Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 17

என்னை கொண்டாட பிறந்தவனே 17

by Layas Tamil Novel
395 views

ENNAI  17

“என்ன மன்னிச்சிடு தாமரை பொண்ணு கல்யாணம் பண்ணிக்க எனக்கு கொடுத்து வைக்கல . இந்த ஜென்மத்துல  நீயும் நானும் ஒண்ணா சேருவதற்கான வாய்ப்பு இல்லாம போயிடுச்சு அடுத்து ஜென்மமும் ஒன்னு இருந்தா கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் ஒன்னு சேரனும் .  அவசரப்பட்டு நீயும் வம்சியும் எதுக்காக டைவர்ஸ்க்கு  அப்ளை பண்ணீங்க . நான் வம்சிகிட்ட தெளிவா சொல்லிட்டேன் உனக்கும் எனக்கும் இனிமேல் செட் ஆகாது நீ அவனோட பொண்டாட்டி அவன் மனைவியை நான் எப்படி மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று சொல்லிட்டேன். என்ன நெனச்சு  இனியும் நேரத்தை வீண் பண்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை .   முதல்ல டைவர்ஸ் அப்ளை பண்ணத கேன்சல் பண்ணுங்க ரெண்டு பேரும் ஒருத்தரும் ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோசமா வாழுற வழிய பாருங்க” என்று தன் மொபைலில் இருந்து தாமரையின் போட்டோவை பார்த்து அவளுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தான் விஜய்.

இப்போது அவன் சொன்னதையே அவன் தாமரையிடம் நேராக சொல்லி இருந்தால் அவள் புரிந்து தன் மனதை மாற்றி இருப்பாளோ  என்னவோ ஆனால் விதி யாரை விட்டது  நடக்கப் போகும்  பெரும் பிரச்சனைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும் .  இதனால்  பாதிக்கப்பட போகுது தாமரையா? விஜயா? வம்சியா? யாருக்கு தெரியும் .

வழக்கம் போல கெஸ்ட் ஹவுஸ் இருக்கு வந்திருந்த விஜய் இரவு முழுவதும்  பாட்டிலும் கையுமாக தன் மொபைலில் இருந்த தாமரை போட்டோவை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான்.

கீழே இனியாவை அவனை மீறி எங்கேயும் செல்லக்கூடாது என்று எச்சரித்துவிட்டு  வந்தவன் அறைக்குள் வந்ததிலிருந்து இந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறான்.

மொபைலில் போட்டோ கேலரிக்குள் சென்றவன் அதில் இருந்த தாமரை போட்டோக்களை ஒன்று விடாமல் தேர்வு செய்து ஆசை தீர ஒரு முறை பார்த்தவுடன் அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தான் .

இனி தாமரைக்கும் தனக்குமான உறவு அவை தன் தம்பி மனைவி என்பதே மட்டுமே நன்றி வேறு எதுவும் கிடையாது என்று தீர்க்கமாக முடிவெடுத்து இருந்தான்  விஜய்.

மனதை கல்லாக்கி விட்டு தாமரையை வேண்டாம் என்று  வம்சியிடம் சொல்லிவிட்டு வந்திருந்தாலும்  அவனால் தாமரையை பற்றிய நினைவுகளை தன் மனதிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடியவில்லை.

அவன் மனது தாமரை தாமரை என்று அவள் பெயரை மூச்சுக்கு 300 தடவை உச்சரித்துக் கொண்டு இருந்தது . அந்த நினைப்பை மறப்பதற்கு தான் அவள் பற்றிய நினைவுகள் மொத்தத்தையும் தன் மனதில் இருந்து அழிப்பதற்கு தான் இப்படி  மூச்சு முட்ட குடித்துக் கொண்டிருக்கிறான் .

வந்ததிலிருந்து ஓயாமல் பொறுத்துக் கொண்டு இருந்தவனுக்கு அதிகமாக மது  அருந்தியதில் அவன்  தொண்டையில்  எரிச்சல் ஏற்பட்டது .   தண்ணீர் குடிக்க வேண்டும் என்று  எழுந்து கட்டிலுக்கு அருகில் இருந்த மேஜை மீது இருந்த பாட்டிலை கையில் எடுத்தான் அது காலியாக இருக்கவே  ரூமில் வேறு எங்கும் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தால் எங்கும் தண்ணீர் இல்லாதது கண்டு கடுப்பானவன்.  “ச்சே .. ரூம்ல தண்ணி இருக்கா இல்லையான்னு கூட பார்த்து எடுத்து வைக்க தெரியாதா இவங்களுக்கு” என்று சலித்துக் கொண்டவன் கிச்சனுக்கு சென்று தண்ணீர் விடுத்து வர  பாட்டிலோடு அரை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனின் காது அடைக்கும் அளவிற்கு பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது .

அனைத்து  விளக்குகளும்  அணைக்கப்பட்டு இருக்க ஹாலில் இருந்த டிவி ஓடிக் கொண்டிருக்க அதன் வெளிச்சம் மட்டும் பரவலாக அவன் கண்களுக்கு தெரிந்தது .

அதை பார்த்தவன் இந்த நேரத்தில் யாரு டிவி பாத்துட்டு இருக்கிறது அதுவும் இவ்வளவு சத்தமா ? என்ற யோசனையோடு படிகளில் தள்ளாடிக்கொண்டே இறங்கி வந்தவன் டிவிக்கு எதிரே இருந்த சோபாவில் இனியா படுத்திருப்பதை கண்டான் .

இனியா தான் டிவி பாத்துட்டு  இருக்காளா?  இந்த நேரத்துல ஏன் தூங்காம டிவி பாக்குறேன் என்று சோபாவின் அருகில் வந்தவன் அதன் வெளிச்சத்தில் தன் கையில் இருந்த  வாட்ச்சில்  மணியை பார்த்தான் . மணி இரண்டு என்று காட்டியது .

ரெண்டு மணி வரைக்கும் தூங்காம இந்த நேரத்தில் டிவி பாத்துட்டு இருக்கா என்று யோசித்துப்படியே சோபாவில் படுத்திருந்தவர்களின் அருகில் வந்தான்.

மது போதையில் இருந்தவனுக்கு  இனியா  ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பது தெரியவில்லை . இவ்வளவு பக்கத்துல வந்து நிக்கிறேன் நான் வந்தது கூட தெரியாத அளவுக்கு அப்படி என்று டிவி வேண்டி இருக்கு அவளுக்கு என்று சோபாவிற்கு எதிரில் மேஜையில் இருந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆப் செய்தான் .

 டிவியை அணைத்ததும் அந்த இடம் மொத்தமும் இருளில் மூழ்கியது அதுவரை டிவி சத்தம் கேட்டுக் கொண்டிருக்க நன்றாக உறங்கிக் கொண்டிருந்த இனியா திடீரென்று அமைதியான சூழ்நிலை உருவானதும் தூக்கத்திலிருந்து கண்விழித்தவள் பதட்டமாக சோபாவில் விட்டு எழ முற்பட அந்த இருட்டில் அவள் முன்னால் நின்றிருந்த விஜய்யை பார்த்து பயந்து போனாள் .

அவள் தன்னை அந்த ராகேஷ்  கடத்திச் செல்ல வந்து விட்டான் என்று நினைத்து  பதட்டமானவள். “நீ எப்படி உள்ளே வந்த உன்னை யாரு உள்ள விட்டது” என்று பதட்டமாக பேசியவள் அடுத்த நொடி  தன் முன்னால் நின்றிருந்த  விஜய்யை தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓட பார்த்தாள் .

அவள் திடீரென்று எழுந்து  ஏதோ உளறி விட்டு ஓடுவதை பார்த்தவன் “என்ன ஆச்சு இவளுக்கு ஏன் சம்பந்தமில்லாமல் பேசுறா” என்று அங்கிருந்து ஓட போனவளின் கையை பிடித்து இழுத்தான் .

