Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 14

என்னை கொண்டாட பிறந்தவனே 14

by Layas Tamil Novel
357 views

EPISODE 14

ராகேஷ் இனியாவை பற்றி பேசியது கேட்டு கோபம் வந்து அவன் சட்டையை பிடித்திருந்தான் விஜய் 

“ஹே… கூல் ..கூல்… இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற.. ” என்று தன் சட்டையில் இருந்த விஜய்யின் கையை விலக்கிவிட்டு சட்டையை சேரி செய்தவன் ” இங்கே பாரு விஜய் நீ இனியாவை எதுவும் செய்தியா இல்லையானு நான் இங்கே தெரிஜூட்டு போக வரல … அவளை நீ என்ன செய்திருந்தாலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு அவ வேணும். அவ எனக்கு சொந்தமானவை நான் அவளை 10 கோடி கொடுத்தது வாங்கிட்டு வந்திருக்கேன். நான் இவ்ளோ காசு கொடுத்து வாங்கிட்டு வந்தவளை நீ அனுபவிக்குறதுல என்ன நியாயம் . வேணும்னா ஒரு டீல் பேசிக்கலாம் . இங்கே அவளை நீ அழைச்சிட்டு வந்து ஒரு 10 நாளுக்கு மேல இருக்குமா ? அந்த 10 நாளும் நீ அவகூட என்ஜோய் பண்ணி இருப்பியா . அது போதும்னு நினைக்குறேன் உனக்கு . இப்போ என்னோட டர்ன் அவளை என்கூட அனுப்பி வெச்சிட்டு. நான் என்கூடி அவளை கூட்டிட்டு போய்டுறேன் . உனக்கு எப்போ எல்லாம் அவ வேணும்னு தோணுதோ அப்போ எனக்கு ஜஸ்ட் ஒரு போன் கால் மட்டும் பண்ணு போதும் நெஸ்ட் பிலைட்டில் அவளை உன்கிட்டே அனுப்பி வெச்சுடறேன் . எனக்கு எப்போ தேவையோ அப்போ அவளை என் கூட கூப்பிடடுகிறேன் ” என்றான் ராகேஷ்.

அவன் பேசுவதை கேட்க கேட்க ராகேஷை அங்கேயே வெட்டி கொன்று போடும் ஆத்திரம் விஜய்க்கு வந்தது.  இருந்தும் தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் “இங்கே பாரு நீ நினைக்குற மாதிரி ஆள் நான் கிடையாது. எனக்கு உன்னை மாதிரி புத்தியும் கிடையாது . ஒழுங்கா மரியாதையா இங்கே இருந்து போய்ட்டு . ஏதாவது பேசி என்னை கடுப்பேத்திட்டு இருக்காத ” என்றான் ராகேஷை எச்சரிக்க்கும் விதமாக .

“ஹே… என்ன விஜய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க .. சரி நீ நல்லவனாவே இருந்துட்டு போ.. அது பத்தி எனக்கு ஒன்னும் இல்லை. என்கொடுங் இனியாவை அனுப்பி வெச்சிடு. இல்ல அவளை எங்கே வெச்சிருக்கேன்னு சொல்லு நான் போய் அவளை கூட்டிட்டு கிளம்புறேன் ” என்றான் .

“டேய் உன்கிட்டே ஒரு தடவை சொன்னா புரியாது . இனியாவை என்னால உன் கூட அனுப்பி வைக்க முடியாது . ” என்றான் தீர்க்கமாக.

“இங்கே பாரு அவளை காசு கொடுத்து விலைக்கு வாங்கினது நான் . அவளை அழைச்சிட்டு போற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. அவளை அனுப்ப மாட்டேன்னு நீ சொல்றதுல அர்த்தமே இல்லை.  ” என்றான் ராகேஷ் .

“இப்போ என்ன நீ அவளை காசு கொடுத்தது வாங்கிட்டே அப்படித்தானே … நீ கொடுத்த காசை விட இரண்டு மடங்கு கொடுக்கிறேன் . இல்ல அதுக்கும் மேல வேணுமா சொல்லு ஒரே செக்ல எழுதி கொடுக்கவும் நான் தயாரா இருக்கேன் ” என்றவன் “அர்ஷ்… ” என்று அவனை பார்க்க…

விஜய் அழைத்ததும் வேகமாக ஓடி சென்று விஜய்யின் டேபிள் ட்ராயரை திறந்து செக் புக்கை எடுத்து வந்து அவன் முன் நீட்டினான் .

அதை வாங்கிய விஜய் சோபாவில் வந்து அமர்ந்து செக் புக்கில் கையெழுத்திட்டு அதை ராகேஷின் முன்பு நீட்டியவன் ‘இந்தா இது பிளாங்க் செக் உனக்கு எவ்ளோ பிள் பண்ணனும்னு தோணுதோ அவ்ளோ பிள் பண்ணிக்கோ… நான் இனியாவை உன்கூட அனுபிரதா இல்லை ” என்றான் முடிவாக .

அவனை ஆழ்ந்து பார்த்த ராகேஷ் தன் முன் நீட்டிய செக் லீபை வாங்கியவன் “பரவால்லையே அவ ரொம்ப ஒர்த் பீஸ் தான் போல அவனுக்கான விலையை கூட எழுத முடியாத அளவுக்கு உன்னை திருப்தி படுத்திட்டாளா ? ம்ஹும்… நீ கொடுத்து வெச்சவன் . சரி பரவாயில்ல இதுல எனக்கு தேவையான அமௌண்ட்டை நான் பிள் பண்ணிக்கிறேன் . இவ்ளோ தூரம் அவளை தேடி வந்ததுல எனக்கு தான் லாபம் ” என்று செக் லீஃப்பை தன் கோர்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு “வரட்டுமா விஜய்… வரட்டுமா அர்ஷ்” என்றவன் அங்கிருந்து கிளம்பி வாயில் வரை சென்றான்.

பின் அங்கே நின்று திரும்பி அர்ஷை பார்த்து “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு , பேசாம நீ என் கூட வந்துடுறியா . உனக்கு இவன் கொடுக்குற சம்பளத்தை விட டபுள் சம்பளம் நான் கொடுக்குறேன் . என்ன போலாமா ?” என்று ஒரு மார்க்கமாக அர்ஷை பார்த்து ராகேஷ் கேட்க..

அவன் பேசிய வித்தத்தை பார்த்து அதிர்ந்த அர்ஷ் “ஆத்தி … அவனா இவ… ச்சீ… ச்சீ… விட்டா இனியாவை விலைக்கு வாங்கின மாதிரி என்னையும் விலைக்கு வாங்கி கூடையே கூட்டிட்டு போயிடுவான் போல இருக்கே… ” என்று நினைத்தவன் .

“எனக்கு எங்க பாஸ் நல்ல சம்பளம் தான் கொடுக்குறாரு . நான் இங்கையே இருக்கேன் ” என்றான் அவனை பார்த்து .

“ஓகே… YOUR WISH உனக்கு ஒரு ஆபர் கொடுத்தேன் . நீ வேணாம்னு சொல்லிட்டே… பியூச்சர்ல எதுவும் ஐடியா இருந்தா மறக்காம என்னை காண்டாக்ட் பண்ணு ” என்று சிரித்துவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான் .

அவன் சென்றதும் அர்ஷிற்கு அப்பாடா என்று இருந்தது . பெருமூச்சு விட்டபடி விஜய்யை பார்க்க… அவன் இன்னமும் ராகேஷ் பேசியதை எல்லாம் நினைத்து கோபமாக இருந்தான் . அவனுக்கு இனியாவை நினைத்து அவள் ராகேஷிடம் மாட்டி இருந்தால் என்ன நிலைக்கு ஆளாகி இருப்பாள் என்று அவள் மீது பரிதாபம் ஏற்பட்டது .

“விஜய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆஹ் இரு… அவன் ஒரு பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டு போறான் . பாரு கொஞ்ச நேரத்துல எவ்ளோ பேசிட்டான் . எனக்கே அவன் பேசினதை கேட்டு அதுவும் நம்ம இனியாவை பேசியதை கேட்டு கடுப்பாகிடுச்சு . விடு  இத்தோட அவன்  பிரச்சனை முடிஞ்சிதுன்னு நினைச்சுக்கோ ‘ என்றவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான் .

‘இங்கே காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி இருந்த ராகேஷிடம் அவன் பிஏ “சார் என்ன இது உங்க பரம எதிரியை மீட் பண்ண போறேன்னு சொல்லிட்டு இப்படி அவர் கொடுத்த பிளாங்க் செக்க்கை வாங்கிட்டு வந்துட்டீங்க… நீங்க போன வேகத்தை பார்த்தா அவனை மிரட்டி உருட்டி அந்த பொண்ணை உங்க கூட கூட்டிட்டு வந்திருவிங்கனு இல்ல நான் நினைச்சேன் ” என்றான் .

“கூட்டிட்டு வந்திருக்கலாம் தான் . ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லை . அவரை என் கூட அழைச்சிட்டு வந்து இருந்தா இந்த பிளாங்க் செக் என் கைக்கு கிடைச்சிருக்குமா … இது இப்போ விலை மதிப்பு இல்லாதது . இதுல நான் எவ்ளோ அமௌன்ட் பில் பண்ணினாலும் விஜய் எதுவம் நினைக்க போறது இல்லை . ஏன்னா அவன் பேங்க் பாலன்ஸ் அப்படி ” என்றவன் .

“அதுக்காக அவளை அப்படியே விட்டுட்டா முடியாது பாலா… அவளை முதல் முறை பாக்குற அப்போவே எனக்கு அப்படி இருந்துச்சு . அதனலா தான் அந்த ஏலத்துல யாரும் கொடுக்காத விலையை கொடுத்து அவளை நான் வாங்கினேன் ” என்றான் .

“சார் அப்பறோம் ஏன் சார் அந்த பொண்ணை அவன்கிட்டயே விட்டுட்டு இந்த செக்கை வாங்கினீங்க.. உங்களை என்னால புரிஞ்சுக்கே முடியலை ” என்றான் அவன் பிஏ பாலா .

“பாலா இப்போ என் கையில் யிருக்க செக் நான் விஜய்கிட்ட பிசினஸ் டீல் பேசினது மாதிரி . ஆனா இனியாவை அவன் லேசுல என்கூட அனுப்ப மாட்டான்னு எனக்கு அவன் பேசின விதத்துலயே தெரிஞ்சுது . அதனால் தான் அவன்கிட்டே இனியாவுக்கு அவன் விளையா கொடுத்த இந்த செக்கை எதுவும் பேசாம வாங்கிட்டு வந்துட்டேன். ஆனா நேரம் பார்த்து அவளை நான் தூக்க தான் போறேன் ” என்றான் .

தன் பாஸ் சரியான ஆள்தான் என்று நினைத்துக்கொண்டான் பாலா .

இங்கே விஜய் இன்னமும் கோபம் அடங்காதவனாக சோபாவில் தலையில் கைவைத்து அமர்ந்து இருக்க… அடுத்து அவனை மேலும் கோபப்படுத்த அவன் ஆபீஸ் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வம்சி விஜய்யின் ஒட்டிப்பிறந்த தம்பி .

ராகேஷ் பேசிவிட்டு சென்றதில் கோபத்தில் இருந்த விஜய் அவன் அறைக்  கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த வம்சியை பார்த்த விஜய் காலையில்  தாமரையுடன் சென்ற வம்சி இங்கே எதற்கு வந்திருக்கிறான் என்று யோசனையாக அவனை பார்த்து “வா வம்சி என்ன இந்த பக்கம்” என்றான்

” ஃப்ரீயா இருக்கியா விஜய் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்காக தான் உன்னை பார்க்க வந்தேன்” என்றான் வம்சி .

திருமணம் நடந்ததிலிருந்து வம்சி விஜய்யுடன் சரியாக பேசுவதில்லை அதற்கு முன்பு வரை இருவருமே நண்பர்கள் போல தங்கள் விஷயங்கள் அனைத்தையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி இருக்க அவன் திருமணத்திற்கு  பிறகு இந்த பாராமுகம் விஜய்யை ஒரு பக்கம் வருத்தியது.

இருந்தும் இப்போது  முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று வம்சி சொன்னதும் தாமரையை பற்றிய நினைவு தான் வந்தது. அவளால் எதுவும் பிரச்சனையா? அல்லது  விஜய்யும் தாமரையும் காதலித்த விஷயம் தெரிந்துவிட்டதா ?என்று  யோசித்தவன் “சொல்லுடா நான் ப்ரீயா தான் இருக்கேன்” என்றான்  விஜய்.

அவன் எதிரே இருந்த சோபாவில் வந்து அமர்ந்த வம்சி  தான் கையோடு கொண்டு வந்த கவரை விஜய்யின் முன்பு இருந்த டேபிளில் வைத்து “இதை  பிரிச்சு பாரு” என்றான் .

“என்ன டா இது ?”என்று கேட்டுக்கொண்டே அந்த கவரை எடுத்து பிரித்து அதிலிருந்து டாக்குமென்ட்டை திறந்து பார்த்த விஜய் அதில் கொட்டை எழுத்தில் விவாகரத்து பத்திரம் என்று போட்டிருக்க… அதை கண்டதும் அதிர்ச்சியானவன்  வம்சியை பார்க்க “என்ன பார்க்கிற அது விவாகரத்து பாத்திரம் தான் . அதில் இருக்கறதை ஒருவாட்டி   முழுசா படி” என்றான் வம்சி .

வேகமாக விஜயின் பார்வை அந்த பத்திரத்தில் இருந்த எழுத்துக்களை மேய்ந்தது . பின்  கடைசி பக்கத்தில் வம்சியும் தாமரையும் மனம் ஒத்து விவாகரத்து பெறுவதாக கூறி கையெழுத்து போட்டு இருக்க அதை பார்த்து அதிர்ந்து அவனைப் பார்த்தான்.

“என்ன பாக்குற  இப்போ உனக்கு இதை பார்த்து கொஞ்சம் திருப்தியா இருக்குமே.. நானும் தாமரையும் விவாகரத்து பண்ண போறோம்.  காலையில நாங்க ரெண்டு பேரும் அதுக்காக தான் வீட்டில் இருந்து கிளம்பினோம் . நேரா வக்கீல பாத்துட்டு டைவர்ஸ் அப்ளை பண்ணினதும் உன்ன பார்க்க தான் வந்தேன். நீயும் தாமரையும் ஒருத்தர ஒருத்தர மன்சார விரும்புற விஷயம் எனக்கு தெரியாது. எங்க ரெண்டு பேரோட ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு தான் தாமரை இந்த விஷயத்தையே சொன்னார் மூணுமே சொல்லி இருந்தா இந்த கல்யாணத்தில் நடத்த நான் விட்டு இருக்க மாட்டேன்.  இப்போ  ஒன்னும் கெட்டுப் போகல  ஒரு ஆறு மாசம்  ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருந்தீங்கன்னா டைவர்ஸ் கிடைச்சுடும் அதுக்கப்புறம்  நானே இந்த ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்றான் வம்சி  

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured