News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

எனை மாயம் செய்யும் ராட்சசன் 6

by Layas Tamil Novel
267 views
A+A-
Reset

EPISODE 6

தான் பட்ட கடனிற்காக தன் அண்ணன் மகளை ரியல் எஸ்டேட் ஓனரின் மகனுக்கு அதுவும் ஊனமானவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார் என்று செய்தியை கேட்ட குருவிற்கு ஜனனிக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அதே அதிர்ச்சியோடு தன் அண்ணனிடம் “அண்ணா அவருக்கு எவ்வளவு பணம் நம்ம கொடுக்கணும்னு சொல்லுங்க.  இப்பவே நான் மொத்தமா எல்லாத்தையும் செட்டில் பண்றேன்” என்றார் குரு 

“இல்ல குரு உனக்கு எதுக்கு வீண் சிரமம் என்னோட கஷ்டம் என்னுடைய போகட்டும்” என பரமன்  தன் தம்பியின் உதவியை ஏற்க மறுக்க 

“அண்ணா இத்தனை நாளும் என்னை தம்பின்னு வாயால மட்டும்தான் கூப்பிட்டு இருக்கீங்க…உங்க மனசுல இருந்து என்ன அப்படி கூப்பிடல அப்படித்தானே” என்றான்.

“குரு ஏண்டா இப்படி பேசுற இப்படி எல்லாம் பேசி என் மனசு நோகடிக்காதே” என்றார் பரமன்.

ரியாவிற்காக பணத்தை முழுவதுமாக தான் தருவதாக கூறவும் உடனே சாந்தா குருவிடம் வந்து நல்லவர் போல பேசினார். “குரு தம்பி அவர் அப்படித்தான் பேசுவாரு.நீங்களாவது என் பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்துங்க. என் பொண்ணு இருக்குற அழகுக்கும்,அறிவுக்கும் போயும் போயும் அந்த கால் இல்லாதவன தான் கல்யாணம் பண்ணி வைக்கணுமா?” என்று. புடவை. முந்தனையில் முகத்தை மூடி அழுதார்.

“நீங்களே உங்க அண்ணன் கிட்ட பேசுங்க நானும் அவர்கிட்ட எவ்வளவோ சொன்னேன் உங்க தம்பி தான் நல்லா வசதி வாய்ப்புடன் இருக்கிறாரே…அவர் கிட்ட உதவி கேட்கலாம்னு.ஆனா உங்க அண்ணன் தான் வரட்டு கௌரவம் பார்த்துட்டு உங்ககிட்ட கேட்க மாட்டேன்னு சொல்லிட்டாரு” என்றார் சாந்தா.

”சாந்தா நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்ட. ஏன் இப்படி பண்ற” என்று தன் மனைவியிடம் பரமன் கோபமாக கேட்டார்..

“நீங்க பேசாம இருங்க. நான் சொன்னதை அன்னைக்கே கேட்டிருந்தா நமக்கு இப்போ இவ்வளவு பிரச்சனையும் வந்து இருக்காது” என சாந்தா புலம்பினார்.

“எது…அவனுக்கு கிட்ட நம்ம வாங்கின பணத்தை வந்து கேட்டப்போ எனக்கு அதுக்கும் சம்பந்தமில்லைன்னு என்ன பொய் சொல்ல சொன்னியே அதையாவா? ” என்றார்.

“நான் ஒன்னும் பொய் சொல்ல சொல்லலையே.. அவங்ககிட்ட வாங்கின பணத்துக்கு மேல நம்ம வட்டி அதிகமாகவே கட்டி இருக்கோம்.அதனாலதான் எல்லா பணத்தையும் கொடுத்து முடிச்சாச்சுன்னு சொல்ல சொன்னேன். நீங்க ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க ”என்றார் சாந்தா.

இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ள அதைக் கேட்டுக் கொண்டிருந்த ரியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” ஐயோ!! தயவு செய்து நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா? என்னோட வாழ்க்கையை வச்சு நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் விளையாடியது போதும் இனி என்ன இருக்கு இப்படி வீனா ரெண்டு பேரும் சண்டை போட்டு எதுவும் நடக்கப்போறதில்லை” என்றவள்  குருவிடம் திரும்பி “சித்தப்பா எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.என்னோட வாழ்க்கை இப்படித்தான்னு எழுதி இருந்தா. என்  விதி என்ன கூட்டிட்டு போகட்டும் நீங்க எதுவும் எனக்காக செய்ய வேண்டாம் ”என்றவள் அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

ரியா உள்ளே சென்றதை பார்த்த மீனுவும் பூஜாவும் அவள் பின்னாலேயே ஓடினர்.

“அண்ணா ஏன் நீங்க என்கிட்டே இவ்வளவு தயக்கம் காட்டுறிங்க… நான் கஷ்டத்தில் இருந்தா நீங்க பாத்துட்டு சும்மா இருப்பிங்களா? கண்டிப்பா எனக்கு உதவி செய்ய என்னோட கஷ்டத்துல இருந்து என்னை காப்பாத்த தானே நினைப்பீங்க. அதையே தானே நான் உங்களுக்கு செய்யணும்னு நினைக்கிறேன். நீங்க ஏன் என்னோட உதவிய ஏற்க மறுக்கிறீங்க” என்றார் குரு.

“இல்ல குரு ஏற்கனவே இத விட பேராசையால் தான் நீ சம்பாதிச்ச சொத்து எல்லாம் மொத்தமா அவ பேருல எழுதி வாங்கிக்கிட்டா. வாங்கியதோடு மட்டும் பத்தாதுன்னு உன்னையும் ஜனனியையும் இந்த வீட்டுக்கே இத்தனை வருஷம் வரவிடாமல் செஞ்சிட்டா இப்போ நான் உங்க ரெண்டு பேரையும் வர சொன்னது என்னோட பிடிவாதத்துனால தான் இப்போ நீ பணம் கொடுக்கிறேன்னு சொன்னதும் அவ கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இறங்கி வந்து உன்கிட்ட பேசுனத நீயே கவனிச்ச தானே…இப்படிப்பட்டவள வச்சுக்கிட்டு நான் எப்ப எந்து முகத்தோட உன்கிட்ட வந்து உதவி கேட்க முடியும் இவளால எனக்கு எங்கேயுமே மரியாதை இல்லை “என மிகவும் வருத்தப்பட்டார்.

“மாமா ஏன் நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க நம்ம அக்கா தானே அவங்க போக போக எல்லாமே புரிந்து கொள்வார்கள் பழசு பேசிக்கிட்டு இருக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை நம்ம பொண்ணோட வாழ்க்கையை நம்ம தான் சரியா அமைச்சு கொடுக்கணும்” என்றார் ஜனனி.

“நல்லா சொல்லு ஜன்னலில் இவருக்கு நான் சொல்றது எதுவுமே காதுலை ஏற மாட்டேங்குது அவன்கிட்ட வாங்கினேன் 150 கோடி பணத்துக்கு வட்டியா அதைவிட அதிகமா நாங்க கொடுத்துட்டோம் அது போதாதுன்னு உங்ககிட்ட இருந்து எழுதி வாங்குன எல்லாத்தையும் அவன் பேர்ல எழுதி வச்சுட்டோம் இப்போ இருக்கிறது இந்த வீடும் அவர் பண்ணிட்டு இருக்குற அந்த பிசினஸ் மட்டும் தான் அதுவும் உன்ன மாதிரி இல்ல” என சாந்தா உள்ளதை அப்படியே போட்டு உடைக்க.

!அண்ணி நீங்க சரியா சொல்லுங்க அவங்களுக்கு நம்ம எவ்வளவு பணம் கொடுக்கணும் என்றார் குரு .

“150 கோடி தம்பி  பணத்தை நம்ம கிட்ட இருந்து வாங்குன பணத்தையும்,நம்ம சொத்து எல்லாத்தையுமே திருப்பிக் கொடுக்கிறேன்னு சொன்னான். ஆனா நம்மளால தான் அதை கொடுக்க முடியலையே. அதுக்கு பதிலா தான் என் பொண்ணு அவன் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்கிறான்” என்றார்.

“சரி அண்ணி நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன்” என்ற குரு” அண்ணா முதல்ல என்கூட கிளம்பி வாங்க. நாம போய் அந்த ரியல் எஸ்டேட்காரனுக்கு மொத்தம் பணத்தையும் கொடுத்துட்டு வருவோம்” என்று பருமனை அழைக்க…

அவர் தயங்கியபடி குருவை பார்த்தார் “என்ன அண்ணா இன்னும் பார்த்துட்டு இருக்கீங்க… தயவுசெய்து வாங்க நமக்கு பணம் முக்கியம் இல்ல நம்ம பிரியாவோட வாழ்க்கை தான் முக்கியம்” என்றவர். தன் மொபைலை எடுத்து  மேனேஜருக்கு அழைத்து விபரம் சொல்லி ” நான் சொல்ற இடத்துக்கு இன்னும் சிறிது நேரத்தில் பணத்தோடு கிளம்பி வாங்க ”என்று போனை வைத்தார்.

பின் தன் அண்ணனை அழைத்துக்கொண்டு  அங்கிருந்து அந்த ரியல்எஸ்டேட் சாம்ராஜ்யத்தின் தலைவனான கஜேந்திரனை பார்த்து அவன் மகன் ஜெய்க்கு தன் அண்ணன் மகளை திருமணம் செய்துகொடுக்க முடியாது என்று சொல்லிவிட கிளம்பினார் குரு.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.