தன்னை ஓட விடாமல் பிடித்துக் கொண்டதை கண்டு அதிர்ந்த இனியாவின் உடல் பயந்து நடுங்கியது . தன்னைப் பிடித்திருந்தவன் கைப்பிடிக்குள் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள இனியா போராட .. “ஏய்  ஒழுங்கா நிக்க போறியா? இல்லையா? இப்போ எதுக்கு  ஓடுற ..”  என்று விஜய்யின் அதட்டலான சத்தம் மது அருந்ததில்  சற்று குளறலாக கேட்க …

அந்த குரல் அவளை மேலும் பயமுறுத்தி இருந்தது . ” ராகேஷ் தயவு செய்து என்னை விட்டு நான் எங்கேயும் வரல  ப்ளீஸ் என்ன விட்டுடு..  அதான் விஜய் சார் நீ கேட்ட பணத்தை குடுத்துட்டாரே. அப்புறம் எதுக்கு இங்கே வந்த  ப்ளீஸ் தயவு செய்து என்னை விடு ” என்று இனியா கெஞ்ச .

ராகேஷ் என்று  அவன்  பெயர் சொல்லி இனியா கெஞ்சுவதை பார்த்ததும் அவன் நினைத்தது போல  ராகேஷ்  தான் வந்துவிட்டான் என்று  நினைத்த விஜய்  இனியாவின் கையை பிடித்திருந்தவன் அவளை இழுத்து அவள் இடையில் கை கொடுத்து தன்  கை வளைவிற்குள் பிடித்து அணைத்துக் கொண்டவன் .

 இனியா பதட்டப் படாத நான் உன் கூட தான் இருக்கேன். அந்த ராகேஷ் உள்ள வந்துட்டானா அவன் எங்கே ?  நீ அவன பார்த்தியா?அவன் நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டானா?” என்று கேட்டவன் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தவன் .

“சொல்லு இனியா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாம நின்னா என்ன அர்த்தம். இந்த ராகேஷ் நம்ம வீட்டுக்குள்ள தான் இருக்கானா அவன் எங்கே இருக்கான்” என்றவன் அந்த இருட்டில் கண்களை நன்கு மூடி திறந்து  ராகேஷ்  எங்கும் மறைந்திருக்கிறானா என தேட ஆரம்பித்திருந்தான் .

விஜய்யின் குரல் தன் அருகில் தெளிவாக கேட்டதும் அப்போதுதான் இனியா உணர்ந்தாள் அவனைத் தான் இருட்டில் ராகேஷ் என்று தப்பாக நினைத்து விட்டதை புரிந்து கொண்டவள்.

“சார் நீங்களா !! நீங்கதான் என் பக்கத்துல கொஞ்ச நேரம் முன்னே நின்னுட்டு இருந்தீர்களா ?”  என்றாள்.

“ஆமா இனியா அதை எதுக்கு இப்போ கேட்டுட்டு இருக்க முதலில் அந்த ராகேஷ் எங்கேன்னு சொல்லு” என்றான் அவளை மேலும் இடையோடு இருக்கி அணைத்து தன்னிடம் இருந்து பிரியாமல் பிடித்துக் கொண்டு  .

அவன் அழுத்தியதில் இனியாவிற்கு ஒரு பக்கம் கூச்சமும் மற்றொரு பக்கம் வலியும் ஏற்பட …

” சார்  ஒரு நிமிஷம் இருங்க …”  என்று தன் இடையில் இருந்த விஜய்யின் கையை பிரிக்கப் போனாள்.

“இனியா பேசாம நில்லு இந்த இருட்டுல நீ எங்கும்  தனியா போயிட்டா அந்த ராகேஷுக்கு உன்னை தூக்கிட்டு போக சௌகரியமாக போய்விடும் அவன சுட்டுக் கொல்லாம உன்ன நான் விடப்போறதில்ல என்றான்  அவளை விடாமல் இருக்க அணைத்து.

அவள் அணிந்திருந்த பனியனை தாண்டி அவள் இடையில் விஜய்யின் கைகள்  அழுத்தி இருக்க …  இவனிடம் தான் தவறாக புரிந்து கொண்டதை எப்படி சொல்லி புரிய வைத்தது என்று விழித்தவள்.

“சார் தயவு செய்து  என்ன விடுங்க இங்கே ராகேஷ் வரல …  இருட்டுல உங்கள திடீர்னு பார்த்ததும் நான் ராகேஷ்னு தப்பா நினைச்சுட்டேன். நான் உங்களை பார்த்து தான்  பயந்துட்டேன்”  என்றாள் .

“என்ன சொல்ற இனியா  எனக்கு புரியல” என்று போதையில் தடுமாறியபடியே விஜய் பேச..

அவன் மூச்சுக்காற்று அவள் ஒரு முகத்திலும் கழுத்திலும் சூடாக தொடர  அதில் கூச்சத்தில் நெளிந்தவள் விஜய்யின் கையை பிரித்துவிட்டு வேகமாக இருட்டில் ஸ்விட்சை ஆன் செய்ய சென்றாள் .

அப்போது இருட்டில் குறுக்கே இருந்த டேபிளை கவனிக்காமல்  அதன் மீது பலமாக  மோதிக்கொண்டாள் . அவள் வலது கால் முட்டியில் பலமாக  அடித்து விட வலியில் அம்மா!!.. என்று அலறியபடி தரையில் விழுந்தாள் .

இனியாவின்  அலறல் சத்தம் கேட்டு  ராகேஷ் தான் அவளை பிடித்து விட்டான்  என்று நினைத்த விஜய் . “டேய் ராகேஷ் எங்கடா இருக்க இனியாவ என்ன பண்ணின” என்று கேட்டுக்கொண்டே  நடந்தவன்  அவனுக்கு கீழே தரையில் விழுந்து கிடந்த   இனியாவின் மீது கால் தடுக்கி அவள் மேல் விழுந்தான்.

அவள் களில் விழுந்து வேகத்தில் இனியாவின் உதடும் விஜய்யின் உதடும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது . இதை இனியா சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள் ஏற்கனவே வலியில் துடித்துக் கொண்டு இருக்க… இப்போது விஜய் வேறு அவள் மேல் விழுந்து அவள்  இதழில்  முத்தமிடவும் . அவள் நிலை பரிதாபமானது .

ஏதோ ஒரு மென்மையான ஒன்றின் மீது தன் உதடு மோதுவதை உணர்ந்த விஜய் அந்த இருட்டில்  தனக்கு கீழே இனியா இருப்பதை மறந்து அந்த மென்மையான உதடுகளில்  முத்தமிட ஆரம்பித்தான் .

இனியா  இதை  சற்றும் எதிர்பார்க்கவில்லை . வாயை திறந்து தன்னிலையை எடுத்துச் சொல்ல முடியாதபடிக்கு விஜய் உதட்டை முழுவதும் தன்  உதட்டுக்குள் சிறை  செய்து இருந்தான் .

ஒரு பக்கம் அடிபட்ட கால் வேறு விண்வென்று வலி ஏற்பட மறுபக்கம் விஜய் அவர்களின் அழுத்திக்கொண்டு படுத்திருப்பதும் அவளை முத்தமிடுவதும் இனியாவை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியது .

ஏற்கனவே தாமரை பற்றிய சிந்தனையில்  உலண்டு கொண்டு இருந்த விஜய் . இப்போது அவனுக்கு கீழே இருந்த பெண்மையின் அருகாமை  அவன் காயம் பட்ட இதயத்திற்கு ஏதோ ஆறுதலை அளிப்பது போல உணர்ந்தவன் .  அவன் ஏற்பட்ட மாற்றங்கள்   படுத்திருந்த இனியாவின் மென்மையும் , பெண்மையும் அவனை அவளை எடுத்துக் கொள்ள தூண்டியது. அவள் அருகாமை அவன் உணர்ச்சிகளை அதிகப்படுத்தி இருக்க … போதையின் உச்சியில் இருந்தவன் . அடுத்து என்ன செய்கிறோம் என்று புரியாமல் தனக்கு கீழே இருந்த  இனியாவை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured