News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு 2.11

by Sinamika Writes
576 views
A+A-
Reset

EPISODE 11

“என்ன காந்தள் இது நிஜமாவே உனக்கும் இந்த தம்பிக்கும் கல்யாணம் ஆகிடுச்சா!!.. எப்படி உன்னால இந்த மாதிரி காரியத்தை எங்க கிட்டே சொல்லாம செய்ய மனசு வந்தது. உனக்காக உறவுன்னு சொல்லிக்க நானும் உன் ஆதியும் இருக்கோம்னு தெரியுமா ? இல்லையா ?” என்றார் சித்ரா கோபமாக .

“அம்மா !! …” என்று கண்களில் கண்ணீரோடு காந்தள் அவர் முன்பு வாசலுக்கு வெளியே நின்று இருக்க…

” அம்மா… அந்த நினைப்பு இருந்திருந்தா நீ இப்படி ஒரு காரியத்தை செய்துட்டு இவ்ளோ தைரியமா எங்க கண்ணு முன்னாடி வந்து நின்னு இருக்க மாட்டே…” என்றார் கோபமாக ..

காந்தள் கழுத்தில் புதிதாக தொங்கிய மஞ்சள் கயிற்றை பார்த்ததும் சித்ராவிற்கும், பத்மாவிற்கும் பேச்சே எழவில்லை . நேற்று இரவு வரை ஆஃபிஸில் வேலை என்று இருந்தவள் இப்பொது கழுத்தில் தாலியுடன் அவள் திருமணம் செய்தவனுடன் வந்து நின்றதை பார்த்து இருவருக்குமே என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை .

சித்ரா தான் கோபம் கொண்டு காந்தளை திட்டினார் . அவள் அருகில் நின்று இருந்த மாறனை எதுவும் சொல்லவில்லை. அவனை மதியின் பிறந்தநாள் விழா அன்று காந்தள் கீழே தவறி விழ இருந்த வேளையில் அவளை விழாமல் பிடித்து நிறுத்தியதால் அவனை இருவரும் பார்த்திருக்கிறார்கள் . அனால் அவன் தான் காந்தள் வேலையில் செய்யும் சில்வர் லைன் ஸ்டுடியோவின் சிஇஓ என்று தெரியாது ‘

“அம்மா நா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க… நானும்.. இவரும்… “என்று  அவள் அடுத்து பேச தயங்கியபடி அவளை இப்படி திடீர் என்று திருமணம் செய்து கொண்டு தன் அம்மாவின் முன்பு நிற்க வைத்தவனை தனக்கு அவன் எதுவும் உதவுவான் என்று திரும்பி பார்த்தாள். ஆனால் அவனோ எனக்கு என்ன என்பது போல நின்று இருந்தான் .

நியாயமாக காந்தள் அம்மாவிடம் தானே பேசி புரியவைத்து அவர்கள் இருவரின் திருமணத்தையும், அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ள சொல்லி சமாதானம் செய்யலாம் என்று தான் நினைத்து இருந்தான். 

ஆனால் காலையில் காந்தள் மாறனிடம் அவனுக்கும், காந்தளுக்கும் திருமணம் ஆன விஷயம் இப்போதைக்கு இவர்கள் இருவரின் குடும்ப ஆட்களுக்கும் சில நெருங்கியவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் . காந்தள் மாறனின் ஆஃபீஸிற்கு எப்போதும் போல அவள் வீட்டில் இருந்து வருவதாக கூறுவதை கேட்டதும் மாறனுக்கு கோபம் தலைக்கு மேலே ஏறிவிட்டது. அதனால் தான் அவளிடம் கோபித்துக்கொண்டு அவன் அறையை விட்டு வெளியே சென்றான் .

சிறிது நேரம் கழித்து மாறன் மீண்டும் வந்து காந்தலிடம் சமாதானம் பேச முயல அனால் அவளோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துவிட்டாள் . அதனால் தான் அவளுக்கு ஆதாரமாக பேசாமல் அவள் அம்மா காந்தளை திட்டுவதை யாரோ போல நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்.

சித்ரா உட்சபட்ச கோபத்தில் இருக்க… காந்தளோ செய்வதறியாது நின்று இருந்தவள். தன் அத்தை பத்மாவை பார்த்தாள். ஆனால் அவரோ எதுவும் பேசாமல்

வேகமாக காந்தலிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கோபத்தோடு வீட்டிற்குள் சென்றுவிட செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு நின்று இருந்தாள் .

சரியாக அந்த நேரம் பார்த்து ப்ரியாவும், முகுந்தும் காந்தளின் அப்பார்ட்மெண்டிற்கு வந்தவர்கள் அவங்க வாசலில் கைகளை பிசைந்தபடி சேலை அணிந்த காந்தள் நின்று  இருக்க… அவள் அருகில் பின்னால் நின்று காந்தளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்று இருந்த மாறனையும் அவளோடு சேர்த்து பார்த்தனர்.

ப்ரியா முகுந்திடம் ” காந்தள் பக்கத்துல நிக்குறவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குல்ல டா …” என்றாள் பிரியா .

“ஏய் அவர் தான் சில்வர் லைன் ஸ்டூடியோவுடைய சிஇஓ மிஸ்டர் இளமாறன். நம்ம காந்தள் வேலைக்கு சேர்ந்த புதிதில் தான் இவரும் சிஇஓ பொறுப்பேற்றார் உனக்கு தெரியாதா? ” என்றான்.

“இல்லை டா…. ஆனா…. ” என்று ப்ரியா இழுக்க…

“என்ன டி… ஆனா… ஆவனான்னு சொல்லிக்கிட்டு இருக்க… வா அங்க பொய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் ” என்று ப்ரியாவின் கைபிடித்து காந்தலிடம் அழைத்து சென்றவன் அங்கே அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு நின்று இருப்பதாய் பார்த்து  இருவரும் ஸ்தம்பித்து போயினர்.

ப்ரியாவும் காந்தள் மார்பை உரசிக்கொண்டு மின்னிக்கொண்டு இருந்த பொன் தாலியை பார்த்ததும் வாயை பிளந்தவள் . ” ஏய் காந்தள் !! என்ன டி இது … நீ… நீ… கல்யாணம் செய்துகிட்டியா? யாரு டி மாப்பிள்ளை ” என்று காந்தள் பின்னால் நின்று இருந்த மாறனை பார்த்த படி கேட்டாள் .

ப்ரியாவை கண்டதும் சற்று நிம்மதி அடைந்தவள் அவள் கைகளை பிடித்துக்கொண்டு “பிரியா ! இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் ” என்று மாறனை ப்ரியாவிற்கும், முகுந்திற்கும்  அறிமுகம் செய்து வைத்தாள்.

“என்ன டி சொல்ற!! இவரை கல்யாணம் செய்துகிட்டியா? அப்போ… அப்போ … அந்த மதியை நேத்து வர காதலிச்சிட்டு இருந்தே… அவன் கூட ரெண்டு நாள் முன்ன தாண்டி பிரேக் அப் ஆச்சு… ஆனா நீ என்ன டி அதுக்குள்ள கல்யாணம் செய்துட்டு வந்து நிக்குற… அதுவும் இவரை… எப்படி டி.. இது எல்லாம் ” என்று ஏற்கனவே காந்தள் இப்படி ஒரு காரியத்தை செய்து வந்ததை நம்ப  முடியாமல் அதிரிச்சியில் இருந்த சித்ராவிற்கு ப்ரியா காந்தளிடம் கேட்ட கேள்விகளை எல்லாம் கேட்டதும் ஏற்கனவே இருந்த கோபம் பன்மடங்கானது .

இப்படி நிலைமை புரியாமல் தன்னை தன் அம்மாவிடம் மாறிவிட்ட ப்ரியாவை என்ன செய்வது என்பது போல முறைத்துப்பார்த்தாள் காந்தள். அவள் பார்வையில் இருந்த கோபத்தை கண்டு ப்ரியா அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தவள் அவள் பக்கத்தில் நின்று இருந்த மாறனை அசடு வழிய பார்த்தாள் …

காந்தள் எப்படி கோபத்தோடு ப்ரியாவை பார்த்துக்கொண்டு இருந்தாளோ அதே போல தான் ப்ரியாவின் மீது கோபப்பார்வை வீசியபடி இறுகிய முகத்தோடு நின்று இருந்தான் மாறன் . காரணம் ப்ரியா பேசிய பேச்சு  தான் தன்னை போய் திருமணம் செய்து வந்திருக்கிறாள் என்று காந்தளை ப்ரியா கேட்ட கேள்வி தான் அவனது கோபத்திற்கு ஆளானது .

அப்போது கோபமாக உள்ளே சென்று இருந்த பத்மா கையில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தவர் அங்கே ப்ரியா நிடன்று இருந்ததை பார்த்ததும் “அடடே வா ப்ரியா நல்ல வேலை நீ வந்துட்டே, யாரை வெச்சு இவங்க ரெண்டு பெருகும் ஆரத்தி எடுக்குறதுன்னு தெரியாம இருந்தேன். வா… வந்து இவங்க ரெண்டு பெருகும் ஆரத்தி எடு…” என்று அவள் கையில் ஆரத்தி தட்டை நீட்ட… அதை ப்ரியா வாங்கிகொண்டாள் .

பத்மா கோபம் தணிந்து தங்கள் இருவரையும் ஏற்றுக்கொண்டதை நினைத்து காந்தள் சந்தோசம் அடைந்தவள் கண்களில் கண்ணீரோடு பத்மாவை பார்க்க… “என்ன அம்மு இது சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி கண்ணை கசக்கிட்டு நிக்குற… முதல்ல கண்ணை தொடச்சிட்டு உன் புருஷன் கூட சேர்ந்து நில்லு ” என்று அவளை மாறனை நோக்கி தள்ளி விட்டார்.

