EPI 241
ஆதி, துர்கா, போதி, மாதவி, இரு ஜோடிகளும் ஹனிமூன் கொண்டாட டென்மார்க் சென்று இருக்க.. அவர்களோடு துர்காவின் மாடலிங் விஷயமாக அவளுக்கு உதவி செய்ய ரியாவும், ஸ்ரீயும் சென்று இருந்தனர்.
டென்மார்க் சென்றதில் இருந்து அனைவரும் வேலை வேலை என்று பிஸியாக இருக்க.. மாதவி வீட்டில் தனியாக இருந்து போர் அடிக்கிறது என்று “என்னை ஹனிமூன் கொண்டாடுறேனு இங்கே கூட்டிட்டு வந்து நீ வேலை வேலைன்னு சுத்திட்டு இருக்க,… நான் மட்டும் தனியா இந்த வீட்டுக்குள்ளயே இருந்து என்ன செய்ய போறேன்” என்று அவனிடம் சண்டையிட்டாள்.
“சாரி டி செல்லம் இப்போ இருந்து நான் உன்கூடவே இருக்கேன். ஆபீஸ் பக்கமே போக மாட்டேன்” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவர்கள் பெட் ரூம் நோக்கி சென்றான்.
“போதி என்ன செய்ற… அங்க பாரு எல்லாரும் நம்ம ரெண்டு பேரையும் பாக்குறாங்க” என்று அவன் பாடிகார்டகளையும், ஆதியின் வீட்டில் வேலை செய்பவர்களையும் சுட்டி காட்டி அவள் கூற…
அதற்குள் அவளை தூக்கிக் கொண்டு தங்கள் ரூமிற்குள் வந்தவன் “யார் பார்த்தா எனக்கு என்ன.. நான் என் பொண்டாட்டிய தூக்கிட்டு ஏன் ரூமுக்கு வரேன். யார் என்ன நினைச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை” என்றவன் அவளை கட்டிலில் அமர வைத்துவிட்டு வந்து அறைக்கதவை சாற்றிவிட்டு அவள் அருகில் வந்தான்.
“என் கூடயே இருன்னு தான் சொன்னேன். அதுக்காக இப்படி பட்ட பகல்ல ரூம் கதவை சாத்திட்டு வர சொல்லலை. முதல்ல போய் கதவை திற டா…” என்று அவன் தோளில் அடித்தாள்.
“ம்ஹும்… என் பொண்டாட்டியை ஹனிமூன் கூட்டிட்டு வந்துட்டு இவ்வளவு நாளா ஹனிமூன் கொண்டாடாம அவளை காக்க வெச்சு நான் அவ்வளவு பெரிய குற்றத்தை செய்துட்டேன். நான் செய்த தப்புக்கு நானே பிராயசித்தம் தேடிக்க போறேன்” என்று தன் கோர்ட்டை கழட்டி வீசியவன் தன் சட்டை பட்டன்களை அவிழ்த்த படி அவளை நெருங்கி வர…
கட்டிலில் அமர்ந்து இருந்தவள் எழுந்து அவனிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பிக்க எண்ணி ஓடிக்கொண்டே… “வேணாம் போதி நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன். அதுக்காக இப்பவே இதெல்லாம் ஸ்டார்ட் பண்ணனுமா? ஒழுங்கா பட்டனை போடு PLEASE” என்று அவனிடம் கெஞ்சிக்கொண்டே அவன் கைகளில் அகப்படாமல் அறைக்குள்ளேயே இங்கேயும், அங்கேயேயும் ஓடினாள்.
“ம்ஹும் முடியாது. நான் முடிவு எடுத்தா எடுத்ததுதான்” என்று அவளை பிடிப்பதற்காக அவளிடம் ஓடினான்.
அவன் கையில் சிக்கிக் கொள்ளாமல் “அப்போ நான் சொன்னா நீ கேட்க மாட்டே அப்படிதானே” என்றாள் அவனை தன் பின்னால் அலையவிட்ட படியே.
“ம்ம்ஹும்.. என் பொண்டாட்டி சொன்னா நான் எதையும் செய்வேன். ஆனா இந்த ஒரு விஷயத்தை தவிர” என்று அவளை ஒரே எட்டில் தாவி பிடித்தான்.
அவன் கையில் ஒரு அழகிய குட்டி முயல் போல மாட்டிக்கொண்டவள் சிணுங்கிக் கொண்டே… “டேய் புருஷா… சொன்னா கேளுடா… ப்ளீஸ்…” என்று அவனிடம் கெஞ்சினாள்.
“ஏய் பொண்டாட்டி நீ எவ்ளோ சொன்னாலும் நான் இன்னிக்கு உன்னை விடுறதா இல்லை” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றான்.
அதை பார்த்த மாதவி “போதி என்ன பாத்ரூம்க்கு என்னை தூக்கிட்டு போற,… என்ன ஹனிமூனை பெட் ரூமில் கொண்டாடாமல் பாத்ரூமில் கொண்டாட போறியா?” என்றாள்.
“எப்படி பொண்டாட்டி சரியா சொல்லிட்டே… நான் அதுக்காக தானே உன்னை பாத்ரூம் தூக்கிட்டு போறேன். அதுக்குள்ள நீ எப்படி கரெக்ட் ஆஹ் கண்டுபிடிச்ச” என்றான்.
“ம்ம்.. நீ எப்போ எப்போ.. என்ன எல்லாம் செய்வேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்படி பேசினா நான் எதுவும் சொல்ல மாட்டேன்னு நினைச்சுட்டியா? ஒழுங்கா என்னை இறக்கி விடுடா… கம்மினாட்டி…” என்று திடீர் என்று அவனை மாதவி திட்ட…
“என்ன டி முயல்குட்டி நான் பாவம் இல்ல இப்படி என்னை திட்டுற… நான் வரும்போது அமைதியா தானே வந்தேன். நீதான் நான் வந்ததும் அதையும், இதையும் கேட்டு என்கிட்டே சண்டை போட்ட… சரி என் பொண்டாட்டியை சமாதானம் செய்யணும்னு அவ கேட்டதை செய்யலாமேன்னு ரூமுக்கு கூட்டிட்டு வந்தா நீ என்னடான்னா நான் எது செய்ய போனாலும் திட்டிகிட்டெ இருக்க… போ.. நான் உன்கூட பேச மாட்டேன்” என்று அவளை பாத்ரூமிற்குள் இறக்கி விட்டு பாத்ரூம் கதவை அடைத்தான்.
“நீ இருக்கியே என்கிட்டே கோச்சுகிற மாதிரி நடிச்சிட்டே பாத்ரூம்குள்ள வெச்சு கதவை தால்பாள் போட்டுட்ட பாரு” என்றாள் இடுப்பில் கைவைத்து அவனை செல்லமாக முறைத்துக்கொண்டே.
“இல்லையா பின்ன எனக்கு உன் மேல கோபம் எல்ல்லாம் வருமா? அதெல்லாம் எதுவும் கிடையாது” என்று அவளை நெருங்கினான்.
“டேய் டுபுக்கு… வேணாம் சொன்னா கேளு.. இங்கே வேணாம். என்னை வெளியே விடு டா… என் செல்லம்ல…” என்று அவனை கொஞ்சினாள்.
“முடியாது டி என் தங்க கட்டி…” என்று அவளை நெருங்க… மாதவியோ பின்னால் சென்றவள் சுவற்றில் மோதி நின்றாள்.
“ஆஹா வெளிய போக விடாம இப்படி வந்து நிப்பாட்டிட்டானே… இவனை எப்படியாவது சமாளிச்சு இங்கே இருந்து முதல்ல வெளியே போகணும். இல்லையின்னா பாத்ரூம்க்குள்ள வெச்சு என்னை என்ன எல்லாம் செய்வானோ…” என்று யோசித்தவள் தன் தலையை வேகமாக குலுக்கிக்கொண்டு அவனை பார்க்க…
“என்ன? நான் பாத்ரூமில் வெச்சு உன்னை என்ன எல்லாம் செய்ய போறேன்னு யோசிச்சு பார்த்தியா?” என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.
“அடப்பாவி நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டான்” என்று நினைத்தவள் அவன் கேட்ட கேள்விக்கு முதலில் ஆமாம் என்று தலையை ஆட்டியவள் பின் இல்லை என்று தலையை வேகமாக ஆட்டினாள்.
அதை பார்த்து சிரித்தவன் சுவற்றில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு நின்று இருந்தவளின் இடையில் கைகொடுத்து தன் அருகில் இழுத்தவன் அவள் காதில் “நீ என்ன எல்லாம் நினைச்சியோ.. அதை விட ஒரு படி மேலே போவேன் நான். என்ன செய்வ…” என்றான்.
அதை கேட்டு அதிர்ச்சியில் விழிகள் விரிய அவனை பார்த்த மாதவி அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டு “டேய் செல்லம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். ஆனா இங்க எதுவும் வேணாம் டா.. எனக்கு என்னவோ போல இருக்கு…” என்று அவள் அவனிடம் கெஞ்ச…
“ம்ஹும்.. முடியாது இன்னிக்கு நான் இங்கே தான் ஹனிமூன் கொண்டாட போறேன். நீ என்ன கெஞ்சினாலும் நான் இன்னிக்கு உன் பேச்சை கேட்குறதா இல்லை” என்றவன் அவள் அணிந்து இருந்த பனியனுக்குள் கையை விட்டான்.
அதில் நெளிந்தவள் அவனை பார்த்து “ப்ளீஸ் டா செல்லம் இங்க வேணாமே..” என்று அவனை தன் வழிக்கு கொண்டு வர நினைத்தாள்.
ஆனால் இன்று ஒரு முடிவோடு வந்து இருந்தான் போதி. அவள் பனியனுக்குள் கையை விட்டிருந்தவன் தன் கையை அவள் முதுகில் படர விட்டவன் அவள் பனியனை சட்டென கழட்டி விட… “டேய்…” என்று அவனை அதிர்ந்து பார்த்த மாதவி சட்டென தன்னை மறைத்துக்கொள்ள அவனையே இழுத்து அணைத்துக்கொண்டாள்.
இதுதான் தனக்கு வேண்டும் என்று நினைத்தவன் தன் மார்பில் வெட்கப்பட்டு கொண்டு முகம் புதைத்தவளின் முகத்தை தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே ஷவருக்கு அடியில் தள்ளிக்கொண்டு சென்றவன் அவளோடு சேர்ந்து ஒன்றி நின்று ஷவரை திறந்து விட்டான்.
தன் மீது குளுமையான தண்ணீர் விழவும் சட்டென கண்களை திறந்தவள் தனக்கு எதிரே நின்று குறும்பாக சிரித்துக் கொண்டு இருந்த போதியை பார்த்தாள்.
“என்ன?” என்று அவன் புருவம் உயர்த்தி மாதவியை பார்த்தான்.
தண்ணீர் தன் மேல் விழ குளிரில் நடுங்கிய இதழ்களால் “குளிருது டா மாமா…” என்று முதல் முறையாக அவனை மாமா என்று அழைத்தாள்.
“கொஞ்சம் பொறுத்துக்கோ முயல்குட்டி நடுங்குற உன் உதட்டுக்கு என் உதட்டாலையும், உன் உடம்புக்கு என் உடம்பாலையும் குளிர் எடுக்காம செய்றேன்” என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்ததும் விழிகளை அகல விரித்து “ஆஹ்… இங்கயேவா… ம்ஹும்… மாட்டேன்” என்று அவனிடம் இருந்து தப்பிக்க போக..
“செல்லம் ப்ளீஸ் டி… நான் எவ்ளோ ஆசையா இங்கே உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்படி என் ஆசையை நிறைவேற்ற விடாம போறேன் போறேன்னு சொல்றியே.. இதெல்லாம் உனக்கே நியாயமா?? ஹனிமூன் கொண்டாட வந்துட்டு இப்படி எதையும் அனுபவிக்க விடாம தடுக்குறியே” என்று முகத்தை தொங்க போட்டுக் கொண்டு அவள் முன்பு நின்றான்.
பனியன் அணியாத தன் மேனியில் விழுந்த குளிர்ந்த தண்ணீரையும் தாண்டி தான் உள்ளே அணிந்து இருந்த ஆடையில் அவள் உடல் வனப்புடன் அவன் கண்ணிற்கு தெரிந்தது. அதை தலையை குனிந்தவாறே அவன் திருட்டு தனமாக ரசிக்க… அதை கவனித்து விட்ட மாதவி “ச்சி ராஸ்கல் சரியான திருட்டு பூனை டா நீ, எப்போ வாய்ப்பு கிடைக்கும்னு காத்திட்டு இருக்க வேண்டியது” என்று தன் கைகளை கொண்டு அவன் பார்வைக்கு விருந்தான தன் அழகை மறைத்துக் கொண்டாள்.
“ம்ஹும் எங்க இந்த திருட்டு பூனைக்கு கிடைக்குறதை தான் நீ கெடுக்குறியே…” என்றான் ஏக்கமாக அவளை பார்த்து.
“இப்போ நான் என்ன செய்யணும்” என்றாள் அவன் பிடித்த பிடிவாதம் மாறாது என்று.
“இப்போ என்ன சொன்ன.. என்னை திருட்டு பூனைன்னு சொன்னேல்ல…” என்றான் அவளை பார்த்து.
“ஆமா சொன்னேன் அதுக்கு என்ன இப்போ” என்றாள் சற்று கோபமாக.
“பொதுவா திருட்டு பூனை வழக்கமா எதுக்காக திருட வருமோ அதை செய்யவிட்டா அந்த பூனை வந்த வேலையை முடிச்சிட்டு யாரையும் தொந்தரவு பண்ணாம போயிரும். அது மாதிரி நானும் ..” என்று அவள் கைகளால் மறைத்து இருந்த இடத்தை தன் பார்வையாலேயே பருக துடித்தான்.
“திருட்டு பூனை என்ன செய்ய வரும். எல்லாரும் தூங்கின பிறகு நைட் பா…” என்று சொல்ல வந்தவள் வார்த்தையை அப்படியே விழுங்கினாள்.
“ம்ம்.. அதான் அதே தான் சொல்ல வந்ததை முழுசா சொல்லு முயல் குட்டி..” என்று அவன் சிணுங்கினான்.
அவனை செல்லமாக முறைத்தவள் “முடிவே பண்ணிட்டே…” என்று ஒருபுறம் வெட்கம் பிடுங்கி தின்ன… மறுபுறம் தண்ணீரில் நனைந்து கொண்டு இருந்தவள் தானாகவே தன் கைகளை மெல்ல கீழே இறக்கினாள்.
உடல் முழுவதும் நனைந்து அவள் ஆடையை தாண்டி அவள் அங்கம் அவன் பார்வைக்கு விருந்தாக, இந்த போதி என்னும் திருட்டு பூனை அவன் பூனை குட்டியிடம் தன் ஆடைகளை களைந்தவாறே நெருங்கி வந்தவன் அவள் அழகை அள்ளி பருக நினைத்த மறுநொடி அவளை அணைத்துக் கொண்டு அவளை சுவற்றில் தள்ளி அவள் இதழை சுவைத்தான்.
மெல்ல மெல்ல அவள் இதழில் இருந்து ஈரம் சொட்ட வழிந்து வந்த தண்ணீர் சென்ற வழியில் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டே கீழே வந்தவன் அந்த தண்ணீர் கழுத்தை கடந்து கீழே வர… அடுத்து தன் திருட்டு பூனை வேலையை காட்ட ஆரம்பித்தான்.
அவன் அள்ளிப் பருகிக் கொண்டு இருக்க… அவளோ தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அவன் தலையில் கை வைத்து தன்னோடு சேர்த்து அழுத்திக்கொண்டாள்.
அவளிடம் தன் பசியாற நினைத்தவன் அவளை தழுவ தழுவ அவன் பசி மேலும் அதிகம் ஆனது. அவளை அப்படியே அள்ளி அணைத்தவன் அவள் அணிந்து இருந்த மொத்த ஆடையையும் களைந்தவன் அவளை சுவற்றில் தள்ளி அவளோடு சேர்ந்து தன் பசியை தனித்துக் கொள்ள அவளோடு அந்த ஷவரில் ஒன்று கூடினான்.
மாதவியும் அந்த குளிரில் தன் குளிரை தணிக்க அவனை தன்னோடு இறுக்கி அணைத்து தன் ஒற்றை காலால் அவன் காலை மெட்டி பிடித்துக் கொண்டாள்.
இருவரும் தங்கள் ஹனிமூனை பாத்ரூமில் துவங்கிவிட்டனர்.
