Home Uncategorizedஎனை மாயம் செய்யும் ராட்சசன் 9

எனை மாயம் செய்யும் ராட்சசன் 9

by Layas Tamil Novel
223 views

EPISODE 9

மாணிக்கம் மண்டபத்தின் வாசலில் பிரியாவை அழைத்துக் கொண்டு உள்ளே வர அவளை பார்த்ததும் வேகமாக பரமன் ரியாவின் அருகில் வந்து அவளை அத்தனை பேரும் முன்னிலையில் பளார் என ஓங்கி அறைந்தார்.

என்ன ஒரு காரியம் செஞ்சுட்டு இருக்கியா உன்ன நம்பி நான் வாக்கு கொடுத்து இருக்கேன் இப்படித்தான் என்ன அவமானப்படுத்திட்டு சொல்லாம கொள்ளாம மண்டபத்தை விட்டு அதுவும் தாலி கட்டற நேரத்துல ஓடி போவியா என அவளை கடிந்தார்.

உன்னை எல்லாம் என் பொண்ணுனு சொல்லவே நான் நான் வெட்கப்படுகிறேன் உன்னால எனக்குத்தான் அவமானம் என்றார் பரமன்.

பிரியாவை பரமன் அடித்ததுமே அவரிடம் ஓடிவந்த சாந்தா எங்க இப்ப எதுக்கு என் பொண்ண அடிக்கிறீங்க அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லித்தானே இங்கே இருந்து போனா அவளை ஏன் வற்புறுத்துறீங்க பிடிக்காத ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி அவளை ஏன் டார்ச்சர் பண்றீங்க என்றார்.

வாய மூடு சாந்தா இது எல்லாத்துக்கும் காரணம் நீயா தான் இருக்கும் ரியாவா கண்டிப்பா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டார். அவ இவ்வளவு தைரியமா மண்டலத்தை விட்டு கிளம்பி போயிருக்கானோ அதுக்கு நீ தான் காரணமா இருப்ப என்று சொல்ல சாந்தா அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானார்.

பருமனிடம் வந்த குரு அண்ணா சரி நடந்தது நடந்து போச்சு நம்ம ரியாவை ரெடி பண்ணி அடுத்த வேலையை பார்ப்போம் என்றார்.

பரமனும் குரு சொன்னதற்கு சரி என்று தலையாட்ட ஜனனி வா வந்து நம்ம ரியவா அழைச்சிட்டு போய் சீக்கிரம் ரெடி பண்ணி கூட்டிட்டு வா முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம் என்றார்.

ஜனனி வந்து ரியாவின் கையைப்பிடித்து வாம்மா உள்ள போகலாம் என ரியாவை அழைக்க அவரோடு மீனுவும் பூஜாவும் அவள் அருகில் வந்து ஏய் ரியா  என்னடி இப்படி பண்ணிட்ட என அவரிடம் பேசிக் கொண்டே ரியாவை உள்ளே அழைத்தனர்.

தன்னைப் பிடித்திருந்த ஜனனியின் கையை உதறிவிட்ட ரியா நான் எங்கேயும் வரல யாரையும் கல்யாணம் பண்ணிக்கல என்றால் சத்தமாக.

அவள் அப்படிப் பேசவும் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து போயினர். ரியா என கோபமாக அவளை அடிப்பதற்காக கையை ஓங்கிக்கொண்டு பரமன் அவள் அருகில் வர அதற்குள் குறுக்கே புகுந்த குரு அண்ணா என்ன காரியம் பண்றீங்க வயசுக்கு வந்த பொண்ணு இப்படித்தான் எல்லாரும் முன்னாடியும் அடிப்பீங்களா என்று அவரை தடுத்த குரு பிரியாவை பார்த்து ரியா உனக்கே இங்கே இருக்கிற சூழ்நிலை நல்லா தெரியும் நான் சொல்லித்தான் எதையும் நீ புரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல இந்த நேரத்துல நீ இப்படி செய்தால் உன் அப்பா என்ன பண்ணுவாரு என்றார்.

சித்தப்பா இதுல நீங்க தலையிடாதீங்க இது எங்களோட குடும்ப விஷயம் உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கல்யாணத்துக்கு வந்ததுடன் நிப்பாட்டிக்கோங்க தேவையில்லாம பேசாதீங்க என்ற அல்ரியா முகத்தில் அடித்த மாதிரி.

அவள் இப்படி பேசவும் கோபம் வந்த பரமன் ரியா வார்த்தையை அளந்து பேசு என்று அவளை அடக்க முயற்சிக்க அப்பா நீங்க முதல்ல பேசாம இருங்க எல்லாம் உங்களால வந்தது நீங்க இவங்க கிட்ட கடன் வாங்கிட்டீங்கறதுக்காக உங்க கடனை கழிக்க என்ன அந்த கால் இல்லாதவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடிவு செஞ்சுட்டீங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு நானும் ஒரு பொண்ணு தானே எனக்கும் ஆசைகள் நிறைய இருக்கு இப்படி கால் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் பூரா என்ன கஷ்டப்பட சொல்றீங்களா இதுக்கு நான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன் என்றால் தைரியமாக அவரைப் பார்த்து.

அவள் பேசுவதை கேட்டதும் கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது கஜேந்திரன் தனக்குத் தரவேண்டிய பணத்திற்கு பதிலாக தன்னுடைய ஊனமான மகளுக்கு பேரம் பேசி திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறாரா என காட்டுத்தியாக மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் தகவல் பரவி விட அதை கவனித்த கஜேந்திரன் அதை ஒன்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர் நேராக அய்யாவிடம் வந்து அம்மா அறியா நீயே மனசாட்சியை தொட்டு சொல்லு நீதானே என் பையனை துரத்தி துரத்தி காதலிச்ச அதனால தானே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நாங்க சம்மதிச்சோம் இப்படி திடீர்னு என் பையனுக்கு இடையில் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு அதனால நீ அவனை வேண்டாம் என்று சொல்றதில்ல என்னமோ நியாயம் இருக்கு இதுவே உனக்கு அந்த மாதிரி ஏதாவது இருந்தா நாங்க எங்களுக்கு இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லி இருப்போமா என அவர் கேட்க.

ஆமா நான் தான் உங்க மகனே துரத்தி துரத்தி காதலிச்சு யார் இல்லைன்னு சொன்னது அப்போ அவன் நல்லா இருந்தான். அதேதான் இப்பவும் நான் சொல்றேன் எனக்கு அவ்வளவு புடிக்கல கால் இல்லாதவன்தான் கல்யாணம் பண்ணிக்க எனக்கு துணியும் இஷ்டம் இல்ல நீங்க என்ன வற்புறுத்தி உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சீங்கன்னா நான் இத்தனை பேர் முன்னாடி இங்கேயே ஏதாவது செஞ்சுட்டு செத்துப் போயிடுவேன் என்று அவள் சொல்ல அதற்கு மேல் கஜேந்திரன் அவளிடம் எதுவும் பேசவில்லை.

ஹரியாவிற்கு ஆதரவாக சாந்தா நிற்க பரமன் ரியாவிடம் எவ்வளவோ எடுத்துப் பேசியது அவள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை மீண்டும் பூஜாவும் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு செய்வதறியாறு நின்று இருக்க குரு மீண்டும் ரியாவிடம் வந்து அம்மா ரியா கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு அந்த தம்பி பாவம் இப்படி மணமேடை வரைக்கும் வந்துட்டு இந்த கல்யாணம் நின்னு போயிடுச்சுன்னா அந்த தம்பியோட வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பாருமா என பொறுமையாக ரியாவிடம் எடுத்துச் சொல்ல..

என் குருவிடம் வந்த சாந்தா.. இங்க பாருங்க தம்பி இதோட உங்க பேச்சை நிப்பாட்டிக்கோங்க என் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு எனக்கு தெரியும் நான் அதை பார்த்துக்கிறேன் இனிய என் பொண்ண இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லி வற்புறுத்தாதீங்க என வெடுக்கென குருவின் முகத்திற்கு நேராக சாந்தா சொல்ல 

கால் இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக உன் பொண்ணு கஜேந்திரன் மகன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றது எந்த விதத்தில்  நியாயம் என்றார்.

உடனே சாந்தா நீங்க வாய மூடுங்க இப்படி பேசிப்பேசியா தான் என்னையும் என் பொண்ணையும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க அதான் உங்க தம்பி நீங்க வாங்கின கடனுக்கு பணத்தை கொடுத்து அடைக்கலாம்னு சொன்னாரு அப்புறம் ஏன் இந்த பெரிய மனுஷன் பணத்த வாங்காம அவர் பையனுக்கு நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறதுலே குறியா இருக்காரு அப்போ இது எல்லாம் பிளான் பண்ணி நடக்கிறது தானே அர்த்தம் என அவர் கஜேந்திரனின் மீது பழியை போட…

அங்கு இருப்பவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே நிற்க… சாந்தா இன்னொரு வார்த்தை நீ சம்பந்தப்பட்ட தப்பா பேசினேன் உன் பல்லை உடைத்து விடுவேன் என்று கோபமாக பேசிய பரம்பன் அவர் கிட்ட நான் ஒரு பைசாவும் வாங்கல நீ வாங்கின பணத்தை நான் எப்பவோ திருப்பி கொடுத்துட்டேன் என்றார் பரமன்.

அவர் சொன்னதைக் கேட்டு சாந்தாவும் ரியாவும் அதிர்ச்சியானார்கள் சாந்தா பர்மனிடம் வந்து அப்போ எதுக்கு இவர்கிட்ட கடன் வாங்கினதா சொல்லி என் பொண்ண ஒரு பையன் தலையில் கட்டி வைக்க பாக்குறீங்க என்றார்.

உன் பொண்ணு நெனச்சா ஒருத்தர கல்யாணம் பண்ணிக்குவேன் நேரம் நாள் குறிக்க சொல்லுவா அவளே திடீர்னு வேண்டாம்னு சொன்னா உடனே நம்ம அந்த கல்யாணத்தை நிறுத்திடனுமா இது எந்த விதத்தில நியாயம் அதனாலதான் எப்படியாவது அந்த தம்பிக்கு நம்ம ரியாவ கல்யாணம் பண்ணிக்கணும்னு அவரு நம்ம கொடுக்க வேண்டிய பணத்துக்காக நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி தரச் சொல்லி கேட்டார் என்று பொய் சொன்னேன் என்று கஜேந்திரன் மீது இதில் எந்த தப்பும் இல்லை நடந்த அனைத்திற்கும் தான் காரணம் என தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார் பரமன்.

ஏற்கனவே திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த சாந்தாவும் ரீதியாகவும் இந்த விஷயம் தெரிந்ததும் முற்றிலுமாக தங்கள் முடிவில் உறுதியாக நின்றனர் எவ்வளவோ அனைவரும் சொல்லிப் பார்த்து ப்ரியா கேட்பதாக இல்லை சாந்தாவும் சம்மதிக்கவில்லை.

இதையெல்லாம் பார்த்த கஜேந்திரனுக்கு மிகவும் வருத்தமானது தன் மகனுக்காக பரமன் இவ்வளவு தூரம் தன் குடும்பத்தையே எதிர்த்து பேசுவதை பார்த்த கஜேந்திரன் அவரிடம் வந்து தொழில் கைவைத்து சம்பந்தி வேண்டாம் இதோட நிறுத்திக்கலாம் என் பையனுக்கு என்ன விதி எழுதி இருக்கோ அதுவே நடக்கட்டும் வீனா என் பயனுக்காகவும் எனக்காகவும் உங்க குடும்பத்தை நீங்க பகச்சிக்க வேண்டாம் என்றார் சோர்வாக.

இல்ல சம்பந்தி எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் என் பொண்ண பேசி சம்மதிக்க வச்சிடறேன் என்று பரமன் சொல்ல இல்ல சம்மந்தி இது வேண்டாம் பிடிக்காத ஒரு பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஏற்கனவே கஷ்டத்துல இருக்கிறவங்க நான் மறுபடியும் கஷ்டப்படுத்த விரும்பல என அவர் அங்கிருந்து செல்ல…

உங்க மகனை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கஜேந்திரனை நோக்கி சத்தமான ஒரு பெண்ணின் குரல் வர..

எத்தனை நேரம் மண்டபத்திற்கு வெளியே நடந்ததை எல்லாம் மணமகன் அறைக்குள் இருந்தவாறு ஜெய் கேட்டுக்கொண்டு இருந்தான். அவன் ரியா பேசியதையும் அவன் அம்மா பேசியதையும் கேட்டு மிகவும் மனம் நொந்து போய் சோர்வாக இருக்க…

இப்போது மண்டத்தில் இருக்கும் யாரோ ஒரு பெண் தானாகவே முன்வந்து தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லவும் அதை அறைக்குள் இருந்து கேட்டவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured