News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு 2.3

by Sinamika Writes
823 views
A+A-
Reset

EPISODE 3

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அங்கிருந்த அனைவர்க்கும் மகிழ்ச்சியே.. இரு டீமின் தலைவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு தலையாட்ட…

“ஓகே …” என்றவன் எழுந்து அங்கிருந்து செல்ல…

இவ்வளவு நேரம் இங்கு பேசிக்கொண்டிருந்ததை கேட்ட காந்தள் .

“ச்சே… இந்த ரெண்டு டீமில் எதாவது ஒரு டீமில் நான் வேலையில் பார்த்து இருந்தாலும் நானும் அந்த டீம் கூட சேர்ந்து வேலை பார்த்து அந்த டீம்மை  ஜெயிக்க வெச்சு ஸ்விட்சர்லாந்து போயிருப்பேன்… ம்ஹும்… இவனுக்கு பியேவா இருந்துட்டு இவன்  போற பக்கம் எல்லாம் இந்த பைலை தூக்கிகிட்டு சுத்துற வேலை தான் எனக்கு…” என்று சலித்துக்கொண்டே இளமாறன் பின்னால் அவன் கேபினுக்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்த மறுநொடி இளமாறன் கேபின் கதவு சாற்றப்பட… உள்ளே வந்தவள் இளமாறன்  அறையில் அவன் இருக்கையில் இல்லாதது கண்டு “இப்போதான் உள்ளே வந்தான் அதுக்குள்ள எங்கே போயிருப்பான்” என்று யோசித்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தாள்.

அப்போது ஒரு காய் அவள் இடையில் சுற்றி அவளை சுவற்றோடு தள்ளி அழுத்தி நிற்க வைத்தாது “உன்னை உரசிட்டே இருக்கணும்னு தான் எனக்கு ஆசை … அங்க சரியா உன்னை உரச முடியலை “என்றவன்.

அவள் உடலில் தன் உடலை அழுத்திக்கொண்டு நின்றவன் தன் கையை அவள் உடலை உரசிக்கொண்டே மேலே நோக்கி கொண்டு வந்தான்.

அதில் ஷாக் ஆன காந்தள் ” ஐயோ!! நான் பேசினது இவனுக்கு கேட்டிருச்சா!!” என்று அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சியை ரசித்தவன் இடையை தாண்டி உரசிக்கொண்டு சென்ற அவன் கையை அவள் மார்புக்கு அருகில் வந்ததும் விலகிக்கொண்டவன் . நேராக அவள் கன்னத்தில் தன் கையை வைத்து அழுத்தியவன் . “இந்த உடம்பு முழுக்க… எனக்கு சொந்தம் . உன் உடலில் நான் உரசாத இடம் இல்லை … என்னை வேணும் வேணும்னு விடாம எடுத்துகிட்டவ நீதான் . ஆனா இப்போ என்னவோ என்னை பார்த்தாலே வேண்டாதவன் போல இல்ல நீ நடந்துக்குறே ” என்றான்

அவன் சொன்னது கேட்டு அதிர்ந்தவள் “எ.. என்ன சொல்றிங்க!! ” என்றால் புரியாமல் .

” ஏன் எதுவும் தெரியாத மாதிரியே கேக்குறே… நான் என்ன சொன்னேன்னு உனக்கு நல்லாவே புரியுமே… ” என்று அவள் கன்னத்தில் இருந்த தன் கையை அவள் முகத்தை வருடிக்கொண்டே கீழ் நோக்கி கொண்டு வந்தான்.

அவன் தொடுகையும் தீண்டலும் காந்தளுக்கு புரிந்தாலும் அதை தடுக்கும் எண்ணம் அவளுக்கு ஏனோ தோன்றவில்லை . அவள் உடல் அவன் தொடுகையை வேண்டி ஏற்றது போல இருந்தது அவளுக்கு . என்ன இது என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்கையில் அவன் கை அவள் கழுத்தை தாண்டி கீழ் நோக்கி சென்றது.

பெண்ணிற்கே உண்டான எச்சரிக்கை உணர்வு எழுந்து அவனை மேலும் முன்னேற விடாமல் அவன் கையை பிடித்துக்கொண்டவள் “உங்க கிட்டே பியேவா வேலை பார்க்குற என்கிட்டே இப்படி நீங்க  நடந்துக்குறது சரியா சார் ?” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து .

“அது என்னோட பிசினஸ் ரிலேட் ஆஹ் நீ என்கிட்டே வேலை பார்க்கலாம் . ஆனா நீயும் நானும் காதலர்கள் .. அந்த உரிமையில் நான் உன்கிட்டே நெருங்குறது எனக்கு சரின்னு தான் தோணுது ” என்றான்.

“காதலர்களா ? நாம ரெண்டு பேருமா ? நான் எப்போ உங்களை காதல்லிக்குறேன்னு சொன்னேன் சார் . நான் இவ்ளோ நாலா காதலிச்சது உங்க தம்பியை தான் உங்களை இல்லை ” என்று நக்கலாக சிரித்தபடி அவளைப் பார்த்தான் .

அவள் செய்கையில் கோபம் கொண்டவன் கழுத்தை தாண்டி இருந்த தன் கையை உயர்த்தி அவள் கழுத்தை பிடித்தவன் . “என் தம்பியை நீ இன்னும் உன் மனசுல நினைச்சிட்டு இருக்கியா ? அவன் உன்னை ஏமாத்தினவன் அது உனக்கு நினைவு இருக்கா?” என்றான் கோபமாக.

“அவன் என்னை ஏமாத்தினான் தான் . நான் இல்லையின்னு சொல்லலையையே … ஆனா அவன் என்னை ஏமாத்துறதுக்கு காரணமே நீங்க தானே ” என்றாள் காந்தள் .

அதில் அவன் கோபம் மேலும் அதிகம் ஆக ” என்ன டி.. சொன்னே… ” என்று அவள் கழுத்தை பிடித்து அப்படியே கதவோடு சேர்த்து தூக்கினான் .

அதை எதிர்ப்பார்க்காத காந்தள் அவன் கையை தன் கழுத்தில் இருந்த எடுக்க முயற்சித்துக்கொண்டே…”  பிரெஷர்ஸ் பார்ட்டியில் வெச்சு நான் உங்களை வெண்மைனு சொல்லிட்டு உங்க தம்பியை காதலிச்சேன்னு ஒரே காரணத்துக்காக .இத்தனை நாளும் நீங்க என்னையும், உங்க தம்பியையும் நெருங்க விடாம செய்திருக்கீங்க … மதி என்னை நெருங்கி வர நினைக்குற அப்போ எல்லாம் நீங்க அவனை மிரட்டி என்கிட்டே வர விடாம செய்திருக்கிங்க… அப்படித்தானே ” என்றாள் அவன் அழுத்தியதில் வலி தாங்காமல் சிரமப்பட்டு அவனிடம் பேசிக்கொண்டே .

“நீ அவனை காதலிச்சேங்குற ஒரு காரணத்துக்காக மட்டும் நான் அவனை உன்கிட்டே நெருங்க விடலை . நான் உன்னை நேசிச்சேன் அந்த ஒரு காரணம் அந்த ஒரே காரணம்தான் அவனை உன்கிட்டே நெருங்க விடாம பார்த்துக்கிட்டேன். நான் விரும்பின ஒன்னு.. எனக்கு பிடிச்ச உன்னை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ” என்றான் வீம்பாக .

“நீங்க விரும்பினா போதுமா என் மனசுளையும் நீங்க இருக்க வேண்டாமா ?” என்றாள்  காந்தள் .

“ஏய்… உன்மனசுல நான் தான் டி இருக்கேன்… நான் மட்டும் தான் இருக்கேன். உனக்கு முதல் முறையை மாலில் வைத்து நான் முத்தம் கொடுக்கும்போது உன் உடம்பும் மனசும் , எனக்காக ஏங்கினதை நான் கவனிச்சேன் . அதே போல இன்டெர்வியூ முடிஞ்சு  நீ எனக்காக காத்துட்டு இருந்த போதும் நான் உனக்கு கொடுத்த முத்தத்தை  நீ தடுக்களை .. உன் மனசு என்னை எதிர்பார்த்து காத்திருந்தது . அது எனக்கு நல்லாவே தெரியும் ” என்றான் .

அவன் சொன்னது கேட்டு பதில் பேச முடியாமல் காந்தள் திணற… ” ஏன் ஏதும் பேசாம நிக்ருதா காந்தள் . சொல்லு நான் உனக்கு கொடுத்த முத்தத்தை நீ உன் மனசுக்குள்ள பத்திரமா பூட்டி வெச்சிருக்க.. அதனால் அதன் மதி உன்கிட்டே அடுத்த முறை நெருங்கி வந்து முத்தம் கொடுக்க நினைச்ச அப்போ அவன்கிட்டே இப்போதைக்கு இது வேண்டாம்னு  சொல்லி அவனை உன்கிட்டே இருந்து நீதான் விலகி வெச்சே.. அதுக்கு நான்  கரணம் இல்லையே ” என்றான்.

“அது.. அது… கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி இருக்க கூடாதுனு தான் அவனை அப்படி சொல்லி தடுத்தேன் ” என்றாள்.

“ஓ… அப்போ நான் உன்னை ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்த அப்போ என்னையும் நீ தடுத்திருக்கலாம் . ஏன் செய்யல ” என்றான் .

“அது.. அது.. நான் எதிர்பார்க்காத நேரத்துல வந்து நீங்க என்னக்கு… ” என்று கண்கள் பணிந்து அவனை பார்த்தாள் .

“சரி அப்போ ஆபீஸ் வாசல்ல வெச்சு நான் உனக்கு முத்தம் கொடுத்த அப்போ.. பேசாம தானே இருந்தே.. ஏன் நீ நினைச்சிருந்த அப்போ கூட நான் உனக்கு முத்தம் கொடுக்க வரத்தை தடுத்திருக்கலாம்.. ஏன் செய்யலை ” என்று அவளை கிடுக்கிப்போட்டு கேள்வியால் வளைத்து பிடித்தான் .

காந்தள் அமைதியாக இருக்க.. அவள் தாடையை பிடித்து தன்னை பார்க்குமாறு உயர்த்தியவர் ” என் தம்பி எப்படி பட்ட ஆளுன்னு உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும். அவன் பொண்ணுங்க விசயத்துல ரொம்ப மோசம்” என்றான் மதியை பற்றி அவளிடம் எடுத்துக்கூறி .

அதை கேட்டு சத்தமாக சிரித்த காந்தள் “மதி பொண்ணுங்க விசயத்துல ரொம்ப மோசமா … அப்போ நீங்கி ரொம்ப நல்லவரா ? ” என்றாள்.

இளமாறன் அவள் தான் சொல்லவருவதை புரிந்து கொள்ளாமல் தன்னையே எதிர்கேள்வி கேட்கிறாள் என்று கோபம் வந்தது. அதே கோபத்தோடு அவளை பார்க்க…

“இப்படி ஒரு பொண்ணுகிட்ட உரிமை எடுத்துக்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது . என் விருப்பம் இல்லாம எனக்கு முத்தம் கொடுத்த நீங்க நல்லவர் . ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக நாங்க காதலிச்ச இந்த ஒரு வருசத்துல என் மேல் மதியோட சுண்டு விரல் கூட பட்டது இல்லை . அப்படி கணியம நடந்துக்கிட்டே மதி கெட்டவனா ?” என்றவள் .

“அவன் இன்னோரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்தது உண்மைதான் . என்னை காதலிச்சிட்டு இன்னோரு பொண்ணு கூட தொடர்பில் இருந்ததும் உண்மைதான் . அவன் அப்படி செய்ததுக்கு காரணம் நான் அவனை என்கிட்டே நெருங்க விடாதது தான்னு நான் நினைக்குறேன் . அதுக்காக அவனை கெட்டவனு எப்படி சொல்ல முடியும். உங்க தம்பி காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் என்னை அவன் நெருங்கக்கூடாதுனு எச்சரிக்காத சொன்னிங்களே … அப்போ உங்க எண்ணம் எப்படி பட்டதா இருக்கும். நான் வேணும் உங்களுக்கு அதுக்காக தானே உங்க தம்பியை என்னை தொடக்கூடாதுனு மிரட்டுனிங்க.. அப்படித்தானே .. ” என்றாள் கோபமாக .

 “ஏய்… அவனை மிரட்டினேன் தான் . அவனை பற்றி தெரிஞ்சும் அதுவும் நீ அவனை காதலிக்குறேனு தெரிஞ்சும் நான் எப்படி அவன் உன்கிட்டே அத்துமீறுறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியும் சொல்லு… ” என்றான் இளமாறன் கோபமாக .

“அவன் என் காதலன் நானும் அவனை காதலிக்குறேன் . அப்படி இருக்கும் போது என் காதலன் என்கிட்டே உரிமை எடுத்துக்கக்கூடாதுனு சொல்ல நீங்க யாரு ? அந்த உரிமையை  யார் உங்களுக்கு கொடுத்தது  ” என்றாள் காந்தளும்  பதிலுக்கு கோபமாக .

“காந்தள்… ” என்று தன் பல்லை கடித்துக்கொண்டு அவள் கழுத்தை விட்டவன் “இங்கே வா…” என்று அவளை இழுத்துக்கொண்டு போய் தன் சேரில் அவளை அமர வைத்தவன் அவளை நோக்கி குனிந்தான் .

காந்தள் அவனை மிரண்டு போய் பார்த்தவள் “என்ன பண்றீங்க சார்.. என்னை விடுங்க ” என்று அவன் சேரில் இருந்து எழுந்திருக்க போனாள் .

“ம்ச்.. பேசாம உக்காரு டி …” என்று அதட்டி அவளை அமர்த்தியவன் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்தவன் அந்த ஸிஸ்டமை பாஸ்வர்ட் போட்டு திறந்தான் . திறந்ததும் மதிமாறன் பெயரில் ஒரு போல்டர் இருந்தது. அதை சுட்டிக்காட்டி இதில் என்ன இருக்குன்னு நீயே பாரு . இதை பார்த்ததுக்கு பிறகாவது நான் சொல்றது உனக்கு புரியுதான்னு பார்ப்போம் ” என்றவன் அவளை விட்டு விலகி நின்றான் .

காந்தள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க… “என்ன பாக்குற அந்த போல்டரை ஓபன் பானு… ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேட்டுட்டு அதுக்கு பிறகு ஓபன் பண்ணு ” என்றவன் .

” மதி உன்கிட்டே நான் காதலிச்ச உன்கிட்டே நெருங்கி பழகிட்டு இருக்கானேனு பொறாமையிலயோ… இல்லை தப்பான எண்ணத்திலோ நான் இதை செய்யல … உன் இடத்துல வேற எந்த பொண்ணு இருந்திருந்தாலும் நானிதை செய்திருப்பேன். இப்போ அவன் ஏமாத்தின பொண்ணு கிட்டே கூட அவனை பத்தி உண்மையை சொல்லி நான் எச்சரிச்சேன் . ஆனா அந்த பொண்ணு நான் சொன்னதை பெருசா எடுத்துகவே இல்லை . அதனால் தான் அந்த பொண்ணு இப்போ வயித்துல புள்ளயோட வந்து நிக்குறா … நான் என்ன தான் உன்கிட்டே மதியை நெருங்க விடாம தடுத்தாலும். நீ அவன்கிட்டே இருந்து விலகி இருந்தது தான் உன்னை அவன்கிட்டே இருந்தது அந்த பொண்ணை போல உன் வாழ்க்கை கேட்டு போகாம காப்பாத்திருக்கு அதை தெரிஞ்சுக்கோ.. எனக்கு உரிமையவே இருந்தாலும் உன்னோட சம்மதம் இல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன் ” என்றவன் அவன் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான் .

அவன் சொன்னதை எல்லாம் கேட்ட காந்தள் அமைதியாக அமர்ந்து இருந்தாள் . சிறிது நேர அமைதிக்கு பின் இளமாறன் பார்க்க சொன்ன போர்ல்டரை ஓபன் செய்து அதில் இருந்த முதல் விடியோவை ஆன் செய்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.