மூர்க்கன் 11
“டார்லிங் சொன்னா கேளு இன்னிக்கு இது போதும் ” என்று மித்ரா கையில் இருந்த போதை கலந்த ட்ரின்க்சை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தான் மோகன்.
“ம்ம்.. பேபி ப்ளீஸ் இன்னும் ஒரு சிப் மட்டும் குடிச்சுகிறேனே.. எனக்கு இன்னும் ஹை! வேணும்” என்று மோகன் அருகில் கட்டிலில் படுத்திருந்த மித்ரா அவன் மேல் ஏறி அவனை தண்டி சென்று மேஜையில் இருந்த கிளாசை எடுத்து அதில் இருந்த மொத்த ட்ரின்க்சையும் குடித்திருந்தாள்.
“ஹே மித்ரா! ” என்று அவள் கையில் இருந்த கிளாஸை மோகன் வாங்க போக.. அவளோ அதை அபப்டியே தரையில் விட்டிருந்தாள். அது தரையில் மோதி சில்லு சில்லாக உடைந்திருக்க.. அதில் ஒரு துண்டை எடுத்து கையில் வைத்தவள் “நீ என்ன பண்ண சொன்னாலும் நான் செய்றேன் பேபி, பட் இதை மட்டும் லிமிட் பண்ணாத ஐ காண்ட் . அப்படி இல்லேனா.. ” என்றவள் கையில் இருந்த கண்ணாடி சில்லை தன் மார்பில் வைத்து அப்படியே ரத்தம் வர அழுத்தி கீறி இருந்தாள்.
அதை கண்டு மோகன் பதறவோ, அவளை தடுக்கவோ இல்லை. மாறாக அதை உள்ளுக்குள் ரசித்தவன் நிதானித்து அவள் கையில் இருந்த கிளாஸை பிடிங்கி தரையில் வீசியவன். “இன்னிக்கு இந்த அளவுக்கு போதும் டார்லிங். நாம வேற போதைக்கு ரெடியாகலாமா?” என்று சிரித்தவன்
அபப்டியே அவளைத் தன் மடியில் தன் முழு உயரத்திற்கும் தூக்கி அமர வாய்த்த மோகன் , அவளது மெல்லிய இடையைச் சுற்றியிருந்த பிடியை இன்னும் அதிகமாக்கினான் . அவளது இதழ்களின் ஈரம் இன்னும் அவன் இதழ்களில் தங்கியிருக்க, அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து அந்தப் போதை கலந்த வாசனையை ஆழமாக சுவாசித்தான்.
அவள் கிறக்கத்தோடு அவன் தலைமுடியைக் கோத, அவன் மெல்லத் தலைநிமிர்ந்து அவளது செந்நிறக் கண்களைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அத்தனை வேட்கை இருந்தது.
“மித்ரா… உன்னை அப்படியே தூக்கிட்டு ஒரு லாங் ரைடு போகணும்னு தோணுது,” என்று அவளது காதோரம் அழுத்தமாக கிசுகிசுத்தவன், அவளது இதழ்களில் மீண்டும் ஒரு சிறு முத்தத்தை தாந்து அவள் உடலில் ஒரு போதை ஏற்படுத்திவிட்டுத் தொடர்ந்தான்…
“இல்லனா… நீ ரெஸ்ட் எடுக்குமா சொல்லு… உனக்கு எது பிடிச்சிருக்கு? உன் இஷ்டம் மட்டும் தான் இங்க நான் உன்னை எப்பவும் போர்ஸ் பண்ண மாட்டேன்” என்றான் ஒரு நயவஞ்சகமாக குரலில்.
அதை உணரும் நிலையில் தன அவள் இப்பொது இல்லையே.. இப்பொது மட்டும் இல்லை எப்போது இருந்து மோகன் மித்ராவுடன் நெருக்கம் ஆனானோ அன்றிலிருந்து அவள் அவன் சொல்வதைத் தான் கேக்கிறாள். அவன் சொல்வதை மட்டும் தான் செய்கிறாள்.
“பேபி,. நானா ரெஸ்ட் எடுக்குறது முக்கியமில்லை… இப்போ உனக்கு நான் வேணுமா அதை மட்டும் சொல்லு ” என்றால் போதையின் உச்சத்தில்.
அவளைத் தன் மடியில் இன்னும் சற்றே உயர்த்தி அமர வைத்தவன். என்னோட ஹை எப்பவும் நீ தான் டி.. எனக்கு இந்த ட்ரக்ஸ் எதுவுமே தேவை இல்ல.. உன்னை பார்த்தாலே மொத்தமா போதை என் உச்சந்தலைக்கு ஏறிடுது” என்றவன். “உன்னை எப்படி அனுபவிச்சாலும் எனக்கு சலிப்பே ஆகா மாட்டேங்குது டி .. ” என்று நினைத்துக்கொண்டவன். அவள் உடலில் தன் கைகளை மேய விட..
அந்த நெருக்கத்தில் மித்ரா ஒரு நிமிடம் மூச்சடைத்துப் போனாள். அவனது வார்த்தைகளும் அந்தத் தொடுதலும் அவளை இன்னும் ஆழமான போதையில் ஆழ்த்தியது.
“மித்ரா… கண்ணைத் திறடி… இந்த ‘ஹை’ உனக்கு பத்தாது… நான் தரப்போறது தான் நிஜமான சொர்க்கம்,” மோகன் அவளது காதோரம் லேசாகக் கடித்தபடி கிசுகிசுத்தான்.
“ம்ம்… மோகன்… ஒரு மாதிரி பண்ணுதுடா… தலை சுத்துது…” அவள் போதையின் உச்சத்தில் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து தள்ளாடினாள்.
” பேபி… அப்பதான் நான் பண்றது எதுவும் உனக்குத் தப்பா தெரியாது. இதோ பாரு, இந்த இடத்துல நான் கை வச்சா உனக்கு எப்படி இருக்கு?” என்று அவளது மெல்லிய இடையைத் தன் நகங்களால் கீறுவது போல வருடினான்.
“ஆஹ்… ” என்று போதையிலும், அவன் தந்த வலியிலும் முனகியவள் அவனுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை.
” மித்ரா… சுகம்! நான் உன்னை எவ்வளவு ஆழமா நேசிக்கிறேன்னு உன் உடம்புக்குப் புரிய வைக்கணும். இன்னும் கொஞ்சம் குடிக்கிறியா? இல்ல, நான் கொடுக்கிற இந்த முத்தமே போதுமா?” என்று அவளது இதழ்களை வன்மையாகச் சிறைப்படுத்தினான்.
அவள் மூச்சுத் திணறி அவனைத் தள்ளியவள் “பேபி! செம்ம ஹையா இருக்கு டா.. ” என்று மூச்சிரைக்க பேசினாள்,
அவன் அவளது கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக் கொண்டான். “என்னைத் தள்ளாதடி… உனக்காகத்தான் இந்த இடத்தையே ரெடி பண்ணிருக்கேன். இப்போ பாரு, நான் சொல்றதெல்லாம் உனக்கு இனிக்கும்.” என்று அவள் இடையில் கை கொடுத்து அவளை மேலும் ஆட்டுவிக்க ஆரம்பித்தான்.
“மோகன்… எனக்கு பயமா இருக்கு… ஏன் இப்படிப் பண்ற?”
“பயப்படாதடி செல்லம்… இது ஒரு அழகான ரைடு. நான் எப்படி மூவ் பண்றேனோ, அதே மாதிரி நீயும் பண்ணு. மடியில அப்படியே சாஞ்சுக்கோ… நான் காட்டுறதுதான் இனி உனக்கு உலகம்,” என்று அவளைத் தன் உடலோடு இறுக்கினான்.
“ம்ம்… சரிடா… நீ சொல்றதுதான்… எனக்கு எதுவுமே புரியல…” அவள் முழுமையாக அவனிடம் சரணடைந்தாள்.
“புரிய வேண்டாம்… அனுபவிச்சா மட்டும் போதும். இன்னைக்கு நைட் முழுக்க நீ என்னோட பொம்மை… நான் எப்படி விளையாடுறேன்னு மட்டும் பாரு,” என்று ஒரு குரூரச் சிரிப்புடன் அவளைத் தன் இச்சைக்கு வளைக்கத் தொடங்கினான்.
அவள் உணர்ச்சியின் விளிம்பில் துடிக்க, மோகன் அவளது கூந்தலைப் பின்னால் இழுத்து, அவளது கழுத்தில் தன் பற்களைப் பதித்தபடி அந்த இறுதி வேகத்தைக் கொடுத்தான். அந்த அறையின் வெப்பம் தாளாமல் மித்ரா வியர்வையில் நனைந்து, அவனது ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு பொம்மையைப் போலத் துடித்து அடங்கினாள்.
மித்ரா இரவு முழுவதும் மோகனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இயந்திரம் போல அவன் சொல்வதை எல்லாம் மறுக்காமல் செய்தாள்.
அவளை ஆண்டு முடித்தவன் களைப்பில் அபப்டியே எழுந்து பாத்ரூமிற்குள் சென்று குளித்துவிட்டு வெளியே வந்தவன் கட்டிலில் களைத்து போய் உறங்குபவளை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு பெட்ரூம் கதவை தாளிட்டுவிட்டு நேராக அவன் சென்றது என்னவோ அவன் அக்கா ரக்ஷணாவை பார்க்கத்தான் .
ராவணை போல வசதியிலும், அந்தஸ்திலும் மோகன் குடும்பமும் வசதி படைத்தது தான்.
மோகனின் அப்பா குருமூர்த்தி ராவணின் அப்பா வரதராஜனிடம் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அவ்ருடைய பிசினஸ் முழுவதையும் வரதராஜனுக்கு அடுத்து கட்டிக்காத்ததும் குருமூர்த்தி தான். அந்த அளவுக்கு அவர் மேல் நம்பிக்கை வைத்திருந்தார் வரதராஜன் .
அவ்வப்போது குருமூர்த்தியை பற்றி சிலர் வந்து வரதராஜனிடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்திருக்க.. அவரும் குருமூர்த்தியை அழைத்து புத்தி மதி சொல்லு அவரை வேலை வாங்கி இருந்தார்.
அப்போதே எச்சரிக்கும் விதமாக சொல்லி இருந்தாள் அனைத்தும் சுமுகமாக போய் இருக்கும், வரதராஜன் புதிதாக ஒரு பிஸினெஸில் கால் பதிக்க என்னை அதற்கான வேலையையும், பொறுப்பையும் குருமூர்த்தியிடம் கொடுத்திருந்தார்.
அது பார்மஸி பிசினஸ் தான். மருந்து தயாரிப்பது அதன் விநியோகம் என ஆரம்பத்தில் அவருடை தொழில் நல்ல முறையில் தான் போய்க் கொண்டிருந்தது . அதனால் குருமூர்த்தியிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு மற்ற தொழில் கவனம் செலுத்தி இருந்தார் வரதராஜன்.
நாட்கள் செல்ல செல்ல.. குருமூர்த்தியின் பேச்சும், போக்கும் சரி இல்லாததை வரதராஜன் உணர்ந்து இருக்க.. அவருக்கு தெறியாமல் சில ஆட்களை வடித்து குருமூர்த்தியை கண்காணிக்க ஆரம்பித்து இருந்தார் வரதன்.
சில நாட்கள் கழித்து குருமூர்த்தியின் குட்டு வரதராஜனுக்கு தெறிய வந்தது, தன்னுடைய மெடிக்கல் பிசினஸை ஒரு கண் துடைப்புக்கு வைத்துக்கொண்டு அதன் பாக்டரியிலேயே சில போதை மருந்தும், புதுவிதமான மருந்தையும் உருவாக்கி அதை கள்ளத்தனமாக பிசினஸ் செய்து சம்பாரித்து வருவது தெரிந்தது,
தன்னை ஏமாற்றியதைக் கூட அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சமூகத்திற்கு மக்களுக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் அவர் செய்த செயல் தான் வரதராஜனை பதித்து இருந்தது.
தன் ஆட்களை வைத்து கோடிக்கணக்கான முதலீடு செய்த தன்னுடைய பேக்டரியை இரவோடு இரவாக எரித்து சாம்பலாக்க சொல்லிவிட்டார் வரதராஜன்.
குருமூர்த்தி பேக்டரியை விட்டு கிளம்பியதும் இந்த வேலையை செய்ய சொல்லி இருக்க..
குருமூர்த்தி சென்ற விஷயம் இவர் காதுகளுக்கு வரவும், நள்ளிரவைக் கடந்ததும் பேக்டரியை எரிக்க உத்தரவிட்டுவிட்டு அவர் சென்றுவிட..
அவர் சொன்னது போலவே நள்ளிரவை கடந்ததும் காவலாளி வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து மொத்த பேக்டரியையும் எரித்துவிட்டனர்.
அது மண்ணோடு எரிந்து சாம்பலாகும் விஷயத்தை விடியற்காலையில் வந்து வரதராஜனிடம் சொல்லி இருக்க.. அதன் பின் தான் விபரீதம் தெரிந்தது,
மாலை போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற குருமூர்த்தி , இரவு வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு அவருக்கு கீழே வேலை செய்த மாலாவுடன் சல்லாபிக்க திரும்பவும் பேக்டரிக்கு வந்திருந்தான் குருமூர்த்தி. அதற்கு காவலாளியும் உடந்தை. அவர்கள் உள்ளிருப்பது தெரியாமல் பேக்டரியை எரித்திருக்க .. அந்த பேக்டரியோடு சேர்ந்து குருமூர்த்தியும் ,மாலாவும் எரிந்து சாம்பலாகிவிட்டனர்.
போலீசிற்கு இது தீ விபத்து போல ஜோடிக்க பட்டு இருந்தாலும், உண்மையில் நடந்த விபரங்கள் அனைத்தும் பெரியநாயகிக்கு நன்றாகவே தெரியும். அவர் தன் மகள் ரக்ஷணாவிடமும், மோகனிடமும் வரதராஜன் செய்த செயலை சொல்லி சொல்லி அவர்கள் இருவரையும் இந்த குடும்பத்திற்கு எதிராகவே வளர்த்துவிட்டார்.
குருமூர்த்தி விட்டு சென்ற தொழிலை கையில் எடுத்த பெரியநாயகி தன் மகன், மகள் இருவரையும் இந்த தொழில் சம்மந்தமாக படிக்க வைத்து அவர்களையும் இதில் ஈடு படுத்திவிட்டார்.
இத்தனை செய்தும் இவருக்கு வரதராஜன் செய்த காரியத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை. அவரை வேதனையில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காகவே ரக்ஷணா, மோகன் இருவரிடமும் ராவணை ரக்ஷணாவும் , மித்ராவை மோகனும் திருமணம் செய்து வரதராஜனின் மொத சொத்துக்களையும் இருவரும் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிவிட்டு தன்னுடைய கடைசி காலத்தை படுக்கையில் கழித்துவிட்டு இறந்தும் போய் விட்டார்.
அவர் நடத்திய பிசினஸை வெற்றிகரமாக நடத்துவது ரக்ஷனா தான். புதிது புதிதாக போதை மருந்துகளை கண்டுபிடித்து அதை மக்களின் மேல் உபயோகித்து உருவாக்குவது ரக்ஷணாவின் வேலை, அதை தங்கள் வியாபாரத்தை கள்ளத்தனமாக செய்து அதற்குண்டான விற்பனை முழுவதையும் பார்த்துக்கொள்வது மோகனின் வேலை.
அவன் அம்மா இறந்த ஒரு வருடத்தில் மித்ராவுடன் பேசிப்பழகு அவளுக்கு தாங்கள் செய்த போதை மருந்தை கொடுத்து அவளை தன் அடிமையாக்கி வைத்திருக்கிறான். ஒவ்வொரு காயாக நகர்த்தலாம் என்று முடிவில் தான் முதலில் மித்ராவை தங்கள் கைக்குள் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்றி இருந்தார்கள்.
“என்ன ரக்ஷு.. இன்னும் தூங்காம லேப்லையே இருக்க ” என்று உள்ளே நுழைந்தான் மோகன்.
“ம்ம்.. புதுசா ஒரு டேப்லெட் கண்டு பிடிச்சிருக்கேன் அதை பத்தி ரெசெர்ச் பண்ணிட்டு இருக்கேன் டா.. ” என்றாள் ரக்ஷணா .
“என்ன டேப்லெட், இதை யார் மேல டெஸ்ட் பண்ண போறே.. ” என்றான் நக்கலாக,
“ராவண்!” என்றாள் அழுத்தமாக அவள்.
“வாவ்! வாவ்! அப்போ ரக்ஷு நீ அடுத்து ஆட்டத்துல இறங்கப்போற.. அப்படித்தானே,.. ” என்றான் அவன்.
“ம்ம்.. எஸ், அந்த பொண்ணை அவன் கல்யாணம் செய்துப்பான்னு நான் இமாஜின் பண்ணவே இல்ல.. அவனோட ஸ்டேட்ஸ்க்கு ஏன் அந்த எட்டாங்கிளாஸ் பொண்ணைப் போய் கல்யாணம் செய்துகிட்டான்னு தெரியல.. ” என்றாள் அவள்.
“அதுக்கு காரணமே நான் தான் ரக்ஷு.. “என்று அவன் தலையை சொரிந்தான்.
டெஸ்ட்டியூபில் மருந்தை ஊற்றிக்கொண்டே அவனை முறைத்தாள் .
“கூல் ரக்ஷு,.. ஐயம் ரியலி சாரி, இந்த மித்ரா ஒரு போதையா இருக்கா.. ஆனா அந்த மாணிக்கத்தோட பொண்ணு வேற ரகம் . அவளை எல்லாம் பார்த்தவே போதை ஏறும் , அவன்கூட பிசினஸ் பண்ணி அவனை கைக்குள்ள போட்டுக்கிட்டு அதையே காரணமா வெச்சு அவனோட பிசினெஸ் முதலீடு முழுவதையும் நான் பிடுங்கிகிட்டேன். அபப்டியே அவன் பொண்ணையும் அனுபவிச்சிரலாம்னு அவளை தூக்க ஒரு ஸ்கெட்ச் போட்டா இந்த ராவண் குறுக்க வந்து அவளை கல்யாணம் செய்துக்குவான்னு நான் நினைக்கவே இல்ல.. ” என்றான்.
“இதை என்கிட்டே முன்னமே சொல்லி இருந்தா அந்த பொண்ணை உன் வழிக்கு கொண்டு வர வைக்க மித்ராவுக்கு கொடுத்த மருந்து போல இவளுக்கும் கொடுத்திருப்பேனே” என்றாள் ரக்ஷணா.
“அதை நான் யோசிக்காம விட்டுட்டேன் ரக்ஷு. அவளை மித்ரா மாதிரி போதைக்கு அடிமையாக்கி என் சொல்பேச்சு கேக்க வெச்சது போல இவளுக்கும் செஞ்சிருக்கலாம் . தப்பு பண்ணிட்டேன் ” என்றான்.
“நோ ப்ரோப்லேம் மோகன், சீக்கிரத்துலையே நீ நினைச்சதை நடத்தி கொடுக்கிறேன் , டோன்ட் ஒர்ரி ” என்றாள்.
