எபிசோட் 16
“என்னடி இது? இதுக்கு தான் நான் நம்ம ஹனிமூன் வர வேண்டாம்னு சொன்னேன் இப்ப பாரு நீ எவ்வளவு டயர்டா இருக்கேன்னு” என்றான் ராக்கி ரதியின் நிலையை பார்த்து.
“என்னடா இவ்வளவு நேரம் வாமிட் பண்ணதுல கொஞ்சம் டயர்டா இருக்கு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும். அதுக்காக இப்படிப்பட்ட சான்ஸ் மிஸ் பண்ணனும்னு சொல்றியா?” என்றவள்
“என்னடி மிஸ் பண்ண போற எங்க இருந்தாலும் நம்ம ஹனிமூன் கொண்டாடுறது தானே, இதில் என்ன இருக்கு இவ்வளவு தூரம் வந்து தான் ஹனிமூன் கொண்டாடனுமா, ஏற்கனவே குலுமணாலியில் கொண்டாயிட்டோமே.. நம்ம வீட்டிலேயே நம்ம ரூம்லயே விடிய விடிய கூட கொண்டாடலாமே” என்று சிரித்தான்.
“டேய் ரவுடி ராஸ்கல் ஒரே இடத்துல ஒரே ரூம்ல எவ்வளவு நாளைக்கு தான்டா இருக்கிறது. போரடிக்காது? அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் இடத்தை சேஞ்ச் பண்ணனும் டா. அப்போ தானே இன்னும் ரொமான்ஸ் நமக்குள்ள கூடும்” என்று கட்டிலில் அமர்ந்திருந்தவள் அவள் அருகில் நின்றிருந்தவன் சட்டையை பிடித்து தன்னை நோக்கி கீழே இழுத்தாள்.
அவள் மேலே விழப் போனவன் சுதாரித்துக் கொண்டு கட்டிலில் கையுன்றி அவள் முகத்திற்கு மிக அருகில் வந்தவன்
“ஏய் 250 பார்த்து டி” என்றவன் “ரொமான்ஸ் பண்ண இடம் மாத்தணும்னு அவசியம் இல்லையே” என்று அவள் இதழில் தன் இதழ் பதித்தான்.
அவன் முத்தத்தில் கரைந்தவள் கண்மூடி முத்தத்தை அனுபவித்து கொண்டே ராக்கியின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக வேகமாக கழட்டினாள்.
அவளை மெல்ல கட்டிலில் கிடைத்தி தன் முழு பாரத்தையும் போடாமல் பாதி உடலை கட்டிலிலும் பாதி உடலை அவள் மேலும் கிடத்தி இருந்தவன். அவள் இதழ் , மூக்கு, கண்கள் என்று முத்தங்கள் நிறைத்து விட்டு மெல்ல கீழே இறங்கினான்.
ரதியும் அவன் முத்தத்திற்கு சினிங்கி, குலைந்து, வெட்கப்பட்டு ,கூச்சத்தோடு அவனோடு ஒன்றினாள்.
இருவரின் பேச்சு சத்தமும் அடங்கி அந்த அறை முழுவதும் முனகல்கள் மட்டுமே நிறைந்திருந்தது. அவள் கர்ப்பமாக இருப்பதை கருத்தில் கொண்டு மிகவும் மென்மையாக கவனமாக அவளோடு ஒன்று கூடினான் ராக்கி.
ராக்கியின் இந்த மென்மை கூட அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தன்னோடு ஒன்றி கலந்தவனின் முகத்தை ரசித்தபடி கீழே படுத்து இருந்தாள்.
மூச்சு வாங்க அவள் மேலே கிடந்தவன் “என்னடி அப்படி பாக்குற?” என்று மெல்ல தன் வேகத்தை கூட்டினான்.
“இல்ல எப்பவும் சார் இந்த மாதிரி சமயத்துல உங்க கண்ட்ரோலில் மீறி இருப்பீங்க. ஆனா இன்னைக்கு ரொம்ப கண்ட்ரோல்டா என்னை…” என்று அவள் கீழ் உதட்டை கடிக்க..
மூச்சு வாங்கிக்கொண்டு அவளை பார்த்தவன் செல்லமாக முறைத்து விட்டு “நீ மட்டும்ன்னா உன்னை இந்த நேரம் புரட்டி எடுத்திருப்பேன்டி, வயித்துக்குள்ள நம்ம குட்டிப் பையன் இருக்கானே அவனுக்கு எதுவும் ஆயிடக் கூடாதுன்னு தான்” என்றவன் “இந்த நேரத்தில் கேட்கிற கேள்வியா டி” என்று குனிந்து அவள் இதழை மீண்டும் அடைத்திருந்தான் தன் இதழால்.
இருவரும் அந்த இரண்டாவது ஹனிமூனை இனிதே ஆரம்பித்து இருந்தனர்.
இந்த இரு ஜோடிகளும் அவரவர் காதலிலும், வாழ்க்கையிலும் சந்தோசமாக வாழ ஆரம்பித்திருக்க..
இதில் ராக்கி, ராக்வ்வால் பாதிக்கப்பட்டிருந்த உதயமூர்த்தியும், எதிர்க்கட்சி தலைவன் பரமசிவம் இருவரும் அவர்கள் குடோனில் ஒன்றாக உக்கார்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர்.
“டேய் உதயா, என்னால இதை ஜீரணிக்கவே முடியல டா” என்றார் பரமசிவம் முழு போதையில்.
“எதுக்குங்க ஐயா! ” என்றான் மிகவும் பவ்வியமாக அவர் முன் மது குடிக்காமல் முகத்தை திருப்பி மது அருந்தும்போது தன் முகத்தை ஒற்றை கையால் மறைத்துக்கொண்டு.
“என்ன டா தெரியாதவன் மாதிரி பேசுற.. அந்த சிவராஜன் எவ்ளோ பெரிய தப்ப பண்ணிட்டு இத்தனை வருசமா யோக்கியன் மாதிரி நடிச்சிட்டு இருந்திருக்கான் பாரு. ஒரு செட்டப் ஒன்னை வெச்சிட்டு அதுக்கு மூணு புல்லையும் பெத்துட்டு அந்த செல்வியை கல்யாணம் பண்ணி இருக்கான், இவ்ளோ நாளா நினைச்சேன். பணத்துக்கு முன்னாடி மயங்காத ஆளுங்களே இல்ல.. இந்த ராகியை மட்டும் மடக்க முடியலைன்னு நான் நினைச்சேன். இப்போ தான் தெரியுது அவன் அந்த சிவராஜனோட மூத்த புள்ளையின்னு” என்றார்.
“ஆமாங்க ஐயா, நான் கிட்டத்தட்ட 20 வருசமா அந்த ஆளுக்கு பியேவா இருந்திருக்கேன். ஆனா எனக்கே இந்த விஷயத்தை பத்தி கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு அந்த சிவராஜன் பாத்திருக்கான். அவனை சும்மா விடக்கூடாதுங்க ஐயா. அவனையும் அவன் புள்ளையையும் கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும்” என்றான்
“கொள்ளலலாம் டா , ஆனா அதுக்கு முன்ன அவன் நம்பிக்கையா இருக்க அவன் மகனையும், மருமகனையும் ஏதாவது பண்ணனும். அதுக்கு பிறகு அந்த சிவராஜனை பாத்துக்கலாம்” என்றார்.
“ஐயா! அவன் பொண்ணுங்க ரெண்டு போரையும் விட்டுட்டீங்களே… ” என்று உதய மூர்த்தி காதை சொரிய.
“அவளுங்களுக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே டா.. ” என்றார் பரமசிவம்.
“அதனால என்னங்க ஒரு நாள் கூத்துக்கு கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டா என்ன.. ” என்றான்.
“ஹாஹாஹா.. அதுவும் சரி தான். சரி முதல்ல அவனுங்க ரெண்டு போரையும் இருக்குற இடம் தெரியாம பண்ணுவோம் . அப்பறோம் அந்த பொம்பளைங்களை கேக்க எவன் வருவான். அப்போ அவளுங்க ரெண்டு பேரும் உனக்கு தான்” என்று வஞ்சகத்தோடு சிரித்தார்.
“இப்போ என்னங்கய்யா பண்றது. எப்படி காய் நகர்த்துறது “என்றான் உதய மூர்த்தி.
“அதை பத்தி நீ ஏன் டா கவலைப்படுற.. எனக்கு நம்பிக்கையான ஆளு ஒருத்தன் அந்த சிவராஜான்கிட்டே வேளைக்கு சேர்த்து விட்டுருக்கேன் . அவன் நமக்கு எல்லாமே ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருவான். மத்ததை அப்பறோம் பாத்துக்கலாம்” என்றார்.
“அப்படியா! யாருங்க ஐயா அது” என்றான் உதயமூர்த்தி ஆர்வமாக.
பரமாசிவம் அந்த உலவழியின் பெயரை சொல்ல… அதிர்ந்து போன உதயமூர்த்தி “ஐயா! நீ அரசியல் சாணக்கியான்னு சும்மாவா சொன்னாங்க” என்று சிரித்தான்.
பரமசிவம் அவன் புகழ்ச்சியை கேட்ட படியே தன் மனதில் சிவராஜனையும், அவர் வாரிசுகளையும் , அவர் குடும்பத்தையும் குழி தோண்டி புதைக்க என்ன வழி என்று யோசிக்க துவங்கினார்.
அதே சமையம் இங்கே ஒரு கும்பல் இருக்கின்ற போதை வஸ்துக்களை சுற்றிலும் வைத்துவிட்டு அந்த போதை போதாதென்று மாதுவின் போதையும் வேண்டும் என அந்த கூட்டத்தின் தலைவன் சுறா தன் இரு பக்கமும் இரண்டு குட்டிகளை கட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தான்.
“அண்ணாத்தே! எல்லாம் நம்ம கைய விட்டு பூடுச்சு .. அந்த ராகவனால நம்ம மேல எல்லாருக்கும் இருந்த பயம் காணாம போயிருச்சு. அவன் மட்டும் அன்னிக்கு குறுக்க வராம இருந்திருந்தா அந்த சிவராஜன் இந்நேரம் செத்து சுண்ணாம்பாகிருப்பான். அல்லாம் அவனால வந்ததது ” என்று அவனுக்கு போதை மருந்து அடங்கிய சிகெரெட்டை பற்ற வைத்துக் கொடுத்தான்.
அதை வாங்கி ஒரு இலுப்பை எடுத்தவன் அருகில் இருந்த பெண்ணின் வாயில் அதை ஊத்தி தள்ளிய சுறா “அவனால தான் பரமசிவம் ஐயா இப்போ எந்த வேலையும் நமக்கு கொடுக்குறது இல்ல.. டார்கெட் ஒரு வாடி மிஸ் அங்கிருச்சுன்னு என்னை குறைச்சு எடை போட்டுட்டாரு. அந்த சிவராஜனை நானே என் கையாள போடப்போறேன். அதுக்கு அப்பறோம் என்னை எவனெல்லாம் நக்கல் செஞ்சானோ அவனெல்லாம் என்னை பாத்து பயந்து சாகனும். அப்படி இருக்கும் அந்த சிவராஜன் சாவு ” என்றான் சுறா.
“அண்ணாத்த.. என்ன பண்றதா இருக்க” என்றான் அந்த அடியாள்.
“அது நாளைக்கு தெரியும்டா ஒனக்கு…” என்றவன் “நீ கிளம்பு எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று அருகில் இருந்த பெண் ஒருத்தியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
அவனும் தலையை சொரிந்து கொண்டே வெளியேறி இருந்தான்,
மறுநாள் காலை அழகாக விடிந்திருந்தது. ராகவ், ஓவியா இருவரும் அந்த கடற்கரை ஓரத்தில் சூரிய உதயத்தை ரசிக்க அதிகாலையிலேயே இங்கு வந்துவிட்டனர்.
பீச்சின் ஓரத்தில் போட்டு இருந்த பென்ச்சில் ராகவ் அமர்ந்து இருக்க.. அவன் தோளில் தலை சாய்த்து அமர்ந்து அந்த அழகான சூரிய உதயத்தை கண்டு ரசித்துக்கொண்டிருந்தாள் ஓவியா.
“காக்கி, ரொம்ப அழகா இருக்குள்ள… ” என்றாள் அந்த காட்சியை கண்டு ரசித்தபடி.
“அதை விட அழகு நீ தான் டி என் திருட்டு கழுதை” என்று அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்.
