தம்பி முழிச்சிடுச்சா?” என்று கேட்க, “இல்லைங்க ஐயா. நான் அவரை எழுப்பி கீழே கூட்டிட்டு வரேன். நீங்க போங்க” என்று துர்கா அவரிடம் கூறி அனுப்பி வைத்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டு அறைக்குள் வந்து திரும்பிப் பார்த்தாள். ஆதி நன்கு உறங்கிக்கொண்டிருந்தான்.

அசதியில் தன்னை மறந்து தூங்கும் ஆதியைப் பார்த்தவள், அவனை எழுப்பும் மனமில்லாமல், முதலில் தான் சென்று ரெடியாகிவிட்டு, அதன் பிறகு வந்து அவனை எழுப்பிக்கொள்ளலாம் என்று, காலையில் வெளியே செல்வதற்காக அணிந்திருந்த உடை இப்போது கசங்கி இருக்க, வேறு உடை மாற்றிக்கொள்ளலாம் என்று வேறு உடை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

பாத்ரூமுக்குள் சென்று உடை மாற்றிவிட்டு வெளியே வந்த துர்கா அப்போதும் ஆதி உறங்கிக்கொண்டிருக்க, அவன் அருகில் வந்து “ஆதி” என்று அழைக்க, அவன் அசையாமல் படுத்திருக்க, திரும்பவும் அவன் தோளைத் தொட்டு, “ஆதி” என்று லேசாக அவனை உலுக்கினாள்.

கண் விழித்து, தன் எதிரே அழகின் மறு உருவமாக நின்றிருந்த துர்காவைப் பார்த்த ஆதி, தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு அவளை நன்றாகப் பார்க்க, அவள் அழகில் அப்படியே பிரமித்துப்போய் எழுந்து அமர்ந்தான்.

கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ஆதியைப் பார்த்த துர்கா, “நான் தோளைத் தொட்டு உலுக்கினேன், வலிக்கலையா? ஆதிக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படிப் பார்க்குற? என்ன இன்னைக்கு?” என்று கேட்க, அவள் அவனை அழைத்துவந்ததால் சுயநினைவுக்கு வந்த ஆதி, “ஒன்னும் இல்லையே” என்று கூறியவன், “என்னை ஏன் இப்ப எழுப்பின?” என்று கேட்டான், பொய்யான கோபத்தோடு.

“இல்லை ஆதி. முத்து தாத்தா வந்தாரு. ரொம்ப நேரம் ஆயிடுச்சு. நம்ம ரெண்டு பேரையும் சாப்பிட கீழே வரச் சொன்னாங்கன்னு சொல்லி கூப்பிட, அதனாலதான் நான் உன்னை எழுப்பினேன்” என்றாள் துர்கா பயந்தவாரே.

தான் தன்னைப் பார்த்துப் பயந்து பின்னே செல்வதைப் பார்த்த ஆதி, “ஹே… துர்கு. நான் சும்மா கோபம் வர்ற மாதிரி உன்கிட்ட நடிச்சேன். கோபம் எல்லாம் படவில்லை. நீ ஏன் இப்ப அதுக்காக பயந்துக்கிற? நான் ஆஃபீஸ்ல எவ்வளவு கோபமா இருந்திருக்கேன்? அப்பெல்லாம் கூட நீ இப்படிப் பயப்பட்டது இல்லையே. இப்போ நான் சும்மா சின்னதா கோபம் வர்ற மாதிரி நடிச்சதுக்கு ஏன் இப்படிப் பயந்துக்கிற?” என்று கேட்டான் ஆதி.

“இல்லை ஆதி. ஆஃபீஸ் அப்படிங்கிறது என்னன்னா, அது தொழிலோட போயிடும். வேலை எல்லாம் முடிச்சு அடுத்த நாள் வரும்போது அப்படி ஒரு விஷயம் நடந்தது மாதிரியே நம்ம நினைச்சுக்க மாட்டோம். ஆனால் இங்கு அப்படி இல்லையே. இது நம்ம வீடு. நம்ம ரெண்டு பேரும் தான் இனிமேல் ஒரே வீட்டில் இருக்கப் போறோம். ஒருத்தரை ஒருத்தர் சங்கடம் வராமல், கோபம் இல்லாம பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். அவ்வளவுதான்” என்றாள்.

“சரி துர்கா. நீ சொன்னதும் கரெக்ட் தான். நான் இனிமேல் தேவையில்லாம உன்கிட்ட கோபப்படுற மாதிரி நடந்துக மாட்டேன், ஓகேவா?” என்று சிரித்தபடியே கூற, அவன் சிரித்த முகத்தைப் பார்த்து ஆச்சரியமாக “ஆதி, உனக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா?” என்று கேட்டாள் துர்கா.

“ஏன் துர்கா? இதுக்கு முன்னாடி நான் சிரிச்சு நீ பார்த்ததே இல்லையா? என்னமோ புதுசா பார்க்குற மாதிரி கேட்குற?” என்று ஆதி கேட்க, “ஆமா ஆதி. காலேஜ்லயும் சரி, ஆஃபீஸ்லயும் சரி, நீ இதுவரைக்கும் சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ஆதி?” என்றாள் துர்கா.

அவள் தன்னை அழகாக இருக்கிறேன் என்று புகழ்ந்து பேசினதும், ஆதி தன் மனதிற்குள் கர்வமாகத் தன்னைப் பற்றி எண்ணிக்கொண்டான். ஒரு பெண் முதன்முதலாகத் தன்னிடமே நேரடியாக அவனை ‘அழகாக இருக்கிறான்’ என்றும் கூறியது கேட்டு உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டான்.

அவன் சந்தோஷத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் மகிழ்ந்தவன், துர்காவிடம் “நான் போய் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல ரெடியாயிட்டு வந்துடறேன். நம்ம ரெண்டு பேருமே ஒண்ணா போகலாம்” என்று கூறிவிட்டு எழுந்து பாத்ரூம் செல்ல, அதுவரை அவனை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த துர்கா, ‘என்ன ஆச்சு? ஏன் நம்ம கிட்ட நல்லா பேசுறான் இன்னைக்கு? எப்போ பார்த்தாலும் உர்ருனு வெச்சுட்டுதானே பேசுவான்’ என்று யோசித்தாள்.

சிறிது நேரத்தில் ஆதியும் ரெடி ஆகி வந்துவிட, இருவரும் சேர்ந்து கீழே செல்லவும், அனைவரும் டைனிங் ஹாலில் ஒன்றுகூடி சாப்பிட ஆரம்பித்தனர். அனைவரும் சந்தோஷமாக பேசி சாப்பிட்டு முடித்துவிட்டு, ஹாலில் அமர்ந்திருக்க, ஆதியைக் கூட்டிக்கொண்டு விக்கி அங்கே இருக்கும் ஸ்டடி அறைக்குச் சென்றான்.

துர்காவிடம் விசாலாட்சி, அந்த வீட்டில் இருக்கும் மற்ற விஷயங்கள் என்ன என்று விவரங்கள் சொல்லிக்கொண்டிருக்க, அவர்களோடு சேர்ந்து கீர்த்திகாவும் அவள் அம்மாவும் அமர்ந்து அவர்கள் பேசுவதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கதிர் ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டு கீர்த்திகாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவ என்ன எல்லார் கூடவும் ஒட்டிக்கிட்டே சுத்திட்டு இருக்கா? தனியா எழுந்து எங்கும் செல்வாளா?’ என்றும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது வெங்கடசாலம் “முத்து, எனக்கு கொஞ்சம் வெந்நீர் வேணும் எடுத்துட்டு வா…” என்று தன் அறையில் இருந்து சத்தமிட, ஆனால் முத்து கிட்சனில் இல்லை. அவர் பதில் ஏதும் பேசாமல் இருக்க, விசாலாட்சி “எனக்குக் கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாம்மா….” என்று கூற, “கொண்டு வரேங்க” என்று அவள் எழப் போக, “அத்தை, இருங்க. நான் மாமாவுக்கு கொண்டுபோய் கொடுத்துட்டு வரேன்” என்றும் எழுந்து கிச்சனுக்குள் சென்றாள்.

அதுவரை அவளை எப்படித் தனியாகச் சந்திப்பது என்றும் பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு, இப்போது வாய்ப்பு தானாகவே அமைந்துவிட்டது. கீர்த்திகா எழுந்து சமையலறைக்குச் சென்றதும், கதிரும் எதுவுமே தெரியாதவன் போல எழுந்து சத்தம் இல்லாமல் அவள் பின்னாலேயே சமையலறைக்குள் சென்றான்.

உள்ளே சென்றவன், கீர்த்திகா என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவள் அடுப்பில் வெந்நீர் வைக்கப் பாத்திரம் தேடிக்கொண்டிருந்தாள். பின் ஒரு வழியாகப் பாத்திரத்தை எடுத்து, தண்ணீர் பிடித்து, ஸ்டவ்வை ஆன் செய்துவிட்டு நின்றிருக்க, அவளுக்குத் தெரியாமல் அவள் அருகில் பின்னால் வந்து நின்ற கதிர், அவள் ஜிமிக்கியைத் தன் விரலால் சுண்டி விட, திடுக்கிட்டுத் திரும்பிய கீர்த்திகா, கதிரைப் பார்த்ததும் அவனை அங்கு எதிர்பார்க்காமல் “ஆ…” என்று கத்த வாயைத் திறக்க, சட்டென அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் பிடித்து, அவள் இதழ்களைத் தன் இதழ்களால் சிறை செய்திருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured