News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு 2.22

by Sinamika Writes
438 views
A+A-
Reset

EPISODE 22

அடுத்தடுத்த நாட்களில் மாறன் , காந்தள் , மதி கயல்விழி நால்வருக்கும் ரிசெப்ஷன் தேதி முடிவாகி அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது . சில்வர் லைன் ஸ்டூடியோ முழுக்க காந்தளை பற்றிய பேச்சுக்கள் தான் அவள் மதியின் பிறந்தநாள் விழாவில் செய்த அனைத்து விஷயங்களும் அங்கு வந்திருந்த ஆபீஸ் ஸ்டாப்கல் சிலர் ஆபீஸ் முழுக்க மதியும், காந்தளும் காதலித்த விஷயத்தையும் அவன் காந்தளை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்து அதன் மூலம் அந்த பெண் கர்ப்பமான விஷயம் ஏற்கனவே ஆபீஸ் முழுக்க பரவி இருக்க…

மாறனுடன் வழக்கம் போல ஆஃபீஸிற்கு வந்திருந்த காந்தளை  பார்க்கும் கண்கள் எல்லாம் அவளை பற்றி பேசிக்கொண்டு இருந்தது .

அந்த பேச்சுக்கள் இன்னமும் ஓய்ந்து போகாத நிலையில் இங்கே மாறனுடன் , அவள் திருமணம் முடிந்துவிட்டதை கேள்விப்பட்டதில்லை இருந்து அதை யாராலும் நம்பமுடியவில்லை .

“மதி நம்ம சிஇஓ மாறன் சாரோட தம்பியா ! அவர் இதை பத்தி நம்ம யார் கிட்டயும் சொல்லிக்கிட்டதே இல்லையே …” என்று மதியுடன் வேலை செய்து கொண்டு இருந்த அவன் டெபார்ட்மெண்டை சேர்ந்தவைன் ஒருவன் சொல்லிக்கொண்டு இருக்க,

” டேய் அதை எல்லாம் விடு டா… அதை விட ஒரு சூடான செய்தியை நான் கொண்டு வந்திருக்கேன் கேளு… நம்ம மதி அவன்கூட ஒர்க் பண்ணின காந்தளை ஏமாத்தின விஷயம் உங்க எல்லாருக்கும் தெரியும் தானே ” என்றான் .

“ஆமா தெரியும் அவன் கூட அந்த பொண்ணை ஏமாத்திட்டு வேற யாரோ ஒரு பொண்ணுகூட குடும்பமே நடத்திட்டான்னு கேள்வி பட்டேனே ” என்றான் அதை கேட்ட மற்றொருவன் .

“அதான் அவன் ஏமாத்தின அந்த காந்தள் இப்போ நம்ம சிஇஓ மாறனை கல்யாணம் செய்துகிட்ட விஷயம்  தெரியுமா உங்களுக்கு ” என்றான் .

“என்ன டா சொல்ற நம்ம மாறன் சாரை அந்த பொண்ணு கல்யாணம் செய்திருச்சா ? அது எப்படி அந்த பொண்ணு இப்போ ரீசெண்டா தானே அவருக்கு பியேவா பொய் வேளையில் ஜாயின் பண்ணி இருக்கு… அப்போ எப்படி அதுக்குள்ள அவரை கல்யாணம் செய்திருக்கா. மதி அவளை ஏமாத்தின விஷயம் கூட இன்னும் அப்படியே இருக்கு . அதுக்குள்ள அவன் அண்ணனை எப்படி இந்த பொண்ணு உசார் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கும் ” என்றான் மற்றொருவன் .

“டேய் தம்பி உசார் ஆகலையினு சொன்னதும் அண்ணனை எப்படியோ பேசி மயக்கி கைக்குள்ள போட்டிருப்பா… அப்படியே கல்யாணமும் செய்துகிட்டா போல இருக்கு ” என்றாள் அவர்கள் பேசியதை கேட்டு அங்கு வந்திருந்த ஒரு பெண் .

“என்ன சொல்ற நீ நம்ம சார்ரை அபப்டி பேசி மயக்கிட முடியுமா என்ன ?” என்றான் ஒருவன் .

“ஏன் முடியாது .. அதான் அவ செஞ்சு காட்டிட்டாளே … இந்த ஆஃபிஸில் அவரை கண்டாலே பயந்து நடுங்குற ஆளுங்களுக்கு மத்தியில அவரையே உசார் செய்து கல்யாணம் செய்திருக்கான்னா அவ எப்படி பட்ட ஆளா இருக்கானும் ” என்று அந்த பெண் பேசிக்கொண்டு இருக்க…

“அப்போ அவ பிளான் பண்ணி தான் யாருக்குமே கிடைக்காத அந்த பிஏ போஸ்ட்டை எப்படியோ அவளுக்கு கிடைக்குற மாதிரி செய்துட்டு அங்கே போனதும் அவ நினைத்த்தை சாதிச்சு இருப்பா ” என்றாள் மற்றொரு பெண் .