அவர்களை தூரத்தில் இருந்து பார்த்த வேலுவிற்கு சற்று ஏக்கமாக இருந்தது. ஓவியாவின் மீது அவனுக்கு இன்னமும் ஒரு ஏக்கம் இருந்தது. அவளை தான் திருமணம் செய்ய முடியாமல் போனதில் அதிக வருத்தமும் இருந்தது. இனி என்ன செய்ய முடியும் அவள் தான் இப்பொது ராகவ்வின் மனைவி ஆகிவிட்டாளே .. இனி அவளை பார்த்து ஏக்கப்படுவதிலோ. வருத்தப்படுவதிலோ எந்த பிரயோஜனமும் இல்லை. தன் வாழ்க்கையின் போக்கே இப்பொது தான் மாறிவிட்டதே என்று நினைத்தவன் அவர்கள் இருந்த திசைக்கு எதிர் புறம் ஒரு பெருமூச்சுடன் நடந்தான்.
அப்போது தான் தூங்கி எழுந்து வந்த திகழினி ராகவ் , ஓவியா இருவரையும் பார்த்துவிட்டு அங்கே வந்தாள்.
“ஹே என்ன காலையிலேயே ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க.. ” என்று வந்தவள் ஓவியாவை நகர்த்தி அமர வைத்துவிட்டு இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“ஹே! லூசு என்ன டி பண்ற.. வேலு பார்த்தா என்ன நினைப்பான். ” என்றான் ராகவ் .
“அவன் ஏதும் நினைக்க மாட்டான். சொல்லப்போனா நான் என்ன பண்ணினாலும் அவன் கண்டுக்கிறதா இல்ல.” என்றவள் தன் கைகளை எடுத்து இருவரி தோள் மீதும் போட்டு அவர்களை தன் பக்கம் இழுத்தவள் “உங்ககிட்டே ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்று சொன்னாள்.
இருவரும் என்ன என்ற ரீதியில் அவளை பார்க்க… “உங்க ரெண்டு பேரையும் யாரோ ஒருத்தன் தூரத்தில் இருந்து நோட்டம் விட்டுட்டு இருக்கான். அவன் கையில துப்பாக்கி வேற இருக்கு” என்றாள்.
அதை கேட்டு ஓவியா “ஹா! ” என்று வாயை பிளக்க…
ராக்வ்வோ அதே நிலையிலும் சுற்றிலும் நோட்டம் விட்டவன் அவள் சொன்ன நபரை தேடினான். அவன் தூரத்தில் இருந்த ஒரு பீச் பாரிள் போடப்பட்டு இருந்த ஒரு பெரிய பெஞ்சின் பின்னால் ஒளிந்து நின்று இருந்தான் அவன் கையில் துப்பாக்கி இருந்தது, அதுவும் நவீன ரக துப்பாக்கி .அதை பார்த்ததும் “திகழ் நீ ஓவியை கூப்டு உள்ளே போ.. நான் அவனை பாத்துக்கிறேன்” என்று யதார்த்தமாக எழுந்தான்.
“டேய் காக்கி, நீயும் என் கூட வந்திரு அவன் ஏதாவது செஞ்சிர போறான் எனக்கு பயமா இருக்கு” என்று அவன் பனியனை பிடித்து இழுத்தாள்.
அவள் பக்கம் குனிந்து “கூல் பேபி! எனக்கு ஒன்னும் ஆகாது சரியா. நீ பயப்படாம திகழ் கூட கிளம்பு” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.
“ஹை! எனக்கு ” என்று அவன் முன் சிறு பிள்ளை போல திகழினி முகத்தை நீட்ட..
“கழுதை , போய் வேலுகிட்டே கேளு டி ” என்று அவள் நெற்றியில் சுண்டியவன் இருவரையும் அனுப்பிவிட்டு அவர்கள் ஹோட்டல் ரூமிற்குள் பாதுகாப்பாக செல்கிறீர்களா என்று பார்த்தான். அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நொடி திரும்பி அந்த ஆளை நோக்கி புயல் வேகத்தில் ஓடத்துவங்க, ,
அவனும் ராகவ் தன்னை தேடி தான் வருகிறான் என்று தெரிந்து அவனை நோக்கி சுட ஆரம்பித்தான்.
“ஹே! ஓவி, ரிலாக்ஸ் டி.. “
