EPISODE 11
கீர்த்திகா சமையல் அறை சென்று வெங்கடசாலத்திற்கு சுடுதண்ணீர் வைத்துவிட்டு நின்றிருக்க. அவளை பின் தொடர்ந்து அவளுக்கு தெரியாமல் கிட்சேனிற்குள் நுழைந்த கதிர் அவளை பின்னால் நின்று அவளை காதில் மாட்டி இருந்த ஜிமிக்கியை சுண்டிவிட்டான்.
யார் என்னோட ஜிமிக்கியை சுண்டிவிட்டது என்று திரும்பிய கீர்த்திகா கதிரை அங்கு அவளை அருகில் பார்த்ததும் பயத்தில் ஆ… என்று கத்த வாயை திறக்க, எங்கே அவளை சத்தம் போட்டு அனைவரையும் கூப்பிட்டுவிடுவளோ என்று நினைத்தவன் அவளை முகத்தை தன் இருக்கைகளாலும் பிடித்து அவளை இதழ்களை சிறை செய்தான்.
முதல் முறை ஒரு பெண்ணின் இதழ் ஸ்பரிசமும் அவளை அருகாமையும் கதிரை ஏதோ செய்ய லேசாக முதலில் லேசாக அவள் இதழில் முத்தமிட்டவன் அவளை ஸ்பரிசம் அவன் உடலை சூடேற்ற அவன் தந்த முத்தத்தை தீவிரமாகினான்.
இங்கே கீர்த்திகாவின் நிலையோ அதற்கு மேல். ஒரு ஆணின் தீண்டல் முதல் முறை உணர்ந்தவள் அவன் மூச்சுகாற்றின் சுவாசம் அவளின் நாசியில் கலக்க அவன் இதழ் முத்தம் அவளை ஏதோ செய்ய அவனை தன்னிடம் இருந்து விளக்க மறந்து அப்படியே கண்களையும் கைகளையும் இருக்க மூடிக்கொண்டு அவனிடம் தன் இதழை கொடுத்துவிட்டு தன்னை மறந்து நின்றிருந்தால்.
கதிர் அவளை ஒருகையால் அணைத்துக் கொண்டு மறுகையால் அவளை முகத்தை பிடித்து தன் முகத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டு நின்று சுற்றி இருக்கும் சூழல் மறந்து அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
எங்க அவருக்கு சுடு தண்ணீர் கொண்டு வரேன்னு சொல்லி உள்ள போன கீர்த்திகாவை இன்னும் காணவில்லை என்று விசாலாட்சி கூற, இருங்க சம்மந்தி நான் போய் பாத்துட்டு வரேன் நீங்க பேசிட்டு இருங்க என்று எழுந்து சென்றார்.
இருவருமே தங்களை மறந்து இருக்க, துர்காவும் அவள் அம்மாவும் சமையல் அறை நோக்கி வந்து கொண்டிருந்தார். சமையல் அறைக்குள் வந்தவர் அங்கே உள்ளே நின்றிந்தவலை பார்த்து அப்படியே ஒரு நிமிடம் நின்றுவிட்டார்.
கீர்த்திகா அங்கே கதிரை பார்த்து நின்றிருந்தது போல கண்களை இருக்க மூடி, கைகளை மூடி அப்படியே விரைப்பாக அவளை மட்டும் நின்றிருக்க, இவளுக்கு என்ன ஆச்சு இப்படி நிக்குறா என்று யோசித்தவர் அவளை அருகில் வந்து கீர்த்ததுமா… என்று அழைக்க, அவளை அப்படியே நிற்க திரும்பவும் “ஏய் கீர்த்திகா….” என்று அதட்டாளாக அவள் தோலை தொட்டு குலுக்க, அப்போது தான் சுயநினைவு வந்தவளாக, அவளை அம்மாவின் குரல் கேட்டு “ஐயோ… அம்மா வந்துவிட்டர்களே! என்னை இப்படி பார்த்தால் என்ன ஆவது?” என்று தன் எதிரே கதிர் இருப்பதாக நினைத்து அவளை அம்மாவை தன்னிடம் இருந்து வேகமாக விளக்குவதாக நினைத்து தள்ளி விட்டாள்.
அவர் கீழே விழுவது போல பின்னால் போக, அப்போது தான் கீர்த்திகா “தன் அம்மாவை தான் நான் தள்ளி இருக்கிறேனா? அப்போ அவன்…” என்று யோசனையில் முதலில் அவள் அம்மாவை கைபிடித்து நிறுத்தியவள் சுற்றுமுற்றும் பார்க்க, அங்கே கதிரை காணவில்லை.
அதுவும் புரியாமல் விழித்தவள் அவளை அம்மாவை பார்க்க அவர் முறைத்துக்கொண்டு நின்றிருந்தார். அவரை பார்த்து அசடு வழிந்தவள் திரும்பி தண்ணீரை பார்க்க அது நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது.
அவசரமாக அதை ஆஃப் செய்ய “நீ தள்ளு, நானே எடுத்துட்டு போய் சமந்திக்கு கொடுக்கிறேன். நீ என்னவோ சரி இல்லை ஏதோ மாதிரியே இருக்க இங்க வந்ததுல இருந்து” என்று கூறியவர், தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்து சென்றார்.
அவர் பின்னாலேயே செல்ல போன கீர்த்திகாவை ஒரு கை பிடித்து சமையல் அறைக்கு உள்ளேயே இருந்த ஸ்டோர் ரூமிற்குள் இழுத்தது.
இழுத்த வேகத்தில் அவளை வாயை தன் கையால் யாரோ மூட, யார் என்று பார்க்க அங்கே கதிர் நின்றிருந்தான். அவனை பார்த்ததும் அவளை விழிகள் அதிர்ச்சியில் மேலும் அகல விரிந்தது.
கதிர் தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து “ஷ்…..” என்று சைகை செய்தவன், அவளை வாயில் இருந்து தன் கையை எடுத்தான். அவளை சுவற்றோடு பிடித்து அழுத்தி நிறுத்தி இருக்க கீர்த்தியால் எங்கேயும் நகர முடியவில்லை.
அவனையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களை ரசித்தவரே “என்ன கீ… நா உன்கிட்ட பேட் கட்டின மாதிரியே உன்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துட்டேன் பாத்தியா?” என்று மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறி தன் காலரை தூக்கிவிட்டான்.
அவன் அப்படி கூறியதும் அவனை முறைத்த கீர்த்திகா அவனிடம் கோபமாக “இப்படி ஒரு பொண்ணு கிட்ட நடந்துகிறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று கூற, “வெட்கமா? எனக்கா …. நோ….” என்று அவளை பார்த்து சிரிக்க.
அவன் சிரித்ததில் அவன் கண்கள் லேசாக சுருங்கி அழகாக தெரிய, அதை ரசித்தவள் பின் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, ‘இவன் நம்ம கிட்ட அத்துமீறி நடந்திருக்கான், அவனை போய் ரஸிக்குறியே?’ என்று தன்னை தானே கேட்டுக்கொண்டாள்.
“அதானே? நீங்க எல்லாம் பெரிய இடத்து பசங்க. உங்களுக்கெல்லாம் இது சகஜமா இருக்கும். ஆனா எங்களுக்கு எல்லாம் அப்படியா? நாங்க மனம் ரோசம் உள்ளவங்க. எங்க நிலை என்ன என்று எங்களுக்கு தெரியும்” என்றவள், அவனை முறைத்து கொண்டு அது “என்ன கீ…” என்றாள். “கீர்த்திகாவை சுருக்கி கீ… என்று சொன்னேன்” என்றான் கதிர். “இனிமேல் என்கிட்ட இந்த மாதிரி பேசுற வேலை, நடந்துக்கிற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க. எங்களுக்குனு ஒரு மரியாதை இருக்கு. உங்க பொழுது போக்கிற்காக எங்க வாழ்க்கையில் விளையாடதீர்கள்” என்று முகத்தில் அடித்தது போல பேச.
கதிர் “ஏய் கீ…. ஏன் இப்படி எல்லாம் பேசுற? நான் உன்னை அப்படி இல்லனா தவறாக நினைத்து…” என்று அவன் கூற வர “இப்போதான சொன்னவன் இப்படி பெயர் வைத்துக் கூப்பிடவேண்டாம்” என்று அவள் அவனை முறைக்க, அவன் வேண்டுமென்றே அப்படி தான் கூப்பிடுவேன் என்றவன் திரும்ப “கீ….” என்று அவளை அழைக்க.
அவள் திரும்ப அவனை “போடா கா….” என்றாள். “என்னது? கா…வா…” என்று கதிர் கூப்பிட, “நீ என்னை இப்படி கூப்பிட்டா நானும் உன்னை அப்படி தான் அழைப்பேன்” என்று அவனிடம் வம்புக்கு நின்றாள்.
