News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு 2.6

by Sinamika Writes
981 views
A+A-
Reset

EPISODE 6

மதி ஒரு பெண்ணுடன் உல்லாசமாக கழித்த வீடியோவில் தன்னை பற்றி பேசியதை எல்லாம் கேட்டு நொந்தது போனால் காந்தள் . உண்மையில் மதியின் நோக்கம் தான் என்ன அவன் எதற்காக தன்னை இப்படி நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும் என்று யோசையோடு அமர்ந்து இருந்தவள் .

அவள் இருந்த கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த இளமாறனை பார்த்தாள். அவள் அருகில் வந்து சாரின் இருபுறமும் கை ஊன்றி அவள் முகம் பார்த்தான் . காந்தளின் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது . அவள் அழுதது அதிலே தெறிய “இப்போ சொல்லு நான் உன்னையும் , மதியையும் பிரிக்கணும்னு நினைச்சுதான் இப்படி எல்லாம் செய்தேன்னு நினைக்குறியா? சொல்லு இப்பவும் நான் தான் உனக்கு கெட்டவனா தெரியுறேனா ? என் தம்பி இன்னமும் உன்மனசுக்குள்ள தான் சிம்மாசனம் போடு உக்கார்ந்துட்டு உன்னை ஆட்டி படைக்குறானா? சொல்லு காந்தள் … சொல்லு ” என்றான் .

அவள் வாய் திறந்து பதில் பேச மறந்தவளாய் தன் அருகில் தெரிந்த இளமாறனின் முகம் பார்த்தவள் இல்லை… என்று மட்டும் தலையை இடவலமாக ஆட்டினாள் .

“இப்போ சொல்லு நான் உன்கிட்டே உரிமை எடுத்துகிறது தப்புன்னு நீ நினைக்குறியா? நான் உன்னை காதலிச்சது பொய்யின்னு நினைக்குறியா? சொல்லு boo..” என்றான் ஒருவித எதிர்பார்ப்போடு அவள் சிவந்த விழிகளை பார்த்து .

காந்தளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இனமும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவளின் தாடையை பிடித்து தன்னை பார்க்குமாறு  நிமிர்த்தியவன் “சொல்லு boo … இதெல்லாம் நான் உன்னை அடைய போட்ட சதித்திட்டம் தான்னு இன்னமும் நீ நம்புறியா ? மதி உனக்கு செய்ததை எல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாரு. அப்போ உனக்கு நல்லாவே தெறியும் ” என்றான் .

காந்தள் இப்போதும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருக்க… அதை பார்த்து கடுப்பான இளமாறன் “என்ன டி.. நான் பேசிட்டே இருக்கேன்.  இப்படி எதுவும் பேசாம என்னையே பார்த்துட்டு இருந்தா என்ன டி அர்த்தம் . ஏதாவது வாயை திறந்து பேசேன் ” என்று அவள் தோளை பிடித்து உலுக்கினான் .

தன் தோளில் அழுத்தமாக பதிந்த அவன் கைகளை பார்த்துவள் நிமிர்ந்து இளமாறனின்  விழிகளை ஆழமாக பார்த்தவள்.”என்னை கல்யாணம் செய்துக்கிறிங்களா? ” என்றாள் .

அவள் கேட்டதை நம்பமுடியாமல் இளமாறன் காந்தள் தீர்க்கமான விழிகளை அதிர்ந்து போய் பார்க்க.. “என்ன அப்படி பார்க்குறீங்க… நான் சொன்னதை கேட்டு உங்களால் நம்ப முடியலையா. எப்படி நேத்து வரைக்கும் ஒருத்தனை காதலிச்சிட்டு , அவன் என்னை வேணாம்னு விட்டுட்டு போனதும் . இன்னிக்கு உங்ககிட்டே வந்து என்னை கல்யாணம் செய்துக்கிறிங்களான்னு வெட்கமே இல்லாம கேட்குறேன்னேனு பாக்குறீங்களா ?” என்றாள் ஒரு விரக்தியான புன்னகையோடு .

இளமாறன் இல்லை என்று தலையை ஆடியவன் “உண்மையாவே நீ சொல்றது நிஜம் தானா? என்னை கல்யாணம் செய்துக்கணும்னு  நல்லா யோசிச்சுதான் சொல்றியா ? ஏன்னா ஒரு முறை நான் கமிட் ஆர்கிட்டேன்னா அப்பறோம் பின் வாங்குற பழக்கம் எனக்கு கிடையாது . நீ இப்போ ஏதோ ஒரு எமோஷன்ல என்னை கல்யாணம் செய்த்துகிறேன்னு சொல்லிட்டு நாளைக்கு நமக்கு கல்யாணம்னு வர அப்போ பின் வாங்க கூடாது . உன்னொளி முடிவுல நீ தெளிவா இருக்கியா ? ” என்றான்.

“நான் அவசரத்துல முடிசு எடுத்ததா உங்களுக்கு தெரியலாம். ஆனா என்னை நம்ப வெச்சு ஏமாத்த நினைச்ச மதியை நான் என் மனசுல  இருந்து தூக்கி எரிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு. அவன் எப்படி நீங்க என்னை கல்யாணம் செய்துக்க கூடாதுனு என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி உங்களை பழி வாங்கணும்னு நினைச்சானோ… எனக்கும் இப்போ அதே மனநிலை தான் இருக்கு . எனக்கு இப்போ அந்த மதியை பழிவாங்கணும். என் மனசோட விளையாடின அவனை நான் பழி வாங்கணும் . அதுக்கு  நான் உங்களை கல்யாணம் செய்துக்கணும் ” என்றவள்.

இளமாறனை பார்த்து  “அதுக்காக நான் உங்களை கல்யாணம் பண்ணி பொய்யா உங்க வீட்டுல அவன்முன்னாடி உங்க மனைவியா வளம் வருவேன்னு சொல்ல வரலை . எனக்கு இவ்ளோ நடந்தது தெரிஞ்சும் என் நிழலா இருந்து என்னை… என் கற்பை அந்த மதிகிட்டே  இருந்து காப்பாத்தின ஆள் நீங்க. அவன் இந்த வீடியோவில் சொன்னதை எல்லாம் கேக்குற அப்போ நீங்க என்மேல எவ்ளோ உயிரா இருந்திருக்க்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். என்னை பாதுகாக்க நினைச்ச உங்களை நம்பி என்னை .. என் வாழ்க்கையை.. என் மனசை… என் கற்பை உனக்கு கொடுக்குறது தப்பு இல்லையானு எனக்கு தோணிச்சு .. அதனால தான் நான் உன்கிட்டே என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டேன் ” என்றாள்.

அப்படி சொன்னவள் முகத்தை தன் கைகளில் ஏந்திய இளமாறன் “நீ இனி பேச்சை மாற மாட்டியே.. என்னை கல்யாணம் பனிக்கனும்னு நீதான் முதல்ல என்கிட்டே கேட்டே..  இனி நீயே வேணாம்னு சொன்னாலும். என்னை விட்டு போகணும்ன்னு நினைச்சாலும் அது முடியாத காரியம்னு தெரிஞ்சுக்கோ.. என்னை நம்பி நீ உன்னை .. உன் வாழ்க்கையை… உன் மனசை … உன் கற்பை என்கிட்டே ஒப்படைக்க சம்மதம் சொல்லிருக்கே.. இனி இது எல்லாம் எனக்கு தான். எனக்கு மட்டும் தான் சொந்தம் ” என்றான்.

காந்தளும் அவன் சொன்னது எல்லாம் புரிந்தது என்பது போல கண்கள் மூடி திறந்தாள். அவள் உறுதியாக அவன் வேண்டும் என்று சொன்ன அடுத்த நொடி அவள் இதழை பற்றி இருந்தான் இளமாறன் .

இதை காந்தள் எதிர்பாக்க வில்லை என்றாலும் அவனை தடுக்க நினைக்கவில்லை அவள் . தன் சேரில் அமர்ந்து இருந்தவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கியவன் அவளை முத்தமிட்டபடி தன் மேஜையில் அமரவைத்து தீவிரமாக முத்தம் வைத்தான் .

அவன் கொடுத்த முத்தத்தின் ஆவேசத்தை தாங்கமுடியாமல் காந்தள் தன் இரு கைகளையும் பின்னால் மேஜையில் வைத்து ஊன்றி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனையும் , அவன் முத்ததையும் சமாளிக்க ஆரம்பித்தாள்.

இளமாறனின் முத்தம் தீவிரமடைந்துகொண்டே போனது . இந்த ஒருவரிடத்தில் அவன் தேக்கி வைத்த மொத்த காதலையும் ஆசையையும் இன்றே இப்போதே காட்டிவிட  எண்ணி அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.

காந்தளும் இளமரனின் இந்த நெருக்கமும், அவன் தந்த முத்தமும் தேவைப்படுவதை இருந்தது, அவன் முத்தம் அவள் அடிமனதில் இருக்கும் காயத்தை ஆற்ற இது தேவை அவளுக்கு. ஆண்களை போல புண்பட்ட நெஞ்சை ஆற்றுவதற்கு பல வழிகளை தேடி அவளால் போக முடியும். ஆனால் அவளுக்கு இந்த போதை மிகவும் பிடித்து இருந்தது. அவன் போதை அவள் காயத்தை ஆற்றுவதற்கு அவள் உணர்ந்தாள்… நம்பினாள்.

அவளை தீவிரமாக முத்தமிட்டவன் கைகள் அவள் அணிந்து இருந்த சட்டை பட்டனை வேகமாக கழட்ட துவங்கினான். காந்தள் அவனை தடுக்க வில்லை .அவள் கைகள் அவன் இடையை இறுக்கி அணைத்துக்கொண்டது. காந்தளின் இதழில் இருந்து தன் இதழை பிரித்தவன் அவள் கண்களை பார்த்து . உன் முடிவுல எந்த மாற்றமும் இல்லையே…  நான் உன்னை இப்பவே இப்பவே முழுசா எடுத்துக்க நினைக்குறேன்.உன்கூட அன்னிக்கு ஹோட்டலில் இருந்துட்டு வந்த பிறகு என்னால உன்னை விடவே முடியலை . உன்னை பார்க்குற அப்போ எல்லாம் எனக்கு உன்னை அப்போவே முழுசா எடுத்துக்க தோணுற என் மனசை என்னால கட்டுப்படுத்தவே முடியலை. எனக்கு நீ வேணும். நீ வேணும் boo …” என்று அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தான்.

அவன் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு நிமிர்ந்தியவள் “ஹோட்டலில்… நீயும் நானும்…” என்று புரியாமல் அவனை பார்த்தாள் .

“என்ன boo … அப்போ நிஜமாவே நம்மோட முதல் முறை உனக்கு நியாபகம் இல்லையா ? மதியோட பர்த்டே நைட் அப்போ நீயும் உன் பிரெண்ட்ஸும் சேர்ந்து குடிச்சீங்களே அது நியாபகம் இருக்கா ?” என்றான் .

காந்தள் சற்று யோசித்து “இருக்கு ” என்றாள்.

“ம்ம்… அந்த நைட் நீ என்கூட முழுசா ஒரு நைட் இருந்தியே அதுவாவது உனக்கு நியாபகம் இருக்கா? ” என்றான் .

காந்தள் இல்லை என்று தலையை ஆட்ட..

“அடுத்த நாள் நீ தூக்கம் தெளிஞ்சு கண் விழித்ச்சு பார்க்குற அப்போ எங்கே இருக்கேனு நியாபகம் இருக்கா?” என்றான் .

சற்று நிதானமாக யோசித்தவள் ஆமாம் என்று தலையை ஆட்ட…

“அப்பா!!  இதுவாச்சும் உனக்கு நியாபகம் இருக்கே… ” என்றவன் .

“நீயும் நானும் ஒண்ணா இருந்த நினைவுகளை நான் உனக்கு இப்போ எப்படி நியாபகப்படுத்த போறேன்னு பாரு… ” என்றவன் அடுத்த நொடி குனிந்து அவள் சட்டை பட்டன்களை கழட்டியவன் அவள் கால்களுக்கு இடையில் தன்னை புகுத்தி குனிந்து காந்தள் இதழில் முத்தம் வைக்க ஆரம்பித்தான் .

முன்பை விட அவன் முத்தம் மேலும் ஆவேசம் ஆனது. அவள் இதழில் முத்தம் வைத்துக்கொண்டே கீழே இறங்கி  வந்தான்.  அவள் கழுத்து வளைவில் தன் பற்களால் பதம் பார்க்க…

“சார்…” என்று சொக்கும் குரலில் கண் மூடி அவன் தலையை இருக்க பற்றினாள் உணர்ச்சியை அடக்க முடியாமல் .

“boo … என்னை சாருன்னு கூப்பிடாதே… இங்கே நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம். நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நீ என்னை மாறன்னு கூப்பிடு . நான் உன்கூட இருக்கும்போது நீ என் பேரை சொல்லி கூப்டுட்டே இருந்த.. என்னை அந்த ராத்திரி முழுக்க நீ தூங்கவே விடல ” என்று அவள் கழுத்தில் இருந்து ஊர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டே வந்து அவள் நெஞ்சுக்குழிக்குள் முகம் புதைத்தான் .

காந்தளுக்கு இப்பொது மாறன் சொன்னது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிற்கு வருவது போல தோன்றியது . இரவு பிரியா , முகுந்தனுடன் சேர்ந்து ஒரு பிரபல பாரில் ட்ரின்க் பண்ணியதும் . அவர்கள் இருவரும் கிளம்பி போன பின்பு தான் வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்று யாருக்கோ புக் செய்து இருட்னஹா டேபிளில் அமர்ந்து கொண்டு தனக்கு உணவு கொடுக்க சொல்லி சண்டை போட்டது என்று ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வர ஆரம்பித்தது .

ஹோட்டலில் அவள் அமர்ந்து இருந்த டேபிளை ரிசெர்வே செய்து இருந்தது மாறன் தான். அவன் தன் நண்பன் ஒருவனை மீட் செய்வதற்காக புக் செய்து இருந்த டேபிள் அது. எதிர்ப்பாராத விதமாக காந்தளை அவன் அங்கு சந்தித்ததும் தன் நம்பனுக்கு போன் செய்து தங்கள் சந்திப்பை பிறகொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னவன் காந்தளுக்கு சாப்பிட என்ன வேண்டுமோ அதை எல்லாம் கொண்டு வர சொல்லி பேரரிடம் கூறினான்.

வரவழைக்க பட்ட உணவுகளை ஒன்றுவிடாமல் சாப்பிட்டு முடித்த காந்தள் அங்கிருந்து எழுந்து செல்ல போனாள் . அவளை வழி மறித்து நிப்பாட்டிய மாறன் “ஹே boo… எங்கே போற இந்த அர்த்த ராத்திரியில் . வெயிட் பண்ணு நானே உன்னை உன் வீட்டில் ட்ரோப் பண்றேன்” என்றவன் அவள் சாப்பிட்டதற்கு பணம் செலுத்திவிட்டு திரும்பிப்பார்க்க.. அதற்குள்ளாக காந்தள் ஹோட்டலை விட்டு வெளியேறி இருந்தாள் .

அவசரமாக அவள் பின்னால் சென்றவன் காந்தளை தேட… அவள் அங்கு இருந்த மாறனுக்கு சொந்தமான 7 ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்து கொண்டு இருந்தாள் . அதை பார்த்தவன் தன் டிரைவரிடம்  காரை தன் பின்னால் எடுத்து வர சொல்லிவிட்டு காந்தளிடம் ஓடினான் .

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.