“ஏய்… அவ ஆபீஸ் ஒர்க் மட்டும் தான் அங்க பாத்திருப்பானு நினைக்குறியா ?” என்று ஒருத்தி கேலி பேசி சிரிக்க…

“அட 24 மணி நேரமும் மாறன் சாரோடயே இருந்தவளுக்கு ஓபிசி ஒர்க் மட்டும் தான் இருந்திருக்கும்னு நினைக்குறியா ?” என்று சொல்லி காந்தளை நக்கல் அடித்தாள் மற்றொருத்தி

அதை எல்லாம் அந்த டிபார்ட்மெண்டிற்கு ஒரு வேலையாக வந்திருந்த காந்தள் கேட்டுவிட அவர்களின் பேச்சுக்கள் அவளை வெகுவாக தாக்கி இருந்தது . அதற்கு மேலும் அவ்ர்கள் பேசுவதை எல்லாம் கேட்க முடியாமல் அங்கிருந்து  கிளம்பி இருந்தாள் .

அவள் மேலே வந்து மாறன் அறைக்குள் சென்றவள் சோர்ந்த முகத்தோடு வந்து தன் சேரில் அமர்ந்து அவர்கள் பேசியதை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தாள் .

“என்னை ஏமாற்றிய அந்த மதியை யாரும் எதுவும் சொல்லலையே… அவனால் ஏமாந்து போன என்னை எல்லாரும் ஏன் இவ்வளவு மோசமா பேசினாங்க . நான் அபப்டி என்ன செய்துட்டேன் . ஏன் ஒருத்தரை காதலிச்சிட்டு அவன் என்னை  ஏமாத்திட்ட விஷயம் தெரிஞ்சு நான் என் மனசை மாத்திக்க கூப்டாதா ? அவன் என்னை ஏமாத்திட்டானேன்னு அதை நினைச்சு கவலை பாட்டு என்னோட வாழ்க்கையை  நான் அழிச்சுக்கணுமா ? நான் உடைஞ்சு போயிடணுமா ? என்னால அதில் இருந்து வெளியே வந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாதா ? இல்லை நான் இப்படி வாழ கூடாதா ? நான் எந்த பெரிய தப்பும் செய்யலையே மதியை காதலிச்சத்தை தவிர… அவன் என்னையும், மாறனையும் பழிவாங்கி இப்படி ஓரூ காரியம் பண்ணினதையெல்லாம் போய் நான் அவங்ககிட்டே சொன்னா அவங்க நம்பிடுவாங்களா ? .. ம்ஹும்… மாட்டாங்க .. அப்போவும் எல்லாரும் என்னையே தான் குத்தம் சொல்வாங்க. என் மேல அபாண்டமா பழி போடுவாங்க . ஒரு பொண்ணு அவளுக்கு நடந்த கசப்பான விஷயங்களை  கடந்து அவளால வேற ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க்ருதை பார்த்து இந்த் சமுதாயம் அதை எடுக்குறது இல்லை . அதையும் மீறி அவ வாழ்க்கையை அவ வாழ்ந்து சந்தோசமா இருக்கணும்னு நினச்சா இப்படி தான் தப்பு தப்பா அந்த பொண்ணை பத்தி பேசி அவளை நிம்மதி இல்லாம செய்திடுவாங்க ” என்று இன்னும் இன்னும் என்று மனதில் எழுந்த ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தனக்குள்ளேயே பேசிக்கொண்டு இருக்க…

அவள் தன் காபினுக்குள் வந்ததில் இருந்து ஏதோ யோசனையாக அமர்ந்து இருப்பதை பார்த்த மாறன் எழுந்து வந்து அவள் சேருக்கு எதிரே போடா பட்டு இருந்த டேபிளில் சாய்ந்து கைகட்டி நின்றபடி காந்தள் முகத்தில் நொடிக்கு நொடி மாறும் உணர்வுகளை பார்த்தபடி நின்று இருந்தான் .

தன் யோசனைகளில் இருந்து கஷ்டப்பட்டு மீண்டு வந்தவள் தனக்கு எதிரே டேபிளில் சாய்ந்து நின்று இருந்தவனை பார்த்து அவனை இங்கு எதிர்பார்க்காதவள் அதிர்ந்து பின்னால் போக … அவள் பின்னால் சாய்ந்த வேகத்தில் சேரோடு சேர்ந்து கீழே விழப்போக…

“ஏய்… ஏய்… முயலு… ‘” என்று கை நீட்டி காந்தளின் கையை பிடித்து தன் பக்கம் வேகமாக இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி காந்தள் நிற்கவும் . அவள் அமர்ந்து இருந்த சேர் தரையில் விழவும் சரியாக இருந்தது .

“ஏய் முயல் குட்டி என்ன டி இது பகல்லையே கனவு கண்டுட்டு இருக்கியா ? யாரு வந்தது உன் கனவில் நான் தானே… நீ இப்படி என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு  நான் உன்னை கனவில் ஏதாவது செய்தேனா?” என்றான் அவளை கட்டி அனைத்துக்கொண்டே …

“சார் விடுங்க என்னை…” என்று அவனிடம் இருந்து விலகி நின்றவள் “எப்பவும் இதே நினைப்பு தான் உங்களுக்கு ” என்று திரும்பி கீழே விழுந்த சேரை குனிந்து எடுக்க போனாள் .

அவளை அபப்டியே குனிந்து பின்னால் இருந்துகட்டிக்கொண்ட மாறன் ” உன்னை பார்த்தாலே எனக்கு அப்படி தான் தோணுது என்னை என்ன செய்ய சொல்றே நீ ” என்றான் அவள் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து.

“ப்ச் … விடுங்க என்னை… ஏற்கனவே இந்த ஆபீஸ் முழுக்க நான் உங்களை மயக்கி கல்யாணம் செய்துகிட்டேனு பேசிட்டு இருக்காங்க… உங்களை கல்யாணம் செய்துகிட்டிடத்துக்கு முன்னே ஆபீஸ் வேலை மட்டும் தான் நான் பார்த்தேனா இல்லை கட்டிலில் வேலை பார்த்தேனானு அங்கே ஒரு பட்ட மன்றமே நடந்துட்டு இருக்கு,,, இதுல வீட்டில பண்ற ரொமான்ஸ் பத்தலையின்னு ஆஃபீஸிலேயும் இதே வேலை தானா உங்களுக்கு ” என்று அவனை தன் மேல் இருந்து எழுப்பிவிட்டவள் சேரை எடுத்து நேராக வைத்துவிட்டு .

“இங்கே பாருங்க சார். இனிமேல் ஆஃபீசில் இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துக்காதிங்க… ஆபீஸ் வந்தா ஆபீஸ் வேலை மட்டும் தான் பார்க்கணும். அதே போல வீட்டுக்கு போனா மற்ற வேலையை பார்க்கலாம் ” என்றாள் அவனிடம் .

“ஓஹோ… உன்னை யாரோ எதுவோ சொன்னதை எல்லாம் கேட்டுட்டு வந்து என்கிட்ட இனி ரூல்ஸ் போட்டுட்டு இருக்கியா ? உன்னை யாரு இப்படி எல்லாம் பேசினது , அவங்க யாருனு சொல்லு உன்னை தப்பா பேசினது யாரா இருந்தாலும் அவங்களை நான் வேலையை விட்டு தூக்கிடறேன் . அதுக்கு பிறகு யார் என்ன பேசுறாங்கன்னு நான் பார்க்குறேன் ” என்றவன் அவனை விட்டு விலகி நின்றவளை பிடித்து தன் பக்கம் இழுத்து அணைத்து கொண்டவன் .

“யாரோ ஏதோ பேசுறாங்கனு அதுக்காக என்னை இப்படி தள்ளி வெக்குறது உனக்கே நல்லா இருக்கா “என்றான்.

“ம்ஹும்… விடுங்க… முதல்ல. இப்போதான் சொன்னே இந்த மாதிரி ஆஃபிஸில் நடந்துக்காதிங்கன்னு.  என்ன சொன்னிங்க என்னை பேசினவங்களை ஆபீஸ் விட்டு துரத்த போறிங்களா ? ஏன் அதுக்கும் நான் தான் காரணம்னு என்னை பழி சொல்லி பேசணுமா ? அப்படி வேலையை விட்டு துரத்தணும்னா எல்லாரையும் தான் துரத்தணும். என்னை பாற்குரவங்க எல்லாரும் ஏதாவது பேசிட்டே தான் இருப்பாங்க அதுக்காக எல்லாரையும் வேலையை விட்டு தூக்கிருவிங்களா ? ” என்றாள்.

“இப்போ என்ன தான் நீ சொல்ல வர… ” என்றான் கடுப்பாக தன்னை விட்டு விலகி நின்றவளை பார்த்து .

“ம்ம்ம்… பேசாம போய் உங்க ஸீட்ல உக்காந்து வேலையை பாருங்கன்னு சொல்றேன். என்னையும் வேலை பார்க்க விடுங்கன்னு சொன்னேன் ” என்றாள் காந்தள்.

“ஓஹோ அப்போ நான் வந்து உன் வேலையை கெடுக்கிறேனா ? ” என்று கோபமானவன் அவளை முறைத்து விட்டு அங்கிருந்து அவன் டேபிளுக்கு சென்றவன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்து இருந்தான் .

அவன் கோபமாக செல்வதை பார்த்தது காந்தளுக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது . இருந்தும் அதை பெரிதாகவே எடுத்துக்கொள்ளாமல் அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து இருந்தாள் .

மாலை வரை இருவரும் எதுக்குவம் பேசிக்கொள்ளவில்லை அவரவர் வேளையில் மூழ்கி இருக்க… மணி 6 ஐ கடந்ததும் தன் கம்ப்யூட்டரில் இருந்து பார்வையை அப்போதுதான் மாறன் பக்கம் திருப்பினாள் .

அவள் மேல் இருந்த கோபத்தில் தன்னை அவள் பக்கம் செல்லக்கூடாது என்று அவள் ஒதுக்கி வைத்து இருந்த கோபத்தில் மாறன் இன்னமும் தீவிரமாக வேலை செய்துகொண்டு இருக்க.. அவனை அபப்டி பார்க்க வருத்தமாக காந்தளுக்கு இருக்கவே அவனை சமாதானம் செய்யலாம் என்று எழுந்து அவன் அருகில் செல்ல போக…

அப்போது அவன் கேபின் கதவை திறந்து கொண்டு வசுந்தரா உள்ளே வர… அவர் பின்னால் மதியும் வந்தான் . அவர்கள் இருவரையும் பார்த்த காந்தள் இது ஆபீஸ் என்பதால் வசுந்த்ராவை பார்த்து “வணக்கம் தெரிவித்தவள் அவர் அமர்வதற்கு நாற்காலியை இழுத்து போட்டாள் .

வசுந்த்ராவும் காந்தளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவர் “மாறா உன்கிட்டே நான் முக்கியமான வேலையா பேச வந்து இருக்கேன் ” என்றார் .

“பாட்டி ஆபீஸ் விஷயமா பேசணுமா ? இல்ல… ” என்று அவர் அருகில் நின்று இருந்த மதீயை பார்த்துவிட்டு “இல்ல… இவன் பேச்சை கேட்டு மறுபடியும் எதுவும் பஞ்சாயத்தை எடுத்டுடு வர போறிங்களா ?” என்றான் .

“நான் பெர்சனலா தான் பேச வந்திருக்கேன் மாறா… அது வந்து மதி இனிமேல் NAMMA கம்பெனியில்… ” என்று வசுந்தரா பேச வர…

“பாட்டி ஒரு நிமிஷம் ” என்று அவரை பேசவிடாமல் தடுத்தவன் தன் அருகில் நின்று இருந்த காந்தளை பார்த்து  .

” காந்தள் நான் என் பாட்டியோட கொஞ்சம் பெர்சனல் விஷயம் பேச வேண்டி இருக்கு … உங்களுக்கு ஒர்க் முடிஞ்சிட்டா நீங்க கிளம்புங்க.. இலென்ன கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க ” என்றான் அவளை பார்த்து .

மாறன் பேசியதை கேட்டதும் அவனை ஏகத்துக்கும் முறைத்த காந்தள் ” நான் என்னோட ஒர்க்கை எல்லாம் முடிச்சுட்டேன் . நீங்க உங்க பாட்டி கூட உங்க பேமிலி மேட்டர் பேசுங்க… நான் கிளம்புறேன் ” என்று அங்கிருந்து நேராக அவள் கேபினுக்கு வந்தவள் தன் ஹாண்ட் பேகை எடுத்துக்கொண்டு வசுந்த்ராவிடம் வந்தவள் ” மேடம் நான் கிளம்பறேன் ” என்று மாறனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்ப…

“காந்தள் இரும்மா… நீயும் இரு ” என்று அவளை தடுத்தவர் .

“டேய் மாறா என்ன இது ? காந்தள் கிட்டே ஏன் இப்படி பேசுற… அவளை எதுக்கு இப்போ நீ போக சொல்றே… அவளும் இருக்கட்டும் டா ” என்றார் .

“பாட்டி என்ன பேசுறீங்க நீங்க இவங்க என்னோட பிஏ . நம்ம ஆபீஸ் ஒர்க் மட்டும் தான்  அவங்க இங்கே பார்ப்பேன்னு சொல்லிருக்காங்க . அப்படி இருக்கவங்களை நான் எப்படி நம்ம பெர்சனல் மேட்டர் பேசும்போது இங்கே இருக்க சொல்ல முடியும் “என்றவன் .

“காந்தள் நீங்க இன்னும் கிளம்பலையா ? நான் பெர்சனலா பேசுற இடத்துல உங்களுக்கு என்ன வேலை ” என்றான் அவளை பார்த்து நக்கலாக .

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.