அவன் மறுபடி “ஏய்… கீ…” என்று ஹுஸ்கி வாய்சில் அழைத்துக்கொண்டு அவளை அருகில் வர, பதறிய கீர்த்திகா “டேய் இப்போ எதுக்கு என் பக்கத்தில வர?” என்று கூறி பின்னே செல்ல, அவன் “ம்ம்ம்…. அப்போ அவசரத்துல சரியா கொடுக்கலை, அதன் மறுபடி ஒரு முறை பெட்ல ஜெயிக்கலாம்னு….” என்று நிறுத்த, “இன்னோரு தடவை அந்த மாதிரி ஏங்கிட்ட நடந்துகிட்டே, நடக்குறதே வேரை” என்று அவனை எச்சரித்து விட்டு, அவனை தாண்டி செல்ல போனவளை அவளை கையை பிடித்து இழுத்து அவளை சுவற்றில் அழுத்தி நிறுத்தியவன், “என்ன டி பண்ணுவ? நானும் பாக்குறேன். ரொம்ப ஓவரா தான் போற” என்றவன், “இப்போ நான் மறுபடியும் முத்தம் கொடுக்கிறேன். உன்னால ஆனதை பாரு” என்றவன் குனிந்து அவள் இதழில் மீண்டும் முத்தமிட, அவனை பலம் கொண்டு தன்னிடம் இருந்து பிரித்தவள் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டாள் கீர்த்திகா.
அவனிடம் இருந்து விலகி இரண்டு அடி தள்ளி நின்று, “இனி என் பக்கத்துல வர வேலை வெச்சுக்காதே, உன் மரியாதை கெட்டு போயிரும்” என்றவள் அங்கிருந்து கண்களில் கண்ணீரோடு வெளியே சென்றாள்.
சமையலறையை விட்டு வெளியே வந்த கீர்த்திகா தன் கண்களை துடித்துக் கொண்ட நேராக அவள் அம்மாவிடம் சென்று “அம்மா நான் வீட்டுக்கு போறேன்” என்றாள். அவள் அப்படி திடீரென்று வந்து “நான் வீட்டுக்கு செல்கிறேன்” என்று கூறியதும், அமர்ந்திருந்த விசாலாட்சி, துர்கா, அவளுடைய அம்மா மூவருமே “ஏன்? என்ன ஆச்சு உனக்கு? என்ன திடீர்னு ஏன் வீட்டுக்கு போறேன்னு சொல்ற?” என்று துர்கா கேட்க, விசாலாட்சியும் “ஏன்டா கண்ணு? என்ன ஆச்சு?” என்று கேட்டார்.
அது ஒன்னும் இல்ல ரொம்ப போர் அடிக்குது இங்க அது இல்லாம எனக்கு எக்ஸாம் வேற இன்னொரு வாரத்தில் வரப்போகுது. அதனால்தான் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். போய் கொஞ்சமாக படிக்கலாமே. நான் இங்க சும்மா தானே இருக்கேன். அதனால தான் அத்தை” என்றால் விசாலாட்சியிடம் கீர்த்திகா.
அவள் எக்ஸாம் இருக்கிறது படிப்பதற்கு என்று சொல்லவும் அவரை யாரும் தடுக்கவில்லை. “சரி நீ கிளம்புதுன்னா கிளம்புமா. அம்மா அப்பாவும் சாயங்காலம் சீக்கிரம் வந்துருவாங்க வீட்டுக்கு” என்று கூறி, கீர்த்திகாவை அனுப்ப மனமில்லாமல் விசாலாட்சி அனுப்பி வைத்தார்.
“சரி நீ எப்படி வீட்டுக்கு போக இங்கிருந்து? இரு நான் யாரையாவது கொண்டு வந்து விட சொல்றேன்” என்று அவர் கூற “அதில்ல அத்தை நானே ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுறேன். உங்களுக்கே வீண் சிரமம்” என்று அவள் கூற “இதில் என்னடா இருக்கு? என் மருமகளோட தங்கச்சி உன்னை எப்படி நான் ஆட்டோவில் போடறதுக்கு விடுவேன்? சரி நீ இரு நான் டிரைவர் யாரையாவது வர சொல்றேன்” என்று கூறியவர், அவளை காத்திருக்க சொல்லிவிட்டு டிரைவரை அழைத்தார்.
அப்புறம் எப்படி? டிரைவர் வரவும் “டிரைவர், நீங்க கீர்த்திகாவை கொண்டு போய் பத்திரமாக அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துருங்க” என்றார். டிரைவர் “சரிமா” என்று கூறி, கீர்த்திகாவை வரச் சொல்லிவிட்டு காரை எடுத்து சென்று விட்டார்.
அனைவருடன் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினாள். துர்காவின் வீட்டை விட்டு வெளியே வரவும், கார் வரவும் சரியாக இருந்தது. அவள் காரின் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்து “அண்ணா, நான் சொல்ற வழியில போங்கனா, உங்களுக்கு எங்க வீடு தெரியாது தானே?” என்று சொல்லிக் கொண்டு டிரைவரை பார்க்க அங்கே கதிர் அமர்ந்திருந்தான்.
அவனை அங்கு எதிர்பார்க்காத கீர்த்திகா “நீ? உன்னை யார் இங்க வர சொன்னது?” என்று கூறியவள் கார் கதவை திறந்து இறங்கப் போக “ஏய் கீ….. ப்ளீஸ், என்ன ரொம்ப தர்ம சங்கடத்துக்கு ஆளாகிற. நீ தயவு செய்து காரிலேயே உட்காரு. நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். பேசாம கொண்டு போய் உன் வீட்டில் விட்டுவிட்டு வந்துருவேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது” என்று அவளிடம் கெஞ்ச, வேறு வழி இல்லாமல் கீர்த்திகா பேசாமல் கதவை சாற்றி விட்டு அமர்ந்தால்.
காரை ஸ்டார்ட் செய்த கதிர் ஓட்டிக்கொண்டு செல்ல இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக வந்தனர். கீர்த்திகாவிற்கு அழுகை தாங்க முடியாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்க, அதை காரின் உள்ள கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே வந்தான் கதிர்.
சிறிது நேரம் சென்றவன் காரை ஒரு ஓரமாக நிறுத்த, கார் நின்றதை உணர்ந்த கீர்த்திகா கண்களை திறந்து பார்க்க, கார் ரோட்டில் ஒரு ஓரமாக நின்று இருக்க, திரும்பி டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த கதிரை பார்த்து முறைத்தாள்.
அவனை முடித்தவன் கார் கதவை திறந்து கொண்டு வெளியே செல்லலாம் என்று கதவைத் திறக்க, ஆனால் கதவு திறக்க முடியாதபடி கதிர் கதவை லாக் செய்து இருந்தான்.
“இப்ப எதுக்கு கார் கதவை லாக் பண்ணி வச்சிருக்க கதிர்? தயவு செய்து கதவை திற. என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துற நீ? நான் உனக்கு என்ன பாவம் பண்ண?” அழுது கொண்டு பேசினால் கீர்த்திகா.
அவள் அழுவதை மேலும் தாங்க முடியாத கதிர் வேகமாக தன் இருக்கையில் இருந்து கார் கதவை திறந்து வெளியே வந்தவன், பின் இருக்கைக்கு வந்து கீர்த்திகாவின் அருகில் அமர்ந்தான்.
அவன் தன் அருகில் வந்து அமர்ந்ததும் தன்னை ஏதோ செய்யத்தான் அப்படி வந்திருக்கிறான் என்று பயந்தவள் பின்னிருக்கையின் கதவிற்கு பக்கத்தில் ஒண்டி அமர்ந்தவள் கதவை திறக்க பலமுறை முயற்சி செய்ய “கீர்த்திகா ப்ளீஸ் இப்படி பண்ணி என்னை இன்சல்ட் பண்ணாத. நான் உன்னை எதுவுமே பண்ண மாட்டேன். ஏன் இப்படி நடந்துக்கிற? என்னை பார்த்து இப்படி பயந்துக்கிறேன்?” என்று கதிர் அவளை பார்த்து கேட்க. “நீ என்ன எதுவுமே பண்ண மாட்டியா? இன்னைக்கு வீட்ல வச்சு கிச்சன்ல நீ என்னை என்ன பண்ணுன? என்னை பார்த்தா உனக்கு எப்படி தோணுது? நீ வந்து என்னை கிஸ் பண்ணவும் நானும் சரின்னு சொல்லி உனக்கு இடம் கொடுக்கணுமா?
இப்படித்தான் ஒரு பொண்ணு கிட்ட நீ அத்துமீறி நடந்துக்குவியா? இப்படித்தான் உங்க அம்மா உனக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்களா? ஏன் இப்படி என்ன கஷ்டப்படுத்துற? நான் தான் அங்கிருந்து உடனே கிளம்பி வந்துடனே உன்ன பாக்க கூடாதுன்னு. உன்னை யாரு இப்ப கார் எடுத்துட்டு என் கூட வரச் சொன்னது? இப்ப எதுக்கு கார் ரோட்டோரமா நிறுத்துன? அப்படி நான் என்ன பண்ணுனேன் உனக்கு? உனக்கு ஒரு பொண்ணு கிட்ட இருந்து முத்தம் வேணும் இல்ல வேற ஏதாவது வேணும்னா எத்தனையோ பெண்கள் அதுக்காக உன் பணத்துக்காகவும் பின்னாடி சுத்திட்டு இருப்பாங்களே. அவங்க பின்னாடி போக வேண்டியது தானே? என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துற? நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்?” என்று பேசிக்கொண்டே இருந்தால் கீர்த்திகா.
அவள் இப்படி அவனை கோபப்படுத்தும் படி பேசிக் கொண்டே இருக்க “கிருத்திகா ப்ளீஸ் கொஞ்சம் பேசாம இருக்கியா?” என்று சத்தம் போட்டான் கதிர்.
அவன் இப்படி கோபமாக பேசியதும் இதுவரை பேசிக் கொண்டிருந்த கீர்த்திகா அதிர்ச்சியில் அப்படியே பேசாமல் அவனை பார்க்க.
“ஏய், உன் மனசுல என்ன தாண்டி நீ நினைச்சிட்டு இருக்க? என்ன பார்த்து பொம்பள பொறுக்கி மாதிரி தெரியுதா? ஒரு பொம்பளை கிட்ட அவ விருப்பம் இல்லாம என்ன வேணா செய்றவன் நீனு நினைச்சுட்டியா?
என் பணத்துக்காக என் பின்னாடி ஆயிரம் பொண்ணுகள் வருவாங்க. அவங்க பின்னாடி போனு சொல்றே. அது எனக்கு தெரியாதா? அதை நீ சொல்லித்தான் நான் செய்யணுமா? நான் ஏன் உன் பின்னாடி வரேன்னு கொஞ்சம் கூட உன் மனசாட்சிக்கு தெரியலையா? உன் மனசாட்சியே தொட்டு நீயே யோசிச்சு பார்த்து இருந்தா, இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் நீ என்கிட்ட பேசி இருக்க மாட்ட.
இப்படி பேசுற உன்கிட்ட நான் என் மனசு துறந்து எதை புத்தி விளக்கமா சொல்லி உனக்கு புரிய வைக்க என்னால முடியாது. அதுக்கு நான் விருப்பப்படவும் இல்லை. என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லையா உனக்கு? என்ன பார்த்தா அப்படித்தான் தெரியுதா?” என்றவன் வெறுத்தாலும் பார்வை அவள் மீது வீசியவன். “ச்சே…. உன்ன போய் நான் என் மனசுல அவ்ளோ ஒரு பெருசா நினைச்சுட்டேனே” என்று அவளை பார்க்கவும் பிடிக்காமல் காரை விட்டு வெளியே வந்தவன், வழியில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸி பிடித்து நிறுத்தியவன், அவனுக்கு கையில் பணத்தை கொடுத்து, கீர்த்தியாவின் வீட்டு அட்ரஸையும் சொல்லி, நேராக அவர் வீட்டில் அவளை இறக்கி விடும்படி சொல்லி, கீர்த்திகாவிற்கு காரை திறந்து வெளியே போ என்பது போல கையை நீட்ட, அதுவரை அவர் மீது கோபமாக இருந்த கிருத்திகாவிற்கு இப்போது ஏனோ மனது மிகவும் பாரமாக இருந்தது. அவசரப்பட்டு அவனிடம் வார்த்தைகளை கொட்டி விட்டோமோ என்று யோசித்தவள், அவனிடம் பேச “க… க… கதிர்” என்று பேசுகிற, அவள் முகத்திற்கு நேராக கையை நீட்டி “எதுவும் பேசாதே, போ” என்று வெறுப்போடு கூடியவன் அவளை திரும்பியும் பார்க்காமல் தான் வந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
கீர்த்திகாவால் அவனிடம் பேச முடியவில்லை என்று அவள் மனது மிகவும் பாரமாக இருக்க எதுவும் செய்ய முடியாமல் பேசாமல் செல்லும் அவனை கனத்த இதயத்துடன் அவன் நிறுத்தி இருந்த காரில் ஏறி அவள் வீடு நோக்கி சென்றாள்.
