News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு-14

by Sinamika Writes
420 views
A+A-
Reset

EPISODE -14

பார்ட்டி முடித்துவிட்டு வந்த பிறகு மறுநாள் காலை படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் பொழுது மிகவும் பிரெஷ் ஆக உணர்ந்தாள் காந்தள் .

எழுந்ததும் அவள் நினைவில் முதலில் தோன்றியது மதி தான்.

நேற்று இரவு பார்ட்டியை விட்டு மதி, காந்தள் இருவரும் கிளம்பி கைகள் கோர்த்த படி அமைதியாக நடந்து சென்றனர்.

 தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்ட பிறகு இருவருக்கும் இடையில் என்ன பேசுவது என்று தோன்றவில்லை அமைதியாகவே இருவரும் ரயில் நிலையம் வரை வந்து சேர்ந்தனர்.

 ஸ்டேஷனில் ரயிலுக்காக இருவரும் காத்திருக்க அந்த இரவு வேளையில் காந்தளுக்கு குளிர் எடுக்கவே அதை கவனித்த மதி அவளை தன் கை வளைவிற்குள் இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து நிற்க வைத்துக் கொண்டான். 

 அவனின் இந்த செயலை சிறிதும் எதிர்பார்த்திடாதவளுக்கு  உள்ளுக்குள் ஒருவித பரவசம் உண்டாகி  அவன் பால் ஈர்க்கச் செய்தது அவளை உணர்வுகளை .

 அவன் கைவளைவிற்குள் இருந்து பிரிந்து நிற்க காந்தளுக்கு தோன்றவில்லை.

அவளின் இந்த அமைதியும் சம்மதமும் மதிக்கு  சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

 தன் தோளோடு சாய்த்துக் கொண்டு அங்கிருந்த பயணிகள் அமரும் மேடையில் அமர்ந்தவன். ரயில் வரும் வரை மற்றொரு கையை அவள் கையோடு கோர்த்தபடி அவர் தலை மீது தன் தலையில் சாய்த்து அமர்ந்திருந்தான்.

 இருவருக்கும் இடையே மௌனம் மட்டும் தான் நிலவியது. சாதாரண நாட்களாக முன்பு போல் இருவரும் பேசி பழகி இருந்தால் .  இந்த நேரம் இருவரும் வாய் ஓயாமல் அரட்டை அடித்துக் கொண்டு இந்த வழியே போவோர்  வருவோரை எல்லாம் தங்களை திரும்பிப் பார்க்கும்படி பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் இன்று  அவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை போல அவ்வளவு அமைதியாக இருவரும் அமர்ந்திருந்தனர்.

 ”காந்தள்” என்று முதலில் அந்த அமைதியை கலைத்தான் மதி.

அவன் அழைப்பில் அவன் தோள்களில் சாய்ந்தவாரே நிமிர்ந்து பார்த்தாள் காந்தள்.

 ”நான் நினைச்சது போல தான் நீயும் என்னை ….உனக்கு என்னை எப்படி பிடிச்சது” என்று கேட்டான் .

அவனை பார்த்து மென்மையாக சிரித்து “உனக்கு என்னை எப்படி பிடிச்சது” என்று அவன் கேட்ட கேள்வியையே திருப்பி கேட்டாள் 

“நான் உன்னை எப்போ ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணனும் அப்பவே எனக்கு உன்ன பிடிச்சது” என்றான் மதி .

“எப்போ…” என யோசித்தவள். “அந்த நோட்டீஸ் போர்டு பக்கத்தில் என்கிட்ட ஃபர்ஸ்ட் டைம் பேசலையே அப்போ வா” என கேட்டாள் காந்தள் .

இல்லை என்று மதி தலையை ஆட்ட …

“நீயும் நானும் ஃபர்ஸ்ட் டைம் அப்போ தானே மீட் பண்ணும் அதுக்கு முன்னாடி நான் உன்னை பார்த்த மாதிரி ஞாபகமே இல்லையே” என்றாள் காந்தள் .

“ஃபர்ஸ்ட் டே ஒர்க்கு டிரெயின்ல உன் கூட தான் உனக்கு எதிரில் இருக்கிற சீட்ல நான் இருந்தேன். நீ என்ன கவனிக்கல ஆனா நான் உன்ன ட்ரெயின் ஏறினதுல இருந்து பாத்துட்டு தான் இருந்தேன்” என்று அவளை முதன் முதலில் சந்தித்ததை பற்றி மதி கூற…

“என்ன சொல்ற நீ எனக்கு எதிர்ல தான் இருந்தியா!! நான் உன்னை கவனிக்கவே இல்லையே… உன்ன நான் பார்த்த மாதிரி ஞாபகம் கூட இல்லை” என்றாள் காந்தள் ஆச்சரியமாக .

மதி சீட்டுக்கொண்டே அவள் ஆச்சரியமாக கேட்கும்போது விழி விரித்து தன்னை பார்ப்பதை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் .

இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் செல்ல இருந்த ட்ரெயின் வந்துவிட அதில் ஏறி தங்கள் இருப்பிடம் வந்து அடைந்தனர் .

எப்போதும் காந்தள் இறங்குவதற்கு முன்பாகவே மதி இறங்கி விடுவது வழக்கம் ஆனால் இன்று தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தும் இறங்காமல் காந்தளை அவள் அறை வரை கொண்டுவந்து விட்ட பிறகு தான் திரும்பி செல்வதாக பிடிவாதமாக மதி கூறி விட அதற்கு மேல் அவனை வற்புறுத்த காந்தளும் விரும்பவில்லை. இருவரும் கைகோர்த்தபடி மிகவும் நெருக்கமாக காதல் பாசைகளை கண்களால் பரிமாறிக் கொண்டனர் .

அவள் வீடு வரை கைகோர்த்து காந்தளுடன் வந்தான் மதி.

அவளை கோர்த்திருந்த கைகளை விடாமல் பிடித்திருந்த மதி “ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து உன்னோட ரூம் எவ்வளவு சீக்கிரத்துல வரணும் நான் எதிர்பாக்கல இன்னும் கொஞ்ச நேரம் உன் கூட நேரம் செலவழிக்கலாம் என்று நினைத்தேன். ஆனா முடியாம போயிடுச்சு” என்றால் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த காந்தள் “கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நீயும் நானும் ஒண்ணா நடந்தே வந்திருக்கிறோம் . ஆனா நீ என்னவோ சீக்கிரம் வந்துட்டதா சொல்ற எனக்கு அப்படி தெரியலையே” என்று சிரித்தாள் .

“ப்ச்… உனக்கு என் மேல அக்கறையே இல்லை என்னை விட்டு பிரியுறோம்னு வருத்தம் இருந்திருந்தால் இதெல்லாம் உனக்கு புரியும்” என்று அவள் மீது குற்றம் சுமத்தினான் .

அவன் சொன்னதை கேட்டு சிரித்தவள் கடைசில “நான் குற்றவாளி ஆகிட்டேன்” என்றாள் .

“கொஞ்ச நேரம் பேசிட்டு போலாமே” என்றான் மதி அவளை விடாமல் .

“மதி ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு இனிமேல் நீ கெளம்பி உங்க வீட்டுக்கு போகணும்னு ஞாபகம் இருக்கா? இல்லையா? அதுவும் இல்லாம என் பிரண்டு இந்நேரம் ரூமுக்கு வந்திருப்பா. நான் லேட்டா போனா என்ன காணோம்னு போன் பண்ணிடுவா அவ”என காந்தள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பிரியாவிடம் இருந்து அவளுக்கு போன் வந்தது.

போன் வந்ததும் திரையில் தெரிந்த ப்ரியாவின் பெயரை சுட்டிக்காட்டி “பாருங்க இப்பதானே நான் சொன்னேன் அதுக்குள்ள அவ போன் பண்ணிட்டா” என்று சிரித்தாள் .

“அவங்க உனக்கு பிரண்டு தானே அம்மா இல்லையே அம்மாவுக்கு தான் பயப்படணும் பிரண்டு கிட்ட இல்ல பயம் சொல்ல வேண்டியது தானே நீயும் , நானும் லவ் பண்றோம் கொஞ்ச நேரம் கழிச்சு தான் வருவோம் ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே” என்றான் .

மதி பேசியதை கேட்டு சிரித்தவள் “ஏன் என்னை விட்டுப் போக மனசு இல்லையா என்கூடவே இருக்கணும்னு தோணுதோ என் பிரண்டு இப்பவே திட்றீங்க விட்டா என் கூட யாரும் பேசக்கூடாதுன்னு சொல்லிடுவீங்க போல இருக்கே” என்றாள் .

“உன் கூட யாரும் பேசக்கூடாது நான் மட்டும் தான் பேசணும் நீ என் கூட மட்டும் தான் பேசணும் நம்ம ரெண்டு பேரும் மட்டும் தான் இந்த உலகத்துல இருக்கோம் வேற யாரும் வேண்டாம் நமக்கு” என்றான் .

தன் மீது இவ்வளவு பொசிஷிவாக இருக்கும் மதியை பார்த்து அவளுக்கு சந்தோஷமாக இருந்தது .

அவனையே காந்தள் பார்த்துக் கொண்டிருக்க … அவள் பார்வையின் ஆழத்தை ஊடுருவியது மதியின் பார்வையும் . மெல்ல அவள் கைப்பிடித்து காந்தள் அருகே நெருங்கி வந்தான் . மதி அருகில் நெருங்கி வரவும் காந்தளுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது படபடப்பாக தோன்ற மதியின் இந்த நெருக்கம் அவளுக்கு உடலில் சூடேற்றி விட அவள் முகம் வியர்த்து கொட்டியது.

தனக்கு மிக அருகில் நின்றிருந்த மதிமாறனை லேசாக நிமிர்ந்து காந்தள் பார்க்க அவள் அவள் தாடையை தன் ஒற்றை விரலால் பற்றி மேலும் தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன் . அவள் கண்கள் இரண்டையும் ஆழமாக பார்த்ததும் அவள் கண்களை பார்த்துக் கொண்டே குனிந்து அவள் இதழில் மெல்ல தன் இதழை ஒத்தி எடுத்தான் .

அவன் தந்த மென்மையான இந்த முத்தத்தை கண்கள் மூடி காந்தள் தனக்குள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே அவன் தந்த முத்தத்தை ரசித்தாள் . அவள் கண்கள் மூடி நின்று இருக்க அவை எதில் விட்டு பிரிந்து நின்ற மதிமாறன் கார்களின் நெற்றியில் முத்தம் வைத்து அவளை விட்டு பிரிந்து நின்றவன் சரி நீ போ உன் பிரண்டு திரும்ப போன் பண்ண போறாங்க என்றான் .

காந்தளுக்கு மதிமாறனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை அவன் முத்தம் கொடுத்ததும் அவள் முகம் முழுவதும் சிவந்திருக்க அவனை நேருக்கு நேராக பார்க்க அவள் கூச்சப்பட்டு கொண்டே சரி என்று வேகமாக தலையாட்டியவள் திரும்பி தன் ரூமிற்கு செல்ல போக …

அவள் கை பிடித்து மதிமாறன் இழுக்க அவன் இழுத்த வேகத்தில் மதியின் மார்பில் மோதி நின்ற மங்கை மயக்கும் விழிகளில் அவனைப் பார்க்க… காலையில சீக்கிரமா ஆபீஸ் கிளம்பி வந்துடு. என்ன ரொம்ப நேரம் காக்க வைக்காத உன்ன பாக்காம என்னால இருக்க முடியாது என்று தன் உணர்வுகளை மறைக்காமல் அவளிடம் வெளிப்படுத்தினான்.

வெட்கம் கலந்த புன்னகையை அவனுக்கு பதிலாக தந்து விட்டு அவனை விட்டு வேகமாக விலகியவள் தன் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்க்குள் ஓடிவிட்டாள்

அவள் உள்ளே செல்லும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினான் .

இரவு நடந்ததை எல்லாம் நினைத்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவளை குளித்துவிட்டு வெளியே வந்த ஃப்ரியா பார்த்தவள் “என்னடி நேற்று நடந்ததெல்லாம் நினைச்சு பீல் பண்ணிக்கிட்டு இருக்கியா?” என்று கேட்டாள் .

“ஆமாம் “ என்று காந்தள் சிரிக்க …

“பார்த்து டி உன்கிட்ட லவ்வர் ப்ரொபோஸ் பண்ணினேன் முதல் நாளே கிஸ் பண்ணி இருக்கேன் சீக்கிரத்திலேயே அடுத்த ஸ்டேஜ்க்கு ஒன்னு எடுத்துட்டு போயிட போறாங்க கொஞ்ச நாளைக்கு லவ் பண்ணுங்க அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கோங்க” என்று பிரியா அவளுக்கு பெரிய மனசு போல அட்வைஸ் செய்ய .

“உன்னை யாருடி நான் வரேனா இல்லையான்னு ஜன்னல் வழியா எட்டி பார்க்க சொன்னது நானும் மதியும் கிஸ் பண்றத வேற பார்த்து தொலைச்சிட்டா பார்க்கவே எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு” என்றால் காந்தல் பிரியாவை பார்க்காமல் .

“இது என்ன டி… உன்ன காணமே லேட் ஆயிடுச்சுன்னு அக்கறையுடன் உனக்கு போன் பண்ணினேன். ஆனால் வெளியே உன்னோட போன் சத்தம் கேட்டு தானே நான் ஜன்னல் வழியா எட்டி பார்த்தேன். அப்ப நீ அந்த மதிப்பு கூட நெளிஞ்சுகிட்டே நின்னு பேசிகிட்டு இருக்கிறது பார்த்ததும் வித்தியாசமா தோணுச்சு”

“ அதான் இரண்டு பேரும் என்ன பண்றீங்கன்னு பார்த்துட்டு இருந்தேன் அவன் என்னடான்னா சட்டுனு உனக்கு முத்தம் கொடுப்பார் என்று நான் என்ன கனவா கண்டேன் வேணும்னே அவன் எப்படா உனக்கு முத்தம் கொடுப்பான் நான் பாக்கணும்னு எதிர்பாத்துட்டு இந்த மாதிரி இல்ல என்ன சொல்ற” என்று பிரியா அவளை கடிந்து கொண்டாள் 

“சரி சரி அதையே பேசிக்கிட்டு இருக்காத நகர் எனக்கு ஆபீசுக்கு டைம் ஆயிடுச்சு” என்று பரபரப்பாக எழுந்து காந்தள் குளிக்க கிளம்பினாள். காந்தள் குளித்து வருவதற்குள் பிரியா தன் ஆபிஸிற்கு ரெடியாகிவிட . காந்தள் வந்ததும் அவளிடம் சொல்லிவிட்டு ஆபிஸிற்கு கிளம்பினாள் .

மதிமாறனை பார்ப்பதற்காக அவசர அவசரமாக ஆபீஸிற்கு கிளம்பினாள் காந்தள் . இருவரும் டிரெயினில் ஒன்றாக சந்தித்து ஒன்றாகவே சில்வர் லைன் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்ந்தனர் 

ஆபீஸ் வரும் வரை அவளோடு ஒன்றாக வந்தவள் அங்கே வந்ததும் அவனுக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லாதது போல இருவரும் தனித்தனியே அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர் . அக்கவுண்டில் இருந்த பணத்தை இளன் கொடுத்த பணத்தை அக்கவுண்டில் இருந்து எடுத்து கையில் வைத்திருந்தவள் அதை அவளிடம் கொடுப்பதற்காக இளன் இருந்த அவனுடைய தளத்திற்கு சென்றாள் .

அவனுடைய ஆபீஸ் அசிஸ்டன்ட் உடன் தன் வந்திருக்கும் செய்தியை இளனிடம் தெரிவிக்க சொல்லி பதிலுக்காக காத்திருந்தாள் . அந்தப் பெண் உள்ளே சென்று இளனிடம் காந்தளை பற்றி விபரம் சொல்ல .. நேற்று பார்ட்டியில் காந்தள் நடந்து கொண்ட விதத்தை நினைத்து ஏற்கனவே கோபத்தில் இருந்த இளன் அவள் தன்னை பார்க்க இங்கேயே வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அவன் கோபம் தனித்தவனாக அவளை பார்க்கும் ஆர்வத்தில் உள்ளே வரச்சொல்லி தனது பி ஏ வை அனுப்பி விட்டான்

காந்தளிடம் வந்து இளனின் பிஏ அவளை உள்ளே அனுப்பி வைக்க .. கையில் இருந்த பண கவரை இறுக்கமாக பற்றி கொண்ட காந்தல் கண்கள் மூடி நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டவள் அவன் அறைக் கதவை திறந்து கொண்டு உன்னை சென்றாள் .

காந்தல் இளனின் கதவை தட்டி விட்டு உள்ளே செல்லவும் அவள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் கதவு சாத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.