Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 19

உன் ரகசிய ரசிகை நான் 19

by Layas Tamil Novel
906 views

EPISODE 19

ஆதி வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வர, தாத்தா அவள் மதியம் சென்று படுக்கப் போனால் இன்னும் வெளியே வரவில்லை என்று கூற, துர்காவைப் பார்க்கச் சென்றவன், கதவைத் திறந்து உள்ளே செல்ல, அவள் கட்டிலில் படுத்திருந்ததைப் பார்த்ததும், தன் கையையும் காலையும் நன்கு பரப்பிக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருக்க.

அவளை அந்தக் கோலத்தில் பார்த்த ஆதி, ‘முழித்திருக்கும்போது மட்டுமே இவள் பெண் போல இருக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கும்போது இவள் ஒரு பெண் போல நடந்து கொள்வது இல்லை. இவள் அருகில் படுத்துத் தூங்க முடியாது’ என்று மனதுக்குள் அவளை வருத்து எடுத்தவன், அவள் அருகில் சென்று எழுப்ப.

அரைத் தூக்கத்தில் கண்விழித்த துர்கா, கண்களைத் திறந்து பார்க்க, அவள் எதிரில் நின்றவனைப் பார்த்துவிட்டு, தூக்கத்தில் கீர்த்திகா என்று நினைத்தவள், கீர்த்திகாவின் கழுத்தில் மாலை போலப் போடுவதாக நினைத்து ஆதியின் கழுத்தில் போட்டு அவனை அப்படியே இழுக்க, அவன் தடுமாறி துர்கா மீதே விழுந்தான்.

தன் மீது விழுந்தவனை தூக்கத்தில் கட்டிக்கொண்டு துர்கா, “கீர்த்துமா, ஒரு டென் மினிட்ஸ் தூங்குகிறேண்டி. என்ன டிஸ்டர்ப் பண்ணாத, ப்ளீஸ். வேணும்னா நீ என் கூட படுத்துக்கோ” என்பது போல அவனைக் கட்டிக்கொண்டு, தன்னோடு படுக்க வைத்துவிட்டு, அவள் மீது பின் கையையும் காலையும் போட்டு, ஆதியை அசைய விடாமல் படுத்துக் கொண்டாள்.

இப்போது ஆதியும் துர்காவும் மிக நெருக்கமாக ஒருவர் உடல் மற்றொருவரின் உடலில் ஒட்டி இருப்பது போல நெருங்கிப் படுத்துக்கொண்டிருந்தனர். துர்கா மீண்டும் கண்களை மூடி தூங்கத் தொடங்க, அவள் கைக்குள் சிக்கிக் கொண்ட ஆதி அப்போதுதான் அவள் முகத்தை மிகவும் நெருக்கமாகப் பார்த்தான்.

ஒப்பனை இல்லாத அவள் முகமும் பளிச்சென்று இருந்த அவள் சருமமும், அழகிய புருவங்களும் என ரசித்தவன், அவள் இதழில் வந்து பார்வையை நிறுத்தினான்.

ரோஜாப்பூ நிறத்தில் செதுக்கி வைத்தது போல அவள் உதடுகள் இருக்க, அவள் மூச்சுக்காற்று அவன் மூச்சுக்காற்றோடு கலக்க, துர்காவின் மூச்சுக்காற்று ஆதியின் உடலை ஏதோ செய்ய, அவள் உதட்டையே ஏக்கத்துடன் பார்த்தவன், அதைச் சுவைக்க வேண்டும் போல அவனுக்குத் தோன்ற, மறுபடியும் அவளைப் பார்க்க, தூக்கக் கலக்கத்தில் தன் நாவை வெளியே கொண்டுவந்து தன் உதடுகளை ஈரப்படுத்தியதைப் பார்த்தவன்.

அவள் ஈரப்படுத்திய அந்த ரோஸ் நிற உதடுகள், அந்த ரூமில் இருந்த விளக்கு ஒளியில் பளபளவெனத் தெரிய, அதை இப்போது சுவைக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்ற, தலையை குனிந்து அவள் முகத்திற்கு அருகில் இன்னும் நெருக்கமாக வந்தான் ஆதி.

அவள் முகத்தின் அருகில் ஆதி வரவும், அவன் மூச்சுக்காற்று மிகவும் சூடாக ஆனது. அவள் உதட்டைத் தன் ஒற்றை விரல் கொண்டு மெல்ல வருடினான். அவள் ஈரம் அவன் கையில் ஒட்டிக்கொள்ள, அவள் உதட்டில் இருந்து தன் விரலை எடுத்தவன் அந்த ஈரம் பட்ட விரலைத் தன் இதழ் கொண்டு முத்தமிட்டான்.

பின் மறுபடியும் துர்காவைப் பார்க்க, அவள் மேலும் அவனை இறுக்கிக்கொண்டு உடலை உரசிக்கொண்டு படுக்க, ஆதியின் நிலைதான் பரிதாபமாகப் போய் விட்டது.

துர்கா ஆதியை கீர்த்திகா என்று நினைத்து அணைத்துப் படுத்திருக்க, இதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்த ஆதி, அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவள் கைகளைத் தன் மேல் இருந்து எடுக்க.

மறுபடியும் அவள் தோள்களைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் தன் முகத்தை வைத்து உரச, இதுவரை அவளை ரசித்தவன், பொறுமை காத்தவன், இதற்கு மேல் தன்னால் முடியாது என்று நினைத்தவன், துர்காவைத் தன்னிடம் இருந்து பிரித்து அவளைத் தள்ளி படுக்க வைக்க, அவன் அவளைத் தன்னிடம் இருந்து பிரித்ததில் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்க்க, ஆதியின் ஒரு கை துர்காவின் தோள் மீது இருக்க, அவளை அணைத்து படுத்ததில் அறியாமல் தன்னுடைய காலை துர்காவின் கால் மேல் போட்டிருந்தான்.

துர்கா கண் விழித்ததும், ஆதியின் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவள், அதிர்ச்சியாகி கண்கள் விரிய “ஆதி” என்று பின்னே நகரப் போக, அவள் கட்டிலின் விளிம்பில் இருந்ததால் கீழே விழப்போக, அவளை அவசரமாகப் பிடித்து இழுத்த ஆதி, தன் மீது சேர்த்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

துர்காவும் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் ஆதியின் சட்டையை இறுக்கிப் பிடித்திருந்தவள் கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள். அவளைக் கீழே விழாமல் தன்னோடு சேர்த்துப் பிடித்திருந்த ஆதி அவள் முகத்தைப் பார்க்க, அவள் பயந்துபோய் கண்களை இறுக்க மூடிப் படுத்திருந்தாள்.

அவன் மெல்ல அவள் காதின் அருகில் குனிந்து ஹஸ்கி வாய்ஸில் “துர்கா….” என்று அழைத்தான். அவ்வளவுதான், துர்காவின் உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது அவனின் இந்த ஹஸ்கி வாய்ஸைக் கேட்டு. அவள் எதுவும் கூறாமல் கண்களை இறுக்க மூடிப் படுத்திருக்க, இப்படி “துர்கா” என்று மெதுவாக அவன் அழைக்க, துர்கா “ம்ம்ம்…..” என்று மட்டும் பாதி வார்த்தை விழுங்கியும் விழுங்காமலும் கூற, அவள் முகம் சிவந்து சூடாக இருப்பதை கவனித்த ஆதி, மெல்ல சிரித்தவன் “நீ கீழ விழல. நான் உன்னை பிடிச்சிருக்கேன். கண்ணை திறந்து பாரு” என்றான்.

அவன் சொன்னதும் பட்டென கண்களைத் திறந்து, தன்னைக் குனிந்து பார்க்க, அவன் உடலோடு அவளுடன் உரசி மிக நெருக்கமாக அவன் உடலோடு ஒட்டி படுத்திருப்பதை கவனித்தவள், வேகமாக அவனிடம் இருந்து விடுபட்டு எழுந்து அமரப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை தன் மீது போட்டுக்கொள்ள, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் துர்கா.

‘இவன் தானா தன்னை இப்படி கை பிடித்து இழுப்பது?’ என்று யோசித்தவள், அவனையே விழி இமைக்காமல் பார்க்க, “என்ன துர்கா, அப்படி பார்க்குற?” என்று ஆதி கேட்க.

“இன்று புதிதாக பேசுற… இ… இல்ல… ஆதி, நீதான் இப்படி பேசுறியா?” என்று நிறுத்தி அவனைப் பார்க்க.

“ஏன் துர்கா, நான் உன்னை பார்த்து இப்படியெல்லாம் பேசக்கூடாதா?” என்று கேட்டான். அவன் அப்படி கேட்டது மேலும் ஆச்சரியமாக துர்கா அவனையே பார்க்க, “இ… இல்ல… பேசலாம் ஆதி” என்றாள் தட்டுத் தடுமாறி.

“நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா? ஒண்ணு இல்ல, சில கேள்விகள் கேட்கலாமா?” என்று கேட்டான் ஆதி. அவனைப் பார்த்தவள் “ம்ம்ம்ம்…..” என்று தலையாட்டினாள்.

“உனக்கு என்ன பிடிக்குமா துர்கா?” என்று ஆதி கேட்டதும் துர்காவின் இதயத் துடிப்பு எகிறியது. ‘இவன் என்ன இப்படி நேரடியாகவே கேள்வி கேட்டு விட்டான்?’ என்று யோசித்த துர்காவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திடுதிருவென்று விழித்தாள்.

அவள் விழிப்பதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், “ம்ம்ம்… சொல்லு துர்கா” என்று கேட்டான். “அது… அது வந்து… எனக்கு உன்னை பிடிக்கும் ஆதி. உன்னோட குணம், ஒரு நல்ல நண்பனா உன்னோட பாசம், உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆதி. உன் கூட காலேஜில் படித்ததில் இருந்தே எனக்கு உன்னை நல்லா தெரியும். அதிலிருந்து எனக்கு உன் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

நீ இப்படி பொறுப்பாக அவனை பிடிக்கும் என்று கூறினாளே தவிர, நேரடியாக அவனை அவள் விரும்புகிறாள் என்பது போல, அவனை அவளுக்கு பிடிக்கும் என்பது போல அவள் கூறவே இல்லை. ஆனால் ஆதி எதிர்பார்த்த பதில் வேறான, ‘தன்னைக் காதலிப்பாள்’ என்று அவன் நினைத்துத்தான் அவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.

அவள் நேரடியாகச் சொல்லாமல், ஏதோ ஒரு மறைமுகமாகவாவது அவனே தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்த ஆதி, துர்காவின் பதிலைக் கேட்டு சற்று ஏமாந்துதான் போனான்.

“உனக்கு என் ஃப்ரெண்டா, என்னோட பாசம் தான் பிடிக்குமா?” என்று அவன் கேட்க, துர்காவும் “ஆமா ஆதி, ஏன்?” என்று கேட்டாள்.

“அப்போ நேத்து நீ சங்கவி கூட சண்டை போடும்போது ‘என் ஆதி’ ‘என் ஆதி’ என்று திரும்பத் திரும்ப சொன்னாயே?” என்று அவன் கேட்க.

‘போச்சுடா… போச்சு… கண்டுபிடிச்சிட்டானா? நான் கூட நேத்து நான் கோபத்துல, சங்கவி கூட சண்டை போடுற ஆர்வத்துல, ‘என் ஆதி’னு மனசுல இருக்குறதே தெரியாமல் வெளியில உளறிட்டேன்.’

‘ஆனா ஆதிக்குக் கேட்டிருக்காது என்று நினைத்தேன். இப்பத் தெளிவா அதைச் சொல்லியே என்கிட்ட கேக்குறானே…. ஹே துர்கா, என்னடி சொல்லி ஆதி கிட்ட சமாளிக்கப் போற?’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.

அவள் தனக்குத்தானே மனதிற்குள் பேசிக் கொண்டாலும், அவள் முகபாவனை நொடிக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருப்பதைப் பார்த்து ஆதி ரசித்துக் கொண்டு அவளிடம் “துர்கா” என்று அழைக்க, திடுக்கிட்டு அவள் “சொல்லு ஆதி” என்றாள்.

“என்ன யோசிச்சிட்டு இருக்க துர்கா? நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டியா?” என்று அவன் கேட்க, “ஆதி நான் என்ன சொல்றது?” என்று அவள் இழுக்க.

“சரி விடு. உனக்கு எப்ப தோணுதோ அப்போ நான் கேட்ட இந்த கேள்விக்கு மறக்காம எனக்கு பதில் தரணும். அது எப்படினாலும் நான் காத்துட்டு இருக்கேன்” என்று கூறியவன்.

“இன்னொரு கேள்வி கேட்கட்டுமா?” என்றான். அவன் இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்று சொன்னதும், துர்கா அவனைப் பார்த்து ‘இவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்? அடுத்து என்ன கேள்வி கேட்கப் போறானோ?’ என்று யோசித்தவள் “சொல்லு ஆதி” என்றாள். “உன் வீட்டில உன்னோட பெட்ரூம்ல, உன்னோட ஆறு வயசுக்கு மேல எடுத்த போட்டோ தான் நிறைய இருந்துச்சு. ஆனா அதுக்கு முன்னாடி எடுத்த போட்டோ எல்லாம் ஒண்ணு கூட இல்லையா உன்கிட்ட?” என்று அவன் கேட்க.

அவன் சொன்னதும் தன் வீட்டில் அவன் போட்டோ எந்த வயதில் இருக்கிறது என்று யோசித்தவள், “ஆமா ஆதி. நானும் என் அம்மா அப்பா கிட்ட நிறைய தடவை கேட்டு இருக்கேன். ‘ஏன் இதுக்கு முன்னாடி எடுத்த போட்டோ எல்லாம் என்ன ஆச்சு?’னு கேட்டிருக்கேன். அதற்கு அவர்கள் ‘ஒரு விபத்தில் அந்த போட்டோக்கள் எல்லாம் தொலைந்து விட்டது’ என்று கூறினார்கள். எனக்கும் ஆறு வயதுக்கு முன்னாடி நடந்த சம்பவங்கள் எதுவுமே இன்றுவரை ஞாபகம் இல்லை. நானும் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு பிறகு நான் அதைப் பற்றி எதுவுமே கேட்டுக் கொள்ளவும் இல்லை” என்றாள் துர்கா.

அவள் கூறிய தகவல்களைக் கேட்டுக்கொண்ட ஆதி, ‘முன்னாடி நடந்தது எல்லாமே மறந்து போயிடுச்சா? அப்படின்னு விபத்து நடந்தது. இவளோட போட்டோ எல்லாம் தொலைஞ்சு போக, இவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை அப்படின்னு சொல்ற அளவுக்கு பெரிய விபத்தா நடந்து இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே, ‘சரி, இதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்கலாம்’ என்று அமைதியாக இருந்தான்.

“சரி, இன்னொரு கேள்வி” என்று அவன் கூற, “இன்னொரு கேள்வியா?” என்று துர்கா வாய்விட்டு சத்தமாக அவனைப் பார்த்துக் கூறிவிட. அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தவன், “ரொம்ப பெரிய கேள்வி இல்லை. ரொம்ப சிம்பிள். இதுக்கு நீ எப்படி ஆன்சர் பண்றேங்கறதைப் பொறுத்து தான் நான் அடுத்த கேள்வி கேட்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுவேன்” என்று கூற.

“சரி ஆதி, பரவாயில்லை. நீ கேளு. நான் எனக்கு தெரிஞ்ச பதிலை சொல்றேன்” என்று அவள் கூற. தன்மேல் அவளைப் போட்டுக்கொண்டே, தன்னிரு கைகளையும் அவள் இடுப்பில் கொடுத்துப் பிடித்துக் கொள்ள, அவனின் இந்தத் தீண்டல் துர்காவுக்குப் புதுமையாக இருந்தாலும், அவனின் அணைப்பு இப்படித்தான் இருந்தது.

பின்னே இருக்காதா? துர்காவின் 10 வருட கனவல்லவா இது? இதற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருப்பாள். ஆனால் அவன் தன்னைப் பிடிக்கும் என்று சொல்லவில்லை, தன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை, தன் மனைவி என்று கூட என்னிடம் ஒருமையில் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது எதற்கு இப்படி எல்லாம் என்னிடம் நடந்து கொள்கிறான் என்று மனதில் குழப்பத்தோடு அவனைப் பார்க்க.

“துர்கா, நான் அந்தக் கேள்வி கேட்கட்டுமா?” என்று அவளை நினைவுக்குக் கொண்டு வர, அவள் “சரி” என்பது போல தலையாட்ட, “நான் இப்படி கேட்கிறேன் என்று நீ என்கிட்ட கோச்சுக்க கூடாது” என்றான்.

“நீ கேட்டு நான் கோவிச்சுக்கவா நான்? ஆதி, அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. நீ என்ன வேணாலும் என்கிட்ட கேட்கலாம். நான் உன்கூட கோபப்படவும் மாட்டேன், சண்டை போடவும் மாட்டேன்” என்றாள் துர்கா. அவள் அப்படி கூறியதும் மனதிற்குள், ‘தன் மேல் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள். நான் எது சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டேன், சண்டை போட மாட்டேன் என்று சொல்கிறாளே’ என்று நினைத்தவன்.

“அப்போ நிஜமாத்தான் சொல்றியா துர்கா? நான் கேட்டதுக்கு அப்புறம் நீ என்கிட்ட கோச்சுக்க கூடாது” என்றான். “இல்லை ஆதி, நிச்சயமாக நான் உன்கிட்ட கோபப்பட மாட்டேன். என்னன்னு ஃபர்ஸ்ட் கேள்வியைக் கேளு ஆதி” என்றாள்.

“அது… அது வந்து… துர்கா…” என்று நிறுத்தியவன் அவளைப் பார்க்க, “சொல்லு ஆதி, ஏன் இப்படி தயங்கித் தயங்கி பேசுற? எதுவா இருந்தாலும் சொல்லு. நான் எதுவும் நினைக்க மாட்டேன்” என்றாள் துர்கா.

“நீ வெளியில ஆபீஸ்ல எங்க வந்தாலும், ஒரு அடக்கமான பெண் மாதிரி, தைரியமான பெண் மாதிரி, கலகலப்பான பெண் போல இருக்கிற. ஆனா…..” என்று கூறி அவன் அவளைப் பார்க்க, “சொல்லு ஆதி” என்று அவள் சிணுங்க. “சரி சரி சொல்றேன். நிஜமா நான் சொன்னதை கேட்டதுக்கு அப்புறம் என்ன திட்ட மாட்டியே?” என்றான் ஆதி. “நீ சொல்லலைன்னா தான் நான் டென்ஷனாகி உன்னை திட்டுவேன்” என்று அவள் கூற, “சரி சரி டென்ஷன் ஆகாத. நான் சொல்றேன்” என்றவன்.

“நீ வெளியே எங்க போனாலும் அல்லது எப்படி இருந்தாலும், ஒரு பெண் போல நடந்துக்கிற. ஒரு பெண் எப்படி இருக்கணுமோ அது அப்படியே நீ எல்லா விஷயமும் செய்யவும் செய்ற. ஆனா தூங்கும்போது மட்டும் ஏன் ஒரு பொண்ணு மாதிரி நீ நடந்துக்க மாட்டேங்குற?” என்று கூறியவன், “நீ ஒரு பொண்ணு தானே?” என்று கிண்டலாகக் கேட்டவன், அதற்கு மேல் தன் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்து விட.

அவன் அப்படி கூறியதும் “ஆதி” என்று கோபமாக அவன் நெஞ்சின் மேல் கைகளை வைத்து ஊன்றி அவனை விட்டு தள்ளி எழுந்தவள், தன் இடுப்பில் கைவைத்து “என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது? பொண்ணு மாதிரி தெரியலையா? தூங்கும்போது நான் எப்படி தூங்கினேன்? பொண்ணு மாதிரி தானே தூங்குவேன்? வேற எப்படி தூங்கினேன்?” என்று அவள் அவனிடம் சண்டைக்கு நின்றாள்.

“பாத்தியா பாத்தியா துர்கா, இப்போதான நீ என்கிட்ட சண்டை போட மாட்டேன்னு சொன்னேன். ஆனா பாரு, உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல. நான் ஒரு கேள்வி கேட்டதும் இப்படி கோபப்படுறியே” என்றவன், “நான் உன்கிட்ட என்ன கேட்டேன்? உண்மைய தானே கேட்டேன்? நீ ஏன் தூங்கும்போது மட்டும் பொண்ணு மாதிரி நடந்துக்க மாட்டேங்கிற?” என்று அவன் திரும்பவும் அவளை கோபப்படுத்துவது போல அந்தக் கேள்வியைக் கேட்க.

அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. அவள் தூங்கும்போது பக்கத்தில் இருப்பவர்கள் மேல் கை கால்களை போட்டுக்கொண்டு தூங்குவாள் என்பது அவளுக்கே தெரியும். அதற்காக தன்னை பெண்தானா என்று இவன் கேட்டு விட்டானே? புசுபுசு என்று மூச்சு வாங்க அவனை முறைத்தவள்.

“நான் பொண்ணுதான். போதுமா?” என்றாள் கோபமாக. “நீ பொண்ணுதான்மா. நான் இல்லைன்னு சொல்லல. ஆனா தூங்குறப்போ மட்டும் ஏன் பொண்ணு மாதிரி இருக்க மாட்டேங்குற?” என்று மறுபடியும் அவன் அதே கேள்வியைக் கேட்க.

துர்காவுக்கு மிகவும் கோபம் வர, தன் கைகளை இறுக்க மூடி, கண்களை மூடிக்கொண்டு “ஆ…..” என்று கத்த, ஆதி “என்ன நீ ரொம்ப கோபப்படுற? நீ பேசாம இப்போ இருக்கப் போறியா?” என்று கேட்க, “இல்ல துர்கா, நான் எதுக்கு அந்தக் கேள்வியை கேட்டேனா” என்று அவன் ஏதோ கூற வர, “நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு நீ எதுக்காக அப்படி கேட்டேன்னு தெரியும். நான் தெரியாம ஒரு தடவை உன் மேல தூங்கும் போது கையையும் காலையும் போட்டுட்டேன்னு சொல்லிட்டு, என்னை ‘பொண்ணு’னு கேக்குற” என்று துர்கா கூற.

“இல்ல துர்கா, நீ தூங்கும்போது என் மேல கை கால் மட்டும் போடல” என்று நிறுத்த, அவள் ‘ஐயோ, தூக்கத்துல வேற என்ன பண்ணினேனோ? இவன் என்ன இப்படி கேட்கிறான்?’ என்று நினைத்தவள், அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று அவனை ஆர்வமாகப் பார்க்க.

“என் மேல கை கால் மட்டும் போட்டுட்டு தூங்கினா பரவாயில்லை. நான் இல்லாதப்ப கூட நீ அப்படி தான் தூங்குற. எப்படி தெரியுமா?” என்று கூறிவிட்டு, அந்தக் கட்டிலில் அவன் படுத்து, துர்கா எப்படிப் படுத்திருந்தாளோ, அதேபோல தன் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு கண் மூடி தூங்குவது போல நடித்துக் காட்ட, ‘அப்படி படுத்திருப்பதைப் பார்த்ததும் பதிலே சொல்லித் தந்துவிட்டோமே. நான் இப்படித்தான் படுத்துத் தூங்கினேன். அதுவும் ஆதிக்கு முன்னாடி. இவன் என்னை என்ன நினைப்பான்?’ என்று துர்கா சங்கடப்பட.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் சிரித்துக்கொண்டே, “இதுக்கு தான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல” என்று சொல்லிக்கொண்டே இருக்க, அவள் சிணுங்கியவாறே, “ஆதி, நீ இப்படியெல்லாம் என்ன ரொம்ப கிண்டல் பண்ணாத. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. நான் தூக்கத்துல என்ன பண்றேன்னு எனக்கே தெரியாது. எங்க அம்மாவும், கீர்த்திகாவும் என்கிட்ட நிறைய தடவை சொல்லி இருக்காங்க, ‘ஒழுங்கா ஒரு பொண்ணு போல படுத்துத் தூங்குடி’னு.”

“நான் என் வீடுன்னு நெனச்சு, அசதியில அதே மாதிரி படுத்துத் தூங்கிட்டேன். இனிமேல் நான் அப்படி எல்லாம் படுத்துத் தூங்க மாட்டேன். என்ன தயவுசெய்து இப்படி எல்லாம் ஓட்டாத ஆதி” என்று அவனுக்குக் கெஞ்சுவது போல முகத்தை வைத்து அவனிடம் கெஞ்ச, அவள் முகத்தைப் பார்க்க பாவமாக இருக்க, “சரி சரி, நான் இனிமேல் அதைப் பத்தி எதுவும் பேச மாட்டேன். நீ ரொம்ப ஃபீல் பண்ணாத” என்று கூறிக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரிக்க, முதலில் அவன் சிரித்த முகத்தைப் பார்த்ததுமே துர்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் இப்படிச் சிரித்து அவள் பார்த்ததே இல்லை. அவளும் அவளோடு சேர்ந்து முகத்தில் சந்தோஷமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று துர்கா அவன் முகத்தைப் பார்த்ததும் பதட்டமானாள்.

அவள் முகம் மாறுவதைக் கண்ட ஆதி, “ஏன் உன் முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சு? நான் உன்னை ரொம்ப கிண்டல் பண்ணிட்டேனா? அப்படி எதுவும் நான் கிண்டல் பண்ணி இருந்தா, சாரி துர்கா” என்று அவன் உண்மையாகவே வருத்தப்பட்டு துர்காவிடம் மன்னிப்பு கேட்க.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆதி. ஆனா உன் முகத்தில் உன் முகத்துல” என்று அவள் கைநீட்டிக்கொண்டு அவன் முகத்தருகில் தன் கைகளை கொண்டு வர, அப்போதுதான் இதுவரை முகக்கவசம் அணியவில்லை என்பது நினைவில் வர, ஆதி சட்டென படுக்கையில் இருந்து எழுந்து, துர்காவைக் கோபமாகப் பார்த்து, “இப்போ என்ன? என் முகத்துக்கு என்ன? இவ்வளவு நேரம் இந்த முகத்தை நீ பக்கத்துல இருந்து தானே பார்த்துட்டு இருந்த? இப்ப ஏன் இப்படி முகம் சுளிக்கிற?” என்று அவள் தன் முகத்தில் இருக்கும் கொப்புளங்களை இப்பொழுதுதான் கவனித்தவளாக இப்படி நடந்துகொள்கிறாள் என்று நினைத்து, ஆதி அவளிடம் கோபப்பட்டவன்.

அங்கு இருந்து கோபமாக வெளியே செல்லப் போனவனை, கை பிடித்து நிறுத்திய துர்கா, “ஆதி, ப்ளீஸ். நான் சொல்றது ஒரு நிமிஷம் பொறுமையா கேளு. நான் உன் கொப்புளத்தைப் பார்த்து எல்லாம் ஒண்ணும் முகத்தை மாத்திக்கல. ஆனா உன் முகத்தில்…” என்று அவள் மறுபடியும் அவன் முகத்தைப் பற்றி ஏதோ கூற, அவள் தன்னை கேவலப்படுத்துகிறாள், அவமானப்படுத்துகிறார் என்று நினைத்த ஆதி, கோபமாக அவள் கைகளை உதறிவிட்டு நேராக பாத்ரூமுக்குள் சென்று விட்டான்.

இவ்வளவு நேரம் தன்னிடம் என்றும் இல்லாமல் இன்று ஆசையாகப் பேசிய ஆதியை, தான் தேவையில்லாமல் பேசி கோபப்படுத்தி விட்டோமோ? தான் இப்போது என்ன கேட்டு விட்டேன்? தான் சொல்வதை முழுமையாகக் கூட கேட்காமல் அவன் கோபித்துக்கொண்டு பாத்ரூம் சென்று விட்டானே? என்று துர்கா மிகவும் வருத்தப்பட்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured