Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 52

உன் ரகசிய ரசிகை நான் 52

by Layas Tamil Novel
598 views

EPISODE 52

ஷாப்பிங் முடித்துவிட்டு அனைவரும் கிளம்ப, கீர்த்திகா, நிலானி இருவரையும் அழைத்துக் கொண்டு போய் அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, பின் தாங்கள் இருவரும் அப்படியே ஆஃபீஸிற்கு வருவதாகக் கதிரும், விக்கியும் கூறினர்.

துர்காவும் ஆதியும், “அம்மா இன்று இரவு அங்கே தங்க வரச் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் ஆஃபீஸில் சிறு வேலை இருப்பதாக, இருவரும் சென்று அதைப் பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு வருகிறோம்” என்று ஆதி கூறிவிட்டுத் துர்காவை அழைத்துக்கொண்டு செல்ல, கணேஷ் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லி நிலானியுடன் வர மறுத்துவிட்டு அங்கிருந்த விக்கியிடம் சிக்னல் செய்துவிட்டுச் சென்றான்.

அனைவரும் ஷாப்பிங் மாலில் இருந்து ஆளுக்கு ஒரு திசையில் கிளம்ப, ஆதி கார் ஓட்டிக்கொண்டு வர, அவன் அருகில் அமர்ந்து வந்த துர்கா எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

தன்னோடு வரும்போது தன்னைக் கவனிக்காமல், தன்னுடன் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வரும் துர்காவைப் பார்த்து காண்டானது ஆதிக்கு.

அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே காரைச் செலுத்தியவன், அவளிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே வந்தவன், எதிரில் வரும் வண்டியை கவனிக்காமல் காரைச் செலுத்த, ஏதேச்சையாக வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள் திரும்ப, எதிரில் வந்த காரைப் பார்த்துப் பயந்தவள், “ஆதி…” என்று தன் காதை மூடிக்கொண்டு கத்த.

அவள் கத்தியதில், துர்காவைப் பார்ப்பதை விட்டு, ரோட்டைத் திரும்பிப் பார்த்து, தனக்கு எதிரே வேகமாக வந்த காரைப் பார்த்ததும், தன் காரைச் சட்டெனத் திருப்பி, ஒரு இடத்தில் ரோட்டை விட்டு இறக்கி காரை நிறுத்தினான்.

அவன் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திய வேகத்தில், துர்கா சீட்டில் இருந்து தடுமாறி இடித்துக்கொண்டு, வலியில் “ஷ்…. ஆ…” என்று கத்திக்கொண்டு ஒரு நிலையில் அமர்ந்தாள்.

அவள் சத்தம் கேட்டு வேகமாக சீட் பெல்ட்டைக் கழட்டி விட்டு துர்காவைத் திரும்பிப் பார்க்க, அவள் நெற்றியில் அடிபட்டு சிவந்து இருந்தது.

அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், “துர்கா… நல்லா அடிபட்டுருச்சா? ரொம்ப வலிக்குதா?” என்று அவள் நெற்றியை லேசாகத் தன் விரலால் தடவிக்கொண்டே கேட்க, “இல்லை ஆதி, லேசாத்தான் வலிக்குது” என்று அவன் அருகாமையில் நெளிந்துகொண்டே கூறினாள்.

“லேசாத்தான் வலிக்குதுன்னு சொல்றே, ஆனா இவ்ளோ பெருசா வீங்கி இருக்கு” என்று ஆதி அவள் நெற்றியைப் பார்த்துக் கொண்டே சொன்னவன், அவள் நெற்றியில் இருந்த வீக்கத்தைத் தன் விரல்களால் தடவிக்கொடுக்க, அவளுக்கு லேசாக வலிக்கவும், “ஷ்….” என்று வலியுடன் துர்கா முகம் சுழிக்க, அவள் வலியில் முகம் சுழிப்பதைப் கவனித்த ஆதி, காரில் முதலுதவிப் பெட்டி எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான். காரில் எதுவும் இல்லாமல் போகவே, “கொஞ்சம் பொறுத்துக்கோ துர்கா…. சீக்கிரம் வீட்டுக்குப் போயிரலாம். அங்கே போய் நான் இதுக்கு மருந்து போட்டு விடுறேன்” என்றான்.

துர்கா உடனே, “வேணாம் ஆதி, எனக்கு அவ்வளவா வலிக்கல. லேசா ஐஸ் வெச்சு தடவினாலே போதும், சரியாகிடும். இதுக்காக நீ வீட்டுக்குப் போக வேணாம், நாம ஆஃபீஸ்க்கே போலாம் ஆதி” என்றாள்.

“இல்லை, இல்லை துர்கா… அப்படி ஒன்னும் முக்கியமான மீட்டிங் இல்லை இன்று. அதை நான் விக்கியையும் கதிரையும் கவனித்துக் கொள்ளச் சொல்லிக்கிறேன். நாம வீட்டுக்கே போகலாம்” என்றவன், துர்கா சொல்ல சொல்லக் கேட்காமல் காரை வீட்டிற்குச் செலுத்தினான்.

செல்லும் வழியில் கதிரிடம் போன் செய்து விவரம் சொன்னவன், பின் அவர்கள் வீட்டிற்கு வந்தான். காரை நிறுத்தி விட்டு துர்கா இறங்குவதற்குள் வந்து அவளுக்குக் கார் கதவைத் திறந்து விட்டான் ஆதி.

அவன் இப்படி வந்து தனக்குக் கார் கதவைத் திறந்து விடுவதைக் கவனித்த துர்கா, ஒருவித சங்கடத்துடன் காரை விட்டு இறங்க, அவள் இறங்கியதும் கார் கதவைச் சாற்றி விட்டு முன்னே நடந்தான் ஆதி.

துர்கா செல்லும் அவனையே அதிசயம் போல பார்த்துக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள். அவனைப் பார்த்துக் கொண்டே இரண்டு அடி எடுத்து வைத்து இருப்பாள், துர்கா “அம்மா….” என்று கத்திக்கொண்டு அப்படியே கீழே சரிய, அவள் கத்தும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்ட ஆதி திரும்பி துர்காவைப் பார்க்க, அவள் தன் காலைப் பிடித்துக்கொண்டே கீழே விழப் போவதைக் கவனித்த ஆதி, வேகமாகச் சென்று அவளைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்தான்.

எங்கே கீழே விழப் போகிறோமோ என்று கண்களை இருக்க மூடி இருந்த துர்கா, தான் கீழே விழாமல் இருப்பதை உணர்ந்து கண்களைத் திறந்து பார்க்க, ஆதியின் முகம் அவள் முகத்திற்கு மிக அருகில் இருந்தது.

இதயம் படபடக்க அவனையே பார்த்துக் கொண்டு இருந்த துர்காவைப் பார்த்து, “ஏன் துர்கா கத்தினே? உனக்கு வேற எங்கேயும் வலிக்குதா… உடம்புல? வேற எங்கேயும் அடி பட்டுருச்சா?” என்று கேட்டான்.

அவன் கேட்டது அவள் காதுகளுக்குக் கேட்டாலும், அவள் மூளையைச் சென்று அடையவில்லை. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் துர்காவை அப்போது ஆதி தன் கவனிக்க, மெல்லப் புன்னகை செய்து அவள் தன்னை ரசிப்பதை உணர்ந்து, அவள் விழிகளையே பார்த்தவன், மாஸ்க் அணிந்த முகத்தில் தெரிந்த அவன் கண்களை மட்டும் ரசித்துக் கொண்டே மெய் மறந்து இருக்கும் துர்காவை அப்படியே தன் கைகளில் ஏந்தியவன், அவளைத் தூக்கிக்கொண்டு பெட்ரூம் வந்தான்.

ரூமிற்கு வந்தவன் தன் கால்களாலேயே கதவைத் தள்ள, கதவு திறந்துகொள்ள, இரண்டு கதவுகளையும் தன் கால்களாலேயே திறந்தவன், துர்காவை உள்ளே தூக்கிக்கொண்டு வந்து அவளைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டுத் துர்காவையே பார்க்க, அவள் இன்னமும் அவன் கண்களையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இப்படி இமைக்காமல் தன்னையே பார்க்கும் தன் மனைவியை ரசித்தவன், அவள் காலுக்கு அருகில் அமர்ந்து அவளுக்கு எங்கே அடி பட்டு இருக்கிறது என்று பார்க்க, அவள் புடவையை மேலே தூக்கினான்.

துர்கா இப்போதும் அமைதியாகவே அவன் கண்களையே பார்த்துக் கொண்டு இருக்க, அவள் கால்களைத் தழுவி இருந்த அவள் சேலையை மேலே தூக்கி அவள் கால்களைப் பார்த்தவன், அவள் உள்ளே அணிந்திருந்த ஸ்கர்ட் அவள் கால்களை மறைத்துக்கொண்டு இருந்தது.

“இந்த வெண் சங்கு நிற காலைத் தரிசிப்பதற்கு எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டி இருக்கிறது” என்று பெருமூச்சு விட்டவன். தன் மாஸ்க்கைக் கழட்டி வைத்துவிட்டு அவள் ஸ்கர்ட்டை மேலே மெதுவாகத் தூக்க, அதுவரை இது எதுவும் அறியாமல் இருந்த பெண்ணவளின் பெண்மை விழித்துக் கொள்ள, தன்னிச்சையாக அவள் கைகள் இரண்டும் ஆதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவனையே பார்க்க.

“துர்கா… ப்ளீஸ், கையை எடு. உனக்கு எங்கேயும் அடி பட்டு இருக்கிறதா என்று நான் பார்க்கிறேன்” என்றான். அவள் எதுவும் கூறாமல் அவன் கண்களையே பார்க்க, அவனும் பார்வையாலேயே அவளிடம் ‘ப்ளீஸ்’ என்று கெஞ்ச, துர்காவின் கை அவன் பார்வைக்கு கட்டுப்பட்டது போலத் தன் பிடியை லேசாகத் தளர்த்தினாள். மென்மையாகப் புன்னகை செய்த ஆதி, அவள் கைகளை மெல்லத் தன் கைகளில் இருந்து விலக்கி விட்டவன், அவள் ஸ்கர்ட்டை மேலே உயர்த்த.

அவள் வெண் சங்கு நிறக் கால் வாழைத்தண்டு போலப் பளபளவென இருக்க, அதை ரசிக்க முடியாமல், அவளுக்கு அங்கே ஏதும் காயம் பட்டு இருக்கிறதா என்று கவனித்தான்.

அங்கே எதுவும் காயம் இல்லாததால் மேலும் கொஞ்சம் அவன் கைகளை உயர்த்தி அவள் ஸ்கர்ட்டை மேலே தூக்க, அவள் வலது முட்டியில் அடிபட்டுச் சிவந்து நன்றாக வீங்கி இருந்தது.

அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னுடைய கவனக்குறைவால் துர்காவுக்கு இப்படி நெற்றியிலும் முட்டியிலும் காயம் பட்டு விட்டதே என்று வருத்தப்பட்ட ஆதி, தன்னையே திட்டிக்கொண்டவன், உடனே தன் போனை எடுத்துத் தங்கள் குடும்ப டாக்டரை வரச் சொல்லிவிட்டுத் துர்காவைப் பார்க்க, அவள் இப்போது கொஞ்சம் நிஜ உலகிற்கு வந்தவள் போல இருந்தாள். அவள் முகத்தில் அப்பட்டமாக வலி தெரிந்தது.

“துர்கா… கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. டாக்டர் சீக்கிரமே வந்திருவார். நீ பதட்டப்படாமல் இரு” என்று அவளுக்கு ஆறுதல் கூறினாலும், அவனால் துர்காவின் நிலைக்காக வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

அவள் எதுவும் பேசாமல் வலியால் அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தால். டாக்டர் வருவதற்குள் ஆதி துர்காவுக்கு ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்துக்கொண்டு இருந்தான். துர்கா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவளுக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அவன் போன் செய்த அரை மணி நேரத்திற்குள் டாக்டர் அங்கு வந்துவிட்டார். அவரை வாசல் வரை சென்று அழைத்துக்கொண்டு மேலே தங்கள் அறைக்கு வந்த ஆதி, துர்காவிடம் டாக்டரை அழைத்துச் சென்றான்.

அவர் வந்து துர்காவின் காலைப் பார்த்தவர், அவள் நெற்றியையும், முட்டியையும் பரிசோதனை செய்தவர், “உங்களுக்கு உடம்பில் வேறு எங்கேயாவது அடி பட்டு இருக்கிறதா மிஸ்ஸஸ் ஆதி?” என்று கேட்டார்.

அவள் ‘ஆம்’ என்று தலையை ஆட்ட, அதைக் கவனித்த ஆதி, “எங்கே அடி பட்டுருக்கு துர்கா? சொல்லு, டாக்டர் அதையும் பார்த்திருவாங்க. எங்கென்னு காட்டு” என்று ஆதி கேட்க, அவனைச் சங்கடமாகத் துர்கா பார்க்க, அதைப் புரிந்து கொண்ட பெண் டாக்டர், “சார், நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா? நான் அவங்களுக்கு உடம்பில் எங்கே எல்லாம் காயம் ஆகி இருக்கு என்று பார்த்து சொல்றேன்” என்றார்.

ஆதி துர்காவையே பார்க்க, அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் கண்களைத் தாழ்த்தி, தலையைக் குனிந்து கொண்டு, தன் சேலைத் தலைப்பைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு சேலையைக் கசக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளை இப்படிப் பார்க்கும்போதே ஆதிக்குப் புரிந்து விட்டது, அவளுக்கு உடலில் தனக்குத் தெரியாமல் வேறு இடங்களில் அடி பட்டு இருக்கிறது என்று.

ஆதி சூழ்நிலையைப் புரிந்து கொண்டு துர்காவையும், டாக்டரையும் மாறி மாறிப் பார்த்தவன், “சரி” என்று தலையை ஆட்டி விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

அவன் அறையை விட்டு வெளியே சென்றதும் டாக்டர் துர்காவைத் திரும்பிப் பார்த்து, “இப்போ சொல்லுங்கம்மா, உங்க உடம்புல வேற பக்கம் எங்கே அடிபட்டு இருக்கு?” என்று கேட்டார்.

டாக்டர் இவ்வாறு கேட்டதும் எதுவும் கூறாமல் துர்கா அமைதியாகத் தலை குனிந்து இருப்பதைப் பார்த்த டாக்டர், “என்கிட்ட சொல்ல எதுக்குமா இவ்வளவு கூச்சப்படுறீங்க…. நானும் உங்களை மாதிரி ஒரு பொண்ணு தானே? சும்மா கூச்சப்படாம, பயப்படாம சொல்லுங்க. அப்பத்தானே நான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியும்? இல்லன்னா, இப்போ சின்ன வலியா இருக்கிறது நாளைக்குப் பெருசா ஏதாவது பின்னாடி பிரச்சினை பண்ணலாம் இல்லையா?” என்று சொன்னார் டாக்டர்.

அவர் அப்படிச் சொன்னதும் வேறு வழி இல்லாமல், துர்கா டாக்டரிடம் தயங்கிக் கொண்டு தன் கையை உயர்த்தி, அவள் இடுப்பையும் இடுப்புக்குக் கீழே உள்ள இடத்தையும் காட்டி, “இங்கே வலிக்கிறது” என்று சொன்னாள்.

அவளை லேசாகத் திரும்பிப் படுக்கும்படி டாக்டர் கூற, அவர் சொன்னது போலப் படுத்துக்கொண்டாள் துர்கா. அவள் திரும்பி வலி இருக்கும் இடத்தைக் காட்டியவாறு படுத்திருக்க, அவள் முதுகில் இருந்து சேலையை லேசாகக் கீழே இறக்கிய டாக்டர், அவள் சொன்ன இடத்தைப் பார்க்க, துர்காவின் இடுப்பும் இடுப்புக்குச் சற்று கீழே உள்ள இடமும் நன்றாகச் சிவந்து வீங்கி இருந்தது.

அதைப் பார்த்தவர் தன் கைகள் கொண்டு லேசாக அந்தச் சிவந்திருந்த இடத்தை அழுத்திப் பிடித்து அவளிடம், “இங்கே வலிக்கிறதா?” என்று கேட்க, அவர் அழுத்தியதுமே துர்கா வலியில் “ஆ….” என்று கத்த.

அவள் கத்திய சத்தம் கேட்டதும், அறைக்கு வெளியே அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஆதி வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், “என்ன துர்கா? ஏன் கத்தினே? ரொம்ப வலிக்குதா?” என்று பதட்டப்பட்டுக்கொண்டே அவள் அருகில் வர, துர்கா டாக்டரிடம் தன் இடுப்பையும் அதற்கு கீழே லேசாகவும் காட்டிக்கொண்டு படுத்திருந்த கோலத்தைக் கண்டதும், வேகமாக வந்து கொண்டிருந்த ஆதி, நடந்துகொண்டிருந்தவன் அப்படியே நின்று விட, அவனைத் திரும்பிப் பார்த்த டாக்டர் லேசாகச் சிரித்தவர், “உங்க மனைவிக்கு லேசா வலின்னு சொன்னதும் உங்களால தாங்க முடியாம கதவைத் திறந்துட்டு உள்ள வந்துட்டீங்க. நான் இங்கதான் இருக்கேன் மிஸ்டர் ஆதி. அவர்கள் எதுவும் பண்ணிட மாட்டேன். நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன். ப்ளீஸ் கொஞ்ச நேரம் எனக்கு ஒத்துழைச்சு வெளியே வெயிட் பண்றீங்களா?” என்று டாக்டர் கேட்க.

“சாரி டாக்டர். ஏதோ பதட்டத்துல யோசிக்காமல் உள்ள வந்துட்டேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க. நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியே வந்த ஆதி, கதவைச் சாற்றிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றவன், தன் இதயம் வெளியே வந்து விடுவது போலத் துடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், தன் வலது கையைக் கொண்டு தன் இடதுபுற மார்பைத் தடவி கொடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். துர்காவை அந்த நிலையில் பார்த்ததால் தான் அவனுக்கு இப்போது இதயம் இப்படித் துடிக்கிறது.

ஆதி வெளியே சென்று கதவைத் திறந்து சென்றதும், துர்காவிடம் திரும்பிச் சிரித்த டாக்டர், “உங்க ஹஸ்பன்ட் உங்க மேல ரொம்ப பாசம் வெச்சிருக்கார் போல. அதனாலதான் நீங்க ஒரு சின்ன வலிக்குத் தாங்க முடியாம சத்தம் போட்டதும் ரூமுக்குள்ள வேகமாக வந்துவிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார்.

டாக்டர் கூறியதைக் கேட்டு துர்காவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெறுமனே தலையை இங்குமங்கும் ஆட்டி வைத்தாள்.

அவளுக்கு அடிபட்ட இடத்தை பரிசோதித்து விட்டு, அடிபட்ட இடங்களில் ஆயின்மென்ட் கொடுத்துத் தடவச் சொல்லி விட்டு, அவளுக்கு வலி குறைய இன்ஜெக்‌ஷன் போட்டுவிட்டு வெளியே வந்தார்.

அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த ஆதியிடம் வந்த டாக்டர், “அவங்களுக்குப் பெருசா அடி எதுவும் இல்லை மிஸ்டர் ஆதி. ஆனா அவங்க கொஞ்சம் வீக் ஆஹ் இருக்கனால, அடி பட்டதும் அந்த இடம் எல்லாம் சிவந்து வீங்கி இருக்கு. ஒரு ரெண்டு நாள் கம்ப்ளீட் ஆஹ் ரெஸ்ட் எடுத்துட்டு, நான் கொடுத்த ஆயின்மென்டை வலி இருக்க இடத்துல சரியா தடவி வர சொல்லுங்க. ஒரு டூ டேஸ்ல சரியாகிடும். அவங்களுக்கு அதுவரை அவங்களை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம பாத்துக்கோங்க போதும்” என்றவர் அவனிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவர் சென்றதும் அறைக்குள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே ஒருவழியாக உள்ளே வந்து விட்டான்.

உள்ளே வந்த ஆதி, அங்கே துர்கா படுத்திருந்த கோலம் கண்டு அப்படியே நின்றுவிட்டான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured