EPISODE -20
காலிங் பெல் அடிக்கவும் இதுவரை கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்த பிரியாவும், முகுந்தனும் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு வாசலை பார்த்தனர்.
” டேய் விடு ட என்னை காந்தள் வந்துட்டா போல..” என்று தன்னை விடாமல் கட்டிக்கொண்டு கைகளை ப்ரியாவின் உடலில் மேயவிட்டுக்கொண்டு இருந்த முகுந்தை தன்னிடம் இருந்து பிரித்து நிற்க வைத்தாள் ப்ரியா.
“ம்ச்.. என்ன டி இது அதுக்குள்ள கடைக்கு போயிடு வந்துட்டாளா? காந்தள் . ” என்று சலித்துக்கொண்டு அவளை மீண்டும் தன் அருகில் இழுத்து ப்ரியாவின் இதழில் முத்தமிட்டான்.
“ம்ம்…ம்ம்.. டே…டேய்…விடு டா ” என்று அவனிடம் இருந்து தன் இதழை பிரித்தவள் செல்லமாக முகுந்தின் மார்பில் குத்திவிட்டு தன் உதத்தில் இருந்த அவன் எச்சிலை துடைத்துக்கொண்டவள் வெட்கத்தோடு சென்று கதவை திறந்தாள் .
அங்கே காந்தள் வெறும் கையேடு நின்று இருக்க… அதை பார்த்த ப்ரியா ” ஏய் காந்தள் என்ன டி ஆச்சு ? என்ன சமைக்க பொருள் வாங்கிட்டு வரேன்னு போய்ட்டு இப்படி வெறும் கையோட வந்து இருக்க… எதுவும் வாங்கலையா ? ” என்றாள் .
ஒரு மாதிரியான மனநிலையில் இருந்த காந்தள் ப்ரியா கேட்டதர்க்கு பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்தாள் . ” என்ன ஆச்சு இவளுக்கு ? ஏன் ஒரு மாதிரியா இருக்கா ” என்ற யோசனையில் கதவை சுற்றிவிட்டு ப்ரியா உள்ளே வர…
உள்ளே வந்த காந்தளை அப்போது தான் கவனித்தான் முகுந்தன் காந்தள் பாண்ட் முழுவதும் சகதி ஆகி இருக்க… அவள் கை கால்களில் கூட சேரும் , சகதியும் ஆகி இருந்தது .” காந்தள் என்ன ஆச்சு உனக்கு ? ஏன் உன் டிரஸ் எல்லாம் இப்படி சேரும் சகதியுமா இருக்கு ?” என்றான் .
அவன் சொன்னதை கேட்டு காந்தள் அருகில் வந்த ப்ரியா ” ஏய் காந்தள் என்ன டி இது ? என்ன சு உனக்கு இப்படி டிரஸ் எல்லாம் அழுக்காக்கிட்டு வந்து இருக்க.. கடைக்கு போயிடு வரேன்னு சொல்லிட்டு வெறும் கையோட வந்து இருக்க… என்ன ஆச்சு டி ? சொல்லு எதுவும் பிரச்சனையா?” என்று ப்ரியா காந்தள் தோளை பிடித்து உலுக்கினாள் .
அதுவரை திக் பிரம்மை பிடித்தவள் போல குழப்பத்தில் நின்று இருந்த காந்தள் அப்போதுதான் தன் உடையை பார்த்தாள் .” ஆமால்ல… இப்டி அழுக்காகி இருக்கு… ” காந்தள் அப்போதுதான் தன் உடையில் படிந்து இருந்த அழுக்கை பார்த்த்தது போல கூற…
” என்ன ஆச்சு இவளுக்கு ” என்று புரியாமல் ப்ரியாவும், முகுந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
” ப்ரியா நீ காந்தளுக்கு என்ன ஆச்சுன்னு கேளு.. அவ ஏன் ஒரு மாதிரி இருக்கான்னு தெரியலை . எப்படியும் இப்போ சமைக்க முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு . நான் போய் நம்ம மூணு பெருகும் எதுவும் சாப்பிட வாங்கிட்டு வரேன் ” என்று தன் பர்ஸை எடுத்துக்கொண்டு முகுந்தன் வெளியே செல்ல போக..
” டேய் இப்படியேவா வெளிய போற… உன் டிரஸ் எல்லாம் மாவு கொட்டி அழுக்காகி இருக்கு அதுவும் இல்லாம எல்லாமே ரொம்ப கசங்கி இருக்கு பாரு ” என்றால் ப்ரியா வேட்கைப் புன்னைகையோடு .
தன்னை ஒரு முறை பார்த்துவிட்டு ” எனக்கு என்ன உன்னை மாதிரியா இங்கே டிரஸ் எதுவும் இருக்கு… இல்லையே . நீதானே என்னோட ட்ரெஸை கழட்டிட்டு… என்னை… போட…” என்று அவன் வார்த்தைகளை முடிக்கும் முன் .
” டேய்… ” என்று ப்ரியா முகுந்தனை அதட்டி … கண்களால் காந்தளை ஜாடை காட்டியவள் .” எனக்கு காந்தலோட டிரஸ் சரியா இருந்துச்சு அதனால அவளோட ட்ரெஸை எடுத்த்து நான் போட்டுகிட்டேன். வேணும்னா நீயும் காந்தள் ட்ரெஸ்ஸை எடுத்து போட்டுக்கோயேன் யார் வேண்டாம்னு சொன்னது ” என்று பேச்சை மாற்றினாள்.
அவள் சமாளிப்பதற்கு புரிந்து கொண்ட முகுந்தன் ” ஏன் உன்னோடதை கொடேன் அதையே நான் போடுகிறேன் ” என்று அவளை யாரை இறங்க அவன் பார்க்க…
” எதை…” என்று முகம் சிவக்க ப்ரியா அவனை பார்த்தாள்.
” அட உன்னோட ட்ரெஸை சொன்னேன் ப்ரியா ” என்று கள்ளச்சிரிப்பை உதித்தவன் .
” எனக்கு ஏதும் பிரச்சனை இல்ல … நைட் தடவை தானே யாருக்கு என்ன தெரியப்போகுது . நீ முதல்ல காந்தளை கவனி நான் பொய் நமக்கு சாப்பிட வாங்கிட்டு வரேன் ” என்றவன் தன் உடலை முறுக்கியவன் .
“செம பிரெஷா இருக்கு… இனிமேல் அடிக்கடி இந்த மாதிரி உடற்பயிற்சி செய்தா உடம்புக்கு நல்லா இருக்கும் ” என்றவன் ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தவன் வெளிய கிளம்பிச்சென்றான் .
” ம்ம்ம்… நினைப்பு தான் இவனுக்கு அடிக்கடி செய்யணுமா … நல்லா இருக்கே… இவனோட நச்சு தாங்காம தான் போன போகட்டுமேன்னு இன்னிக்கு இவனை விட்டேன் . கொஞ்சம் இடம் கொடுத்தா பொபதுமே இவன்னுக்கு ” என்று மனதில் செல்லமாக முகுந்தனை திட்டியவள் திரும்பி காந்தளை பார்க்க…
அவளோ இவர்கள் பேசியதை எல்லாம் கேட்கும் மனநிலையிலேயே இல்லை ஒரு வித குழப்பம், பதட்டம் , பிரம்மை, பயன் என என்ன என்று தெறியாத ஒருவித உணர்வுகளோடு போராடிக்கொண்டு இருந்தாள் .
அவளிடம் வந்த ப்ரியா ” காந்தள் நீ போய் குளிச்சு டிரஸ் மாத்திட்டு வா… கிச்சனில் பொருளெல்லாம் எடுத்து வெக்கும்போது மாவு கொட்டிருச்சு . என் டிரஸ் எல்லாம் மாவு சிந்திருச்சுன்னு குளிச்சுட்டு உன்னோட ட்ரெஸ்ஸை எடுத்து போட்டுட்டு வந்துட்டேன் . உன்னோட டிரஸ் எல்லாம் பெட் ரூமில் இருக்க சோபா மேல எடுத்து வெச்சிருக்கேன் டி.. நீ போய் குளிச்சிட்டு வா… நான் போய் கிச்சனை கிளீன் பண்றேன் ” என்று ப்ரியா கிச்சனுக்கு சென்றாள்.
அவள் சொன்னதற்கு வெறுமனே தலையை மட்டும் ஆட்டிய காந்தள் தன் பெட் ரூமிற்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டாள் . அங்கே ப்ரியாவும் , முகுந்தனும் செய்திருந்த வேளையில் மெத்தை முழுவதும் களைந்து கிடந்தது . அதை பார்த்ததும் எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை . தான் அணிந்து இருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கலைந்தபடியே பாத்ரூம் நோக்கி சென்றாள் முழு நிர்வாணமாக .
பாத் ரூம் கதவை கூட தாழிட தோன்றாமல் வெறுமனே உள்ளே நுழைந்து ஷவரை திறந்துவிட்டாள் . சில்லென்ற நீர் அவள் உடலில் படவும் குளிர்ந்த அந்த இரவில் , குளிர்த்த நீர் அவள் உடலில் மோதவும் அப்போதுதான் தன் நீண்ட நேர யோசனையில் இருந்து நினைவு வந்தவளாக தான் குளித்துக்கொண்டு இருந்த பாத்ரூம் கண்ணாடியை பார்த்தாள் . அதில் தெரிந்த த்ன் பிம்பத்தை பார்த்து அப்படியே நின்றாள்.
இங்கே சாப்பாடு வாங்க சென்ற முகுந்தன் வந்து காலிங் பெல்லை அழுத்த கிச்சனை சுத்தம் செய்து முடித்து இருந்த ப்ரியா காந்தளுக்காக ஹாலில் காத்திருந்தவள் முகுந்தன் வந்ததும் வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள் .
” என்ன டி.. என்னை தான் எதிர் பார்த்துட்டு இருந்த போல இருக்கு… ஏன் நான் வேணுமா ?” என்று அவளை முகுந்தன் நெருங்க…
அவன் மார்பில் கைவைத்து தள்ளிய ப்ரியா “உன்னை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் . ஆனா உனக்காக இல்லை நீ வாங்கிட்டு வர சாப்பாட்டுக்காக தான் ” என்றவள் அவன் கையில் இருந்த உணவு பையை பிடுங்கியவள் திரும்பி உள்ளே சென்றவள் ” என்னை போட்டு சக்கையா பிழிஞ்சு டையார்ட ஆக்கிட்டு மறுபடியும் இவனை தான் காணோம்னு நிக்குறாங்க ” என்று முனகிக்கொண்டே உள்ளே சென்று உணவுகளை எடுத்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள் .
” இவ எங்கே டேங்க்கில் இருக்க தண்ணியை காலி பண்ணிட்டு தான் வெளியே வருவா போல…” என்று புலம்பியவள் காந்தளை அழைக்க பெட் ரூமிற்கு செல்ல…
” டேங்க்கை மொத்தமா அவளாவே காலி பண்ணமுடியாது . நம்மளை மாதிரி அவளும், அவ ஆளும் சேர்ந்து ஒண்ணா குளிச்சங்கன்னா டேங்க் மொத்தத்தையும் காலி பண்ணிடலாம் . அதுவும் அந்த பாத்ரூமில் இருந்த கண்ணாடி இருக்கே… அது.. அது மாதிரி எதிர்காலத்துல நாம இருக்க போற வீட்டிலும் இதே போல ஒன்னு மாட்டி வைக்கணும் ” என்று ப்ரியா சென்ற திசையை நோக்கி சொல்லிக்கொண்டே முகுந்தன் திரும்ப…
காந்தளை அழைக்க சென்ற ப்ரியா அவன் திரும்பும்போது வேகமாக ஓடி வந்து அவன் இதழை சிறைசெய்து அவனை பேசவிடாமல் செய்தவள். அவன் இதழை விட்டு பிரிந்து அவனை பார்த்தது ” கொஞ்ச நேரம் பேசாம இரு டா… அவ காதுல நீ பேசின விஷயம் மட்டும் விழுந்துச்சு அப்பறோம் அவ்ளோதான் . என்னை கேள்வியா கேட்டு கொன்னுடுவா ? என்று அவனை பேசவிடாமல் செய்தவள் .
காந்தளின் பெட் ரூம் கதவை தட்ட போக … அப்போது சரியாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் காந்தள் .
காந்தளை பார்த்ததும் திடுக்கிட்ட ப்ரியா பின் சுதாரித்துக்கொண்டு ” இவ்ளோ நேரமா டி குளிக்க… வா சாப்பாடு ஆறிட போகுது சாப்பிடலாம் ” என்று அவளை அழைத்துக்கொண்டு பொய் டைனிங் டேபிளில் அமரவைத்தவள் முகுந்தன் அவர்களுக்காக எடுத்து வைத்த உணவை மூவரும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
ப்ரியாவும், முகுந்தனும் பேசி சிரித்து ஒருவரை ஒருவர் காலை வாரிக்கொண்டு சாப்பிட்டு கொண்டு இருக்க… காந்தலோ முதலில் அவர்கள் பேச்சில் ஒட்டாமல் யோசனையிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க… அதைப் பார்த்த இருவரும் காந்தளையும் தங்களோடு இழுத்துக்கொள்ள… தன் இறுக்கமான மனநிலையில் இருந்து காந்தள் வெளியே வந்தவள் அவர்கள் இருவருடனும் சேர்ந்து வழக்கம் போல அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்த மூவரும் இணைந்து காந்தள் வீட்டில் இருந்த 50 இன்ச் டிவியில் அவர்களுக்கு பிடித்த படத்தை ஓட விட்டு இரவெல்லாம் படம் பார்த்து விடியற்காலையில் தான் மூவரும் தூங்கி இருந்தனர் .
அடுத்த நாள் விடுமுறை என்பதால் மணி 12 ஐ கடந்து தான் ஒவ்வொருவராக கண் விழிக்க துவங்கினர்.
முதலில் ப்ரியா தான் கண் விழித்தாள் கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து சோம்பல் முறித்தவள் முன்பு குளித்துமுடித்து உடை மாற்றி பிரெஷாக நின்று இருந்த காந்தளை பார்த்தவள் அவள் ஒரு கையில் சிறிய டிராவல் பேக்கும் , மற்றொரு கையில் தந்து பேக்கும் பிடித்துக்கொண்டு சிரித்த முகமாக நின்று இருந்தவளை பார்த்து ஆச்சர்யமானாள் .
” ஏய் காந்தள் !! என்ன டி இது !! இவளவு காலையில் பேக்கும் கையுமா எங்கே புறப்பட்டுட்ட…” என்றாள் ப்ரியா .
” என்னது இவ்வளவு காலையிலையா !! ஹலோ மேடம் மணி இப்போ மதியம் 12 தாண்டிருச்சு … ” என்றவள்.
” நான் அம்மாவையும், அத்தையையும் பார்க்க ஊருக்கு போறேன் டி… அவங்க ரெண்டு போரையும் நான் தனியா இந்த நிலைமையில் விட்டு வந்து 1 வாரத்துக்கு மேல ஆச்சு .. போவோம் அவங்க ரெண்டு பெரும் என்ன பங்கிட்டு இருக்காங்களோ . அதான் நான் அவங்களை போய் பார்த்துட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ணி இங்கயே கூட்டிட்டு வரலாம்னு போறேன் டி…” என்றாள் காந்தள் .
” என்னடி இது நீ ஊருக்கு போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இன்னிக்கு எனக்கும் லீவு தானே நானும் உன்கூட வந்து அம்மாவையும், அத்தையையும் கூட கூட்டிட்டு வர ஹெல்ப் பனிருப்பேன் இல்ல…” என்றாள் ப்ரியா .
” அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . நான் ஏதாவது சொல்லி அவங்களை என்னோடவே இங்கே கூட்டிட்டு வந்துருவேன் . நீ கவலை படாதே” என்றால் காந்தள் .
” ஏய் கொஞ்ச நேரம் பொறு நானும் ரெடி ஆகிட்டு வந்துடறேன் ” என்று ப்ரியா எழுந்து உள்ளே செல்லப் போக…
எழுந்தவளை பிடித்து அவள் அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த முகுந்தின் மீது பிடித்து தள்ளி விட்டாள்.
ப்ரியா அவன் மேல் விழுந்ததும் “அம்மாஆஆ…” என்று அலறிக் கொண்டு முகுந்தன் கண் விழிக்க… அவன் மேல் ப்ரியா விழுந்து இருக்க… அந்த வழியிலும் “குட் மோர்னிங் டி கண்ணு குட்டி” என்று அவள் தாடையை பிடித்து அவன் கொஞ்ச…
“டேய் காந்தள் இருக்கா ” என்று அவனை அதட்டட்டி அடக்கினாள் ப்ரியா .
” ஏய் இப்போ எதுக்கு டி அவனை மிரட்டுற… ரெண்டு பெரும் நேத்து நான் வெளியே கிளம்பி போன அப்பறோம் என்ன எல்லாம் செய்து இருப்பீங்கன்னு என் பெட்டும், பாத்ரூம் கண்ணாடியில் இருந்த ரெண்டு கை அச்சும் எனக்கும் புரிய வெச்சிருச்சு” என்று அவர்கள் இருவரையும் பார்க்க .
இருவரும் அசடு வலிந்து சிரித்துக்கொண்டனர் காந்தளை பார்த்து.
“போதும் சகிகளை ” என்று சிரித்த காந்தள் .
“நீ என் கூட வர வேணாம் . நான் என் அம்மாவையும் , அத்தையையும் கன்வின்ஸ் பண்ணி இங்கே கூட்டிட்டு வரதுக்கு எப்படியும் ரெண்டு நாள் ஆகிடும் . அதுவரை நீங்க இங்கயே இருங்க எனக்கு எந்த ப்ரோபலமும் இல்லை ” என்றவள் .
“நான் மதிமாறன்கிட்டே போன் பண்ணி ஊருக்கு பிற விஷயத்தை சொல்லிட்டேன் . அவரும் இங்கே வர போறது இல்ல.. சோ… ரெண்டு பெரும் எந்த டிஸ்டர்பும் இல்லாம நிம்மதியா இருங்க ..” என்று சிரித்த முகமாக காந்தள் கூற..
பிரியாவிற்கு காந்தள் முன்பு நிற்கவே கூச்சமாக இருந்தது . ஒருவித குற்ற உணர்வோடு அவளை பார்க்க… ப்ரியாவின் அருகில் வந்த காந்தள் ” ஏய் ப்ரியா இப்போ எதுக்கு இப்படி முகத்தை வெச்சிருக்க… நான் நேத்து எனக்கும் மதிக்கும் இடையில் இருக்கறதை பத்தி பேசினதை நினைச்சு நீ குற்ற உணர்வா இருக்குறது போல பீல் பண்றியா ?” என்றால்.
ப்ரியாவும் ஆமாம் என்று தயங்கியபடி தலையை ஆட்ட ” இங்கே பாரு டி இது என்னோட லவ் லைபில் நாள் எடுத்த முடிவு . ஒரு ஒருத்தர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயம் இருக்கும். இது உன்னோட லைப் நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு குறுக்க நிற்க போறது இல்லை. நீங்க ரெண்டு பெரும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறீங்க… நீ பிரீயா இரு டி…” என்றவள் இருவரிடமும் விடைபெற்று தன் ஊருக்கு கிளம்பி இருந்தாள்.
ப்ரியாவும் , முகுந்தனை பார்க்க…” அவனோ சாரி டி… என்னோட அவசர புத்தியால உன்னை காந்தள் முன்னாடி இப்படி நிக்க வெச்சுட்டேன் . இனிமேல் நேத்து உன்கிட்டே நடந்துகிட்டு மாதிரி நடக்காம பாத்துக்கிறேன் ” என்று ப்ரியாவை கட்டிக்கொண்டான்
.
” டேய் இப்போ தான் நேத்து என்கிட்டே நடந்துகிட்டு மாதிரி நடக்காம பாத்துக்கிறேன்னு சொன்னே…இப்போ என்ன டா இதையே சக்க வெச்சு என்னை கட்டிப்பிடிக்குற..” என்றாள் .
” ஏய் நேத்து நமக்குள்ள நடந்த மாதிரி இல்லாம இன்னிக்கு வேற மாதிரி ட்ரை பண்ணலாம்னு சொன்னேன் டி…” என்று அவளை தூக்கிக்கொண்டு பெட் ரூம் நோக்கி சென்றான்.
” இவனை திருத்தவே முடியாது …” என்று நினைத்துக்கொண்டாள் ப்ரியா.