அவர் தள்ளிய வேகத்தில் காந்தள் விழுவது போல மாறன் மீது மோதி நிற்க… “ஏய் அம்மு பார்த்து விழுந்துடாதே… ” என்று தாய் பாசத்தோடு சித்ராவும் அவளிடம் இறுக்கம் தளர்ந்து பேச.. காந்தள் அவள் அம்மாவை பாசத்தோடு பார்த்தவள் “என்னை மன்னிச்சுடு மா… ” என்றாள் கண்ணீரோடு .

‘இப்போதானே பத்மா அழகூடாதுனு சொன்னா… கண்ணை துடை ” என்றவர் ப்ரியாவை ஆரத்தி எடுக்க சொன்னார்.

ப்ரியா கையில் ஆர்த்தி தட்டுடன் மாறனை பார்க்க பயந்து கொண்டு அவர்கள் முன்பு வந்தவள் கைகள் நடுங்க ஆரத்தி சுற்றி காந்தள்  நெற்றியில் பொடித்துவிட்டு மாறனை நோக்கி கையை நடுங்கியபடியே கொண்டு சென்றாள். மாறன் இன்னமும் அவளை முரைத்த வண்ணம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்று இருக்க… கைகள் விரல் நடுங்க மாறன் நெற்றிக்கு கால்களை எம்பி கையை கொண்டு சென்றவள் ஒருவழியாக அந்த நெடுமர மாறனுக்கு நெற்றியில் போட்டு வைத்தாள் .

“ப்ரியா அந்த ஆரத்தி தட்டை கொடு ” என்று சித்ரா அதை கையில் வாங்கிக்கொண்டு “நீ மாப்பிள்ளையும் காந்தலைலயும் உள்ளே கூட்டிட்டு போ… நான் பொய் இதை வாசலில் ஊத்திட்டு வரேன் “:; என்று அவர் சென்றுவிட…

பத்மா காந்தளையும், மாறனையும் அலைத்தட்டுக்கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

உள்ளே வந்து அவர்கள் நால்வரையும் சோபாவில் அமரச்செய்துவிட்டு உள்ளே கிச்சனுக்கு பத்மா சென்றுவிட… ஹாலில் நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

நிலைமையை சீர்செய்ய நினைத்த முகுந்தன் ப்ரியாவின் கையை பிடித்த்து இழுத்து தன் பக்கம் நிறுத்தியவன் மாறனிடம் வந்து ” ஹலோ ஐயம் முகுந்தன் . இவ ப்ரியா காந்தாளோட பிரெண்ட்ஸ் நாங்க ரெண்டு பெரும் ” என்று தன கையை மாறன் முன்பு நீட்டி அறிமுகம் செய்துவைத்தான்.

மாறனும் ப்ரியாவை வேண்டுமளவுக்கு முறைத்துவிட்டு முகுந்திடம் திரும்பி ” ஹலோ… முகுந்த் . எனக்கு உங்க ரெண்டு பேரையும் தெரியும்” என்றான்.

மாறன் சொன்னதை கேட்டு முகுந்த் அதிர்ச்சியாகவில்லை . இளமாறன் எவ்வளவு பெரிய ஆள். அவன் காந்தளை திருமணம் செய்திருக்கிறான் என்றால் கண்டிப்பாக காந்தளை சேர்ந்த அனைவரையும் அவனுக்கு தெரிந்து இருக்க வேண்டும்  என்று யூகித்து இருந்தான் .

“நீங்க , காந்தள் அப்பறோம் மிஸ் பிரியா மூணு பேரும் திக்கெஸ்ட் பிரெண்ட்ஸ் . school டேய்ஸில் இருந்து நீங்க மூணு பேரும் கிளோஸ்ன்னு எனக்கு தெறியும் ” என்றான் மாறன் .

அதை கேட்ட ப்ரியா “அப்போ உங்களுக்கு காந்தளை ரொம்ப வருசமா தெரியுமா ? ” என்று முந்திக்கொண்டு மாறனிடம் கேட்டாள்.

அவளை மாறன் திரும்பி பார்க்க… ஈ…. என்று பல்லைக் காட்டிவிட்டு ” ஹலோ சார் , nice to meet you” என்று கை நீட்டினாள்.

“ஹலோ… மிஸ் ப்ரியா ” என்று அவள் கையை பிடித்தவன் “நீங்க மூணு பேரும் படிச்ச காலேஜ் என் தாத்தாவோடது தான் . அங்கே காலேஜ் கணக்கு வழக்கு பார்க்க நான் வந்த போது உங்க மூணு பேரையும் பார்த்திருக்கேன் ” என்று ஒரு முக்கிய அதிர்ச்சியை அங்கே முன்வைத்து இருக்க…

காந்தள் முதற்கொண்டு மற்ற இருவருக்கும் அதிர்ச்சிதான் “அப்போ மாறனுக்கு நான்  காலேஜ் படிக்கும்போது இருந்தே தெறியுமா ?” என்று அவனை பார்க்க… மாறனும் புருவம் உயர்த்தி காந்தளை பார்த்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.