News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு 2.29

by Sinamika Writes
418 views
A+A-
Reset

EPISODE 29

வழக்கம்போல பேருக்காக  தன் கேபினில் சிறிது நேரம் வேலை பார்ப்பது போல  பாவலா செய்தவன் நேராக எழுந்து  காந்தளின்   கேபினுக்கு  சென்றான் .

அவன் வருவதை கண்டும் காணாதது போல  சைல்டு டெவலப்மென்ட் ப்ராஜெக்ட்ட்டில்  அவர்கள் அறிமுகம் செய்ய உள்ள  டிசைனின்  மாதிரியை கம்ப்யூட்டரில் வரைந்து கொண்டிருந்தாள் .

“என்ன மிஸஸ் மாறன்! நம்ம டீம்லயே நீங்க தான் ஒரு முக்கியமான அந்தஸ்துல இருக்கீங்க அதாவது எனக்கு அசிஸ்டென்டா ..  அப்படி இருக்கிறப்போ கொடுத்த வேலையை சீக்கிரமா செய்து முடிக்க வேண்டாமா.. இப்படித்தான் வேலையை ஒழுங்கா செய்யாம இழுத்து அடிச்சிட்டு இருப்பீங்களா ” என்றான் .

அவன் பேசுவதை காதில் வாங்கியும் அதற்கு பதில் பேசாமல் தன் வேலையில்  மும்முரமாக இருந்தாள்.

“உங்களை என்னோட டீம்ல சேர்த்துக்கிட்டா கண்டிப்பா சீக்கிரமா நான் என்னோட சபதத்தில் ஜெயிச்சிடலாம்னு நம்பி தான் நீங்க தான் என்னோட டீமுக்கு வேணும்னு கேட்டேன் . ஆனா நீங்க பண்றது பார்த்தா  நான் என்னோட  சபதத்தை நிறைவேற்ற முடியாதுன்னு தோணுது .  ஒருவேளை நான் உங்களுக்கு பண்ணின விஷயத்தை எல்லாம் மனசுல வச்சுட்டு இப்படி வேணும்னே வேலையை இழுத்து அடிச்சு என்ன தோற்கடிக்கலாம்னு பாக்குறீங்களா மிஸ்டர் மாறன்” என்றான் .

“மிஸ்டர் மதி நம்மளோட பர்சனல் விஷயத்தை வேலைக்குள்ள கொண்டு வராதீங்க. தவிர முடிஞ்சு போன கதை . எனக்கு அதைப்பற்றி பேச விருப்பமும் இல்லை. நீங்க சொன்ன மாதிரி மனசுல உன்னை வச்சுட்டு உங்க பழிவாங்குகிற எண்ணம் எனக்கு கிடையாது. எதுவா இருந்தாலும் நேரடியா மோதி ஜெயிக்க கூடிய ஆள் நான். எனக்கு  கொடுத்த வேலையை நான் 100%  எந்த குறையும் இல்லாம முடிச்சு கொடுவேன். நீங்க கவலைப்பட வேண்டாம் சோ ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாம உங்க  கேபினுக்கு போறீங்களா” என்றாள் .

“ஓகே ஓகே காந்தள் கூல் … இப்போ எதுக்கு இவ்ளோ கோபமா என்கிட்டே பேசுறே… என் மேல நீ கோபமா இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது . ” என்று அவளை பார்த்தான்.

காந்தளோ அவனிடம் பதில் சொல்லிவிட்டு திரும்பி தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“காந்தள் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு அதுக்கு பிறகு நீ வேலையை கன்டினியூ பண்ணு ” என்று அவளை வேலை செய்யவிடாமல் இம்சை செய்தான்.

” ம்ச்… என்ன மிஸ்டர் மதி இது . என்னை தயவு செய்து வேலை செய்ய விடுறிங்களா? அப்புறம் வேலை முடியலையா என்ன குறை சொல்லக்கூடாது” என்றாள்  மதியின் இம்சை தாங்க முடியாமல் .

“சரி சரி டென்ஷன்  ஆக வேண்டாம் ஜஸ்ட் ஒரு சின்ன கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணிடு நான் போய் என் வேலையை பார்க்கிறேன் .  எனக்கு ரொம்ப நாளாவே அது உன்கிட்ட கேட்கணும்னு தோனிக்கிட்டே இருந்தது” என்றான் .

“என்ன விஷயம் கேட்கணும் . சீக்கிரம் சொல்லுங்க  மிஸ்டர் மதி” என்றாள் .

“என்ன  காந்தள்   இன்னும் உனக்கு என் மேல இருந்து கோபம் போகலையா? நான் பண்ணினது தப்புதான் உன்னை காதலிச்சிட்டு கயல்விழியோட ரிலேஷன்ஷிப்ல இருந்தது நான் செஞ்ச பெரிய முட்டாள்தனம் உன்ன நான் மிஸ் பண்ணிட்டேன்” என்றான்  மதி.

“இப்போ எதுக்கு பழசை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கு வேற வேலை இல்லைனா கிளம்பி வீட்டுக்கு போங்க அப்படி தேவையில்லாதது எல்லாம் பேசி என் வேலையை கெடுக்காதீங்க” என்றாள் அவன் பேசுவதை கேட்க முடியாமல் .

“நான் உன்னை ஏமாற்றி  கயல்விழி கூட பழக்கம் வச்சிக்கிட்டது  தெரிஞ்சதுக்கு பிறகு எப்படியோ என் பிறந்தநாள் அந்த விஷயத்தை எல்லாருக்கும் தெரிய வச்சிட்டேன். நான் உன்னை ஏமாத்தினேன்னு மனசு நொந்து போய் ஃபீல் பண்ணிட்டு இருப்பேன்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனா நீ என்ன அடுத்த நாளில் என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு மாலையும் கழட்டுமா என் வீட்ல வந்து  நின்ன .. அது எப்படி வந்தது உன்னால அவ்வளவு சீக்கிரத்தில் மனச மாத்திக்க  முடிஞ்சது . பொய்யா காதலிச்ச என்னாலயே மிஸ் பண்ணிட்டேன் நீ என்ன ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கேன் .  ஆனா நீ என்ன உண்மையா உயிருக்கு உயிரா காதலிச்சேன் அப்புறம் எப்படி என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் கூட சந்தோஷமா வாழ முடியுது”  என்றான் .

“உண்மையா காதலிச்ச என்னை ஏமாத்தின  ஒருத்தனை நினைத்து நான் ஏன் வருத்தப்படணும் . உன்ன மாதிரி ஒரு  சுயநலவாதிய காதலிச்சிட்டு நினைச்சு தான் நான் வருத்தப்பட்டேனே ஒழிய என்  காதல் தோத்துப் போயிடுச்சுன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட நான் கவலைப்பட்டது கிடையாது .  நீ எதுக்காக  என்னை காதலிச்ச மாதிரி நடிச்சேன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா ” என்றாள்  காந்தள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் மதி காந்தளை  பார்க்க …

“என்ன நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு எதுவும் புரியலையா?”  என்று அவனை ஏளனமாக பார்த்து சிரித்தவள் .

“என்ன காதலிச்சிட்டு…  கயல்விழி கூட ரிலேஷன்ஷிப்ல இருந்து அவ வயித்துல ஒரு குழந்தையையும் கொடுத்துட்டு . பார்ட்டி பொண்ணுங்கன்னு சுத்திட்டு இருந்த நீ என்னை எதுக்காக காதலிச்ச .. ” என்று மதியை பார்த்தாள் .

காந்தளுடன் காதலில் இருந்த போதே கயல்விழிவுடன்  யாருக்கும் தெரியாமல் ரகசிய உறவு வைத்திருந்தது மட்டும்தான் காந்தலுக்கு தெரியும் என்று நினைத்திருந்தான் .ஆனால் அவள் தன்னுடைய உண்மை முகத்தை இப்போது  வெளிப்படுத்தி கூறுவதை கேட்ட மதி அது இருந்தான்.

” என்ன மதி உன்னை பற்றி எல்லா உண்மையும் போட்டுக்கிட்டு  வைக்கிறேன்னா .. அதைவிட இன்னொரு விஷயமும் இருக்கு அதையும் சொல்றேன் கேட்டுட்டு மொத்தமா ஷாக் ஆகிக்கொள் ” என்றவள் .

“உன் அண்ணா என்னை விரும்பினார் அவர் என் பின்னாடி சுத்துறாரு அவருக்கு நான் கிடைக்கக் கூடாதுன்னு சொல்லி தானே … அவருக்கு எக்காரணம் கொண்டும் நான் கிடைச்சிடவே கூடாதுன்னு நீயாவே வந்து என்கிட்ட வழிய பேசி என்னோட கவனம் முழுசையும் உன் பக்கம் திருப்பி வைத்து உன்னை காதலிக்க வைத்த சரிதானே” என்றாள்.

மதி பதில் பேச முடியாமல் அவளையே பார்க்க …

“என்னை ஏமாத்த நினைச்ச உன்ன மனசுல நெனச்சிட்டு வருத்தப்பட்டுட்டு இருக்கிறது கூட என்ன உயிருக்கு உயிரா இத்தனை வருஷம் காதலிச்சா  மாறனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுல என்ன தப்பு இருக்கு. அவர் என்னை காதலிச்ச விஷயம் ஒண்ணுமே எனக்கு தெரியாம போயிடுச்சு அப்படி தெரிஞ்சிருந்தா உன்னோட பர்த்டே பார்ட்டி என்னிக்கி உன் கண்ணு முன்னாடியே நான் அவரை கல்யாணம் செய்து இருப்பேன் ” என்றாள் .

“ஓஹோ  அப்போ மாறன்  உன்ன காதலிச்சான்னு தெரிஞ்சது அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச சரி அது கூட ஒத்துக்கலாம். ஆனா உன்ன நான்  லவ் பண்ணிட்டு இருக்கும்போது நீ எனக்கு எவ்வளவு கண்டிஷன் போட்டே. நான்  உன்னை தொடக்கூடாது.. முத்தம் கொடுக்கக் கூடாது… உரசிக்கிட்டு உட்கார கூடாதுன்னு எவ்ளோ கண்டிஷன்ஸ் போட்ட.. என்னை உன் பக்கத்துல நெருங்கவே விடாத நீ எப்படி மாறனை கல்யாணம் செய்துக்குறதுக்கு முன்னாடியே அவன் கூட ஒண்ணா அதுவும் அவனோட கேபின்ளையே ரெண்டு பெரும் செக்ஸ் வெச்சுக்கிட்டிங்க ” என்று அவளை பார்த்தான்.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த காந்தள் தானும் மாறனும் அவன் கேபினில் அவனுடன் ஒன்றாக இருந்தது எப்படி

இவனுக்கு தெரிந்தது என்று காந்தள் புரியாமல் மதியை பார்த்தாள்.

” என்ன மேடம் ஷாக்கா இருக்கா ! ” என்று சிரித்தவன் . சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு காந்தள் அருகில் வந்தவன் .

“எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்குமா ? மாறன் எப்படி உன்னை அவனோட கேபின்ல வெச்சு… ” என்று அவளை பார்த்து சிரித்தவன் .

” உன்னை காதலிக்கும்போது நீ சொன்னதை எல்லாம் கேட்டு நல்ல பிள்ளையூயா இருந்த என்னையும் நீ கொஞ்சம் கவனிக்கலாமே… இன்னிக்கு நைட் ஒர்க் இருக்குன்னு சொல்லி மாறன் கிட்டே சொல்லிடு. நம்ம டீம் ஆளுங்களை நான் ஏதாவது செய்து இங்கே இருந்து அனுப்பி வெச்சிடறேன் . யாரும் இங்கே இருக்க மாட்டாங்க. நீயும் நானும் மட்டும் விடிய… விடிய… இங்கேயே… ” என்று மதி கூறி முடிக்கவில்லை .

அதற்குள் காந்தள் கை மதியின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது .

அதை கேட்டு அனைவரும் திரும்பி காந்தளையும், மாறனையும் பார்த்தனர்.

“பொருக்கி ராஸ்கல் இனிமேல் எதுவும் பேசின… அவ்ளோ தான் . உன்னை கண்டந்துண்டமா வெட்டி போட்டிடுவேன். என்னை பத்தி என்ன டா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க… நீ கூப்பிட்டதும் வந்திருவேன்னு நினைச்சியா … ராஸ்கல். ஆமா டா… கல்யாணத்துக்கு முன்னையே என்னை முழுசா உன் அண்ணன்  என் புருஷன் மாறன்கிட்டே கொடுத்துட்டேன். அதுக்கு காரணம் அவர் மேல நான் வெச்சிருக்க நம்பிக்கை. என்னை எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் கைவிடமாட்டாருன்னு எனக்கு அவர் மேல இருந்த நம்பிக்கை . உன்னை ஏன் என்கிட்டே நெருங்க விடலைன்னு உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிருக்கேன்.என்னை காதலிச்சிட்டு வேற ஒருத்தி கூட போன நீ எங்கே… என்னை இவ்ளோ வருசமா காதலிச்சும் நான் அவரை வேணாம்னு சொல்லியும் இத்தனை வருசமா என்னையே நினைச்சிட்டு இருந்த உன் அண்ணன் எங்கே..” என்று அவனை கோபக்கனல் தெறிக்க பார்த்தாள் .

“ஏய்.. என்ன டி ரொம்ப ஓவரா பேசுற… என்னையே அடிச்சிட்டியா நீ … ” என்று இத்தனை பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய காந்தளை நோக்கி அடிக்க தன் கையை மதி ஓங்கினான்.

அடுத்த நொடி அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய காந்தள் ” உன் அண்ணனுடைய மனைவி உனக்கு இன்னொரு அம்மா மாதிரி . நீ என்னை இன்னிக்கு உன்கூட படுக்கைக்கு கூப்பிட்டது உன் அம்மாவை கூப்பிட்டதுக்கு சமம். சொல்லு என்கூட உனக்கு படுக்கணுமா?… அப்படி நீ என் கூட படுத்தா உன் அம்மா…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.

“காந்தள்ள்ள்….!!!” என்று மதியும் , அவன் கேபின் வாசலில் நின்று இவ்வளவு நேரம் இங்கு நடந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த மாறனும் அவள் பேசுவதை கேட்டு பொறுக்க முடியாமல் கத்தினார்கள்.

மதி கேபினில் ஏதோ பரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் செய்தி கேட்டு மாறன் காதுகளுக்கு போய் எதுவும் பிரச்சனை ஆகிவிடுமோ என்று அங்கு விரைந்து வந்திருந்த நீலகண்டனும், ராணியும் தங்களுக்கு முன்பாகவே அங்கு மாறன் வந்திருப்பதை பார்த்து அப்டியே நின்று விட்டனர்.

மாறனையும் அவன் பின்னால் நின்று இருந்த நீலகண்டன் , ராணி இருவரையும் பார்த்த மதி செய்வதறியாது நின்று இருந்தான்.

மாறனை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த காந்தள் கோபம் முற்றிலும் மறந்து , இத்தனை நேரம் தனக்குள் மறைத்து வைத்து இருந்த அழுகை எட்டி பார்த்தது.

கோபமே உருவாக நின்று இருந்த மாறனை பார்த்து மதிக்கு உள்ளுக்குள் கிலி பிடித்துக்கொண்டது . இங்கு நடந்ததை எல்லாம் மாறன் பார்த்த்த்து இருப்பானோ… அடுத்து மாறன் என்ன செய்ப்போகிறானோ என்று பயந்தபடி நின்று இருந்தான்.

காந்தளோ  கண்களில் துளிர்விட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டே அவனை பார்த்தவள் “சார்.. நான் வேணும்னு அத்தையை இதுல இழுக்கல… ” என்று தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“காந்தள் நீ எதுவும் சொல்ல வேண்டாம் . நான் இங்கே நடந்ததை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன் ” என்று உள்ளே வந்தவன் .

” உன்னால நம்ம குடும்ப கௌரவத்தை எவ்ளோ கேவல படுத்த முடியுமோ அவ்ளோ கேவல படுத்திட்டே… உனக்கு இந்த கம்பெனியோட சிஇஓ பொறுப்பு தானே வேணும். அதுக்காக தானே இந்த டீமை உருவாக்கி காந்தளை அதுல வேலை செய்ய கூப்பிட்ட…  நீயே இந்த கம்பெனியுடைய சிஇஓ வா இந்த பதவியை எடுத்துக்கோ … இனி நான் இங்கே வர மாட்டேன் . என் மனைவியும் இனிமேல் இங்கே வேலை செய்ய மாட்டா… ” என்றவன் .

அவன் அருகில் இத்தனை இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நின்று இருந்த காந்தளை தோள்மீது கைபோட்டு அவளை ஆதரவாக அணைத்தபடி சில்வர் லைன் ஸ்டுடியோவை விட்டு நிரந்தரமாக வெளியேறினான் மாறன் .

மாறனின் முடிவை கேட்டு நீலகண்டனும், ராணியும் செய்வதறியாது உறைந்து போய் நின்றுவிட்டனர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.